search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blocked the road"

    • 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • திடீர் சாலைமறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இந்நிலையில் 4 வழி சாலைக்கு அருகாமையில் மதகடிப்பட்டு அருகே தமிழக பகுதியான எல்.ஆர். பாளையம் கிராமம் உள்ளது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    மேலும் இந்த வழியாகவே பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது.

    இந்த சாலை விழுப்புரம்- புதுச்சேரி 4 வழி சாலையில் வந்து இணைகிறது. இந்த சாலைக்கு எதிர்புறம் தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் பள்ளி என கல்வி நிறுவனங்கள் உள்ளன.

    பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த சாலையை கடந்தே மறு முனைக்கு செல்ல வேண்டும்.

    மேலும் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக செல்வோரும் இந்த சாலையைத்தான் கடந்து செல்ல வேண்டும். ஆனால் நெடுஞ்சாலை பணி யாளர்கள் 2 சாலைகளின் குறுக்கே இரும்பு கேட்டுகள் அமைத்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நடந்து கூட செல்லாத அளவிற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.

    இதனால் எல்.ஆர். பாளையம் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பொது மக்களும் அப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்க சாவடியை தாண்டி கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் இருந்து எதிரே உள்ள சாலைக்கு செல்வதற்கு எந்த இடை யூறும் இல்லாமல் பாதை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த மறியல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. ஆனால் போலீசாரோ அதிகாரிகளோ அப்பகுதிக்கு வராததால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர்.

    அதன் பின்னர் தகவல் அறிந்த திருபுவனை போலீசார் மற்றும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.உடனடியாக அப்பகுதியில் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரி யிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலைமறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காலை நேரம் என்பதால் கல்லூரி-பள்ளி வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலதாமதமாக சென்றனர்.

    • போக்குவரத்து பாதிப்பால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்துநின்றன
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சியில் கல்லட்டி பகுதி உள்ளது.இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த பகுதிக்கு முறையாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஊட்டி-கல்லட்டி சாலையில் குவிந்தனர்.

    பின்னர் அந்த சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள், தங்கள் பகுதிக்கு தண்ணீர் வந்து பல நாட்கள் ஆகிறது. தண்ணீர் வராததால் நாங்கள் மிகவும் சிரமப்படுகி றோம். எனவே தண்ணீர் வழங்க நடவடிக்ைக எடுக்க என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்து கிறோம் என தெரிவித்தனர்.

    பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களுடன் பேச்சு வர்த்தை யில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவி கள், பணிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

    • போலீசார் அவர்களை அழைத்து பச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கை விடப்பட்டது.
    • பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் பஸ்கள் சாலையிலேயே நிறுத்தப் பட்டன.

    புதுச்சேரி:

    புதுவை புதிய பஸ்நிலையம் ரூ.30 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன மயமாக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக பஸ்நிலையத்தின் மைய பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 500 சதுரமீட்டரில் கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    இதற்காக பணியை எடுத்த ஒப்பந்ததாரர் பஸ்நிலையத்தில் 5 ஆயிரம் சதுரமீட்டர் அளவுக்கு தடுப்பு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் இப்பணியால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பஸ் நிலைய ஆட்டோ டிரை–வர்கள் முற்றுகை யிட்டனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை அழைத்து பச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கை விடப்பட்டது.

    இந்நிலையில் இன்று புதிய பஸ் நிலையத்தின் உட்புறம் உள்ள கடை வியாபாரிகள் கடைகளை அடைத்து திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தங்களுக்கு மீண்டும் புதிய கட்டிடத்தில் கடைகள் தருவதை உறுதி செய்ய வேண்டும்.

    கட்டுமான பணிகள் முடியும் வரை மாற்று இடம் தர வேண்டும் என வலியுறுத்தினர்.

    பஸ்கள் பஸ் நிலையத்தின் உட்புறம் நுழையும் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் மறைமலை அடிகள் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் பஸ்கள் சாலையிலேயே நிறுத்தப் பட்டன.

    தகவலறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதிகாரிகளை சந்தித்து பேசி தீர்வு காணும்படியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பெரியகுளத்தில் திருமாவளவன் கைதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
    பெரியகுளம்:

    தூத்துக்குடியில் ஸ்டெலைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர், தன்னார்வ தொண்டர்கள் என பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை எழும்பூரில் துப்பாக்கி சூட்டை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மறியல் போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் நாகரத்தினம், பொருளாளர் ரபீக், நிர்வாகிகள் கனகராஜ், சுசிதமிழ்பாண்டி, மணிபாரதி, ஜோதிமுருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும். கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷமிட்டனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.#tamilnews
    ×