என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுனேத்ரா பவார்"

    • அஜித் பவார் மரணத்துக்கு பிறகு பவார் குடும்பத்துக்கும், மராட்டிய அரசியலுக்கும் சிக்கல்கள் அதிகரித்து உள்ளன.
    • சுனேத்ரா பவார் கப்பலை செலுத்தினாலும் அதன் எந்திரமும், கட்டுப்பாடும் பா.ஜனதா முதல்-மந்திரி தேவேந்திர ஃபட்னாவிஸிடம் உள்ளது.

    மராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கடந்த 28-ந்தேதி விமான விபத்தில் பலியானார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க., சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரசை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக சுனேத்ரா பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியது. அவர் கடந்த 31-ந்தேதி மராட்டிய முதல் பெண் துணை மந்திரியாக பதவியேற்றார்.

    இதைத்தொடர்ந்து சரத்பவார் கட்சியுடன் இணையும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது. துணை முதல்-மந்திரியாக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் பதவியேற்பது பற்றி தங்கள் குடும்பத்தினரிடம் அவர் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் சரத்பவார் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் சுனேத்ரா பவார் துணை முதல் மந்திரியாக நியமிக்கப்பட்டதற்கு பா.ஜனதா சூத்திரதாரியாக செயல்பட்டதாகவும், பவார் கட்சிகள் இணைவதை விரும்பவில்லை என்றும் பா.ஜனதா மீது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அந்த கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பா.ஜனதா தலைமை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) தலைவர்களான சுனில் தட்கரே, பிரபுல் படேல் ஆகியோர் தேசியவாத காங்கிரசின் 2 பிரிவுகளும் இணைவதை விரும்பவில்லை. அஜித்பவார் மரணத்துக்கு பிறகு என்.சி.பி.யில் சிலர் அதிக லட்சியம் கொண்டவர்களாக மாறினர். துணை முதல்-மந்திரி பதவியை ஏற்க கட்சிக்குள் போட்டி ஏற்பட்டது. தட்கரே, படேல் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. கட்சி படேலிடம் சென்று விடக்கூடாது என்பதற்காகவே சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

    சுனேத்ரா பவார் யாருடைய விருப்பத்தின் பேரில் துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்று உள்ளார் என்பதுதான் மராட்டிய மாநிலம் முன்புள்ள கேள்வியாகும். ஏனென்றால் சரத்பவார், சுப்ரியா சுலே அல்லது பவார் குடும்பத்தினர் யாருக்கும் இது பற்றி தெரியாது. இந்த அரசியலுக்கு பின்னால் பா.ஜனதா தலைமைதான் சூத்திரதாரி.

    அஜித் பவார் மரணத்துக்கு பிறகு பவார் குடும்பத்துக்கும், மராட்டிய அரசியலுக்கும் சிக்கல்கள் அதிகரித்து உள்ளன. இந்த சிக்கல்கள் தீர்க்கப்படக் கூடாது என்று பலர் விரும்புகிறார்கள். சுனேத்ரா பவார் கப்பலை செலுத்தினாலும் அதன் எந்திரமும், கட்டுப்பாடும் பா.ஜனதா முதல்-மந்திரி தேவேந்திர ஃபட்னாவிஸிடம் உள்ளது. அவரது கருணையின் பேரில்தான் சுனேத்ரா பவாரும், ஏக்நாத் ஷிண்டேவும் தங்கள் பதவியில் இருக்க முடியும்.

    சுனேத்ரா பவார் அலங்கார பொருளாக இருக்கக் கூடாது. பொம்மையாக இல்லாமல் திறமையாக செயல்பட வேண்டும். சுனேத்ரா பவார் தனது கணவரின் இறுதி சடங்குகளுக்கு பிந்தைய சடங்குகள் முடிவடைவதற்கு முன்பே பதவியேற்றது இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு பொருந்தவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    • அஜித் பவார் மனைவி சுனேத்ரா மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்.
    • சரத் பவார் குடும்பத்தினர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வார்களா? என்பது தெரியவில்லை.

