search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "41"

    • வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் சிப்காட் போலீசார் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ 1 லட்சத்து 90,000 மதிப்புள்ள 238 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில், பெங்களூரில் இருந்து சென்னைக்கு அந்த குட்கா பொருட்களை கடத்திவந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து அதனையும், ரூ.3 லட்சம் மதிப்பிலான காரையும் பறிமுதல் செய்து, டிரைவர் மகாராம் ( 28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல் மத்திகிரி போலீசார், பூனப்பள்ளி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை சோதனையிட்டனர். அதில் ரூ. 9,51,000 மதிப்புள்ள 779 கிலோ தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை பெங்களூரிலிருந்து ஓசூர் வழியாக சேலத்திற்கு கடத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து குட்கா பொருட்களையும், ரூ.15 லட்சம் மதிப்பிலான லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், சேலம் மாவட்டம் காடையம்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் அங்கதுரை (39) என்பவரையும், ஓமலூர் பகுதியை சேர்ந்த பாலன் என்பவரையும் கைது செய்தனர்.

    ×