

திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் பாலாப்பூரை சேர்ந்தவர் முகமது அமீர் தொழிலதிபர் குடும்பத்தில் நடந்த நிச்சயதார்த்த விழாவிற்கு திருநங்கைகளை அழைத்து இருந்தார்.
இந்த விழாவில் சினிமா பாடல்களுக்கு திருநங்கைகள் ஆபாசமாக நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் நடனமாடிய திருநங்கைகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். வீடியோ மூலம் அவர்கள் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
BREAKING: Mujra party exposed under Balapur PS limits!@RachakondaPolice, take immediate action!Public demands justice & safety in our communities!#MujraPartyExposed #BalapurPS #JusticeNow #CommunitySafety #RachakondaPolice @VoiceUpMedia1 pic.twitter.com/vC7W45WCfK