search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cadres"

    சென்னையில் 5-ந்தேதி நடக்கும் பேரணியை தொடர்ந்து 6-ந்தேதி தொண்டர்களின் எழுச்சி அனைவருக்கும் தெரியவரும் என்று மு.க.அழகிரி கூறினார். #DMK #MKAzhagiri
    அவனியாபுரம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த 30-வது நாளில் சென்னையில் தனது ஆதரவாளர்களை திரட்டி பேரணி நடத்தப்போவதாக அவரது மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி அறிவித்தார்.

    தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனையிலும் ஈடுபட்டார். முதலில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த மு.க.அழகிரி திடீரென மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொள்வதாகவும், தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    இதனால் திட்டமிட்டப்படி 5-ந்தேதி அமைதி பேரணி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் நேற்று நிருபர்களை சந்தித்த மு.க.அழகிரி, நான் தலைவரின் (கருணாநிதி) மகன். சொன்னதை செய்வேன்.

    கோப்புப்படம்

    5-ந்தேதி சென்னையில் தி.மு.க. உண்மை தொண்டர்களுடன் அமைதி பேரணி அண்ணா சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை செல்லும் என்றார்.

    இந்த நிலையில் மு.க.அழகிரி மதுரையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். அப்போது பேரணியின் எழுச்சி எப்படி இருக்கும் என்று நிருபர்கள் கேட்டனர். 5-ந்தேதி நடக்கும் பேரணியை தொடர்ந்து 6-ந்தேதி தொண்டர்களின் எழுச்சி அனைவருக்கும் தெரியவரும் என்று பதில் அளித்தார். #DMK #MKAzhagiri
    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக போலீஸ் தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை கடந்த திங்கட்கிழமை கவலைக்கிடமாக மாறியதுமே பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.

    மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை அவர் உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் வெளி மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் சென்னைக்கு வரத் தொடங்கினார்கள். அன்று மாலை 6 மணிக்கு கருணாநிதி மரணம் அடைந்த தகவல் பரவியதும் மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

    அன்றிரவு கருணாநிதி உடலை வீட்டுக்கு கொண்டு செல்லவே 1½ மணி நேர பயணத்தை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. அதற்கு காரணமே வெள்ளம் போல திரண்டு விட்ட தி.மு.க. தொண்டர்கள்தான். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் “வீர வணக்கம், வீர வணக்கம்... கலைஞருக்கு வீர வணக்கம்” என்று முழங்கியபடி சென்றது உணர்ச்சிமயமாக இருந்தது.


    புதன்கிழமை காலை முதல் மதியம் வரை தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கருணாநிதி உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதும், பொதுமக்கள் ராஜாஜி ஹாலுக்கு படையெடுத்தனர். அண்ணாசாலை வழியாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சிவானந்தா சாலை வழியாக மக்கள் வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அந்த இரு சாலைகளிலும் திரும்பிய திசையெல்லாம் மனித தலையாக, மக்கள் வெள்ளமாக காணப்பட்டது.

    மதியம் பொதுமக்கள் வருகை கணிசமாக அதிகரித்தது. கருணாநிதி இறுதி ஊர்வலம் வாலாஜா சாலை வழியாக வரும் என்பது தெரிய வந்ததும் லட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியே குலுங்கியது.

    பிற்பகலிலும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மக்கள் அலை, அலையாக வந்தபடி இருந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த போலீசார் கடும் சவாலை சந்தித்தனர். இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் முண்டியடித்ததால் நெரிசல் உருவானது.

    இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்டது.



    மாலை 4.30 மணிக்குப் பிறகு இறுதி ஊர்வலம் தொடங்கியதும் தொண்டர்களும் அலை, அலையாக பின் தொடர்ந்து அணிவகுத்து வந்தனர். இதற்கிடையே லட்சக்கணக்கான தொண்டர்கள் கடற்கரை சாலையில் குவிந்தனர். இதனால் நேற்று மாலை அந்த பகுதியும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அவர்கள் அனைவரும் கருணாநிதி உடலுக்கு இறுதி சடங்குகள் முடியும் வரை தலைவா..... தலைவா.... என்று விண்ணதிர கோ‌ஷமிட்டப்படி இருந்தனர்.

    கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டு இரவு 7.30 மணிக்குப் பிறகு தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கலைந்து செல்லத் தொடங்கினார்கள். தொண்டர்கள் முழுமையாக கலைந்து செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது.

    லட்சக்கணக்கான மக்கள் வருகையால் கருணாநிதி இறுதி ஊர்வலம் மறக்க முடியாத ஊர்வலமாக மாறியது. இந்த இறுதி ஊர்வலத்தில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக போலீஸ் தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் சுமார் 5 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக தி.மு.க. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்விழித்து பேசுவது போன்ற படம் வெளியானதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தொண்டர்களின் கூட்டம் குறைந்ததால் ஆஸ்பத்திரி முன்பு போக்குவரத்து சீரானது. #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 27-ந்தேதி இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் குழு 24 மணி நேரமும் கருணாநிதி உடல் நிலையை கண்காணித்து வருகிறது.

    தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட குடும்பத்தினர் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் கருணாநிதி உடல்நிலை குறித்து தெரிவித்து வருகிறார்கள். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்று கருணாநிதி உடல்நிலை பற்றி கேட்டு அறிந்து வருகிறார்கள்.

    கருணாநிதி காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதில் இருந்தே தி.மு.க. தொண்டர்கள் அங்கு குவியத் தொடங்கினார்கள். 5 நாட்களாக இரவு பகல் பாராமல் ஆஸ்பத்திரி அருகிலேயே காத்துக் கிடந்தனர். கருணாநிதியை பார்த்துவிட்டு வரும் முக்கிய பிரமுகர்கள் ‘கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது’ என்று கூறினார்கள்.

    என்றாலும், தொண்டர்கள் அந்த இடத்தில் இருந்து நகரவில்லை. வெளியூர் தொண்டர்களும் வரத் தொடங்கியதால் ஆஸ்பத்திரி பகுதியில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமானது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கருணாநிதி உடல்நிலையில் லேசான பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    நிலைமையை சமாளிக்க ஆஸ்பத்திரி முன்பு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு வதந்திகள் பரவின. உண்மைநிலை என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் தவித்தனர். ‘கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் சீராகி விட்டது. தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்’ என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

    இதை உறுதிபடுத்தும் விதத்தில் காவேரி ஆஸ்பத்திரியும் அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிப்பதால் கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாக கூறப்பட்டது. இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று சென்னைக்கு வந்து கருணாநிதியை பார்த்தார்.


    இதையடுத்து ராகுல்காந்தி நேரில் கருணாநிதியை பார்த்தது போன்ற புகைப்படம் வெளியானது. இதில் கருணாநிதியின் காது அருகே மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அப்போது கருணாநிதி கண்விழித்து பார்ப்பது போன்ற காட்சி இடம்பெற்று உள்ளது. இந்த படம் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    ‘தலைவர் கலைஞர் மீண்டு வந்துவிட்டார்’ என்று குரல் எழுப்பி இருக்கிறார்கள். அதைதொடர்ந்து காவேரி ஆஸ்பத்திரி வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. இன்னும் சில தினங்கள் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் தொண்டர்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே தொண்டர்கள் குவிந்ததால் அந்த ஆஸ்பத்திரி அமைந்துள்ள லஸ் சர்ச் சாலையில் தடுப்புவேலி அமைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

    நேற்று கருணாநிதி கண்விழிப்பது போன்ற படம் வெளியானதால் தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர். இதனால் அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் கலைந்து சென்றனர். கூட்டம் குறைந்ததை அடுத்து தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டன. ஆஸ்பத்திரி முன்பு போக்குவரத்து சீரானது. தற்போது காவேரி ஆஸ்பத்திரி பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    ×