என் மலர்
கோவில்கள்
புத்திர பாக்கியமில்லாதவர்கள் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலுக்கு வந்து நியமத்துடன் விரதமிருந்து கஞ்சி வடிக்காத அன்னத்தை ஒரு வேளை மட்டும் உண்டுவர நல்ல பிள்ளைப்பேறு கிடைக்கும்.
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருப்பதி ஏழுமலையானிடம் நீங்கள் வேண்டிக்கொண்டது நிறைவேறி விட்டது. ஆனால் அந்த வேண்டுதலை நிறைவேற்ற உடனே திருப்பதி செல்ல முடியாத சூழ்நிலை. ஐயோ, தெய்வகுற்றம் ஆகிவிடுமே என்று கவலைப்படாதீர்கள்.
வேண்டியதை வேண்டியவாறு கொடுக்கும் வள்ளல் வெங்கடாஜலபதிக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை செலுத்த உங்களுக்கு அருகாமையிலேயே ஒரு புண்ணியஸ் தலம் உள்ளது. என்ன, ஆச்சிரியமாக இருக்கிறதா. நம் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்தான் அது.
ஸ்ரீதால்பிய முனிவரின் அன்பைப் பெற்ற, அருந்தவ குணம் கொண்ட சீடர் குணசீல மகரிஷி, ஒரு சமயம் ஏழுமலைக்கு சென்ற குணசீலர் வேண்டியவருக்கு வேண்டு வதை அருளும் வேங்கட முடையான் ஸ்ரீவெங்கடாஜலபதியை தரிசனம் செய்தார். வெங்கடாஜலபதியின் அருளில் மூழ்கிப்போன குணசீல மகரிஷி, அவரை விட்டு அகல முடியாது.
பிரிந்து வாழ முடியாது என்று எண்ணினார். தன் உள்ளக்கிடக்கையை எம்பெருமானிடம் கோரிக்கையாக கொட்டித்தீர்த்தார். தன் ஆசிரமத்துக்கு எழுந்தருளி, என்றென்றும் தனக்கும், மக்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும் என்று வரம் வேண்டினார்.
பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பரமாத்மா, தாம் திருவேங்கட மலையில் அர்ச்சாவதாரமாக இருந்து குபேரனிடம்தான் வாங்கிய திருமண கடனை அடைத்துக் கொண்டிருப்பதாகவும், கடன் தீரும் வரை தாம் அங்கிருந்து வர முடியாது என்றும் கூறினார்.
மேலும் குணசீலர் காவிரிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவம் புரிய வேண்டும் என்றும், வைகுண்டத்திலிருந்து ஸ்ரீவாசுதேவன்-ஸ்ரீலட்சுமியுடன் பிரசன்ன வெங்கடேசனாக தாம் அங்கு எழுந்தருளுவதாகவும் திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி குணசீல மகரிஷியும் காவிரி வடகரையில் ஆசிரமம் நிறுவி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் எழுந்தருள கடும் தவம் புரிந்தார்.
அவரின் தவத்தை மெச்சி வெங்கடாஜலபதி பெருமாளும் கிருதயுகம், புரட்டாசி மாதம், சனிக்கிழமை, சிரவண நட்சத்திரம் கூடிய சுபதினத்தில், தனுர் லக்னத்தில், சந்திரனுடன் குரு சேர்ந்திருக்கும் வேளையில் எம்பெருமான் திவ்ய மங்கள சொரூபராக பிரசன்னம் ஆகி குடி கொண்டார்.
இவ்வாறு எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதியை குணசீல மகரிஷி 3 யுகங்கள் தன் ஆசிரமத்தில் பூஜை புனஸ்காரங்களுடன், எவ்வித குறைபாடும் இன்றி வழிபட்டு வந்தார். இந்நிலையில் குணசீல மகரிஷி குரு ஸ்ரீதல்பிய முனிவர் பத்ரிகாசிரமம் சென்று தவம் புரிய விரும்பினார்.
தன் ஆத்மார்த்த சீடர் குணசீலரும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம். இதை தம் தவ வலிமையால் உணர்ந்த குணசீலருக்கு பெரும் குழப்பம். தவமிருந்து, கிடைத்தற்கரிய செல்வமாய் பெற்ற பிரசன்ன வெங்கடா ஜலபதியை விட்டுப் பிரிவதா? தன்னை இவ்வளவு தூரம் உயர்த்திய குருநாதன் தல்பிய முனிவரை விட்டுப் பிரிவதா என்று தெரியவில்லை.
விடை காணமுடியாமல் தவித்த குணசீலர், தனக்கு நல்லதொரு முடிவு தருமாறு எம்பெருமான் பிரசன்ன வெங்கடேசனையே வேண்டினார். பெருமாளும் குணசீலரே, பத்ரிகாசிரமத்திலும் யாமே குடிகொண்டுள்ளோம். குருபக்தி குறைய வேண்டாம். தல்பியருடன் சென்று உம் சேவை தொடரட்டும் என்று அருள்பாலித்தார்.
எம்பெருமானின் உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றப் புறப்படும் முன் குணசீலர் இறைவனிடம் ஒரு வாரம் வேண்டினார். `வேண்டிய வருக்கு வேண்டியதை அருளும் வெங்கடேசா! தங்கள் கட்டளைப்படியே தல்பிய முனிவருடன் பத்ரிகாசிரமம் சென்று குருசேவையை தொடருகிறேன்.
இந்த புண்ணியஸ்தலம் இனி என் பெயரால் விளங்க வேண்டும். தங்களை நாடிவந்து வேண்டுவோரின் முன் `வினைப்பயன்கள் அனைத்தும் நீங்க வேண்டும். தீராத நோய்கள் எல்லாம் தீர வேண்டும். குறிப்பாக சித்தப்பிரமை உடையவர்கள் இங்கு வந்தால் தெளிவு பெற்றுச் செல்ல வேண்டும்.
கேட்டது கிடைக்க வேண்டும். நினைத்தது நடக்க வேண்டும். தென்திருப்பதி என்று மக்கள் போற்றி, பிரார்த்தனை தலமாக விளங்க வேண்டும் என்று கேட்டார். தனக்காக வேண்டாமல், தரணியில் உள்ள மக்களுக்காக வேண்டிய குணசீலரின் எண்ணத்தை எம்பெருமான் பாராட்டினார்.
`நீர் வேண்டிய படியே நடக்கும். யாம் சங்கு-சக்கரம் தரித்து, செங்கோலுடன் இங்கு காட்சி தருவோம். சகல நோய்களும் தீரும்' என்று அருள்பாலிக்க, குணசீல மகரிஷி பத்ரிகாசிரமம் புறப்பட்டு சென்றார். குணசீலர் போகும்முன்பு எம்பெருமானுக்கு சேவை செய்ய தன்சீடர்களில் ஒருவரை நியமித்து சென்றார்.
ஆற்றில் வெள்ள அடிக்கடி வந்ததால் பயந்துபோன சீடர் வெங்கடேசப் பெருமாளை தனியே விட்டு, விட்டு ஓடி விட்டார். எம்பெருமானோ தன்னைச் சுற்றி ஒரு புற்றை உண்டாக்கி அதனுள் குடி கொண்டார். வனம் நிறைந்த இந்த குணசீலம் அருகில்தான் மன்னர் ஞானவர்மாவின் கோசாலை இருந்தது.
கோசாலையில் இருந்து குணசீலம் வனத்தில் மேய்ந்து விட்டு சென்ற மாடுகளிடம் யாதவர் கள் பால் கறந்து புற்று அருகே சற்று இளைப்பாறி விட்டு அரண்மனைக்கு அனுப்புவது வழக்கம். ஒரு சமயம் அந்த மாடுகளிடம் இருந்து கறந்து குடங்களில் ஊற்றப்பட்டிருந்த பால் புற்று அருகே யாதவர்கள் ஓய் வெடுத்தபோது மாயமாய் மறைந்தது.
திடீரென்று மன்னரிடம் பயந்தபடி இதை சொன்னார்கள். நம்ப மறுத்த அரசர் வந்து நேரில் பார்த்த போதும் இதேபோல் பால் மாயமாய் மறைந்தது. அரசரும் திகைத்தார். அப்போது அந்த வழி வந்த ஒரு அந்தணர், அருள் வந்து வைகுண்டவாசனை நாம் பிரசன்ன வெங்கடேசனாக இங்கு சுயம்பு வடிவில் எழுந் தருளியுள்ளோம்.
