search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவர் பலி -மனைவி காயம்
    X

    கோப்பு படம்

    மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவர் பலி -மனைவி காயம்

    • டி.ஆர்.நகர் ரோட்டில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் செந்தில்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள முத்துக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் நேற்று முன்தினம் வள்ளியரச்சல் -வெள்ளகோவில் ரோட்டில் சிவகுமார் நகர் என்ற இடத்தில் பைக்கில் தனது மனைவி கவிதா (40) என்பவரை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு வெள்ளகோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது டி.ஆர்.நகர் ரோட்டில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் செந்தில்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செந்தில்குமார், கவிதா இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக செந்தில்குமாரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி செந்தல்குமார் உயிரிழந்தார். கவிதா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×