search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
    X

    புதுவை புதிய பஸ் நிலையத்தில் வியாபாரிகள் மறியலில் ஈடுபட்ட காட்சி.

    வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

    • போலீசார் அவர்களை அழைத்து பச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கை விடப்பட்டது.
    • பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் பஸ்கள் சாலையிலேயே நிறுத்தப் பட்டன.

    புதுச்சேரி:

    புதுவை புதிய பஸ்நிலையம் ரூ.30 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன மயமாக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக பஸ்நிலையத்தின் மைய பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 500 சதுரமீட்டரில் கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    இதற்காக பணியை எடுத்த ஒப்பந்ததாரர் பஸ்நிலையத்தில் 5 ஆயிரம் சதுரமீட்டர் அளவுக்கு தடுப்பு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் இப்பணியால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பஸ் நிலைய ஆட்டோ டிரை–வர்கள் முற்றுகை யிட்டனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை அழைத்து பச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கை விடப்பட்டது.

    இந்நிலையில் இன்று புதிய பஸ் நிலையத்தின் உட்புறம் உள்ள கடை வியாபாரிகள் கடைகளை அடைத்து திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தங்களுக்கு மீண்டும் புதிய கட்டிடத்தில் கடைகள் தருவதை உறுதி செய்ய வேண்டும்.

    கட்டுமான பணிகள் முடியும் வரை மாற்று இடம் தர வேண்டும் என வலியுறுத்தினர்.

    பஸ்கள் பஸ் நிலையத்தின் உட்புறம் நுழையும் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் மறைமலை அடிகள் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் பஸ்கள் சாலையிலேயே நிறுத்தப் பட்டன.

    தகவலறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதிகாரிகளை சந்தித்து பேசி தீர்வு காணும்படியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×