புற்றை பால் ஊற்றி அபிஷேகம் செய்தால் உண்மை புரியும்' என்று பிரசன்னம் சொன்னார். அதன்படி மன்னர் உத்தர விட, புற்றின் மீது குடம் குட மாக பால் அபிஷேகம் செய்ய புற்று கரைந்து, சங்கு சக்கர தாரியாய், ஆனந்த சொரூப னாய் காட்சியளித்தார்.
அன்று இரவில் அவரது கனவில் பிரச்சன்னமான வெங்கடேசன் தான் இருந்த இடத்தில் ஒரு ஆலயம் நிர்மாணிக்கும்படி கட்டளையிட, அதை தனக்கு கிடைத்த பாக்கியமாய் எண்ணி மன்னரும் ஆலயம் கட்டினார். இந்த ஆலயம்தான் இன்றைக்கு தென்திருப்பதிஎன்னும் சிறப்புடன் திவ்யதேசமாக புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது.
திருப்பதிக்கு வேண்டுதல் செய்து கொண்டவர்கள் தங்கள் காணிக்கைகள் இங்கு செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம். இங்கு பிரார்த்தனை செய்தவர்கள் வேறுபெருமாள் கோவில்களில் வேண்டுதலை நிறைவேற்ற முடியாது. அப்படி காணிக்கை செலுத்தினாலும், இங்கு எழுந்தருளியிருக்கும் பிரசன்ன வெங்கடேசபெருமாள் தனக்கு வர வேண்டிய காணிக்கையை வசூலித்து வருவார் என்று கதைகள் கூறுகின்றன.
சித்த பிரமை உடையவர்களும், பில்லி-சூனியம் போன்ற தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குணமாகும். புத்திர பாக்கியமில்லாதவர்கள் இங்கு வந்து நியமத்துடன் விரதமிருந்து கஞ்சி வடிக்காத அன்னத்தை ஒரு வேளை மட்டும் உண்டுவர நல்ல பிள்ளைப்பேறு கிடைக்கும்.
வரனுக்கு நல்ல கன்னிகையும், கன்னிப்பெண்களுக்கு நல்ல வரனும் அமையும். ஊமைகள் பேசுவார்கள், கண் தெரியாதவர்கள் பார்வை பெறுவார்கள், தீராத வியாதிகள் தீரும்' என்று ஞானவர்ம மன்னருக்கு எம்பெருமான் காட்சியளித்த போது திருவாய் மலர்ந்தது போல் இன்றும் அருள்பாலித்து வருகிறார்.
போக்குவரத்து வசதி:
சென்னையில் இருந்து பஸ் மூலம் திருச்சி சென்று பின் அங்கிருந்து சேலம் நெடுஞ்சாலையில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி சென்று பின் அங்கிருந்து அரசு பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். இத்திருத்தலம்திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்
சேலம் தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலுக்கு அருகாமையில் அமைந்திருக்கிறது கண்ணனூர் மாரியம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் சிற்பக்கலையின் நுட்பமாக திகழும் சேலம் தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலுக்கு அருகாமையில் அமைந்திருக்கிறது கண்ணனூர் மாரியம்மன் கோவில். பிரகாரத்தில் விநாயகர் மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளன. தாரமங்கலத்தை சுற்றியுள்ள 18 பட்டி கிராம மக்களும், இந்த மாரியம்மனை குலதெய்வமாக கொண்டாடி வழிபட்டு வருகின்றனர். ஒரே பீடத்தில் வலது புறத்தில் மாரியம்மனும், இடது புறத்தில் காளியம்மனும் இருப்பது வியப்பு. ஆரம்பத்தில் இங்கு மாரியம்மன் விக்ரகம் மட்டுமே இருந்தது. கோயிலுக்கு வந்த அம்மனின் தீவிர பக்தர் ஒருவர், அயர்ந்து தூங்கினார். அப்போது அவரது கனவில் வந்த அம்மன், எனக்கு அருகே எனது சகோதரிக்கும் விக்ரகம் வைத்து வழிபட வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மாரியம் மனுக்கு இடது புறத்தில் காளியம்மன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது சிலிர்ப்பூட்டும் தகவல்.
கேரள கோயில்களின் சாயல்களில் இந்த கோயில் இருப்பது கூடுதல் சிறப்பு. இதற்கான காரணத்தை கூறுகிறது கோயிலின் தலவரலாறு. ‘‘பல்லாண்டுகளுக்கு முன்பு, கேரளத்தில் உள்ள கண்ணனூர் அம்மன் சிலையை பக்தர்கள் குதிரையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது சேரநாட்டில் இருந்த இந்த பகுதிக்கு வந்தபோது இருட்டி விட்டது. இதனால் ஓய்வெடுப்பதற்காக சிலையை இறக்கி வைத்த பக்தர்கள், மரத்தின் அடியில் அம்மன் சிலையை வைத்தனர். அன்றிரவு பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன், தன்னை அமர்த்தியிருக்கும் இடத்திற்கு அடியில் சுயம்புவாக வீற்றிருப்பதாகவும், எனவே இந்த இடத்தில் கோயில் கட்டுமாறும் கூறினாள். இதனால் மெய்சிலிர்த்த பக்தர், கனவில் அம்மன் கூறியதை ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
அனைவரும் சேர்ந்து தோண்டிப்பார்த்த போது அம்மன் சிலை இருந்தது. இதையடுத்து கனவில் அம்மன் கொடுத்த உத்தரவுப்படி, ஊர் மக்கள் ஒன்றிணைந்து கோயில் கட்டினர். கண்ணனூரில் இருந்து அம்மனை கொண்டு வரும் போது, கிடைக்கப் பெற்ற விக்ரகம் என்பதால் கண்ணனூர் மாரியம்மன் என்று வழிபடத் துவங்கினர்,’’ என்பது தலவரலாறு. கண்ணென பக்தர்களை காத்து துயரங்களை தீர்ப்பவள் கண்ணனூர் மாரியம்மன் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதிலும் குறிப்பாக குழந்தைவரம் கேட்டு, இங்கு பெண்கள் வேண்டுதல் வைத்து செல்வது பிரதானமாக உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டு பவர்கள், அம்பாள் முன்பு தொட்டில் கட்டி, அதில் கோயில் முன்புள்ள சஞ்சீவி தீர்த்தத்தை தெளிக்கின்றனர்.
இப்படி நீர் தெளித்து தொட்டிலை ஆட்டி வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இவ்வாறு வேண்டுதல் வைத்து குழந்தை வரம் பெற்ற பெண்கள், பூக்குழி இறங்கி தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இப்படி பூக்குழி இறங்கும் நேரத்தில் அம்மனுக்கு அபிஷேகம் செய்த பாலை, அக்னி குண்டத்தில் நின்று கொண்டே குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இப்படி செய்வதால் அந்த குழந்தைகள் நொய் நொடியில்லாமல், நீண்ட ஆயுளுடன் வாழும். அம்பாள் எப்போதும் அவர்களுக்கு துணை நிற்பாள் என்பதும் செவிவழித் தகவலாக உள்ளது. இதேபோல் பேச்சுக்குறைபாடு உள்ளவர்கள், மாவிளக்கு எடுத்து மணி கட்டி, அம்மனை வழிபட்டால் அதற்கு தீர்வு கிடைக்கும் என்பதும் கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் திரளும் பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கையாக உள்ளது.
கேரள கோயில்களின் சாயல்களில் இந்த கோயில் இருப்பது கூடுதல் சிறப்பு. இதற்கான காரணத்தை கூறுகிறது கோயிலின் தலவரலாறு. ‘‘பல்லாண்டுகளுக்கு முன்பு, கேரளத்தில் உள்ள கண்ணனூர் அம்மன் சிலையை பக்தர்கள் குதிரையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது சேரநாட்டில் இருந்த இந்த பகுதிக்கு வந்தபோது இருட்டி விட்டது. இதனால் ஓய்வெடுப்பதற்காக சிலையை இறக்கி வைத்த பக்தர்கள், மரத்தின் அடியில் அம்மன் சிலையை வைத்தனர். அன்றிரவு பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன், தன்னை அமர்த்தியிருக்கும் இடத்திற்கு அடியில் சுயம்புவாக வீற்றிருப்பதாகவும், எனவே இந்த இடத்தில் கோயில் கட்டுமாறும் கூறினாள். இதனால் மெய்சிலிர்த்த பக்தர், கனவில் அம்மன் கூறியதை ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
அனைவரும் சேர்ந்து தோண்டிப்பார்த்த போது அம்மன் சிலை இருந்தது. இதையடுத்து கனவில் அம்மன் கொடுத்த உத்தரவுப்படி, ஊர் மக்கள் ஒன்றிணைந்து கோயில் கட்டினர். கண்ணனூரில் இருந்து அம்மனை கொண்டு வரும் போது, கிடைக்கப் பெற்ற விக்ரகம் என்பதால் கண்ணனூர் மாரியம்மன் என்று வழிபடத் துவங்கினர்,’’ என்பது தலவரலாறு. கண்ணென பக்தர்களை காத்து துயரங்களை தீர்ப்பவள் கண்ணனூர் மாரியம்மன் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதிலும் குறிப்பாக குழந்தைவரம் கேட்டு, இங்கு பெண்கள் வேண்டுதல் வைத்து செல்வது பிரதானமாக உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டு பவர்கள், அம்பாள் முன்பு தொட்டில் கட்டி, அதில் கோயில் முன்புள்ள சஞ்சீவி தீர்த்தத்தை தெளிக்கின்றனர்.
