search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadithabasu"

    • ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறையினர் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
    • தபசு நடக்கும் தெற்கு ரத வீதியில் சுவாமி- அம்பாள் சப்பரம் வரும் இடத்தை ஆய்வு செய்து மீதமுள்ள இடத்தை பக்தர்கள் சிறப்பாக தரிசனம் செய்யும் வகையில் அதிக இடங்கள் விட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.

    ஆடித்தபசு திருவிழா

    இங்கு அரியும், சிவனும் ஒன்று என்பதை கோமதி அம்மனுக்கு உணர்த்தும் வகையில் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் அன்று சிவபெருமான் சங்கர நாராயணராக கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்.

    இந்த நிகழ்ச்சியை காண இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன் கோவி லுக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா வருகிற 21-நதேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

    சங்கரநாராயணராக காட்சி

    இந்த ஆடித்தபசு திருநாள் 12 நாட்கள் விமர்சையாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான கோமதி அம்மனுக்கு சிவ பெருமான் சங்கரநாரா யணராக காட்சி கொடுக்கும் வைபவம் வருகிற 31-தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரி க்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை யினர் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

    பாதுகாப்புத்துறை சான்றிதழ்

    கூட்டத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோ வில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகரா ட்சி கமிஷனர் சபா நாயகம், கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சேர்மன் உமா மகேஸ்வரி பேசிய தாவது:-

    ஆடித்தபசு அன்று குடிநீர் பந்தல் அமைக்கும் தொண்டு அமைப்புகளுக்கு நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படும். அன்னதானம் செய்பவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படும். அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி இருக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் உணவு பொருட்களை மூடி வைத்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இதனை நகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    லட்சக்கணக்கான பக்தர்கள்

    தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    ஆடித்தபசு திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதில் முக்கியமாக தடையில்லா மின்சாரம், தடையில்லா குடிநீர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஆகியன முக்கிய அம்சமாகும். எனவே மின்வாரிய அதிகாரிகள், காவல்துறை யினர், குடிநீர் வடிகால் வாரியத்தினர் அனைவரும் நகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆடித்தபசு திருவிழாவை அனைத்து அரசு துறையினர் இணைந்து சிறப்பாக நடத்த வேண்டும்.

    மேலும் தபசு நடக்கும் தெற்கு ரத வீதியில் சுவாமி- அம்பாள் சப்பரம் வரும் இடத்தை ஆய்வு செய்து மீதமுள்ள இடத்தை பக்தர்கள் சிறப்பாக தரிசனம் செய்யும் வகையில் அதிக இடங்கள் விட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும். உணவகங்கள் மற்றும் அன்னதானங்கள் நடக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து உணவுகள் தரமான முறை யில் உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    சம்பந்தப்பட்ட துறையினர் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து பொது மக்களுக்கும், வியாபாரி களுக்கு, பக்தர்களு க்கும் எந்தவித பாதிப்பும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்த ர்கள் ஆடித் தபசுக்கு வந்து சிறப்பாக தரிசனம் செய்து விட்டு செல்ல அனைத்து நட வடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    தீயணைப்பு வாகனங்கள் அவசரக்கால ஊர்திகள் தயார் நிலையில் வைப்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் பகுதியில் சுழலும் சி.சி.டி.வி. காமிரா க்கள் அமைத்து அதற்கான கட்டுப்பாட்டு அறையை அமைத்து அதனை முறையாக கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நகராட்சி துணை சேர்மன் கண்ணன், இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி, மருத்துவ அலுவலர் டாக்டர் மகாலட்சுமி, நெடுஞ்சாலைதுறை திருமலைச்சாமி, பலவேசம், மின்வாரிய உதவி பொறியாளர்கள் கணேச ராம கிருஷ்ணன், தங்க மாரிமுத்து, தீயணைப்பு துறை சார்பில் சரவணன் மற்றும் போக்கு வரத்து காவல்துறையினர், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா விமர்சையாக நடைபெற்றதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    • திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் மேற்பார் வையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா பிரசித்தி பெற்றது.

