search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் தடம் பதிக்க சிறந்த துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் - இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி அறிவுரை
    X

    மாணவர்கள் தடம் பதிக்க சிறந்த துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் - இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி அறிவுரை

    • கல்வி மற்றும் வாழ்வில் முன்னேற்றம் என்பது உயரமான சிகரத்தில் ஏறுவதற்கு சமசமானது. அதில் திட்டமிடல் மிகவும் அவசியம்.
    • மருத்துவத்துறையில் சவால்கள் அதிகம். அன்றாடம் வளர்ந்து வரும் இத்துறையில் பல அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    திருச்சி :

    திருச்சியில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய தாவது :-

    கல்வி மற்றும் வாழ்வில் முன்னேற்றம் என்பது உயரமான சிகரத்தில் ஏறுவதற்கு சமசமானது. அதில் திட்டமிடல் மிகவும் அவசியம். நம்முன்னே பலதுறைகள் இருந்தாலும் நமக்கு எது பொருந்தி வரும் என்பதை சரியாகத் தேர்வு செய்து அதில் தடம் பதிக்க வேண்டும். சமுதாயத்தில் ஆசிரியர்களின் பணியும், டாக்டர்களின் பணியும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    மருத்துவத்துறையில் சவால்கள் அதிகம். அன்றாடம் வளர்ந்து வரும் இத்துறையில் பல அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகக்கடினமான முறையில் நடந்த அறுவை சிகிச்சைகள் கூட இப்போது எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும் செய்யக்கூடிய வசதிகள் வந்து விட்டன. நம்நாடு மருத்துவ அறிவியலில் பல சாதனைகள் படைத்து வருகிறது.

    அதே போல் அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரியப் பணியிலும் நாம் நவீன உத்திகளைக் கையாண்டு கல்வியைத் தொய்வில்லாமல் தொடர முடிந்தது. எந்த செயலை செய்வதற்கும் அச்சம் கூடாது. எனினும் அச்சப்பட வேண்டியதற்கு அச்ச ப்பட்டே ஆக வேண்டும். இக்கால மாணவர்களிடம் அறிவாற்றல் நிறைய இருக்கிறது. அதை இனம் கண்டு வெளிக்கொணர ஆசிரியர்கள் உரிய முயற்சி களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    Next Story
    ×