இப்படி நீர் தெளித்து தொட்டிலை ஆட்டி வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இவ்வாறு வேண்டுதல் வைத்து குழந்தை வரம் பெற்ற பெண்கள், பூக்குழி இறங்கி தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இப்படி பூக்குழி இறங்கும் நேரத்தில் அம்மனுக்கு அபிஷேகம் செய்த பாலை, அக்னி குண்டத்தில் நின்று கொண்டே குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இப்படி செய்வதால் அந்த குழந்தைகள் நொய் நொடியில்லாமல், நீண்ட ஆயுளுடன் வாழும். அம்பாள் எப்போதும் அவர்களுக்கு துணை நிற்பாள் என்பதும் செவிவழித் தகவலாக உள்ளது. இதேபோல் பேச்சுக்குறைபாடு உள்ளவர்கள், மாவிளக்கு எடுத்து மணி கட்டி, அம்மனை வழிபட்டால் அதற்கு தீர்வு கிடைக்கும் என்பதும் கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் திரளும் பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கையாக உள்ளது.
திருஞானசம்பந்தருக்கு உச்சிப் பொழுதில் உணவு அளித்துப் பசியை போக்கியதால் இறைவனுக்கு உச்சிநாதேஸ்வரர் என்று பெயர்.
இறைவன் பெயர் - உச்சிநாதேசுவரர்
இறைவி பெயர் - கனகாம்பிகை
கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் ஆலயம் காட்சி அளிக்கிறது. கோவிலுக்கு எதிரே நீராழி மண்டபத்துடனுள்ள கிருபாசமுத்திரம் என்ற திருக்குளம் ஆலயத்தின் தீர்த்தமாக விளங்குகிறது. உள் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், பஞ்சலிங்கங்கள், சனிபகவான், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன. வலம் முடித்து முன்மண்டபம் சென்றால் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன. துவாரபாலகரைத் தொழுது வாயிலைக் கடந்தால் வலதுபுறம் நின்ற திருக்கோலத்துடன் காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. நடராசசபையில் உள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சிவலிங்கத்தின் பின்புறம் பார்வதி, பரமேஸ்வரர் திருவுருவங்கள் உள்ளன.
திருஞானசம்பந்தருக்கு உச்சிப் பொழுதில் உணவு அளித்துப் பசியை போக்கியதால் இறைவனுக்கு உச்சிநாதேஸ்வரர் என்று பெயர். சம்பந்தர் திருவேட்களத்தில் தங்கி இருந்த நாட்களில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தலம்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.
தினந்தோறும் 5 கால பூஜைகள் இவ்வாலயத்தில் திடைபெறுகிறது. வைகாசி விசாகத்தன்று கோவிலுக்கு எதிரே உள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரியும், மாலையில் பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
ஆலய முகவரி
அருள்மிகு உச்சிநாதேசுவரர் திருக்கோவில்
சிவபுரி
சிவபுரி அஞ்சல்
வழி அண்ணாமலை நகர்
சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608002
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இறைவி பெயர் - கனகாம்பிகை
கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் ஆலயம் காட்சி அளிக்கிறது. கோவிலுக்கு எதிரே நீராழி மண்டபத்துடனுள்ள கிருபாசமுத்திரம் என்ற திருக்குளம் ஆலயத்தின் தீர்த்தமாக விளங்குகிறது. உள் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், பஞ்சலிங்கங்கள், சனிபகவான், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன. வலம் முடித்து முன்மண்டபம் சென்றால் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன. துவாரபாலகரைத் தொழுது வாயிலைக் கடந்தால் வலதுபுறம் நின்ற திருக்கோலத்துடன் காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. நடராசசபையில் உள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சிவலிங்கத்தின் பின்புறம் பார்வதி, பரமேஸ்வரர் திருவுருவங்கள் உள்ளன.
திருஞானசம்பந்தருக்கு உச்சிப் பொழுதில் உணவு அளித்துப் பசியை போக்கியதால் இறைவனுக்கு உச்சிநாதேஸ்வரர் என்று பெயர். சம்பந்தர் திருவேட்களத்தில் தங்கி இருந்த நாட்களில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தலம்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.
தினந்தோறும் 5 கால பூஜைகள் இவ்வாலயத்தில் திடைபெறுகிறது. வைகாசி விசாகத்தன்று கோவிலுக்கு எதிரே உள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரியும், மாலையில் பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
ஆலய முகவரி
அருள்மிகு உச்சிநாதேசுவரர் திருக்கோவில்
சிவபுரி
சிவபுரி அஞ்சல்
வழி அண்ணாமலை நகர்
சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608002
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஒரே கோட்டை சுவருக்குள் 6 தெய்வங்களும், 5 சன்னிதிகளும் அமைந்து உள்ளதால், இந்த ஆலயமானது ‘ஐந்து வீட்டு சுவாமிகள் திருக் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.
திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது செட்டியாபத்து என்ற ஊர். இங்கு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில் 4 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலுற அமைய பெற்றுள்ளது. கிழக்குபுறம் ஒரு வாசலும், மேற்குபுறம் ஒரு வாசலும், வடக்கு புறம் ஒரு வாசலுமாக மூன்று வாசல்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆலயம்.
வடக்கு புற வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் முதலில் பெரியசாமி சன்னிதியும், அடுத்து வயனப்பெருமாள் மற்றும் அனந்தம்மாள் வீற்றிருக்கும் சன்னிதியும் காணப்படுகிறது. அடுத்ததாக ஆத்தி சுவாமி சன்னிதியும், தொடர்ந்து திருப்புளி ஆழ்வார் சன்னிதியும், அதன் அருகில் பெரியபிராட்டி சன்னிதியும் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரே கோட்டை சுவருக்குள் 6 தெய்வங்களும், 5 சன்னிதிகளும் அமைந்து உள்ளதால், இந்த ஆலயமானது ‘ஐந்து வீட்டு சுவாமிகள் திருக் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய சுவாமி சன்னிதியின் எதிர்புறம் ஆஞ்சநேயர் சன்னிதியும், ஆத்தி சுவாமி அருகே குதிரை சுவாமி சன்னிதியும் அமைந்துள்ளன.
பெரியசாமி சன்னிதி தவிர மற்ற சன்னிதிகளில் மூல வருக்கு விக்கிரகங்கள் கிடையாது. பெரியசாமிக்கு மட்டுமே மூலவர் விக்கிரகம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் மூலஸ்தானம் வரை சென்று வணங்கும் சிறப்பு, இந்தக் கோவிலுக்கு மட்டுமே உள்ளது என்று சொல்லப்படுகிறது.
ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகின்றன. மேலும் மாலை நேரத்தில், ‘மாலை சாத்துதல்' பூஜையும் செய்யப்படுகிறது. இடைப்பட்ட நேரங்களில் பணிவிடை (படையல் போடுபவர்கள்) செய்கிறவர்களுக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. இதுதவிர தினசரி அதிகாலை 4 மணிக்கு சங்கநாதமும், சேகண்டி ஓசையும் முழங்கப் படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் தங்களால் முடிந்த பணிவிடைகளை (ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு), படையல் போடுவார்கள். முன்னதாக ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு இந்த படையல்கள் போடப்படும். அதன்பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர், பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமியை வழிபட்டு ஆத்தி மர இலையை அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் அவர்கள் குணம் பெறுவார்கள்.
கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் செருப்புகளை அணிந்ததின் அடையாளமாக, கோவிலில் உள்ள செருப்புகளில் ஆத்தி சுவாமியின் கால் விரல்கள் பதிந்த தடங்களை இன்றும் காணலாம். பெரியசாமி சன்னிதியில் கட்டில், தலையணை வைக்கப்பட்டு இருக்கும். இதில் இரவு நேரத்தில் பெரியசாமி படுத்து ஓய்வு எடுப்பதாக நம்பப்படுகிறது. காலையில் நாம் இதனை பார்த்தால் இந்த படுக்கை விரிப்புகள் கலைந்து இருப்பதை காணலாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவிலில் சித்திரை திருவிழாவும், தைத்திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படு கிறது. இதேபோல் அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. சித்திரை திருவிழாவின் இறுதி நாள் அன்று ஆலயத்தில் வழங்கப்படும் அன்னமுத்திரி என்ற பிரசாதம் மிகவும் மகிமை பெற்றதாக கருதப்படுகிறது.
திருமணிக்கட்டி மகிமைகள் :
ஐந்து வீட்டு சுவாமி பக்தர்கள் நெற்றியில் திருமணி என்னும் வெள்ளைப்பொட்டு இட்டுக்கொள்வார்கள். இந்த திருமணி என்பது நாமக்கட்டி போன்று வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கும் திருமண்ணாகும். இதை தண்ணீரில் குழைத்து பொட்டு இட்டுக்கொள்வர். இந்த கோவிலில் பிரசாதமாக திருமணிக்கட்டியே வழங்கப்படுகிறது. கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்கு பதிலாக திருமணிக்கட்டியை குழைத்து தான் பூசிக்கொள்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த திருமணியை தண்ணீரில் குழைத்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் நோய் குணமாகுவதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி வருகிறார்கள்.
இந்த கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணி என்று பெயர் சூட்டியிருப்பதில் இருந்தே திருமணிக்கட்டி பிரசாதத்தின் மகிமையை நாம் உணர முடியும்.
பூஜை கால அட்டவணை
காலசந்தி நடைதிறப்பு - காலை 7 மணி.
பூஜை ஆரம்பம் - காலை 8 மணி.
உச்சி காலை நடைதிறப்பு - பகல் 11 மணி.
பூஜை ஆரம்பம் - பகல் 12 மணி.
இராக்காலம் நடைதிறப்பு - மாலை 5.30 மணி.
பூஜை ஆரம்பம் - இரவு 7 மணி.
வடக்கு புற வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் முதலில் பெரியசாமி சன்னிதியும், அடுத்து வயனப்பெருமாள் மற்றும் அனந்தம்மாள் வீற்றிருக்கும் சன்னிதியும் காணப்படுகிறது. அடுத்ததாக ஆத்தி சுவாமி சன்னிதியும், தொடர்ந்து திருப்புளி ஆழ்வார் சன்னிதியும், அதன் அருகில் பெரியபிராட்டி சன்னிதியும் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரே கோட்டை சுவருக்குள் 6 தெய்வங்களும், 5 சன்னிதிகளும் அமைந்து உள்ளதால், இந்த ஆலயமானது ‘ஐந்து வீட்டு சுவாமிகள் திருக் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய சுவாமி சன்னிதியின் எதிர்புறம் ஆஞ்சநேயர் சன்னிதியும், ஆத்தி சுவாமி அருகே குதிரை சுவாமி சன்னிதியும் அமைந்துள்ளன.
பெரியசாமி சன்னிதி தவிர மற்ற சன்னிதிகளில் மூல வருக்கு விக்கிரகங்கள் கிடையாது. பெரியசாமிக்கு மட்டுமே மூலவர் விக்கிரகம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் மூலஸ்தானம் வரை சென்று வணங்கும் சிறப்பு, இந்தக் கோவிலுக்கு மட்டுமே உள்ளது என்று சொல்லப்படுகிறது.
ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகின்றன. மேலும் மாலை நேரத்தில், ‘மாலை சாத்துதல்' பூஜையும் செய்யப்படுகிறது. இடைப்பட்ட நேரங்களில் பணிவிடை (படையல் போடுபவர்கள்) செய்கிறவர்களுக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. இதுதவிர தினசரி அதிகாலை 4 மணிக்கு சங்கநாதமும், சேகண்டி ஓசையும் முழங்கப் படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் தங்களால் முடிந்த பணிவிடைகளை (ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு), படையல் போடுவார்கள். முன்னதாக ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு இந்த படையல்கள் போடப்படும். அதன்பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர், பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமியை வழிபட்டு ஆத்தி மர இலையை அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் அவர்கள் குணம் பெறுவார்கள்.
கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் செருப்புகளை அணிந்ததின் அடையாளமாக, கோவிலில் உள்ள செருப்புகளில் ஆத்தி சுவாமியின் கால் விரல்கள் பதிந்த தடங்களை இன்றும் காணலாம். பெரியசாமி சன்னிதியில் கட்டில், தலையணை வைக்கப்பட்டு இருக்கும். இதில் இரவு நேரத்தில் பெரியசாமி படுத்து ஓய்வு எடுப்பதாக நம்பப்படுகிறது. காலையில் நாம் இதனை பார்த்தால் இந்த படுக்கை விரிப்புகள் கலைந்து இருப்பதை காணலாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவிலில் சித்திரை திருவிழாவும், தைத்திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படு கிறது. இதேபோல் அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. சித்திரை திருவிழாவின் இறுதி நாள் அன்று ஆலயத்தில் வழங்கப்படும் அன்னமுத்திரி என்ற பிரசாதம் மிகவும் மகிமை பெற்றதாக கருதப்படுகிறது.
திருமணிக்கட்டி மகிமைகள் :
ஐந்து வீட்டு சுவாமி பக்தர்கள் நெற்றியில் திருமணி என்னும் வெள்ளைப்பொட்டு இட்டுக்கொள்வார்கள். இந்த திருமணி என்பது நாமக்கட்டி போன்று வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கும் திருமண்ணாகும். இதை தண்ணீரில் குழைத்து பொட்டு இட்டுக்கொள்வர். இந்த கோவிலில் பிரசாதமாக திருமணிக்கட்டியே வழங்கப்படுகிறது. கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்கு பதிலாக திருமணிக்கட்டியை குழைத்து தான் பூசிக்கொள்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த திருமணியை தண்ணீரில் குழைத்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் நோய் குணமாகுவதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி வருகிறார்கள்.
இந்த கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணி என்று பெயர் சூட்டியிருப்பதில் இருந்தே திருமணிக்கட்டி பிரசாதத்தின் மகிமையை நாம் உணர முடியும்.
பூஜை கால அட்டவணை
காலசந்தி நடைதிறப்பு - காலை 7 மணி.
பூஜை ஆரம்பம் - காலை 8 மணி.
உச்சி காலை நடைதிறப்பு - பகல் 11 மணி.
பூஜை ஆரம்பம் - பகல் 12 மணி.
இராக்காலம் நடைதிறப்பு - மாலை 5.30 மணி.
பூஜை ஆரம்பம் - இரவு 7 மணி.
அண்ணன்-தங்கை பாசத்தின் வெளிப்பாட்டில், இறையருளால் பொலிந்த அன்புத் திருக்கோவிலே ‘நல்லதங்காள் திருக்கோவில்’ ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
அன்பே சிவம் என்பார்கள். அந்த சிவபெருமானின் மீது அன்பர்கள் வைக்கும் அன்பை ‘பக்தி’ என்கிறோம். அதுவே அன்பர்கள் மீது சிவ பெருமான் வைக்கும் அன்பை ‘கருணை’ என்கிறோம். நாயகன் மீது நாயகி வைக்கும் அன்பு ‘காதல்’, குழந்தை மீது தாய் வைக்கும் அன்பு ‘பாசம்’ எனப்படும். அதே போல அண்ணன்- தங்கை அன்புக்கும் இங்கே ஒரு உணர்வுப்பூர்வமான இடம் இருக்கிறது.
அண்ணன்-தங்கை பாசத்தின் வெளிப்பாட்டில், இறையருளால் பொலிந்த அன்புத் திருக்கோவிலே ‘நல்லதங்காள் திருக்கோவில்’ ஆகும். ஸ்ரீவில்லி புத்தூர் அடுத்துவரும் வத்திராயிருப்பு அருகில் உள்ளது அர்ச்சுனாபுரம். இப்பகுதியினை பதினைந்தாம் நூற்றாண்டில் ஆண்டுவந்தவர் மன்னர் ராமலிங்க சேதுபதி. இவருக்கு நல்லதம்பி, நல்லதங்காள் என இரு குழந்தைகள். பெற்றவர்களை சிறுவயதிலேயே பறிகொடுத்த நல்லதங்காள், தன் அண்ணன் நல்லதம்பியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள்.
