search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்னை மட்டைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
    X

    ஆபத்தான முறையில் லாரியில் கொண்டு செல்லும் தென்னை மட்டைகள்.

    தென்னை மட்டைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

    • தென்னை மட்டைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
    • தார்ப்பாய் கொண்டு மூடாமல் திறந்த பகுதியாக கொண்டு செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காய் குடோன்கள் உள்ளது. இந்த குடோன்களில் சேகரிக்கப்படும் தென்னை நார்களை கனரக வாகனங்களில் ஏற்றி வெளியூர்களுக்கு கொண்டு செல்வது வழக்கம்.

    அவ்வாறு கொண்டு செல்லும் தென்னை மட்டைகளை உரிய முறையில் பாது காப்பாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் கனரக வாகனங்களில் ஏற்றியபிறகு அதை தார்ப் பாய் கொண்டு மூடாமல் திறந்த பகுதியாக கொண்டு செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வேகத்தடை மற்றும் குறுகலான சாலை பகுதிகளில் செல்லும்போது தென்னை மட்டைகள் சரிந்து கீழே விழுவதால் பின்னால் வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது.

    இதனால் தென்னை மட்டைகளை.ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்களிடம் தேங்காய் குடோன் உரிமையாளர்கள் உரிய ஆலோசனைகள் வழங்கி பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×