search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "byke"

    • கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
    • குற்ற சம்பவங்களில் பயன்படுத்தியவிட்டு விட்டு சென்றார்களா என்று போலீசார் விசாரணை.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள உப்புபாளையம் என்ற இடத்தில் கடந்த 2 மாதங்களாக கேட்பாரற்று பைக் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் யாருடையது, ஏதேனும் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.

    எவராவது திருடி கொண்டு வந்து இங்கே நிறுத்தி சென்று விட்டார்களா? அல்லது குற்ற சம்பவங்களில் பயன்படுத்தியவிட்டு விட்டு சென்றார்களா? என்று தெரியவில்லை. இது மோட்டர் சைக்கிளை போலீசார் மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இதேபோல் கடந்த வாரம் வெள்ளகோவில் எல்.கே.ஏ. நகர் என்ற இடத்தில் ஒரு பள்ளி அருகே ஒரு பைக் ரோட்டின் ஓரமாக கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி.ஆர்.நகர் ரோட்டில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் செந்தில்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள முத்துக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் நேற்று முன்தினம் வள்ளியரச்சல் -வெள்ளகோவில் ரோட்டில் சிவகுமார் நகர் என்ற இடத்தில் பைக்கில் தனது மனைவி கவிதா (40) என்பவரை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு வெள்ளகோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது டி.ஆர்.நகர் ரோட்டில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் செந்தில்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செந்தில்குமார், கவிதா இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக செந்தில்குமாரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி செந்தல்குமார் உயிரிழந்தார். கவிதா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×