இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வரும் சிறுவர்களால் விபத்து அபாயம்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், மாணவ, மாணவிகள் அதிக அளவில் இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர். சிறுவர்கள் சாலைகளில் அதிக வேகமாக ஓட்டி செல்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்வோர் அச்சப்படுகின்றனர்.
இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வரும் சிறுவர்களால் விபத்து அபாயம்
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா வின் சுற்றுவட்டார பகுதிக ளில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ள தால், மாணவ, மாணவிகள் அதிக அளவில் இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், இரு சக்கர வாகனங்களை, சிறு வர்கள் சாலைகளில் அதிக வேகமாக ஓட்டி செல்கின்ற னர். இதனால் சாலையில் நடந்து செல்வோர் அச்சப்ப டுகின்றனர். சில நேரங்களில் வாகனங்களை கட்டுப்ப டுத்த முடியாமல் சாலையில் விழுந்து காய மடைகின்றனர். எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், போலீசார் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமத்தி வேலூரில் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆ ர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொது மக்கள் கூறுகையில், இரு சக்கர வாக னத்தை ஓட்டி வரும் சிறுவர்களால் அடிக்கடி விபத்து ஏற்படு கிறது. சிறுவர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு இருசக்கர வாகனத்தை பெற்றோர்கள் கொடுத்து விடுகின்றனர்.

எனவே இருசக்கர வாக னத்தை ஓட்டி வரும் சிறு வர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com