search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் ஆடித்தபசு திருவிழா தொடக்கம்
    X

    ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் ஆடித்தபசு திருவிழா தொடக்கம்

    • மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் ஆடித்த பசு திருவிழா தொடங்கியது.
    • இரவு ஆனந்த வல்லிஅம்மன் சிம்ம வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்த ருளினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் ஆடித்த பசு திருவிழா தொடங்கியது.

    திருவிழா தொடக்கமாக ஆனந்தவல்லி அம்பாள் சன்னதி முன் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில்துலா லக்னத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது. அதன் பின் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகப் பொருள்களாலும் கலச நீராலும் அபிஷேகம் நடத்தி கொடிமரத்திற்கு தர்ப்பை புல், மலர் மாலைகள் சாற்றி கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவில் மண்டபத்தில் சர்வ அலங்கா ரத்தில் எழுந்தருளியிருந்த ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரா தனைகள் நடைபெற்றது.

    கொடியேற்ற நிகழ்வு களை கோவில் பரம்பரை ஸ்தானிகம் தெய்வ சிகாமணி என்ற சக்கரைபட்டர் ராஜேஷ் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

    கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு ஆனந்த வல்லிஅம்மன் சிம்ம வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்த ருளினார். 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மன் கோவில் முன் மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து அதன் பின்னர் மண்டகப்படி தாரர்களின் பூஜைகள் முடிந்து வீதி வருதல் நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆடித்தபசு விழா வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது 10-ந்தேதி சந்தன காப்பு உற்சவத்து டன் இந்தாண்டு அடித்தபசு திருவிழா நிறைவு பெறு கிறது.

    ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது.

    Next Story
    ×