search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "An old woman"

    • கீரை பறிக்க சென்ற நாகதேவியை பாம்பு கடித்துவிட்டதாக தெரிகிறது.
    • பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே நாக தேவி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், நசியனூரை அடுத்துள்ள முள்ளம்பட்டி, இச்சிவலசு பகுதியைச் சேர்ந்தவர் நாகதேவி (63). இவரது கணவர் கடந்த 13 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் உமாசங்கர் (37). இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    உமா சங்கர் மரம் ஏறி தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வருகிறார். நாகதேவி கடந்த 3 மாதங்களாக திங்களூர் அருகே உள்ள சின்னவீர சங்கிலி, அய்யன்காட்டுத் தோட்டம் பகுதியில் உள்ள கால் நடை மருத்துவர் சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், வீட்டின் பின்புறம் கீரை பறிக்க சென்ற நாகதேவியை பாம்பு கடித்துவிட்டதாக தெரிகிறது.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியி லேயே நாக தேவி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து, திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    • வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானை மற்றும் வன விலங்குகள் நட மாட்டம் அதிகம் இருக்கும்.
    • இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கொம்பு தூக்கி அம்மன் கோவில் வன ப்பகுதியில் நேற்று இரவு அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி பிணம் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனத்துறை அதிகாரி விஸ்வநாதன் பர்கூர் போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரி வித்தார். வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானை மற்றும் வன விலங்குகள் நட மாட்டம் அதிகம் இருக்கும்.

    இதனால் இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்ேபாது வனப்பகுதி யில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் அழுகிய நிலையில் இருந்தது. இதை யடுத்து அவரது உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரிய வில்லை.

    மேலும் இறந்த மூதாட்டி விறகு எடுத்து வருவதற்காக வனப்பகுதிகளுக்குள் சென்ற போது வன விலங்குகள் ஏதேனும் தாக்கி உயிரிழந்து விட்டாரா? அல்லது எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • செல்லாயாள் மயக்கம் அடைந்து அடுப்பின் மேல் விழுந்து விட்டார்.
    • கட்டிருந்த சேலையில் தீப்பிடித்து உடல் கருகினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த சுண்டக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்லாயாள் (79).

    இந்நிலையில் சம்பவத் தன்று செல்லாயாள் வீட்டில் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் அடைந்து அடுப்பின் மேல் விழுந்து விட்டார்.

    இதில் அவர் கட்டிருந்த சேலையில் தீப்பிடித்து உடல் கருகினார். அவரது கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நீரை ஊற்றி ஈரத்துணியால் போற்றி அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூதாட்டி செல்லாயாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கான்கிரீட் கலவை மிஷின் என்ஜின் பகுதியில் பாப்பாயி சேலை சிக்கிக் கொண்டது
    • பாப்பாயி கலவை மிஷின் மீது மோதி சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாப மாக இறந்தார்

    சிவகிரி,

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தலைய நல்லூர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பாப்பாயி (வயது 62). கட்டிட கூலி தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சிவகிரி அருகே உள்ள ரங்க சமு த்திரம் பகுதியில் தங்கவேல் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். பாப்பாயி அங்கு வேலை செய்தார். தொடர்ந்து அவர் அங்கு கான்கிரீட் கலவை மிஷினில் ஜல்லி அள்ளி போட்டு கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கான்கிரீட் கலவை மிஷின் என்ஜின் பகுதியில் பாப்பாயி சேலை சிக்கிக் கொண்டது. இதில் பாப்பாயி கலவை மிஷின் மீது மோதி சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாப மாக இறந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடன் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் பாப்பாயின் உடல் பிரேத பரிசோதனை க்காக பெரு ந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    ×