search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engagement ceremony"

    • கான்கிரீட் கலவை எந்திரம் மோதி நிச்சயதார்த்த விழாவுக்கு வந்தவர் பலியானார்.
    • பொம்முசாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மாடசாமி கோவில் ெதருவைச் சேர்ந்தவர் பரமகுரு (வயது 39). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இவரது சகோதரிக்கு திருமண நிச்சயதார்த்த விழா ராஜபாளையம் அருகேயுள்ள சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் கலந்துகொள்வதற் காக பரமகுரு நேற்று சங்கர பாண்டியபுரம் சென்றிருந் தார். இதற்கிடையே காலையில் திறந்தவெளி கழிப்பி டத்தை நோக்கி உறவினரின் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றார்.

    வழியில் வாகைக்குளம் கண்மாய் பகுதியில் புதிய பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கான்கிரீட் கலவை எந்திரம் அங்கு வந்தது.

    அப் போது எதிர்பாராதவித மாக பரமகுரு மீது அந்த வாகனம் மோதியது. இதில் லாரியின் டயருக்கு அடியில் சிக்கிக்கொண்ட பரமகுரு உடல் நசுங்கி பலியானார்.

    இந்த விபத்து குறித்து பரமகுருவின் பெரியப்பா இருளப்பன் கொடுத்த புகாரின் பேரில் கீழராஜ குலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தியதாக கலவை எந்திரத்தின் டிரைவர் என்.புதூரை சேர்ந்த பொம்முசாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • பண்ருட்டிஅருகே நிச்சயதார்த்த விழாவில் உணவு சாப்பிட்ட 59 பேருக்கு வாந்தி- மயக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • தகவல் அறிந்த அதிகாரதிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, நலம் விசாரித்தனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டிஅருகேஉள்ள மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். அவரது மகள் கமலாவதி(வயது28). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம்பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவாலிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்த விழா பேரங்கியூரில் நடைபெற்றது. இதில் மேலிருப்பு,பேரங்கியூர் மற்றும் சுற்று வட்டாரகிராமங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை யொட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு,அங்குஉணவு பரிமாறப்பட்டது. இதை சாப்பிட்டு விட்டு உறவினர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.இந்த நிலையில் நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டு விட்டு வந்த பலருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 59 பேர் பண்ருட்டி, முண்டியம்பாக்கம் அரசுஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டனர். பண்ருட்டி, கடலூரில்உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார், கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.தகவல் அறிந்த அதிகாரதிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, நலம் விசாரித்தனர். நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×