என் மலர்
நீங்கள் தேடியது "பழனியாண்டி"
- கனிமவள கொள்ளையைக் கேள்விகேட்கும் பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவது, சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படுவது போன்ற நிலைமை தொடர்கதையாகி வருகிறது.
- திமுக ஆட்சியின் முகங்களாக குண்டர்களும், சமூக விரோதிகளும், வன்முறையாளர்களுமே இருக்கிறார்கள்
திமுக எம்.எல்.ஏ பழனியாண்டியை உடனடியாக பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யவேண்டும் என தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
மக்களாட்சியா? ரவுடிகளின் ஆட்சியா?
கரூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கனிமவள கொள்ளைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. செபாஸ்டின் ஆகியோர் மீது, ஆளும் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொலைவெறித் தாக்குதல் நடத்திய இந்த வீடியோவை பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் கனிமவள கொள்ளையைக் கேள்விகேட்கும் பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவது, சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படுவது போன்ற நிலைமை தொடர்கதையாகி வருகிறது. இவ்வாறே, இன்றைய திமுக ஆட்சி இயற்கைவள சுரண்டலையும், வன்முறை அரசியலையும் ஆதரித்து வருகிறது. இன்று, செய்தியாளர்கள் வரை நேரடியாக மோசமாகத் தாக்கப்படுவது, இங்கு நடப்பது மக்களாட்சியா? அல்லது ரவுடிகளின் அச்சுறுத்தல் ஆட்சியா? என்றே மீண்டும் கேட்க வைக்கிறது.
திமுக ஆட்சியின் முகங்களாக குண்டர்களும், சமூக விரோதிகளும், வன்முறையாளர்களுமே இருக்கிறார்கள் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் உதாரணம். தொடர்ந்து, மக்கள் விரோத போக்கில் ஈடுபட்டுவரும் நபர்களை ஊக்குவித்து, அவர்களை அதிகாரத்தில் அமரவைக்கும் திமுக ஆட்சியை மக்கள் தூக்கியெறிவது உறுதி.
செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய எம்எல்ஏ பழனியாண்டி, உடனிருந்த அவரது மகன் மற்றும் குண்டர்கள் ஆகியோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அனைவருக்கும் சட்டத்திற்கு முன் தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். அரசு முன்வந்து பழனியாண்டியை சட்டமன்ற உறுப்பினார் பொறுப்பிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதி பொறுப்பை மறந்து, அராஜகத்தில் ஈடுபட்ட அவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கை சுதந்திரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு உரிய நியாயமும் நீதியும் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- பழனியாண்டி கொலைவெறி தாக்குதல் நடத்தும் காணொளி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது
- கரூர் மாவட்டக் காவல்துறை, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது
திமுக எம்.எல்.ஏ பழனியாண்டியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கல்குவாரியைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற NewsTamilTV24x7 செய்தியாளர் திரு. கதிரவன் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது, பழனியாண்டியே நேரடியாகக் கொலைவெறி தாக்குதல் நடத்தும் காணொளி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளர்கள் மீதான திமுக சட்டமன்ற உறுப்பினரின் கொலைவெறித் தாக்குதல், ஜனநாயகத்துக்கே அவமானம்.
கடத்தல்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள் என, கிரிமினல்கள் அனைவரையும் தேடித் தேடி பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் மு.கஸ்டலின், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? திமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி, கனிம வளங்களைக் கடத்துவதற்கும், கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்கும் கொடுக்கப்பட்ட லைசன்சா?
இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்தியில், இந்த திமுக எம்எல்ஏ பழனியாண்டி என்ற நபர், அன்று சம்பவ இடத்தில் இருந்ததாகவே எங்கும் குறிப்பிடவில்லை. ஒரு கொலைமுயற்சி நடந்திருக்கிறது. கரூர் மாவட்டக் காவல்துறை, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது. எத்தனை மோசமான நிலையில் தமிழகக் காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இது மற்றும் ஒரு உதாரணம்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட அனைவர் மீதும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.
