search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Can"

    • தென்றல், முந்தானை முடிச்சு போன்ற சீரியல்களில் நடித்தார்.
    • இப்பொழுது அவர் இயக்குனராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

    சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆடம்ஸ் அறிமுகமானார். இவர் சன் டிவியில் இசை நிகழ்ச்சிகளை ஆரம்பத்தில் தொகுத்து வழங்கினார். இவரின் ஜாலியாக பேசும் திறமையும் , முக பாவனையும் மக்கள் மனதை கவர்ந்தது.

    பின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பயணம் செய்தார்,  சன் டிவியின் சிவ சக்தி சீரியலின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்,  தென்றல், முந்தானை முடிச்சு போன்ற சீரியல்களில் நடித்தார்.

    பிரபல தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் படத்தின் திரைக் கொண்டாட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழாவை ஆடம் தொகுத்து வழங்குவார். பின் படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

    இப்பொழுது அவர் இயக்குனராக புது அவதாரம் எடுத்துள்ளார். கேன் என்ற ரொமாண்டிக் திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் நடித்து இருக்கும் முன்னணி கதாப்பாதிரங்களின் முகத்தை வைத்து ஒரு வித்தியாசமான ஃபர்ஸ் லுக்காக உருவாக்கியுள்ளார்.

    கோவை சரளா, கலையரசன், விடிவி கணேஷ், ரோபோ ஷங்கர், அக்ஷரா, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    எட்டு நாட்களில் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதை இது என்பது குறிப்படத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாஜக நிா்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
    • காவல்துறையினரும் பெட்ரோல் குண்டு வீசிய நபா்களை கைது செய்து வருகின்றனா்.

    தாராபுரம் :

    கோவை உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. திருப்பூரில் பா.ஜ.க. நிா்வாகியின் வீடு என நினைத்து மில் அதிபரின் வீட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காவல்துறையினரும் பெட்ரோல் குண்டு வீசிய நபா்களைக் கைது செய்து வருகின்றனா்.

    மேலும் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நிகழாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனா்.

    இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பிக் கொடுக்க மறுத்து வருவதோடு, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என விழிப்புணா்வு நோட்டீசும் ஒட்டி வைத்துள்ளனா்.

    ×