    அஜித் பவார் மனைவி சுனேத்ரா மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், சரத் பவாரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சரத் பவார் அளித்த பதில் பின்வருமாறு:-

    சுனேத்ரா துணை முதல்வரா பதவி ஏற்பது குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது. நாங்கள் செய்திகள் மூலமாக அதை தெரிந்து கொண்டோம். எனக்கும் எந்த தகவலும் தெரியாது.

    பிரபுல் பட்டேல், சுனித் தட்காரே போன்றோர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் குடும்பத்தினர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வது குறிதது இவர்கள் முடிவு செய்வார்கள்.

    தற்போது அவரது விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அஜித் பவார், ஷஷிகாந்த் ஷிண்டே, ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் இரண்டு கட்சிகளையும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்தனர். இணைப்பு தேதி கூட முடிவு செய்யப்பட்டுவிட்டது. பிப்ரவரி 12-ந்தேதி இணைக்க முடிவு செய்யப்பட்டது. துரதிருஷ்டவசமாக அதற்கு முன்னதாக அஜித் பவார் காலமாகிவிட்டார்.

    இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    மகாராஷ்டிர துணை முதல்-மந்திரியாக பதவி வகித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் கடந்த புதன்கிழமை புனே அருகே விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, அவரின் அரசியல் வாரிசு யார்? என்பதுதான் புதிய கேள்வியாக எழுந்தது. கட்சியின் பெரும்பான்மை தரப்பினர் கட்சியிலும், ஆட்சியிலும் அஜித் பவார் வகித்து வந்த பதவிகளை அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்க விருப்பம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், சுனில் தட்கரே, தனஞ்செய் முண்டே ஆகியோர் சந்தித்தனர். அப்போது அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், மந்திரியுமான சகன் புஜ்பால் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்தோம். அப்போது சுனேத்ரா பவாரை துணை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அவரை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து விட்டால், நாளையே கூட துணை முதல்-மந்திரி பதவி ஏற்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

    எங்களது கட்சி தலைவர்கள் பலர் அஜித் பவாரின் மனைவி துணை முதல்-மந்திரியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள். கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவி மற்றும் அதனை தொடர்ந்து துணை முதல்-மந்திரி பதவியை நிரப்புவதே தற்போது எங்களது முன்னுரிமை. அதன்படி தேசியவாத காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற கட்சி தலைவராக சுனேத்ரா பவாரின் பெயர் முன்மொழியப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. அதுவும் இன்று மாலை 5 மணிக்கு அவர் பதவி ஏற்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • எங்களது கட்சி தலைவர்கள் பலர் அஜித்பவாரின் மனைவி துணை முதல்-மந்திரியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள்.
    • அஜித்பவார் குடும்பத்தை சேர்ந்தவர் துணை முதல்-மந்திரி ஆவதற்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.

    மகாராஷ்டிர துணை முதல்-மந்திரியாக பதவி வகித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் கடந்த புதன்கிழமை புனே அருகே விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, அவரின் அரசியல் வாரிசு யார்? என்பது தான் புதிய கேள்வியாக எழுந்தது. கட்சியின் பெரும்பான்மை தரப்பினர் கட்சியிலும், ஆட்சியிலும் அஜித்பவார் வகித்து வந்த பதவிகளை அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்க விருப்பம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், சுனில் தட்கரே, தனஞ்செய் முண்டே ஆகியோர் சந்தித்தனர். அப்போது அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், மந்திரியுமான சகன் புஜ்பால் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்தோம். அப்போது சுனேத்ரா பவாரை துணை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அவரை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து விட்டால், நாளையே கூட துணை முதல்-மந்திரி பதவி ஏற்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

    எங்களது கட்சி தலைவர்கள் பலர் அஜித்பவாரின் மனைவி துணை முதல்-மந்திரியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள். கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவி மற்றும் அதனை தொடர்ந்து துணை முதல்-மந்திரி பதவியை நிரப்புவதே தற்போது எங்களது முன்னுரிமை. அதன்படி தேசியவாத காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற கட்சி தலைவராக சுனேத்ரா பவாரின் பெயர் முன்மொழியப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. அதுவும் இன்று மாலை 5 மணிக்கு அவர் பதவி ஏற்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "அஜித்பவார் குடும்பத்தை சேர்ந்தவர் துணை முதல்-மந்திரி ஆவதற்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம். துணை முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் உடன்படுகிறோம்" என்றார்.

