என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brahma lotus flower"

    • நிஷாகந்தி மலர்கள் பொதுவாக இரவில் மட்டுமே மலரக்கூடிய அரிய வகை மலர்.
    • காய்ச்சல், சளி, மூச்சுக் குழாய் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் உகார்தே நகர் பகுதியில் ஜான் கென்னடி என்பவர் வீட்டில் பிரம்மகமலம் என்றழைக்கப்படும் நிஷாகந்தி மலர்செடிகளை மாடித்தோட்டத்தில் பல வருடங்களாக வளர்த்து வருகிறார்.

    அரிய வகை பிரம்ம கமலப்பூ நிஷாகந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலர்களின் செடிகள் கள்ளிச்செடி இனத்தை சேர்ந்தவை ஆகும். இவற்றின் தண்டுகளை வெட்டி வைத்தாலே வளரக்கூடிய தன்மை உடையது.

    நிஷாகந்தி மலர்கள் வெண்ணிற வண்ணத்தில் 3 இதழ்களை கொண்டதாகவும் மிகவும் அழகாகவும் இருக்கும். மலரும் பொழுது சுமார் 10 மீட்டர் சுற்றளவு பூவின் நறுமணம் இருக்கும்.

    நிஷாகந்தி மலர்கள் பொதுவாக இரவில் மட்டுமே மலரக்கூடிய அரிய வகை மலர். மலர்ந்த சில மணி நேரங்களில் குவிந்து மொட்டுகள் போல் காட்சி அளிக்கும். மலர்ந்த சில மணி நேரங்களில் பலர் விளக்கேற்றி வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் நிஷாகந்தி மலர்கள் மருத்துவ குணம் கொண்டது என்று கூறப்படுகிறது. காய்ச்சல், சளி, மூச்சுக் குழாய் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

    கொடைக்கானலில் உகார்தே நகர் பகுதியில் வசிக்கும் ஜான் கென்னடி வீட்டில் மாடி தோட்டத்தில் மலர்ந்திருக்கும் நிஷாகந்தி பூக்களை அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ரசித்து புகைப்படம் எடுத்து சென்றனர்.

    • பிரம்ம கமல மலர் மலரும் போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
    • அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் பிரம்ம கமலம் பூக்களை அதிசயமாக பார்த்து வழிபட்டு சென்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படுவது பிரம்ம கமலம் பூக்கள். இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலைக்குள் உதிர்ந்து போகும். அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் தெய்வீக நறுமணம் வீசும்.

    ஒரே செடியில் 10க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது. பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவெனில் அந்த மலர் மலரும் போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    அந்த வகையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வரும் மணி என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் இந்த அற்புத பிரம்ம கமலம் பூவை கடந்த ஒரு வருடமாக வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் அவரது வீட்டு தோட்டத்தில் நள்ளிரவில் பிரம்ம கமலம் செடிகளில் இருந்து சுமார் 5க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்க தொடங்கின. இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அந்த பூக்களுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் பிரம்ம கமலம் பூக்களை அதிசயமாக பார்த்து வழிபட்டு சென்றனர்.

    • இரவில் மலரும் பிரம்ம கமலம் பூ தெய்வீக பூவாக கருதப்படுகிறது.
    • வீடுகளில் பிரம்ம கமலம் பூ பூத்ததை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    இரவில் மலரும் பிரம்ம கமலம் பூ தெய்வீக பூவாக கருதப்படுகிறது.

    திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டி இ.பி காலனியை சேர்ந்த சமேஸ்வரி என்பவரது வீட்டில் இரவு பிரம்ம கமலம் பூ பூத்தது. இவர் கடந்த 3 வருடமாக பிரம்ம கமலம் செடியை வளர்த்து வருகிறார். முதல் முறையாக நேற்று இரவு பூ மலர்ந்தது. இதனை அடுத்து பிரம்ம கமலம் மலருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

    அதேபோல் முள்ளிப்பாடி அன்னை நகரை சேர்ந்த வசந்தா மகேஸ்வரி என்பவர் கடந்த 1 வருடமாக பிரம்ம கமல செடி வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பூ மலர்ந்தது. இதனை அடுத்து பூவிற்கு விளக்கேற்றி நிறைகுட செம்பில் தண்ணீர் வைத்து வழிபாடு நடத்தினர்.

    வீடுகளில் பிரம்ம கமலம் பூ பூத்ததை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

    • குடும்பத்தினர் வழிபாடு
    • கோவில் குருக்களை வரவழைத்து சிறப்பு பூஜை செய்தனர்

    ராணிப்பேட்டை:

    இமயமலை போன்ற குளிர்ச்சியான மலை பகுதிகளில் மட்டும வருடத்திற்கு ஒரு முறை பூத்து குலுங்குவது பிரம்ம கமலம் பூ படைக்கும் கடவுள் பிரம்மானக்கு உகந்த பூவாக கருதப்படுவதால் பிரம்ம கமலம் என்று அழைக்கப்படுகிறது.

    பிரம்ம கமலம் பூ குளிர்காலத்தில் மட்டுமே நள்ளிரவில் பூத்து அதிகாலைக்குள் உதிர்ந்து போகும். அதிக நறுமணத்துடன் ஒரே செடியில் 10-க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும்.

    அந்த பூ மலரும் போது வேண்டினால் அது நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த பிரம்ம கமலம் பூ தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படும் அரிய வகை பூ என கூறப்படுகிறது.

    இந்நிலையில் வாலாஜாவில், ஆற்காடு தெத்து தெரு பகுதியில் வசித்து வரும் முனிரத்தினம், கிருஷ்ணவேணி தம்பதிகள் வேலூரில் தோட்டக்கலையிலிருந்து நான்கு வருடங்களுக்கு முன் இந்த பிரம்ம கமல பூ செடியை வாங்கி வந்து வீட்டில் பூத்தொட்டியில் வளர்த்து வந்தனர். நேற்று இரவு இரண்டு பூ தொட்டியகளில் திடீரென 6-க்கும் மேற்பட்ட பிரம்ம கமலம் பூக்கள் பூத்துள்ளன.

    பூ பூத்ததை கண்ட அவரது குடும்பத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து கோவில் குருக்களை வரவழைத்து பிரம்ம கமல பூக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் கூட்டமாக வந்து பூவை வணங்கி சென்றனர்.

    சிவனடியார்களும் தேவாரம், சிவபுராணம், திருவாசகம் என சிவனின் பாடல்களை பாடியவாறு பூவிற்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாரதனை காண்பித்து வழிபட்டனர்.

    • சேலம் அழகாபுரம் சிவாய நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி.
    • இவர் தனது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் செடி கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.

    கருப்பூர்:

    சேலம் அழகாபுரம் சிவாய நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி. இவர் தனது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் செடி கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இந்த செடி இரவில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது.

    இந்த நிலையில் பிரம்ம கமலம் செடியில் நேற்று இரவு 10 மணி அளவில் பூ பூத்தது. ஒரே செடியில் 12-க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்தன. இதனை அறிந்த அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்து பூவுக்கு தேங்காய், பழம் உடைத்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.

    இதுகுறித்து சரஸ்வதி கூறுகையில், பிரம்ம கமலம் பூ அனைத்து கடவுள்களுக்கும் படைக்கும் ஓர் அற்புதமான பூ ஆகும். இதில் சங்கு, சக்கரங்கள் உள்ளது. இதனால் இரவில் மட்டும் பூக்கும் இந்த அதிசய பூவை வணங்கினால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கையாகும் என்றார்.

    ×