என் மலர்
நீங்கள் தேடியது "Aadithabasu"
- 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா விமர்சையாக நடைபெற்றதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் மேற்பார் வையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா பிரசித்தி பெற்றது.
இந்தாண்டு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றமும், 8-ந் தேரோட்டம் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் நாளான நேற்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு கும்ப அபிஷேகம், காலை 9 மணி க்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், காலை 11 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளினார்.
மாலை 4.30 மணிக்கு சங்கரநாராயண சுவாமி ரிஷப வாகனத்தில் தபசு காட்சிக்கு எழுந்தருளினார். மாலை 6.39 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசு காட்சி கொடுத்தார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா விமர்சையாக நடைபெற்றதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அம்பாள் சங்கர நாராயணனை மூன்று முறை வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், பக்தர்கள், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்ட விளைபொருட்களை சப்பரத்தில் மேல் எரிந்தனர்.
விழாவில் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, எம்.எல்.ஏ. ராஜா, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, அ.தி.மு.க. மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில் குமார், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், இளைஞர் அணி துணைச் செயலாளர் இசக்கியப்பன், அ.தி.மு.க.மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், பாரதீய ஜனதா கட்சி கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வர பெருமாள், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ராஜா, செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளர் மாரிமுத்து, புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் ராசையா, தி.மு.க. நகர செயலாளர் மாரிசாமி, துணைச் செயலாளர் கே. எஸ்.எஸ்.மாரியப்பன், ஒப்பந்ததாரர்கள் வெள்ளி முருகன், குட்டி ராஜ், நகர அ.தி.மு.க. செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் வேல்சாமி, கவுன்சிலர்கள் சந்திரசேகர், ராமதுரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுத்தார்.
திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் மேற்பார் வையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆடித்தபசு திருவிழாக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.
12-வது திருநாளான இன்று பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் ஆடித்த பசு திருவிழா தொடங்கியது.
- இரவு ஆனந்த வல்லிஅம்மன் சிம்ம வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்த ருளினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் ஆடித்த பசு திருவிழா தொடங்கியது.
திருவிழா தொடக்கமாக ஆனந்தவல்லி அம்பாள் சன்னதி முன் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில்துலா லக்னத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது. அதன் பின் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகப் பொருள்களாலும் கலச நீராலும் அபிஷேகம் நடத்தி கொடிமரத்திற்கு தர்ப்பை புல், மலர் மாலைகள் சாற்றி கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவில் மண்டபத்தில் சர்வ அலங்கா ரத்தில் எழுந்தருளியிருந்த ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரா தனைகள் நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்வு களை கோவில் பரம்பரை ஸ்தானிகம் தெய்வ சிகாமணி என்ற சக்கரைபட்டர் ராஜேஷ் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.
கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு ஆனந்த வல்லிஅம்மன் சிம்ம வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்த ருளினார். 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மன் கோவில் முன் மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து அதன் பின்னர் மண்டகப்படி தாரர்களின் பூஜைகள் முடிந்து வீதி வருதல் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆடித்தபசு விழா வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது 10-ந்தேதி சந்தன காப்பு உற்சவத்து டன் இந்தாண்டு அடித்தபசு திருவிழா நிறைவு பெறு கிறது.
ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது.
- அரியும் சிவனும் ஒன்றே என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் ஆடித்தபசு திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும்.
- தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஆடித்தபசு திருவிழா 12 நாட்களும் வெகு விமர்சையாக நடத்தப்பட உள்ளது.
சங்கரன்கோவில்:
தமிழகத்தின் புகழ்பெற்ற சிவ தலங்களில் சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாக விளங்குகிறது.
கொடியேற்றம்
அரியும் சிவனும் ஒன்றே என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் ஆடித்தபசு திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் ஆடித்தபசு திருவிழா கட்டு ப்பாடுகளுடன் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.
தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஆடித்தபசு திருவிழா 12 நாட்களும் வெகு விமர்சையாக நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவிழாவிற்கான பாது காப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவில் வளாகம், உட்பிராகாரம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
2 ஆயிரம் போலீசார்
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே 2,000 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.






