என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வினியோகம்
    X

    நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வினியோகம்

    • தற்போது கோடை மழை பெய்துள்ளதால், உழவர்கள் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வட்டார வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு சோளம், சாமை, மற்றும் பயறு விதைகள், மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேளாண் அதிகாரி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போது கோடை மழை பெய்துள்ளதால், உழவர்கள் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் வட்டார வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு சோளம், சாமை, மற்றும் பயறு விதைகள், மானிய விலையில் வழங்கப்படு கிறது. விவசாயிகளுக்கு விதைப்புக்கு தேவையான சோளம், சாமை மற்றும் நிலக்கடலை, பயறு வகை பயிர்களான உளுந்து, பாசிப்பயறு விதைகள் நாமக்கல் வட்டார ஒருங்கி ணைந்த வேளாண்மை விரி வாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன.

    இந்த விதைகள் தேவைப்படும் விவசாயிகள், தங்களின் நில உடமை சான்று, சிட்டா மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வந்து, வேளாண் விரிவாக்க அலுவலகத்தை நேரில் அணுகி தங்கள் சாகு படிக்கு தேவையான விதையை, மானிய விலை யில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவ லர்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×