குடியாத்தத்தில் குழந்தைகள் தின விழா

மாறுவேட போட்டிகள் நடந்தது குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
குடியாத்தத்தில் குழந்தைகள் தின விழா
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் இன்னர்வீல் சங்கம் இணைந்து குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சி கள்ளூர் குறிஞ்சி நகர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம், சீவூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத் தலைவர் டி.அஜீஸ், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஷாயிதாஅல்தாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடியாத்தம் இன்னர்வீல் சங்கத் தலைவர் கீதாலட்சுமி, செயலாளர் பிரியா, முன்னாள் தலைவர் வசந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

தொடர்ந்து மாறுவேட போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

முடிவில் குடியாத்தம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம்ரிஹானா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com