என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சி அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளி
- கடந்த 2022-ம் ஆண்டு வாலிபர் சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
- போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் 23 வயது வாலிபர்.
இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்து கொண்டதாக தெரிகிறது. அப்போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு வாலிபர் சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதன்படி வாலிபர், சிறுமியை அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் அங்குள் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
அப்போது வாலிபர் பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமி என்பதால் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வாலிபர் சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்