search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரக்யா சிங் தாக்கூர்"

    • மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்
    • உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் (தற்போதைய பாஜக எம்பி), ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

    அண்மையில், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும், பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூருக்கு மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

    உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க, போபால் என்.ஐ.ஏ அதிகாரிகள் பிரக்யா தாக்கூரின் உடல்நலன் குறித்து விசாரித்து அறிக்கையை ஏப்ரல் 9-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா, உடல்நலக் குறைவாக இருப்பதால், ஓய்வு தேவை என என்.ஐ.ஏ தாக்கல் செய்த பதிலை ஏற்காத சிறப்பு நீதிமன்றம், வரும் 22ம் தேதிக்குள் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    உடல்நிலை காரணமாக இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர், அடிக்கடி கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடுவதும், நடனமாடும் வீடியோக்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

    • மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்
    • உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்

    மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும், பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூருக்கு மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க, போபால் என்.ஐ.ஏ அதிகாரிகள் பிரக்யா தாக்கூரின் உடல்நலன் குறித்து விசாரித்து அறிக்கையை ஏப்ரல் 9-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    உடல்நிலை காரணமாக இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர், அடிக்கடி கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடுவதும், நடனமாடும் வீடியோக்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் (தற்போதைய பாஜக எம்பி), ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

    • லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு அதே வழியில் பதில் சொல்லுங்கள்.
    • நம் வீட்டிற்குள் புகுந்து யாராவது தாக்கினால், அவர்களுக்கு பதில் சொல்வது நமது உரிமை.

    கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் நடைபெற்ற இந்து வேதிகா அமைப்பின் தென் மண்டல மாநாட்டில் பாஜக எம்.பி.பிரக்யா சிங் தாக்கூர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    தங்களை தாக்குபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இந்துக்களுக்கு உள்ளது. அவர்கள் எதுவும் கிடைக்காவிட்டால் லவ் ஜிஹாத் செய்வார்கள். காதலித்தாலும் அதில் ஜிஹாத் செய்கிறார்கள். நாங்கள் கடவுளை நேசிக்கிறோம். கடவுளை நேசிக்கும் ஒரு சன்யாசி கூறுகிறார், கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த உலகில், தவறு செய்பவர்கள், பாவிகள் அனைவரையும் அழித்து விடுங்கள்,லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு அதே வழியில் பதில் சொல்லுங்கள். உங்கள் பெண்களைப் பாதுகாக்க சரியான முறையில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

    உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் காய்கறிகளை வெட்டப் பயன்படும் கத்திகளையாவது கூர்மையாக வைத்திருக்க வேண்டும். எப்போது என்ன நிலை வரும் என்று தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் தற்காப்பு உரிமை உண்டு. நம் வீட்டிற்குள் யாராவது புகுந்து தாக்கினால், அவர்களுக்கு பதில் சொல்வது நமது உரிமை. கத்திகள் காய்கறிகளை வெட்டுவது போல், வாயையும் தலையையும் வெட்டுகிறது.

    மிஷனரிகளால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு குழந்தைகளை அனுப்புவதை நிறுத்துங்கள். அப்படி அனுப்புவதன் மூலம், முதியோர் இல்லங்களின் கதவுகளை உங்களுக்காக நீங்கள் திறக்கிறீர்கள். அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் உங்கள் கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்க மாட்டார்கள். அவர்கள் வளர்ந்து சுயநலவாதிகளாக மாறுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    ×