search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொண்டர்களின் எழுச்சி 6-ந்தேதி தெரியும்: முக அழகிரி
    X

    தொண்டர்களின் எழுச்சி 6-ந்தேதி தெரியும்: முக அழகிரி

    சென்னையில் 5-ந்தேதி நடக்கும் பேரணியை தொடர்ந்து 6-ந்தேதி தொண்டர்களின் எழுச்சி அனைவருக்கும் தெரியவரும் என்று மு.க.அழகிரி கூறினார். #DMK #MKAzhagiri
    அவனியாபுரம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த 30-வது நாளில் சென்னையில் தனது ஆதரவாளர்களை திரட்டி பேரணி நடத்தப்போவதாக அவரது மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி அறிவித்தார்.

    தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனையிலும் ஈடுபட்டார். முதலில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த மு.க.அழகிரி திடீரென மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொள்வதாகவும், தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    இதனால் திட்டமிட்டப்படி 5-ந்தேதி அமைதி பேரணி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் நேற்று நிருபர்களை சந்தித்த மு.க.அழகிரி, நான் தலைவரின் (கருணாநிதி) மகன். சொன்னதை செய்வேன்.

    கோப்புப்படம்

    5-ந்தேதி சென்னையில் தி.மு.க. உண்மை தொண்டர்களுடன் அமைதி பேரணி அண்ணா சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை செல்லும் என்றார்.

    இந்த நிலையில் மு.க.அழகிரி மதுரையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். அப்போது பேரணியின் எழுச்சி எப்படி இருக்கும் என்று நிருபர்கள் கேட்டனர். 5-ந்தேதி நடக்கும் பேரணியை தொடர்ந்து 6-ந்தேதி தொண்டர்களின் எழுச்சி அனைவருக்கும் தெரியவரும் என்று பதில் அளித்தார். #DMK #MKAzhagiri
    Next Story
    ×