search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "concrete mixing machine"

    • கான்கிரீட் கலவை எந்திரம் மோதி நிச்சயதார்த்த விழாவுக்கு வந்தவர் பலியானார்.
    • பொம்முசாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மாடசாமி கோவில் ெதருவைச் சேர்ந்தவர் பரமகுரு (வயது 39). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இவரது சகோதரிக்கு திருமண நிச்சயதார்த்த விழா ராஜபாளையம் அருகேயுள்ள சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் கலந்துகொள்வதற் காக பரமகுரு நேற்று சங்கர பாண்டியபுரம் சென்றிருந் தார். இதற்கிடையே காலையில் திறந்தவெளி கழிப்பி டத்தை நோக்கி உறவினரின் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றார்.

    வழியில் வாகைக்குளம் கண்மாய் பகுதியில் புதிய பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கான்கிரீட் கலவை எந்திரம் அங்கு வந்தது.

    அப் போது எதிர்பாராதவித மாக பரமகுரு மீது அந்த வாகனம் மோதியது. இதில் லாரியின் டயருக்கு அடியில் சிக்கிக்கொண்ட பரமகுரு உடல் நசுங்கி பலியானார்.

    இந்த விபத்து குறித்து பரமகுருவின் பெரியப்பா இருளப்பன் கொடுத்த புகாரின் பேரில் கீழராஜ குலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தியதாக கலவை எந்திரத்தின் டிரைவர் என்.புதூரை சேர்ந்த பொம்முசாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • கான்கிரீட் கலவை மிஷின் என்ஜின் பகுதியில் பாப்பாயி சேலை சிக்கிக் கொண்டது
    • பாப்பாயி கலவை மிஷின் மீது மோதி சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாப மாக இறந்தார்

    சிவகிரி,

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தலைய நல்லூர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பாப்பாயி (வயது 62). கட்டிட கூலி தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சிவகிரி அருகே உள்ள ரங்க சமு த்திரம் பகுதியில் தங்கவேல் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். பாப்பாயி அங்கு வேலை செய்தார். தொடர்ந்து அவர் அங்கு கான்கிரீட் கலவை மிஷினில் ஜல்லி அள்ளி போட்டு கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கான்கிரீட் கலவை மிஷின் என்ஜின் பகுதியில் பாப்பாயி சேலை சிக்கிக் கொண்டது. இதில் பாப்பாயி கலவை மிஷின் மீது மோதி சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாப மாக இறந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடன் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் பாப்பாயின் உடல் பிரேத பரிசோதனை க்காக பெரு ந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    ×