காலங்கள் பல கடந்தன. அப்போது அப்பகுதியை நல்லதம்பி ஆண்டு வந்தான். அக்காலத்தில் பெண் களுக்கு ஏழு வயதிலேயே திருமணம் செய்துவிடுவார்கள். நல்லதம்பியும், தன் அன்பு தங்கையை, மானா மதுரைப் பகுதியை ஆண்டுவந்த மன்னன் காசிராஜனுக்கு மிகுந்த சீர்வரிசைகளுடன் மணம் முடித்துக் கொடுத்தான். தங்கையை பிரிய வேண்டிய நிலை வந்ததால் நல்லதம்பி கண்ணீர் வடித்தான். அண்ணனை பிரிந்து கணவன் வீட்டிற்குச் சென்று, நல்லமுறையில் குடும்பம் நடத்தி வந்தால், நல்லத்தங்காள்.
காசிராஜனுக்கும், நல்லதங்காளுக்கும் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. காலங்கள் கடந்தது. மானாமதுரையில் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் மழை பொய்த்துப் போனது. மக்கள் பலரும் வறுமையில் வாடினர். பலர் மாண்டு போயினர். நல்லதங்காள் குடும்பத்திற்கும் அந்த நிலை உருவானது. மக்களுக்கு உணவளித்து வந்த காரணத்தால், அவர்களின் செல்வம் கரைந்தது. நல்லதங்காளின் பிள்ளைகள் அனைத்தும் பசியால் வாடின.
நல்லதங்காள், தன் கணவரிடம், “பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன் அண்ணன் வீட்டிற்குச் செல்லலாம்” என்று அழைத்தாள். ஆனால் பெண் எடுத்த வீட்டில் தங்க காசிராஜன் மனம் ஒப்பவில்லை. அதனால் மனைவியையும், பிள்ளைகளையும் மட்டும் அனுப்பி வைத்தான்.
நல்லதங்காள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வந்தபோது, அவளது அண்ணன் இல்லை. வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்தான். அண்ணி மட்டுமே வீட்டில் இருந்தாள். அவள் நல்லதங்காளை அவமானப்படுத்தி வெளியே அனுப்பினாள். இதனால் மனம் உடைந்த நல்லதங்காள், ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் வந்து முறையிட்டாள். பின்னர் அங்கிருந்த கிணற்றில் பிள்ளைகளை வீசி, தானும் விழுந்து உயிர்விட்டாள்.
இந்த நிலையில் மானாமதுரையில் மழை பொழிந்து, ஊர் செழிப்பானது. இதையடுத்து மனைவி, பிள்ளைகளை அழைத்துச் செல்ல வத்திராயிருப்பு வந்தான், காசிராஜன். அங்கு தன் மனைவியும், பிள்ளைகளும் இறந்து போனதை அறிந்த அவன், கிணறு இருந்த இடத்திற்குச் சென்று, மனைவி, பிள்ளைகளின் உடலை எடுத்து, பத்ரகாளியின் முன்பாக கிடத்தி நியாயம் கேட்டான்.
இதையடுத்து இத்தல அன்னை, நல்லதங்காள் அவளது பிள்ளைகளை தெய்வ நிலைக்கு உயர்த்தினாள். காசி ராஜனையும் தன்னுள் இழுத்துக்கொண்டாள். தங்கையின் முடிவு பற்றி அறிந்து பதறி வந்த நல்லதம்பி, பத்ரகாளி அன்னையிடம் அழுது தொழுதான். இதையடுத்து அவனும் அன்னையின் ஜோதியில் கலந்தான்.
இந்த ஆலயத்தில் மூலவராக பத்ரகாளி வடிவில் நல்லதங்காள் அருள்பாலிக்கிறாள். எதிரில் ஏழு குழந்தைகள் சன்னிதி உள்ளது. இங்கு படுகொலையான் எனும் திருநாமத்தில், தனி சன்னிதியில் அருள்கிறார், நல்லதம்பி. தரித்திர நிலை உள்ளவர்கள், பணம் கையில் தங்காதவர்கள், இத்தல அன்னையிடம் முறையிட்டு, 8 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் செல்வம் பெருகும்.
அமைவிடம்
சிவகாசி அருகில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் வத்திராயிருப்பு நல்லதங்காள் திருக்கோவில் அமைந்து உள்ளது.
அண்ணன்-தங்கை பாசத்தின் வெளிப்பாட்டில், இறையருளால் பொலிந்த அன்புத் திருக்கோவிலே ‘நல்லதங்காள் திருக்கோவில்’ ஆகும். ஸ்ரீவில்லி புத்தூர் அடுத்துவரும் வத்திராயிருப்பு அருகில் உள்ளது அர்ச்சுனாபுரம். இப்பகுதியினை பதினைந்தாம் நூற்றாண்டில் ஆண்டுவந்தவர் மன்னர் ராமலிங்க சேதுபதி. இவருக்கு நல்லதம்பி, நல்லதங்காள் என இரு குழந்தைகள். பெற்றவர்களை சிறுவயதிலேயே பறிகொடுத்த நல்லதங்காள், தன் அண்ணன் நல்லதம்பியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள்.
காலங்கள் பல கடந்தன. அப்போது அப்பகுதியை நல்லதம்பி ஆண்டு வந்தான். அக்காலத்தில் பெண் களுக்கு ஏழு வயதிலேயே திருமணம் செய்துவிடுவார்கள். நல்லதம்பியும், தன் அன்பு தங்கையை, மானா மதுரைப் பகுதியை ஆண்டுவந்த மன்னன் காசிராஜனுக்கு மிகுந்த சீர்வரிசைகளுடன் மணம் முடித்துக் கொடுத்தான். தங்கையை பிரிய வேண்டிய நிலை வந்ததால் நல்லதம்பி கண்ணீர் வடித்தான். அண்ணனை பிரிந்து கணவன் வீட்டிற்குச் சென்று, நல்லமுறையில் குடும்பம் நடத்தி வந்தால், நல்லத்தங்காள்.
காசிராஜனுக்கும், நல்லதங்காளுக்கும் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. காலங்கள் கடந்தது. மானாமதுரையில் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் மழை பொய்த்துப் போனது. மக்கள் பலரும் வறுமையில் வாடினர். பலர் மாண்டு போயினர். நல்லதங்காள் குடும்பத்திற்கும் அந்த நிலை உருவானது. மக்களுக்கு உணவளித்து வந்த காரணத்தால், அவர்களின் செல்வம் கரைந்தது. நல்லதங்காளின் பிள்ளைகள் அனைத்தும் பசியால் வாடின.
நல்லதங்காள், தன் கணவரிடம், “பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன் அண்ணன் வீட்டிற்குச் செல்லலாம்” என்று அழைத்தாள். ஆனால் பெண் எடுத்த வீட்டில் தங்க காசிராஜன் மனம் ஒப்பவில்லை. அதனால் மனைவியையும், பிள்ளைகளையும் மட்டும் அனுப்பி வைத்தான்.
நல்லதங்காள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வந்தபோது, அவளது அண்ணன் இல்லை. வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்தான். அண்ணி மட்டுமே வீட்டில் இருந்தாள். அவள் நல்லதங்காளை அவமானப்படுத்தி வெளியே அனுப்பினாள். இதனால் மனம் உடைந்த நல்லதங்காள், ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் வந்து முறையிட்டாள். பின்னர் அங்கிருந்த கிணற்றில் பிள்ளைகளை வீசி, தானும் விழுந்து உயிர்விட்டாள்.
இந்த நிலையில் மானாமதுரையில் மழை பொழிந்து, ஊர் செழிப்பானது. இதையடுத்து மனைவி, பிள்ளைகளை அழைத்துச் செல்ல வத்திராயிருப்பு வந்தான், காசிராஜன். அங்கு தன் மனைவியும், பிள்ளைகளும் இறந்து போனதை அறிந்த அவன், கிணறு இருந்த இடத்திற்குச் சென்று, மனைவி, பிள்ளைகளின் உடலை எடுத்து, பத்ரகாளியின் முன்பாக கிடத்தி நியாயம் கேட்டான்.
இதையடுத்து இத்தல அன்னை, நல்லதங்காள் அவளது பிள்ளைகளை தெய்வ நிலைக்கு உயர்த்தினாள். காசி ராஜனையும் தன்னுள் இழுத்துக்கொண்டாள். தங்கையின் முடிவு பற்றி அறிந்து பதறி வந்த நல்லதம்பி, பத்ரகாளி அன்னையிடம் அழுது தொழுதான். இதையடுத்து அவனும் அன்னையின் ஜோதியில் கலந்தான்.
