search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "At subsidized rates"

    • பாரம்பரிய நெல் உற்பத்தி செய்யப்பட்டு நடப்பு சம்பா பருவத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த ரகங்களை சாகுபடி செய்வதால் மண்வளம் பேணிக்காக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தூயமல்லி என்ற பாரம்பரிய நெல் பவானி அரசு விதைப்பண்ணையில் சென்ற ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டு நடப்பு சம்பா பருவத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு விதைகள் மேம்பாட்டு முகமை திட்டம் 2023-24-ம் ஆண்டிற்கான திட்டக்கூறு களில் ஒன்றான நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரகம் தூயமல்லி விதைகள் உற்பத்தி செய்யப் பட்டு விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.25 வீதம் ஈரோடு மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பாரம்பரிய நெல் பயன்பாடு நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் மனித வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் கிடைப்பதுடன் இவ்வாறான ரகங்கள் அனைத்து விதமான மண் வளத்திலும், பாதகமான வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை கூட தாங்கி வளரக்கூடிய திறன் படைத்ததாகவும் உள்ளது.

    மேலும் இந்த ரகங்களை சாகுபடி செய்வதால் மண்வளம் பேணிக்காக்கப்படுகிறது. கால்நடைகள் பாரம்பரிய நெல் ரகத்தின் வைக்கோலை விரும்பி உட்கொள்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், கோபிசெட்டி பாளையம், மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் டி.என்.பாளையம் தவிர மற்ற வட்டாரங்களில் குறைந்த அளவே மொத்தம் 1314 கிலோ மட்டுமே இருப்பு உள்ளது.

    எனவே பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து மானிய விலையில் வாங்கி பயனடையுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) எஸ்.வெங்கடேசகன் தெரிவித்துள்ளார்.

    • தற்போது கோடை மழை பெய்துள்ளதால், உழவர்கள் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வட்டார வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு சோளம், சாமை, மற்றும் பயறு விதைகள், மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேளாண் அதிகாரி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போது கோடை மழை பெய்துள்ளதால், உழவர்கள் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் வட்டார வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு சோளம், சாமை, மற்றும் பயறு விதைகள், மானிய விலையில் வழங்கப்படு கிறது. விவசாயிகளுக்கு விதைப்புக்கு தேவையான சோளம், சாமை மற்றும் நிலக்கடலை, பயறு வகை பயிர்களான உளுந்து, பாசிப்பயறு விதைகள் நாமக்கல் வட்டார ஒருங்கி ணைந்த வேளாண்மை விரி வாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன.

    இந்த விதைகள் தேவைப்படும் விவசாயிகள், தங்களின் நில உடமை சான்று, சிட்டா மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வந்து, வேளாண் விரிவாக்க அலுவலகத்தை நேரில் அணுகி தங்கள் சாகு படிக்கு தேவையான விதையை, மானிய விலை யில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவ லர்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகளிடையே விதைப்பண்ணை அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு ஆதார விதை மற்றும் உயிர் உரம் ஆகியவை மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    கொளத்தூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை துறை துணை இயக்குனர் சீனிவாசன் கொளத்தூர் வட்டாரத்தில் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் விவசாயிகளிடையே விதைப்பண்ணை அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து பயிர் வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பாசிப்பருப்பு 64 ஹெக்டேரிலும், உளுந்து 6 ஹெக்டேரிலும் பயிர் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு ஆதார விதை மற்றும் உயிர் உரம் ஆகியவை மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதைகளை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள விவசாயிகள் கொளத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையம் அல்லது உதவி விதை அலுவலர் செந்தில்வேலன் ஆகியோரை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×