search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "41 பேர் பலி"

    சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 41 பேர் பரிதாபமாக பலியாகினர். #ISAttack
    பெய்ரூட்:

    சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. 

    கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.
     
    இதற்கிடையே, உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. #ISAttack
    உ.பி., டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Thunderstorm #Ramnathkovind #RahulGandhi
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதனால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல விமானங்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

    இந்த புழுதி புயலுக்கு உ.பி.யில் 18 பேரும், டெல்லியில் 2 பேரும், மின்னல் தாக்கியதில் மேற்கு வங்கத்தில் 12 பேரும், ஆந்திராவில் 9 பேரும் என மொத்தம் 41 பேர் பலியாகினர்.

    இதற்கிடையே, உ.பி., மேற்குவங்கம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தாக்கிய புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

    இந்நிலையில், உ.பி., மேற்குவங்கம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறுகையில், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் மழை மற்றும் புழுதி புயலுக்கு பலர் பலியானது வருத்தம் அளிக்கிறது. இதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், மின்னல் தாக்கியதில் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில் 18 பேர் பலியானது அறிந்து வருந்தினேன்.
    பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிப்பு அடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சியினர் செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். #Thunderstorm #Ramnathkovind #RahulGandhi
    உ.பி., மேற்குவங்கம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #Duststorm #PMModi
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதனால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல் விமானங்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன. பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன.

    உபியில் ஏற்பட்ட புழுதி புயலுக்கு 18 பேரும், மேற்கு வங்கத்தில் 4 குழந்தைகள் உள்பட 12 பேரும், ஆந்திராவில் மின்னல் தாக்கி 9 பேரும், டெல்லியில் 2 பேரும் என மொத்தம் 41 பேர் பலியாகினர்.



    இந்நிலையில், உ.பி., மேற்குவங்கம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தாக்கிய புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மோடி டுவிட்டரில் கூறுகையில், நாட்டின் சில மாநிலங்களில் புழுதி புயல் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். #Duststorm #PMModi
    ×