இந்த ஆலயத்தில் மூலவராக பத்ரகாளி வடிவில் நல்லதங்காள் அருள்பாலிக்கிறாள். எதிரில் ஏழு குழந்தைகள் சன்னிதி உள்ளது. இங்கு படுகொலையான் எனும் திருநாமத்தில், தனி சன்னிதியில் அருள்கிறார், நல்லதம்பி. தரித்திர நிலை உள்ளவர்கள், பணம் கையில் தங்காதவர்கள், இத்தல அன்னையிடம் முறையிட்டு, 8 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் செல்வம் பெருகும்.
அமைவிடம்
சிவகாசி அருகில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் வத்திராயிருப்பு நல்லதங்காள் திருக்கோவில் அமைந்து உள்ளது.
கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், திருமறைநாதர் ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும்.
மூளையில் இருந்து நரம்புகளுக்கு உணர்வோட்டமோ அல்லது ரத்த ஓட்டமோ இல்லாமல் நின்று போனால், அந்தந்த உறுப்புகளின் தசைகள் இயங்காமல் சோர்ந்து போய்விடும். அதனை கை, கால் வாதம் என்றும், பக்கவாதம் என்றும் கூறுகிறோம். அதற்கு மருத்துவம் செய்வதுடன், கை, கால்களுக்கு பிசியோ தெரபி என்னும் உடலியக்க பயிற்சி கொடுத்து நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறார்கள். இத்தகைய மருத்துவத்தோடு இறைவனை வழிபடுபவர்களும் உண்டு. வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் இடமாக விளங்கும் தலங்களில் ஒன்றுதான் திருவாதவூர் திருத்தலம். ‘எங்கோ கேள்விபட்ட பெயராக இருக்கிறதே!’ என்று யோசிக்கிறீர்களா? ஆம்! திருவாதவூரர் என்னும் பெயர் பெற்ற மாணிக்கவாசகர் அவதரித்த தலம்தான் இது. வாதவூர் என்றதும் வாத நோய் உள்ளவர்கள் உள்ள ஊர் என்பது பொருள் அல்ல.
வேதங்களின் பொருளை வாதம் செய்து (Debate), மெய்ப் பொருளை அறிந்த ஊர் என்று பொருள் கொள்ள வேண்டும். அதனால் தான் இத்தல இறைவன் ‘வேதநாதர்’ என்றும், ‘திருமறை நாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். சனி பகவானுக்கு, ஒரு முனிவரின் சாபத்தால் முடக்கு வாதம் ஏற்பட்டது. அவர் இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் திருமறை நாதரை வழிபட்டதன் பயனாக நோய் தீர்ந்தது என்று தல புராணம் கூறுகிறது. இந்த ஆலயத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார் சனி பகவான். அவர் ஒரு காலை மடக்கி வைத்து, மற்றொரு காலைத் தொங்கவிட்டபடி, காகத்தின் மீது அமர்ந்து அருள்பாலிக் கிறார். சனி பகவானுக்கு வாதநோய் தீர்த்த வாதவூர் பெருமான், தன்னுடைய பக்தர்களை மட்டும் காப்பாற்றாமல் விட்டு விடுவாரா என்ன?.
கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும். மேலும் மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, கை, கால்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் அல்லது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ச்சியாக தேய்த்து வந்தால், வாத நோய் குணமாவதாக கூறப்படுகிறது. சித்தா, ஆயுர் வேத மருத்துவத்திலும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது ஒரு வைத்திய முறையாகும். வாதநோய் குணமான பிறகு, இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து, அன்னதானம் செய்து வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.
சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர், அரிமர்த்தனப் பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர். அவர் சிவன் மீதுள்ள பக்தியின் காரணமாக மன்னன் கொடுத்த பொற்காசுகளைக் கொண்டு ஆவுடையார் கோவில் என்னும் ஊரில் கோவில் அமைக்கும் பணிக்காக செலவிட்டார். அத்தகைய சிறப்புமிக்க அன்பரான மாணிக்கவாசகருக்கு, திருவாதவூரில் தனிக்கோவில் கட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவரைத் தரிசித்து விட்டு சிறிது தூரம் நடந்து சென்றால், ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட கிழக்கு நோக்கிய சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயம்தான் திருமறைநாதர் வீற்றிருக்கும் கோவிலாகும். இதன் முன்பாக தீர்த்தக்குளம் ஒன்றும் இருக்கிறது. திருமாலுக்கு ‘மறையின் பொருள் நானே’ என்று இத்தல ஈசன் உபதேசித்தார். எனவே அவர் திருமறைநாதர் என்று பெயர் பெற்றுள்ளார். பசுவின் குளம்பு பதிந்த சுயம்புத் திருமேனியுடன் விளங்கும் எம்பெருமானை, திருமால், பிரம்மன், அக்னிபகவான், வாயு, சனீஸ்வரர் ஆகிய தேவர்கள் வழிபட்டு நற்பேறு பெற்றுள்ளனர்.
ஆரணவல்லி அம்பிகை கிழக்கு பார்த்த சன்னிதியில் இருந்து அருள்கிறார். இந்த அம்பாளுக்கு ‘திருமறை நாயகி’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவர் பிரம்மனின் வேள்வியில் தோன்றியதாகத் தல புராணம் சொல்கிறது. தாமரை தடாகத்தில் உள்ள ஒரு மலருக்கு பசுவொன்று பால் சொரிந்து அபிஷேகம் செய்து வந்தது. இதைப் பார்த்த திருமால் அங்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு, அதற்கு பூஜை செய்தார். இதன் வாயிலாக பிருகு முனிவரிட்ட சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார் என்பது புராணக் கதை. இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. பழமையான கோவில் என்றாலும் இத்தலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய பதிகங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் பாண்டிநாட்டு தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.
இந்த ஆலயத்தில் தான் மாணிக்கவாசகருக்கு, இறைவன் சிலம்பொலி ஓசை கேட்கச் செய்தார். இந்த தகவலை, ‘வாத வூரினில் வந்தினிது அருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்’ என்ற திருவாசக வரிகள் எடுத்துரைக்கின்றன. திருமண வரம், குழந்தைப் பேறு, தொழில் வளர்ச்சி போன்றவற்றிற்கும், இத்தல இறைவனை வழிபடும் பக்தர்கள் ஏராளம். பொதுவாக சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் இந்த ஆலயத்திலும் நடைபெறுகின்றன. என்றாலும் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா சிறப்புக்குரியது. இந்த விழா மாணிக்கவாசகருக்காக இறைவன் நரியை பரியாக மாற்றிய கதையை நினைவுபடுத்துகிறது.
தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் திருவாதவூர் திருத்தலம் அமைந்துள்ளது. மேலூரில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன. மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் சென்று, அங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் சென்றால் திருவாதவூர் ஆலயத்தை அடையலாம்.
வேதங்களின் பொருளை வாதம் செய்து (Debate), மெய்ப் பொருளை அறிந்த ஊர் என்று பொருள் கொள்ள வேண்டும். அதனால் தான் இத்தல இறைவன் ‘வேதநாதர்’ என்றும், ‘திருமறை நாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். சனி பகவானுக்கு, ஒரு முனிவரின் சாபத்தால் முடக்கு வாதம் ஏற்பட்டது. அவர் இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் திருமறை நாதரை வழிபட்டதன் பயனாக நோய் தீர்ந்தது என்று தல புராணம் கூறுகிறது. இந்த ஆலயத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார் சனி பகவான். அவர் ஒரு காலை மடக்கி வைத்து, மற்றொரு காலைத் தொங்கவிட்டபடி, காகத்தின் மீது அமர்ந்து அருள்பாலிக் கிறார். சனி பகவானுக்கு வாதநோய் தீர்த்த வாதவூர் பெருமான், தன்னுடைய பக்தர்களை மட்டும் காப்பாற்றாமல் விட்டு விடுவாரா என்ன?.
கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும். மேலும் மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, கை, கால்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் அல்லது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ச்சியாக தேய்த்து வந்தால், வாத நோய் குணமாவதாக கூறப்படுகிறது. சித்தா, ஆயுர் வேத மருத்துவத்திலும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது ஒரு வைத்திய முறையாகும். வாதநோய் குணமான பிறகு, இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து, அன்னதானம் செய்து வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.
சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர், அரிமர்த்தனப் பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர். அவர் சிவன் மீதுள்ள பக்தியின் காரணமாக மன்னன் கொடுத்த பொற்காசுகளைக் கொண்டு ஆவுடையார் கோவில் என்னும் ஊரில் கோவில் அமைக்கும் பணிக்காக செலவிட்டார். அத்தகைய சிறப்புமிக்க அன்பரான மாணிக்கவாசகருக்கு, திருவாதவூரில் தனிக்கோவில் கட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவரைத் தரிசித்து விட்டு சிறிது தூரம் நடந்து சென்றால், ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட கிழக்கு நோக்கிய சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயம்தான் திருமறைநாதர் வீற்றிருக்கும் கோவிலாகும். இதன் முன்பாக தீர்த்தக்குளம் ஒன்றும் இருக்கிறது. திருமாலுக்கு ‘மறையின் பொருள் நானே’ என்று இத்தல ஈசன் உபதேசித்தார். எனவே அவர் திருமறைநாதர் என்று பெயர் பெற்றுள்ளார். பசுவின் குளம்பு பதிந்த சுயம்புத் திருமேனியுடன் விளங்கும் எம்பெருமானை, திருமால், பிரம்மன், அக்னிபகவான், வாயு, சனீஸ்வரர் ஆகிய தேவர்கள் வழிபட்டு நற்பேறு பெற்றுள்ளனர்.
ஆரணவல்லி அம்பிகை கிழக்கு பார்த்த சன்னிதியில் இருந்து அருள்கிறார். இந்த அம்பாளுக்கு ‘திருமறை நாயகி’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவர் பிரம்மனின் வேள்வியில் தோன்றியதாகத் தல புராணம் சொல்கிறது. தாமரை தடாகத்தில் உள்ள ஒரு மலருக்கு பசுவொன்று பால் சொரிந்து அபிஷேகம் செய்து வந்தது. இதைப் பார்த்த திருமால் அங்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு, அதற்கு பூஜை செய்தார். இதன் வாயிலாக பிருகு முனிவரிட்ட சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார் என்பது புராணக் கதை. இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. பழமையான கோவில் என்றாலும் இத்தலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய பதிகங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் பாண்டிநாட்டு தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.
இந்த ஆலயத்தில் தான் மாணிக்கவாசகருக்கு, இறைவன் சிலம்பொலி ஓசை கேட்கச் செய்தார். இந்த தகவலை, ‘வாத வூரினில் வந்தினிது அருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்’ என்ற திருவாசக வரிகள் எடுத்துரைக்கின்றன. திருமண வரம், குழந்தைப் பேறு, தொழில் வளர்ச்சி போன்றவற்றிற்கும், இத்தல இறைவனை வழிபடும் பக்தர்கள் ஏராளம். பொதுவாக சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் இந்த ஆலயத்திலும் நடைபெறுகின்றன. என்றாலும் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா சிறப்புக்குரியது. இந்த விழா மாணிக்கவாசகருக்காக இறைவன் நரியை பரியாக மாற்றிய கதையை நினைவுபடுத்துகிறது.
தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் திருவாதவூர் திருத்தலம் அமைந்துள்ளது. மேலூரில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன. மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் சென்று, அங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் சென்றால் திருவாதவூர் ஆலயத்தை அடையலாம்.
கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுரத்திற்கு வெளியே எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது.
இறைவன் பெயர் - பதஞ்சலி ஈஸ்வரர்
இறைவி பெயர்- கானார்குழலி அம்மை, அம்புஜாட்சி
கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுரத்திற்கு வெளியே எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலை க் கடந்து உள்ளே சென்றால் முன்னுள்ள மண்டபத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளனர். வலதுபுறம் அம்பாள் கானார்குழலி அம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாளுக்கு அம்புஜாட்சி, கோலவளைக்கை அம்பிகை என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் சந்நிதிக்கு வரதுபுறம் சனீஸ்வரர் தனி சன்னதியில் இருக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்து கொள்கின்றனர். முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.
முன் மண்டபம் தாண்டி நேரே உள்ளே சென்றால் மூலவர் பதஞ்சலி ஈஸ்வரர் சிறிய லிங்க உருவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை சூரியன் மீது பரப்பி பூஜிக்கிறார். கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைச் சுற்றில் மகாவிஷ்ணுவிறகு நேர் எதிரே வள்ளி தெய்வனை சமேத முருகர் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கஜலட்சுமிக்கும் தனி சந்நிதி உள்ளது. கருவறைச் சுற்றில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர் ஆகியோரும் தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. நடராஜர் சந்நிதிக்கு எதிரே நால்வருடன் விநாயகரும், பதஞ்சலி முனிவரும் காணப்படுகின்றனர். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.
தல வரலாறு: பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சிவபெருமானின் நடனத்தை தரிசனம் செய்யும் விருப்பத்தை வெளியிட்டார் ஆதிசேஷன். மகாவிஷணுவின் ஆணைப்படி பதஞ்சலி முனிவராக அவதாரம் எடுத்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக் காட்சியை காட்டி அருளினார். பதஞ்சலி முரிவர் ஒருமுறை இத்தலத்திற்கு வந்தார். வந்த இடத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காணவேண்டும் என்று விருமினார். அவருக்கு சிவன் இத்தலத்திலும் தன் நடனத்தைக் காட்டி அருள் செய்தார். பதஞ்சலி ஈஸ்வரர் என்ற பெயரையும் இத்தல இறைவன் பெற்றார்.
ஆலய முகவரி
அருள்மிகு பதஞ்சலி ஈஸ்வரர் திருக்கோவில்
கானாட்டம்புலியூர்
முட்டம் அஞ்சல்
காட்டுமன்னார்குடி வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608306
இறைவி பெயர்- கானார்குழலி அம்மை, அம்புஜாட்சி
கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுரத்திற்கு வெளியே எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலை க் கடந்து உள்ளே சென்றால் முன்னுள்ள மண்டபத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளனர். வலதுபுறம் அம்பாள் கானார்குழலி அம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாளுக்கு அம்புஜாட்சி, கோலவளைக்கை அம்பிகை என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் சந்நிதிக்கு வரதுபுறம் சனீஸ்வரர் தனி சன்னதியில் இருக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்து கொள்கின்றனர். முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.
முன் மண்டபம் தாண்டி நேரே உள்ளே சென்றால் மூலவர் பதஞ்சலி ஈஸ்வரர் சிறிய லிங்க உருவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை சூரியன் மீது பரப்பி பூஜிக்கிறார். கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைச் சுற்றில் மகாவிஷ்ணுவிறகு நேர் எதிரே வள்ளி தெய்வனை சமேத முருகர் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கஜலட்சுமிக்கும் தனி சந்நிதி உள்ளது. கருவறைச் சுற்றில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர் ஆகியோரும் தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. நடராஜர் சந்நிதிக்கு எதிரே நால்வருடன் விநாயகரும், பதஞ்சலி முனிவரும் காணப்படுகின்றனர். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.
தல வரலாறு: பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சிவபெருமானின் நடனத்தை தரிசனம் செய்யும் விருப்பத்தை வெளியிட்டார் ஆதிசேஷன். மகாவிஷணுவின் ஆணைப்படி பதஞ்சலி முனிவராக அவதாரம் எடுத்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக் காட்சியை காட்டி அருளினார். பதஞ்சலி முரிவர் ஒருமுறை இத்தலத்திற்கு வந்தார். வந்த இடத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காணவேண்டும் என்று விருமினார். அவருக்கு சிவன் இத்தலத்திலும் தன் நடனத்தைக் காட்டி அருள் செய்தார். பதஞ்சலி ஈஸ்வரர் என்ற பெயரையும் இத்தல இறைவன் பெற்றார்.
ஆலய முகவரி
அருள்மிகு பதஞ்சலி ஈஸ்வரர் திருக்கோவில்
கானாட்டம்புலியூர்
முட்டம் அஞ்சல்
காட்டுமன்னார்குடி வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608306
ஆம்ரம் என்றால் மாமரம். இத்தலத்தில் மாமரங்கள் அதிகமாக இருந்ததால் மாந்துறை என்று பெயர் பெற்றது. இந்த தலம் வடகரை மாந்துறை என்றழைக்கப்படுகிறது.
ஆம்ரம் என்றால் மாமரம். இத்தலத்தில் மாமரங்கள் அதிகமாக இருந்ததால் மாந்துறை என்று பெயர் பெற்றது. இந்த தலம் வடகரை மாந்துறை என்றழைக்கப்படுகிறது. கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையிலுள்ள ஆடுதுறை என்ற ஊரிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியிலுள்ள மாந்துறை என்னும் ஊர் தென்கரை மாந்துறை எனப்படுகிறது. தென்கரை மாந்துறை ஒரு தேவார வைப்புத்தலம்.
