என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "41"
- வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் சிப்காட் போலீசார் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ 1 லட்சத்து 90,000 மதிப்புள்ள 238 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், பெங்களூரில் இருந்து சென்னைக்கு அந்த குட்கா பொருட்களை கடத்திவந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து அதனையும், ரூ.3 லட்சம் மதிப்பிலான காரையும் பறிமுதல் செய்து, டிரைவர் மகாராம் ( 28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் மத்திகிரி போலீசார், பூனப்பள்ளி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை சோதனையிட்டனர். அதில் ரூ. 9,51,000 மதிப்புள்ள 779 கிலோ தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை பெங்களூரிலிருந்து ஓசூர் வழியாக சேலத்திற்கு கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து குட்கா பொருட்களையும், ரூ.15 லட்சம் மதிப்பிலான லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், சேலம் மாவட்டம் காடையம்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் அங்கதுரை (39) என்பவரையும், ஓமலூர் பகுதியை சேர்ந்த பாலன் என்பவரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்