search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து குழந்தை பெற்ற தொழிலாளி
    X

    கோவையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து குழந்தை பெற்ற தொழிலாளி

    • எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் 34 வயது இளம்பெண். இவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது

    எனக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் எனது கணவருக்கு வேறு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது கணவர் அவரது கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக எனக்கு தெரிய வந்தது.

    இது குறித்து நான் கேட்ட போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நான் எனது கணவரை பிரிந்து மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தேன். எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் எனது கணவர் எனக்கு தெரியாமல் அவரது காதலியை 2-வது திருமணம் செய்து உள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இந்த தகவல் எனக்கு தெரிய வந்தது. இதனையடுத்து நான் இது குறித்து எனது கணவரிடம் கேட்டேன்.

    அப்போது அவர் மற்றும் அவரது 2-வது மனைவி ஆகியோர் சேர்ந்து என்னை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே என்னை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த எனது கணவர் மற்றும் அவரது 2-வது மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது 2-வது மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×