- பழனியாண்டி தாக்கியதற்கான காணொலி ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
- திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய மு.க.ஸ்டாலின் அரசு தயங்குவது ஏன்?
கனிமக்கொள்ளை குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தாக்கியதற்கு ஆதாரம் கிடைத்தும் கைது செய்ய தாமதம் ஏன்? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் கனிமக்கொள்ளையை படம் பிடித்த நியூஸ் தமிழ் 24*7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோரை திருவரங்கம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி தாக்கியதற்கான காணொலி ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மக்கள் பிரதிநிதி ஒருவரே ஜனநாயகத்தின் நான்காவது தூணின் பிரதிநிதியான செய்தியாளர்களை கொலைவெறியுடன் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
கனிமக்கொள்ளை நடப்பதை அம்பலப்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை. அந்தக் கடமையை செய்த செய்தியாளர்களை அவர்களின் படப்பிடிப்புக் கருவிகளை பிடுங்கி, திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடூரமான முறையில் தாக்குகிறார். தாக்குதலில் காயமடைந்த செய்தியாளர்கள் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கான காணொலி ஆதாரமும் வெளியாகியுள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய மு.க.ஸ்டாலின் அரசு தயங்குவது ஏன்?
ஆளுங்கட்சிக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டால், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு காவல் படைகளை அனுப்பி கைது செய்யும் காவல்துறை, கனிமக்கொள்ளையை அம்பலப்படுத்தியவர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தயங்குவது ஏன்? திமுகவில் உறுப்பினராக இருந்தால் அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்ய உரிமம் பெற்றதாக பொருளா?
நியூஸ் தமிழ் 24*7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியையும், அவரது அடியாள்களையும் உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.
- எம்.எல்.ஏ. வின் இந்த நடவடிக்கை அதிகாரிகளை ஒரு கணம் திகைக்க செய்தது.
- பொதுமக்கள் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
திருச்சி:
திருச்சி காவிரி ஆறு முக்கொம்பு பகுதியில் இருந்து கொள்ளிடம், காவிரி என 2 ஆறுகளாக பிரிந்து செல்கிறது. காவிரி நீர் புதுவாத்தலை மற்றும் ராமாவா்த்தலை ஆகிய 2 வாய்க்கால்கள் வழியாக ஸ்ரீரங்கம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த வாய்க்கால்கள் தற்போது ஆகாயத்தாமரை மற்றும் செடி கொடிகள் மண்டி வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல். இதனால் இப்பகுதி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்வது காலதாமதம் ஆகி வருகிறது.
இதனை அடுத்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டியை நேரில் சந்தித்து வாய்க்காலை தூர்வார கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து உடனடியாக நீர்வளத்துறை அலுவலகத்திற்கு விவசாயிகளுடன் நேரில் சென்ற பழனியாண்டி எம்.எல்.ஏ அங்கிருந்த செயற்பொறியாளர் நித்தியானந்தத்தை சந்தித்து கரையை பலப்படுத்தவும், காவிரி ஆற்றில் குறம்பு தேக்கி வாய்க்கால்களில் தண்ணீரின் அளவை அதிகப்படுத்த கோரிக்கை மனு அளித்தார்.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் காவிரி ஆற்றில் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் மணல் மூட்டைகளுடன் பணியில் ஈடுபட்டனர். இந்த வேளையில் அங்கு சென்ற பழனியாண்டி எம்.எல்.ஏ. யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று ஆற்றுக்குள் இறங்கினார்.
ஆற்று தண்ணீரின் அளவை கண்டு, அதற்கு ஏற்றார் போல் கரையின் உயரத்தை உயர்த்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். எம்.எல்.ஏ. வின் இந்த நடவடிக்கை அதிகாரிகளை ஒரு கணம் திகைக்க செய்தது. அதே வேளையில் அந்த பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.






