என் மலர்
நீங்கள் தேடியது "Bottle Silencer"
- சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 1297 பைக்குகளின் சைலன்சர்களை போலீசார் பறிமுதல்
- இது தொடர்பாக 2,325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
VIDEO:அண்மை காலங்களில் இளைஞர்கள் பலர் தங்களின் பைக்குகளில் உள்ள சைலன்சர்களை கழற்றிவிட்டு அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்தி வருகின்றனர். இதனால் ஒலி மற்றும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 1297 பைக்குகளின் சைலன்சர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2,325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 1,297 பைக்குகளின் சைலன்சர்கள் ரோடு ரோலர் ஏற்றி காவல்துறை அழித்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- விசாகப்பட்டினத்தில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் பொருத்திய பைக்குகள் அதிகரித்து வந்தன.
- போக்குவரது போலீசார் அதிக ஒலி எழுப்பக்கூடிய பைக்குகளை பிடித்து அதன் சைலன்சர்களை கழற்றினர்.
அண்மை காலங்களில் இளைஞர்கள் பலர் தங்களின் பைக்குகளில் உள்ள சைலன்சர்களை கழற்றிவிட்டு அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்தி வருகின்றனர். இதனால் ஒலி மற்றும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் பொருத்திய பைக்குகள் தொடர்பாக போக்குவரத்து போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன
இதனையயடுத்து தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரது போலீசார் அதிக ஒலி எழுப்பக்கூடிய பைக்குகளை பிடித்து அதன் சைலன்சர்களை கழற்றினர்.
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பிய 181 பைக் சைலன்சர்களை ரோடு ரோலர் ஏற்றி போலீசார் அழித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.







