என் மலர்
நீங்கள் தேடியது "திமுக எம்.எல்.ஏ."
சென்னை:
சட்டசபையில் இன்று அனகா புத்தூர், பொழிச்சலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்தப்படுமா? என்று பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி (தி.மு.க.) துணைகேள்வி எழுப்பினார்.
அனகாபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் 400 சதுரடியில் 6 படுக்கை வசதியுடன் உள்ளது. இங்கு 60 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். இதே போல பொழிச்சலூர் 50 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர்.
இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் இட வசதியின்றி சிறிய கட்டிடத்தில் செயல்படுகிறது. எனவே மக்கள் தொகை அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்தப்படுமா? என கேட்டார்.
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில், “இ.கருணாநிதி எம்.எல்.ஏ. குறிப்பிடும் ஆரம்ப சுகாதார நிலையங்களை இரண்டு முறை பார்வையிட்டேன். உறுப்பினர் சொல்வது உண்மைதான்.
சென்னை ஒட்டியுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா உடல் வைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் மற்றும் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட செஞ்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மஸ்தான் மற்றும் திமு.க. நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், இளைஞரணி அமைப்பாளர் அண்ணாதுரை மற்றும் விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் அம்பேத் வளவன் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது. #tamilnews






