search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambasamudram"

    • கடையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைப்பெற உள்ளது.
    • அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொ றியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    ஓ. துலூக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைப்பெற உள்ளது.

    அதன் காரணமாக அந்தந்த துணை மின்நிலை யங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    அதன்படி ஓ. துலூக்கப்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆழ்வான் துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனை யங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்த பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும், வீரவ நல்லூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கல்லி டைக்குறிச்சி, வீரவ நல்லூர், சாட்டுபத்து, அரிகே சவ நல்லூர், வெள்ளா ங்குளி, ரெங்க சமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோ வில், பிரம்ம தேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தி யர்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

    அதேபோல் மணிமுத்தாறு துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மணி முத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைரா விக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான் குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகள், கடையம் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கடையம், பண்டாரகுளம், பொட்டல்பு தூர், திருமலையப்பபுரம், வடமலைசமுத்திரம், வள்ளி யம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்பபுரம், வெங்காலிப்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநி யோகம் தடைப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பணகுடி

    வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட பணகுடி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமி புரம், தளவாய் புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை வள்ளியூர் செயற் பொறியாளர் வளன்அரசு தெரிவித்துள்ளார்.

    • பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இரவில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைப்பெற்றது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் வீரபாகு சேனைத்தலைவர் இளைஞர் அணி சார்பில் 3-ம் திருநாள் மண்டகப்படி நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு அம்பை நகராட்சி கலையரங்கம் அருகே மாணவ- மாணவிகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரவில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைப்பெற்றது. ஏற்பாடுகளை இளைஞரணி தலைவர் துரை, செயலாளர் செல்வராஜ், துனைத்தலைவர் சிவக்குமார், பொருளாளர் ரவி மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    ×