search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advises"

    • தற்போது நிலவும் சீதோ ஷண நிலையால் பு துக்கோட்டை மா வட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஒரு சில பகுதிகளில் ஆனைக் கொம்பன் தாக்குதல் கா ணப்படுகிறது.
    • இப்பூச்சி நெற்பயிரின் தூர்களின் குருத்து பகுதியை தாக்கிய இலையானது வெங்காய இலை போன்று மாற்றி விடும்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மா வட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் உள்ள ஆ னைக்கொம்பன் தாக்கு தலைக் கட்டுப்படுத்திடவும் அதிக மகசூல் அடைந்திடவும் வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அ றிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    தற்போது நிலவும் சீதோ ஷண நிலையால் பு துக்கோட்டை மா வட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஒரு சில பகுதிகளில் ஆனைக் கொம்பன் தாக்குதல் கா ணப்படுகிறது. இப்பூச்சி நெற்பயிரின் தூர்களின் குருத்து பகுதியை தாக்கிய இலையானது வெங்காய இலை போன்று மாற்றி விடும்.

    இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல் சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதனுடைய புழுப்பருவம் பயிர்களை தாக்குவதனால் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் தோன்றும். இந்த கிளைப்புகள் வெண்மையாகவோ அல்ல து இளஞ்சிவப்பு நிறமாக வோ குழல் போன்று வெங்காய இலையைப் போல காணப்படும். இதை பார்ப்பதற்கு யானையின் கொம்பை போல் இருப்ப தனால் இது ஆனைக் கொம்பன் என்று அ ழைக்கப்படுகிறது.

    தாய்ப்பூச்சியானது நீள மான உருளை வடிவிலான ப ளப்பளப்பான முட்டை களை இலையின் அடிப்ப குதியில் இடும். இதிலிருந்து வெளியாகும் புழுக்கள் நெற்பயிரின் குருத்துக்களை துளைத்து குழல்களாக மாற்றி விடும். இதனால் பயி ரில் நெற்கதிர்கள் உருவா காமல் விவசாயிகளுக்கு ம கசூல் இழப்பு ஏற்படும். நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் தான் இந்த புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும்.

    எனவே, வயல்களை க ளைகள் இல்லாமல் தூய்மையாக வைத்தி ருப்பதனாலும், புற ஊதா விளக்குபொறிகளை வைத்து கவர்ந்தும் அழிக்க லாம். தழைச்சத்து உரங்களை பரிந்து ரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தினால் இதன் தாக்கு தலில் இருந்து பாது காக்கப்படும். மேலும், இப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலை அளவை அதாவது (10 இலைக்கு ஒரு இலை வெங்காயத்தாள் ) விட பாதிப்பு அதிகமாகும்போது மகசூல் இழப்பு ஏற்படும்.

    இதை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்து களான கார்போசல்பான் 25 சதவீதம் பிப்ரோனில் 5 சதவீதம் எஸ்.சி - 400 மி.லி ஆகிய மருந்துகளில் ஏதே னும் ஒன்றை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம். மேலும் கூடுதல் விபரங்க ளுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரி வாக்க மையத்தினை அணு கிட கேட்டுக் கொள்ளப்படு கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
    • பள்ளி மாணவர்களிடம் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைவுபடுத்தினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா ஊராட்சிக்கு உட்பட்ட ஆடாசோலையில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.6.49 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது.

    இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணி களை விரைவாகவும் தரமா கவும் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    அடுத்தபடி யாக ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு போடப்பட்டு வரும் பைப்புகளின் எடை, அகலம் உள்ளிட்ட அம்சங்க ளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன.

    ஊட்டி அணிக்கொரை பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட போக்கு வரத்து சாலைப்பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆடாசோலை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நியாய விலைக்க டைக்கு சென்ற கலெக்டர் அங்கு நடப்பு மாதத்தில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கிய விவரம், மீதம் உள்ள அரிசி, சர்க்கரை, பாமாயில் ஆகிய பொருட்களின் இருப்பு மற்றும் பொருட்களின் தரம், எடைஅளவு ஆகிய வற்றை ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து ஆடாசோலை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களின் எடை, உயரம், உணவின் தரம் மருந்து பொருட்களின் இருப்பு ஆகியவையும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டது.

    தூனேரி ஊராட் சிக்கு உட்பட்ட அணிக் கொரை தொடக்கப்பள்ளி யில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய சேமிப்பு அறை மற்றும் சமையலறை ஆகிய வைற்றை பார்வையிட்ட கலெக்டர் அம்ரித், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாண வர்களிடம் கைகழுவும் முறை குறித்து அறிவுரை வழங்கியவர், நன்றாக படிக்க வேண்டும் என்று நினைவுபடுத்தினார். அதன்பிறகு பள்ளி வளாகத்தில் அபாயகரமாக உள்ள மரங்களின் கிளை களை வெட்டி அகற்றும்படி அதிகாரிகளிடம் தெரி வித்தார்.

    நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் அம்ரித் ஆய்வு நடத்தியபோது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வ குமரன், வட்ட வழங்கல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, ஊட்டி வட்டார வளர்ச்சி அதிகாரி நந்தகுமார், தூனேரி ஊராட்சி அணிக் கொரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சீதா மற்றும் பலர் உடன் இருந்த னர்.