    இந்தாண்டு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றமும், 8-ந் தேரோட்டம் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் நாளான நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு கும்ப அபிஷேகம், காலை 9 மணி க்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், காலை 11 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மாலை 4.30 மணிக்கு சங்கரநாராயண சுவாமி ரிஷப வாகனத்தில் தபசு காட்சிக்கு எழுந்தருளினார். மாலை 6.39 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசு காட்சி கொடுத்தார்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா விமர்சையாக நடைபெற்றதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அம்பாள் சங்கர நாராயணனை மூன்று முறை வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், பக்தர்கள், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்ட விளைபொருட்களை சப்பரத்தில் மேல் எரிந்தனர்.

    விழாவில் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, எம்.எல்.ஏ. ராஜா, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, அ.தி.மு.க. மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில் குமார், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், இளைஞர் அணி துணைச் செயலாளர் இசக்கியப்பன், அ.தி.மு.க.மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், பாரதீய ஜனதா கட்சி கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வர பெருமாள், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ராஜா, செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளர் மாரிமுத்து, புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் ராசையா, தி.மு.க. நகர செயலாளர் மாரிசாமி, துணைச் செயலாளர் கே. எஸ்.எஸ்.மாரியப்பன், ஒப்பந்ததாரர்கள் வெள்ளி முருகன், குட்டி ராஜ், நகர அ.தி.மு.க. செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் வேல்சாமி, கவுன்சிலர்கள் சந்திரசேகர், ராமதுரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுத்தார்.

    திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் மேற்பார் வையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஆடித்தபசு திருவிழாக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

    12-வது திருநாளான இன்று பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் ஆடித்த பசு திருவிழா தொடங்கியது.
    • இரவு ஆனந்த வல்லிஅம்மன் சிம்ம வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்த ருளினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் ஆடித்த பசு திருவிழா தொடங்கியது.

    திருவிழா தொடக்கமாக ஆனந்தவல்லி அம்பாள் சன்னதி முன் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில்துலா லக்னத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது. அதன் பின் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகப் பொருள்களாலும் கலச நீராலும் அபிஷேகம் நடத்தி கொடிமரத்திற்கு தர்ப்பை புல், மலர் மாலைகள் சாற்றி கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவில் மண்டபத்தில் சர்வ அலங்கா ரத்தில் எழுந்தருளியிருந்த ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரா தனைகள் நடைபெற்றது.

    கொடியேற்ற நிகழ்வு களை கோவில் பரம்பரை ஸ்தானிகம் தெய்வ சிகாமணி என்ற சக்கரைபட்டர் ராஜேஷ் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

    கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு ஆனந்த வல்லிஅம்மன் சிம்ம வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்த ருளினார். 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மன் கோவில் முன் மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து அதன் பின்னர் மண்டகப்படி தாரர்களின் பூஜைகள் முடிந்து வீதி வருதல் நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆடித்தபசு விழா வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது 10-ந்தேதி சந்தன காப்பு உற்சவத்து டன் இந்தாண்டு அடித்தபசு திருவிழா நிறைவு பெறு கிறது.

    ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது.

    • அரியும் சிவனும் ஒன்றே என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் ஆடித்தபசு திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும்.
    • தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஆடித்தபசு திருவிழா 12 நாட்களும் வெகு விமர்சையாக நடத்தப்பட உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தின் புகழ்பெற்ற சிவ தலங்களில் சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாக விளங்குகிறது.

    கொடியேற்றம்

    அரியும் சிவனும் ஒன்றே என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் ஆடித்தபசு திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் ஆடித்தபசு திருவிழா கட்டு ப்பாடுகளுடன் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

    தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஆடித்தபசு திருவிழா 12 நாட்களும் வெகு விமர்சையாக நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவிழாவிற்கான பாது காப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவில் வளாகம், உட்பிராகாரம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

    2 ஆயிரம் போலீசார்

    கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே 2,000 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.

    ×