search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A laborer"

    • கடந்த 2022-ம் ஆண்டு வாலிபர் சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் 23 வயது வாலிபர்.

    இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்து கொண்டதாக தெரிகிறது. அப்போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு வாலிபர் சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    அதன்படி வாலிபர், சிறுமியை அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் அங்குள் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

    அப்போது வாலிபர் பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமி என்பதால் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வாலிபர் சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வினோத் தனியார் நிறுவன மேலாளராக உள்ளார்.
    • தமிழ்செல்வனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை வெள்ளக்கிணறு அருகே உள்ள வி.சி.வி. நகரை சேர்ந்தவர் வினோத் (வயது 36). தனியார் நிறுவன மேலாளர். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது வினோத் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து வாலிபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவர் வீட்டில் இருந்த ரூ.1000 பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது வினோத் வீட்டிற்கு வந்தார். வாலிபர் வீட்டிற்குள் நிற்பதை பார்த்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி தமிழ்செல்வன் (38) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பிக்கப் வேன் மோட்டார் சைக்கிளில் வந்த சஞ்சீவி மீது மோதியது.
    • இதில் தலை மற்றும் காலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஊராட்சி வரப்பள்ளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி (40). கூலி தொழிலாளி.

    இந்நிலையில் சஞ்சீவி தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மீண்டும் அத்தாணியில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே சத்தியமங்கலம் சாலையில் இருந்து அத்தாணி சாலை நோக்கி மேட்டுப்பாளையம் காட்டூரை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் பிக்கப் வேனை ஓட்டி வந்தார்.

    வரப்பள்ளம் சிதம்பரம் தோட்டம் அருகே முன்னே சென்ற வாகன ஓட்டி ஒருவரை பிக்கப் வேனை ஓட்டி வந்த சதாம் உசேன் வேகமாக முந்தி செல்ல முயன்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சஞ்சீவி மீது மோதியது.

    இதில் தலை மற்றும் காலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சஞ்சீவி மனைவி சாந்தா ரத்த காயங்களுடன் கீழே கிடந்த சஞ்சீவியை அருகில் இருந்தோர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சஞ்சீவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வேனை ஓட்டி வந்த சதாம் உசேன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் 34 வயது இளம்பெண். இவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது

    எனக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் எனது கணவருக்கு வேறு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது கணவர் அவரது கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக எனக்கு தெரிய வந்தது.

    இது குறித்து நான் கேட்ட போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நான் எனது கணவரை பிரிந்து மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தேன். எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் எனது கணவர் எனக்கு தெரியாமல் அவரது காதலியை 2-வது திருமணம் செய்து உள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இந்த தகவல் எனக்கு தெரிய வந்தது. இதனையடுத்து நான் இது குறித்து எனது கணவரிடம் கேட்டேன்.

    அப்போது அவர் மற்றும் அவரது 2-வது மனைவி ஆகியோர் சேர்ந்து என்னை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே என்னை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த எனது கணவர் மற்றும் அவரது 2-வது மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது 2-வது மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×