    • அஜித் பவார் மறைவால் தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது.
    • அவரது மனைவி சுனேத்ராவை தலைவராக மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான அஜித் பவார் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விமான விபத்தில் காலமானார். இவர் துணை முதல்வராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்க பாஜக தயாராக இருந்தால், தேசியவாத சட்டமன்ற கட்சித் தலைவர் யார் என்பது அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இந்த நிலையில் நாளை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி நாளை கூடுகிறது. இதில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என அக்கட்சியின் தலைவரும், மாநில அமைச்சருமான சகான் புஜ்பால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக புஜ்பால் கூறுகையில் "தேசியவாத காங்கிரஸ் கட்சி, சுனேத்ராவை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்தால், சனிக்கிழமை துணை- முதல்வராக பதவி ஏற்க இருந்தாலும் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக் கூட்டம் நாளை நடைபெறும். சுனேத்ரா பவார் தலைவராக அறிவிக்கப்படுவார். ஏராளமான தலைவர்கள் அவர் துணை முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

    இவ்வாறு புஜ்பால் தெரிவித்தார்.

    288 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிராவில் சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 40 உறுப்பினர்கள் உள்ளனர். அஜித் பவார் காலமானாதால் பாராமதி தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.

    சுனேத்ரா பவார் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவர் மகாராஷ்டிர சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை.

    • பாராமதி மக்களவை தொகுதியில் சர்த் பவார் மகள் சுப்ரியா சுலேயிடம் தோல்வியடைந்தார்.
    • மகாராஷ்டிரா மாநிலங்களில் 2-வது மாநிலங்களை எம்.பி.க்கான இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவார், அதிக எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றிக் கொண்டார்.

    தற்போது அஜித் பவார் ஒரு அணியாகவும், சரத் பவார் ஒரு அணியாகவும் திகழ்கின்றனர். சரத் பவார் மகள் சுப்ரியா சுலே பாராமதி மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.

    மக்களவை தேர்தலில் சரத் பவார் தனது மகள் சுப்ரியா சுலேவை மீண்டும் அதே தொகுதிளில் நிறுத்தினார். அதேவேளையில் அஜித் பவார் தனது மனைவி சுனேத்ராவை அந்த தொகுதியில் நிறுத்தினார். சுப்ரியா சுலே தனது அண்ணன் மனைவியை எதிர்த்து போட்டியிட வேண்டியிருந்தது.

    இருந்த போதிலும் அண்ணன் மனைவியை வீழ்த்தி 4-வது முறையாக வெற்றி பெற்றார். இதனால் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் ஏமாற்றம் அடைந்தார்.

    இதற்கிடையே அசாம், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில தலா இரண்டு மாநிலங்களவை எம்.பி.க்கான இடங்கள் காியாக இருப்பதாக மாநிலங்களவை செயலாளர் அறிவிப்பாணை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித் பவார் தனது மனைவியை மாநிலங்களவை எம்.பி.யாக்க முடிவு செய்தார். கட்சியும் ஆதரவு தெரிவிக்க சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.க்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சகான் புஜ்பால் கூறியதாவது:-

    மாநிலங்களவை தேர்தலில் சுனேத்ரா பவார் வேட்புமனு தாக்கல் செய்ய தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. நான் கூட இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்தேன். ஆனால், நேற்று மாலை (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கட்சி தலைவர்கள் சுனேத்ரா பெயரை முடிவு செய்தார்கள்.

    அனைவரும் கட்சி முடிவை ஏற்றுக் கொண்டனர். சில நிர்பந்தங்கள் அங்கே இருந்தன. நான் தனிப்பட்ட நபர் கிடையாது. கட்சி தொண்டர், கட்சி தலைவர்.

    இவ்வாறு சகான் புஜ்பால் தெரிவித்துள்ளார்.

    அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் தலா ஒரு மாநிலங்களவை எம்.பி.க்கான இடம் காலியாக உள்ளது.

    ×