என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் தகவல் அறிக்கை"

    • சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர உள்ளதாகவும் தீபக் கோத்தாரி தெரிவித்துள்ளார்.
    • பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் உள்ளனர்

    பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீதான ரூ.60 கோடி மோசடி வழக்கில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.  கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவரிடமிருந்து ரூ.60 கோடி மோசடி செய்ததாக இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புகார்தாரரின் அறிக்கையின்படி, தனது பணத்தை பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குநரகத்திடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிகளின்படி சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர உள்ளதாகவும் தீபக் கோத்தாரி தெரிவித்துள்ளார்.

    பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் உள்ளனர். 2015-2023 காலகட்டத்தில் இந்த நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரியை ரூ.60.48 கோடி முதலீடு செய்ய தூண்டியதாகவும், ஆனால் அந்தப் பணத்தை இருவரும் தங்களின் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.


    உத்தரப்பிரதேச மாநிலம் சாஜஹான்பூர் பகுதியில் தன்னை கற்பழித்தவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததால் மனமுடைந்த பெண் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டார். #UttarPradesh
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வர்கிறது. உ.பி. மட்டுமன்றி இந்தியா முழுவதும் இந்த அவலநிலை உருவாகி வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்கள் பாதுகாப்பின்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    அதே சமயம், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளில் சிலர், தங்கள் பணியை முறையாக செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதன் ஒருபகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் சாஜஹான்பூர் பகுதியில் தன்னை கற்பழித்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுத்ததுடன், குற்றவாளியுடன் சமரசம் செய்துகொள்ள அறிவுறுத்தியதால் மனமுடைந்த பெண் காவல்நிலையத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

    இதையடுத்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #UttarPradesh
    ×