search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accident risk"

    • தென்னை மட்டைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
    • தார்ப்பாய் கொண்டு மூடாமல் திறந்த பகுதியாக கொண்டு செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காய் குடோன்கள் உள்ளது. இந்த குடோன்களில் சேகரிக்கப்படும் தென்னை நார்களை கனரக வாகனங்களில் ஏற்றி வெளியூர்களுக்கு கொண்டு செல்வது வழக்கம்.

    அவ்வாறு கொண்டு செல்லும் தென்னை மட்டைகளை உரிய முறையில் பாது காப்பாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் கனரக வாகனங்களில் ஏற்றியபிறகு அதை தார்ப் பாய் கொண்டு மூடாமல் திறந்த பகுதியாக கொண்டு செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வேகத்தடை மற்றும் குறுகலான சாலை பகுதிகளில் செல்லும்போது தென்னை மட்டைகள் சரிந்து கீழே விழுவதால் பின்னால் வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது.

    இதனால் தென்னை மட்டைகளை.ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்களிடம் தேங்காய் குடோன் உரிமையாளர்கள் உரிய ஆலோசனைகள் வழங்கி பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், மாணவ, மாணவிகள் அதிக அளவில் இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
    • சிறுவர்கள் சாலைகளில் அதிக வேகமாக ஓட்டி செல்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்வோர் அச்சப்படுகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா வின் சுற்றுவட்டார பகுதிக ளில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ள தால், மாணவ, மாணவிகள் அதிக அளவில் இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

    இந்த நிலையில், இரு சக்கர வாகனங்களை, சிறு வர்கள் சாலைகளில் அதிக வேகமாக ஓட்டி செல்கின்ற னர். இதனால் சாலையில் நடந்து செல்வோர் அச்சப்ப டுகின்றனர். சில நேரங்களில் வாகனங்களை கட்டுப்ப டுத்த முடியாமல் சாலையில் விழுந்து காய மடைகின்றனர். எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், போலீசார் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமத்தி வேலூரில் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆ ர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பொது மக்கள் கூறுகையில், இரு சக்கர வாக னத்தை ஓட்டி வரும் சிறுவர்களால் அடிக்கடி விபத்து ஏற்படு கிறது. சிறுவர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு இருசக்கர வாகனத்தை பெற்றோர்கள் கொடுத்து விடுகின்றனர்.

    எனவே இருசக்கர வாக னத்தை ஓட்டி வரும் சிறு வர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.

    சாயல்குடி- அருப்புக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் கொக்காடி, டி.வேப்பங்குளம், டி.எம்.கோட்டை விலக்கு ரோடு வரை பல இடங்களில் சாலை பழுதடைந்துள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்கிறது.

    சாயல்குடி:

    சாயல்குடி- அருப்புக் கோட்டை மாநில நெடுஞ்சாலையில் கொக்காடி, டி.வேப்பங்குளம், டி.எம்.கோட்டை விலக்கு ரோடு வரை பல இடங் களில் சமீபத்தில் மராமத்து செய்யப்பட்டது.

    இந்த சாலை பழுதாகி கரடு முரடாகவும் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும் உள்ளது. மேலும் டி.வேப்பங்குளம் அருகேயுள்ள சாலையில் நடுப்பகுதி ஒருபக்கம் தாழ்வாகவும் மற்றொரு புறம் மேடாகவும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதியைப் பின்பற்றாமல் சமமான சாலையில் செல் வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இதனால் அடிக்கடி வாகனங்கள் ஒன்றோ டொன்று மோதிக் கொண்டு விபத்து ஏற் படுகிறது. சமீபத்தில் மரா மத்து செய்யப்பட்ட இந்த தார்ச்சாலை முறை யாக போடாததால் பல இடங்களில் குண்டும் குழி யுமாகவும், மேடு-பள்ள மும் ஏற்பட்டுள்ளது.

    சமீபத்தில் இச்சாலையை மராமத்து செய்தவர்களின் முறைகேட்டால் தற்போது முன்பு நன்றாக இருந்த சாலையும் நடு நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளதாலும், கொக்காடியிலிருந்து டி.வேப்பங்குளம் வரை வளைவான பகுதி என்ப தாலும் வாகன விபத்து அடிக்கடி ஏற்பட்டு வரு கிறது.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பழுதான சாலைகளால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க வலியுறுத்தி பல முறை கோரிக்கைகள் விடுத்தும் சாலையை மராமத்து செய்யாமல் நெடுஞ் சாலைத்துறையினர் மெத்தனம் காட்டுவதால் தான் விபத்துகள் தொடர் கிறது என்று கூறினர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சாலையை மராமத்து செய்து சமமாக்கி விபத்து அபாயத்தை தவிர்க்கச் செய்ய வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    ஆரோவில் வேகத்தடை அமைந்துள்ள இடத்தில் இரவில் ஒளிரும் பெயிண்ட் அடித்து எச்சரிக்கை வாசகம் அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான புதுவை-மயிலம் திண்டிவனம் சாலையில் ஆரோவில் போலீஸ் நிலையம் உள்ளது.

    இந்த போலீஸ் நிலையத்துக்கு அதிகப்படியான பொதுமக்கள் தினமும் வந்து செல்வதால் எப்போதுமே இங்கு மக்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இதனால் இங்கு வாகனங்களும் அடிக்கடி வந்து செல்லும்.

    எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இந்த போலீஸ் நிலையம் எதிரே உள்ள சாலையில் சில நாட்களுக்கு முன்பு இங்கு பெரிய உயரத்திலான வேகத்தடை அமைக்கப்பட்டது.

    ஆனால் வேகத்தடையில் இரவில் மிளிரும் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்காதததால் இரவு நேரங்களில் வேகமாக வரும் கார் உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் வேகத்தடை இருப்பதை காட்டும் எச்சரிக்கை வரை படத்துடன் கூடிய வாசகமும் இல்லை.

    எனவே மாநில நெடுஞ்சாலைதுறையினர் வேகத்தடை அமைந்துள்ள இடத்தில் இரவில் ஒளிரும் பெயிண்ட் அடித்து எச்சரிக்கை வாசகம் அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×