    • கல்வி மற்றும் வாழ்வில் முன்னேற்றம் என்பது உயரமான சிகரத்தில் ஏறுவதற்கு சமசமானது. அதில் திட்டமிடல் மிகவும் அவசியம்.
    • மருத்துவத்துறையில் சவால்கள் அதிகம். அன்றாடம் வளர்ந்து வரும் இத்துறையில் பல அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    திருச்சி :

    திருச்சியில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய தாவது :-

    கல்வி மற்றும் வாழ்வில் முன்னேற்றம் என்பது உயரமான சிகரத்தில் ஏறுவதற்கு சமசமானது. அதில் திட்டமிடல் மிகவும் அவசியம். நம்முன்னே பலதுறைகள் இருந்தாலும் நமக்கு எது பொருந்தி வரும் என்பதை சரியாகத் தேர்வு செய்து அதில் தடம் பதிக்க வேண்டும். சமுதாயத்தில் ஆசிரியர்களின் பணியும், டாக்டர்களின் பணியும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    மருத்துவத்துறையில் சவால்கள் அதிகம். அன்றாடம் வளர்ந்து வரும் இத்துறையில் பல அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகக்கடினமான முறையில் நடந்த அறுவை சிகிச்சைகள் கூட இப்போது எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும் செய்யக்கூடிய வசதிகள் வந்து விட்டன. நம்நாடு மருத்துவ அறிவியலில் பல சாதனைகள் படைத்து வருகிறது.

    அதே போல் அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரியப் பணியிலும் நாம் நவீன உத்திகளைக் கையாண்டு கல்வியைத் தொய்வில்லாமல் தொடர முடிந்தது. எந்த செயலை செய்வதற்கும் அச்சம் கூடாது. எனினும் அச்சப்பட வேண்டியதற்கு அச்ச ப்பட்டே ஆக வேண்டும். இக்கால மாணவர்களிடம் அறிவாற்றல் நிறைய இருக்கிறது. அதை இனம் கண்டு வெளிக்கொணர ஆசிரியர்கள் உரிய முயற்சி களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    • ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை இருக்கும். அதனை வெளிப்படுத்த வேண்டும்.
    • சமூகவலைதளங்களில் அதிக அளவில் நண்பர்களை சேர்ப்பது தேவையற்றது. மனதை கட்டுப்படுத்தினால் பல விஷயங்களில் வெற்றி பெற முடியும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 56 அரசு பள்ளிக்கூடங்கள் உள்பட மொத்தம் 139 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 673 மாணவர்கள், 8 ஆயிரத்து 825 மாணவிகள் ஆக மொத்தம் 16 ஆயிரத்து 498 மாணவ, மாணவிகளுக்கு ரூ.8 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரத்து 175 மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

    அமைச்சர் கீதாஜீவன்

    இதன் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 236 மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி பேசியதாவது:-

    சைக்கிள் ஓட்டுவது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. மேலும் கொரோனா காலத்துக்கு பிறகு மாணவ, மாணவிகளின் மனநிலை மாறி உள்ளது. படிக்காமல், பரீட்சை எழுதாமல் பாஸ் ஆகிவிடாலாமா என்று நினைக்கிறார்கள். அவ்வாறு பாஸ் ஆனால் எந்த பலனும் இருக்காது. அந்த எண்ணத்தை தூக்கி எறிந்து விட வேண்டும்.

    தினமும் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை படித்து விட்டால் எந்த சிரமமும் இருக்காது. எல்லோரும் 100 மதிப்பெண் பெற வேண்டும் என்று கூற மாட்டேன்.

    ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை இருக்கும். அதனை வெளிப்படுத்த வேண்டும். தேர்ச்சி பெறுவதற்காக மட்டும் படிக்கவில்லை. அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் படிக்கிறோம். ஆகையால் அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும்.

    படிப்பு, விளையாட்டு, நண்பர்களுடன் இருத்தல் போன்ற ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும். டி.வி.சீரியல்களை மாணவிகளை அடிமைப்படுத்திவிடுகிறது. தற்போதைய சீரியல்கள் அறிவை வளர்க்கும் வகையில் இல்லை. அதே போன்று செல்போன்களை நல்ல விஷயங்களுக்காக மட்டும், தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். சமூகவலைதளங்களில் அதிக அளவில் நண்பர்களை சேர்ப்பது தேவையற்றது. மனதை கட்டுப்படுத்தினால் பல விஷயங்களில் வெற்றி பெற முடியும்.

    நல்ல முடிவு

    மாணவிகள் எப்போதும் நேர்மறை எண்ணம் கொண்ட வர்களாக இருக்க வேண்டும். சிறிய விஷயங்களுக்காக குழம்பக்கூடாது. பள்ளிக்கூடங்களில் உள்ள கட்டுப்பாட்டுக்கும், அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம் உண்டு. அதனை மாணவிகள் புரிந்து கொள்ள வேண்டும். மாணவிகள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் கண்டிக்கிறார்கள். கீழ்படிதல் உள்ள மாணவ, மாணவிகள் நல்ல நிலையை அடைவார்கள். ஒவ்வொருவரும் தைரியமான குழந்தைகளாக இருக்க வேண்டும். மாணவிகள் எடுக்கும் நல்ல முடிவு வெற்றியைத் தரும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் புகார் கொடுக்க தயங்காதீர்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, தாசில்தார் செல்வக்குமார், கவுன்சிலர் பேபி ஏஞ்சலின், பள்ளி தலைமை ஆசிரியை ஞானம் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×