என் மலர்
நீங்கள் தேடியது "AIADMK executive committee meeting"
- திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
- சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்பதாக தீர்மானம் நிறைவேற்றம்.
தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன்படி, மக்களிடம் நாடகமாடும் திமுக அரசுக்கு கண்டனம் என அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்தலின்போது 525 வாக்குறுதி அளித்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் தவறான தகவல் பரப்பும் திமுகவுக்கு எதிர்ப்பு என தீர்மானம் நிறைவறே்றம்.
நீட் விவகாரத்தில் இனியும் ஏமாற்றாமல் திமுக தலைவர் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்.
மக்களின் கோபத்தை மறைக்க கல்விக்கொள்ளை, மொழிக் கொள்கை, கச்சத்தீவு மீட்பு, மாநில சுயாட்சி என்று திமுக நாடகம் என தீர்மானம்.
நீர் மேலாண்மையை முறையாக பாதுகாக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம்.
நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு அனுமதி பெற்றுத்தந்த இபிஎஸ் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றம்.
அதிமுக என்றென்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும் என உறுதி அளித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.
திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரி முதல் குப்பை வரி வரை உயர்த்திய திமுக அரசுக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.
பெண்களை ஆபாசமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொண்ட இபிஎஸ்க்கு பாராட்டு என தீர்மானம்.
சமூக விரோத செயல்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு கடும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் என தீர்மானம் நிறைவேற்றம்.
மக்கள் நலன்களை புறந்தள்ளிவிட்டு சுய விளம்பர ஆட்சி, போட்டோ ஷூட் ஆட்சி நடத்தி வரும் திமுக அரசுக்கு கண்டனம் என தீர்மானம்.
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம், பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும் என தீர்மானம்.
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்பதாக அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார்.
- தி.மு.க.வை வீழ்த்த தேவையான வியூகங்கள் பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்குவார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதை டி.ஜெயக்குமார் உள்பட மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை.
அவர்கள் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை வெளியிட்டார்கள். பின்னர் கட்சி கட்டுப்பாடு கருதி அமைதியாகி விட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தலைமை கழகத்தில் தொடங்கியது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார்.
கூட்டணி அமைந்த பிறகு நடத்தப்படும் முதல் செயற்குழு என்பதால் இந்த செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது ஏன்? தி.மு.க.வை வீழ்த்த தேவையான வியூகங்கள் பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்குவார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கூட்டணி தொடர்பான அதிருப்தியை கட்சியினரிடம் போக்குவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார்.
- அதிரடி மாற்றங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
- கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க.வுக்கு மீண்டும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
குறிப்பாக 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு அ.தி.மு.க. நிர்வாக அமைப்புகளில் அதிரடி மாற்றங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து எதிர்கொள்ள அ.தி.மு.க. உடன்பாடு செய்துள்ளது. இதன் காரணமாக அ.தி.மு.க.வில் உள்ள சிறுபான்மையின நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சற்று அதிருப்தி அடைந்து உள்ளனர்.
அவர்களை சமரசம் செய்யும் நடவடிக்கைகளை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் செய்து வருகிறார்கள். சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அ.தி.மு.க. ஒருபோதும் நடந்து கொள்ளாது என்று உறுதி அளிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் உருவாக்கப்படும் போது சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அ.தி.மு.க. செயல்படும்என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர தேர்தலுக்கு ஆயத்தமாகும் பணிகளையும் இப்போதே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி எல்லாம் ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
அதன்படி அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. செயற்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 2.5.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் கழக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழக செயலாளர்க்ள, மாவட்டக் கழக செயலாளர்கள், பிற மாநிலக் கழக செயலாளர்கள், கழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிததோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அழைப்பாளர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
நாளை நடக்கும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் எத்தகைய முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பெரும்பாலான அ.தி.மு.க. உறுப்பினர்கள், இந்த செயற்குழு வெறுமனே சம்பிரதாயத்துக்கு நடத்தி முடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் ஆர்வமாக உள்ளனர்.
அ.தி.மு.க.வுக்கு புதிய உயிரும், புத்துணர்ச்சியும் அளிக்கப்பட வேண்டுமானால் சில முக்கிய முடிவுகளை எடுத்தே தீர வேண்டும் என்று கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அடுத்த வாரம் தி.மு.க. தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். டி.டி.வி.தினகரன் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார். 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது.
அது போல கட்சி சட்ட விதிகளில் மாற்றம் செய்தது தொடர்பான வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. இத்தனை பரபரப்புக்கிடையே திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கண்ட அத்தனை விஷயங்களையும் அ.தி.மு.க.வால் சாதாரணமாக ஒதுக்கி விட முடியாது. இதனால்தான் நாளை நடக்கும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அ.தி.மு.க.வுக்கு தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு, கட்சி விதிகளில் திருத்தம் வழக்கு ஆகிய மூன்றும் முக்கியமானதாக உள்ளது. இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அ.தி.மு.க.வில் எத்தகைய முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ அதே பாணியை கடைபிடிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள்.
2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள 2013-ம் ஆண்டே பூத் கமிட்டியை ஜெயலலிதா உருவாக்கி இருந்தார். அதனால்தான் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வால் 99 சதவீத வெற்றியை பெற முடிந்தது. ஆனால் தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் எந்தவித முன் ஏற்பாடும் தயார் செய்யப்படவில்லை என்று வேதனையோடு அ.தி.மு.க. நிர்வாகிகள் சொல்கிறார்கள்.
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியை தழுவ நேரிட்டால், அ.தி.மு.க. மீதான மதிப்பு மக்கள் மத்தியில் வீழ்ச்சி அடைய தொடங்கி விடும் அபாயம் உள்ளது. செயற்குழுவில் இது பற்றி விவாதித்து புதிய யுத்தியை கையாள முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த இரு இடைத்தேர்தலுக்கும் டி.டி.வி.தினகரன் ஓசையின்றி தயாராகிவிட்டார். வேட்பாளரை கூட அவர் தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அ.தி.மு.க.வில் இதற்கான பணிகள் இன்னமும் தொடங்கவில்லை. மாறாக திருவாரூர், திருப்பரங்குன்றம் இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பல கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களை ஒருங்கிணைப்பதே பெரும் சவாலாக இருக்கும் என்பதால் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் கவலையுடன் உள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் ஒரு தேக்கநிலை உள்ளதாக கூறப்படுகிறது. கட்சி பணிகளை உடனுக்குடன் செய்ய வழிகாட்டுதல் குழு இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் வழிகாட்டும் குழு அமைக்கப்படவில்லை.

இப்படி மற்ற மூத்த தலைவர்கள், 2-ம் கட்ட தலைவர்களிடம் பல பதவிகள் குவிந்து கிடக்கிறது. இதையெல்லாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொடுத்து பொறுப்புகளை ஒப்படைத்தால்தான் அ.தி.மு.க.வில் புத்துணர்ச்சி ஏற்படும் என்கிறார்கள்.
கட்சியில் நன்கு செயல்பட கூடியவர்களில் பலர் பொறுப்புகள் இல்லாமல் உள்ளனர். குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பதவி தரப்படாததால் விரக்தி அடைந்துள்ளனர்.
இத்தகைய விரக்தியான நிலையில் உள்ளவர்கள்தான் டி.டி.வி.தினகரனின் புதிய கட்சிக்கு தாவுவதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வேண்டுமானால் நாளைய அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகத்துக்கான அதிரடி முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam






