search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் தாக்கி 41 பேர் பலி - ராம்நாத் கோவிந்த், ராகுல் இரங்கல்
    X

    உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் தாக்கி 41 பேர் பலி - ராம்நாத் கோவிந்த், ராகுல் இரங்கல்

    உ.பி., டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Thunderstorm #Ramnathkovind #RahulGandhi
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதனால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல விமானங்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

    இந்த புழுதி புயலுக்கு உ.பி.யில் 18 பேரும், டெல்லியில் 2 பேரும், மின்னல் தாக்கியதில் மேற்கு வங்கத்தில் 12 பேரும், ஆந்திராவில் 9 பேரும் என மொத்தம் 41 பேர் பலியாகினர்.

    இதற்கிடையே, உ.பி., மேற்குவங்கம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தாக்கிய புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

    இந்நிலையில், உ.பி., மேற்குவங்கம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறுகையில், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் மழை மற்றும் புழுதி புயலுக்கு பலர் பலியானது வருத்தம் அளிக்கிறது. இதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், மின்னல் தாக்கியதில் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில் 18 பேர் பலியானது அறிந்து வருந்தினேன்.
    பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிப்பு அடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சியினர் செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். #Thunderstorm #Ramnathkovind #RahulGandhi
    Next Story
    ×