என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓரினச்சேர்க்கையாளர்"

    • இந்தியாவில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் உறவு சட்டப்பூர்வமானதாக மாறியது.
    • சக பெண் வழக்கறிஞர் அருந்ததி கட்ஜுவுடனான தனது உறவை வெளிப்படுத்தினார்.

    தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உள்ளிட்ட 10 மாநிலங்களில், காலியாகவுள்ள 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    அந்த வகையில், மேற்கு வங்கத்தில் இருந்து 5 மாநிலங்களைவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

    அதில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 4 இடமும், பாஜகவுக்கு 1 இடமும் வெல்ல அதிகம் வாய்ப்புள்ளது.

    மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.

    தங்களின் மாநிலங்களவை வேட்பாளர்களாக, அமைச்சர் பாபுல் சுப்ரியோ, முன்னாள் மாநில டிஜிபி ராஜீவ் குமார், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி மற்றும் பிரபல நடிகை கோயல் மாலிக் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    இந்த நால்வரில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளார்.

    யார் இந்த மேனகா குருசாமி? 

    2018-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ( இயற்கைக்கு மாறான உறவு) என்பதில் இருந்து தன்பாலின சேர்க்கையை நீக்கி உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

    இந்த தீர்ப்பின் மூலமே, இந்தியாவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள்உறவு சட்டப்பூர்வமானதாக மாறியது.

    இந்த வழக்கில் மனு மானுதாரருக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர்களில் மேனகாவும் ஒருவர்.

    இந்த தீர்ப்பிற்கு பிறகு, தனது சக பெண் வழக்கறிஞர் அருந்ததி கட்ஜுவுடனான தனது உறவை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

    தன்பாலின திருமண அங்கீகாரம் தொடர்பான பல வழக்குகளிலும் அவர் வாதிட்டுள்ளார்.

    ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் தனது எல்.எல்.எம். முடித்த மேனகா குருசாமி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ரோட்ஸ் ஸ்காலர் ஆவார்.

    2019 ஆம் ஆண்டு டைம் பத்திரிகை அறிவித்த உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இவரும் ஒருவர்.

    மாநிலங்களவை தேர்தலில் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், பாராளுமன்றத்திற்குள் நுழையும் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கையாளர் என்ற பெருமையை மேனகா குருசாமி பெற உள்ளார்.     

    • செனட்சபையில் இந்த மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.
    • ஜனாதிபதி ஜோ பைடன் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.

    வாஷிங்டன்

    அமெரிக்காவில் கடந்த 2015-ம் ஆண்டு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது.

    இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் கருக்கலைப்புக்கு தடைவிதித்து சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. இதை தொடர்ந்து, ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தையும் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்யலாம் என்கிற அச்சம் எழுந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமண உரிமையை பாதுக்கும் மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட்சபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் செனட்சபையில் இந்த மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்கள் உள்பட 61 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 36 பேர் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் செனட் சபையில் அந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து அந்த மசோதா தற்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அங்கும் மசோதா நிறைவேறும் பட்சத்தில் அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஜோ பைடன் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.

    • ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக கேப் டவுனில் உள்ள வின்பெர்க்கில் அல்-குராபா மசூதியை நடத்தி வந்தார்.
    • முகத்தை மறைத்த இரண்டு மர்ம நபர்கள் அந்த காரில் இருந்து இறங்கி இமாமின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின

    உலகிலேயே தன்னை ஓரினசேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்த முதல் இஸ்லாமிய மதகுரு இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ்(57) சுட்டுக் கொல்லப்பட்டார்.

    தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரமான க்வெபர்ஹா(Gqeberha) அருகே நேற்று (சனிக்கிழமை) முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்ட இமாம் ஒதுக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் பிற ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக கேப் டவுனில் உள்ள வின்பெர்க்கில் அல்-குராபா மசூதியை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று அவர் ஒருவருடன் காரில் இருந்தபோது, ஒரு வாகனம் அவர்களுக்கு முன்னால் நின்று அவர்கள்  வழியைத் தடுத்தது. முகத்தை மறைத்த இரண்டு மர்ம நபர்கள் அந்த காரில் இருந்து இறங்கி இமாமின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

     

    இதில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டியவர் காயங்களுடன் தப்பித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    கொலைக்கான நோக்கம் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சர்வதேச லெஸ்பியன், ஓரினச்சேர்க்கையாளர், இருபாலினத்தவர், திருநங்கைகள் சங்கம் (ILGA) இந்தக் கொலையைக் கண்டித்தது.

    "முஹ்சின் ஹென்ட்ரிக்ஸின் கொலைச் செய்தியால் ILGA வேர்ல்ட் குடும்பம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. வெறுப்பு காரணமாக நடந்த குற்றம் என இதை நாங்கள் அஞ்சுகிறோம். அதிகாரிகள் இதை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று அதன் நிர்வாக இயக்குனர் ஜூலியா எர்ஹார்ட் தெரிவித்துள்ளார். 

    பல்வேறு LGBTQ ஆதரவு குழுக்களில் PANIYATRIYAஹென்ட்ரிக்ஸ், 1996 இல் ஓரினச்சேர்க்கையாளராக தன்னை வெளிப்படையாக அறிவித்திருந்தார். 

    ×