search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துடியலூர் அருகே வீடு புகுந்து திருட முயன்ற தொழிலாளி
    X

    துடியலூர் அருகே வீடு புகுந்து திருட முயன்ற தொழிலாளி

    • வினோத் தனியார் நிறுவன மேலாளராக உள்ளார்.
    • தமிழ்செல்வனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை வெள்ளக்கிணறு அருகே உள்ள வி.சி.வி. நகரை சேர்ந்தவர் வினோத் (வயது 36). தனியார் நிறுவன மேலாளர். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது வினோத் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து வாலிபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவர் வீட்டில் இருந்த ரூ.1000 பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது வினோத் வீட்டிற்கு வந்தார். வாலிபர் வீட்டிற்குள் நிற்பதை பார்த்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி தமிழ்செல்வன் (38) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×