கோவில் ஒரு கிழக்கு நோக்கிய கோபுரத்துடன் காணப்படுகிறது. கோபுர வாயிலைக் கடந்து சென்றால் மிருகண்டு முனிவர் இறைவனை வழிபடும் சித்திரங்களைக் கண்டு மகிழலாம். பிராகாரத்தில் தலமரம், விநாயகர், முருகன், இலக்குமி, நவக்கிரகங்கள், பைரவர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கைத் திருமேனிகள் காட்சி தருகின்றன. நால்வருள், சுந்தரர் கைத்தடியேந்தி நிற்கின்றார். நவக்கிரக சந்நிதியில் இங்கு சூரியன் தனது இரு மனைவிகளுடன இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.
இறைவன் ஆம்ரவனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.பங்குனி மாதத்தில் முதல் 3 நாள்களில் சூரிய ஒளி சுவாமி மீதுபடுகிறது. அம்பாள் தெற்கு நோக்கி காட்சி தருகின்றாள். ஆடிவெள்ளி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகைச் சோம வாரங்கள், திருவாதிரை, சிவராத்திரி முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன.
திருப்புகழ் தலம்: மேற்குப் பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். முருகப் பெருமான் சுமார் 5 அடி உயர கம்பீரமான தோற்றப் பொலிவுடன் உள்ளார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.
தலச் சிறப்பு: திருவண்ணாமலையில் சிவபெருமான் முடியைக் கண்டதாக பொய் கூறிய பிரம்மா, தான் பெற்ற சாபத்தை இத்தலத்தில் தவம் செய்து நீக்கிக் கொண்டார். சூரியனுடைய மனைவி சம்யாதேவி தன் கணவனின் உக்கிரமான ஒளியைப் பெறுத்துக் கொள்ள முடியாமல் இத்தலத்தில் தவமிருந்து சூரிய ஒளியைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பெற்றாள். கெளதம முனிவரின் மனைவி அகலிகையை தீண்டியதால் இந்திரனை கெளதம முனிவர் சாபமிட்டார். இந்திரன் தன்னுடைய சாபத்தை இத்தலத்தில் தவம் செய்து நீக்கிக் கொண்டான். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால் உண்டான தோஷம் நீங்க சூரியன் வழிபட்டு பயன் அடைந்த தலம்.
தலவரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார். ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர். இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள். கோவில் நுழைவு வாயிலில் மேலே இறைவன் மான்குட்டித் தாயாக வந்த வரலாறு சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறது. மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் "மாந்துறை" என வழங்கப்படுகிறது.
மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தி தினத்தன்று விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு இறைவனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் இறைவன் ஆம்ரவனேஸ்வரரரை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில் லால்குடி அடைவதற்கு முன்னால் 3 கி.மி. தொலைவில் திருமாந்துறை சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து திருமாந்துறை வழியாக லால்குடி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மி தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில்
மாந்துறை அஞ்சல்
லால்குடி S.O.
லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
PIN - 621703
கோவில் ஒரு கிழக்கு நோக்கிய கோபுரத்துடன் காணப்படுகிறது. கோபுர வாயிலைக் கடந்து சென்றால் மிருகண்டு முனிவர் இறைவனை வழிபடும் சித்திரங்களைக் கண்டு மகிழலாம். பிராகாரத்தில் தலமரம், விநாயகர், முருகன், இலக்குமி, நவக்கிரகங்கள், பைரவர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கைத் திருமேனிகள் காட்சி தருகின்றன. நால்வருள், சுந்தரர் கைத்தடியேந்தி நிற்கின்றார். நவக்கிரக சந்நிதியில் இங்கு சூரியன் தனது இரு மனைவிகளுடன இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.
இறைவன் ஆம்ரவனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.பங்குனி மாதத்தில் முதல் 3 நாள்களில் சூரிய ஒளி சுவாமி மீதுபடுகிறது. அம்பாள் தெற்கு நோக்கி காட்சி தருகின்றாள். ஆடிவெள்ளி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகைச் சோம வாரங்கள், திருவாதிரை, சிவராத்திரி முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன.
திருப்புகழ் தலம்: மேற்குப் பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். முருகப் பெருமான் சுமார் 5 அடி உயர கம்பீரமான தோற்றப் பொலிவுடன் உள்ளார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.
தலச் சிறப்பு: திருவண்ணாமலையில் சிவபெருமான் முடியைக் கண்டதாக பொய் கூறிய பிரம்மா, தான் பெற்ற சாபத்தை இத்தலத்தில் தவம் செய்து நீக்கிக் கொண்டார். சூரியனுடைய மனைவி சம்யாதேவி தன் கணவனின் உக்கிரமான ஒளியைப் பெறுத்துக் கொள்ள முடியாமல் இத்தலத்தில் தவமிருந்து சூரிய ஒளியைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பெற்றாள். கெளதம முனிவரின் மனைவி அகலிகையை தீண்டியதால் இந்திரனை கெளதம முனிவர் சாபமிட்டார். இந்திரன் தன்னுடைய சாபத்தை இத்தலத்தில் தவம் செய்து நீக்கிக் கொண்டான். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால் உண்டான தோஷம் நீங்க சூரியன் வழிபட்டு பயன் அடைந்த தலம்.
தலவரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார். ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர். இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள். கோவில் நுழைவு வாயிலில் மேலே இறைவன் மான்குட்டித் தாயாக வந்த வரலாறு சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறது. மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் "மாந்துறை" என வழங்கப்படுகிறது.
மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தி தினத்தன்று விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு இறைவனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் இறைவன் ஆம்ரவனேஸ்வரரரை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில் லால்குடி அடைவதற்கு முன்னால் 3 கி.மி. தொலைவில் திருமாந்துறை சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து திருமாந்துறை வழியாக லால்குடி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மி தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில்
மாந்துறை அஞ்சல்
லால்குடி S.O.
லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
PIN - 621703
பாலக்காட்டில் இருந்து வந்த அன்னை இவள். எனவே, அன்னை பாலக்காட்டு மாரியம்மன் என்றே அழைக்கப்படுகிறாள். ஆலயம் ‘பாலக்காட்டு மாரியம்மன்’ ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஒரு கிராமத்தில் இருந்தது ஒரு மாரியம்மன் ஆலயம். அந்த அம்மனுக்கு தினசரி மூன்று வேளை பூஜைகள் செய்து ஆராதனை செய்து வந்தார், ஒரு அர்ச்சகர்.
அவருக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை. அழகான அந்தக் குழந்தை அடிக்கடி அர்ச்சகருடன் ஆலயம் செல்வதுண்டு. ஒரு நாள் மாலை ஆலயம் சென்ற அந்தக் குழந்தை பிரகாரத்தில் இருந்த குதிரை சிலை அருகே படுத்து உறங்கிவிட்டது. இதைக் கவனிக்காத அர்ச்சகர் அர்த்த ஜாம பூஜை முடிந்தவுடன் ஆலயத்தை பூட்டிவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.
வீட்டிற்கு வந்ததும் மகளைத் தேடினார். குழந்தை எங்கே என்று மனைவியிடம் கேட்டார்.
“அவள் உங்களுடன் கோவிலுக்கு வந்தாளே! திரும்பி வரவில்லையே” என்று மனைவி கூற பதற்றமடைந்தார் அர்ச்சகர்.
குதிரை சிலை அருகே சிறுமி படுத்தது அப்போதுதான் அவருக்கு நினைவுக்கு வந்தது.
உடனே ஆலய சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். கோவிலின் பூட்டைத் திறக்க முயன்றார். முடியவில்லை.
“ஏன் கோவிலை திறக்கிறாய்?” எனக் கேட்டு அசரிரீ குரல் ஒலித்தது.
“என் குழந்தை உள்ளே இருக்கிறது” என்றார் அர்ச்சகர்.
“அர்த்தஜாம பூஜை முடிந்தபின் கோவிலை திறக்கக் கூடாது என்று அர்ச்சகரான உனக்குத் தெரியாதா?” எனக் கேட்டது அசரிரீ.
“தெரியும். ஆனால் என் குழந்தை உள்ளே இருக்கிறாளே”
“இருக்கட்டுமே! அவள் இங்கு பத்திரமாக இருப்பாள். காலையில் வந்து கூட்டிச் செல்”
ஒலித்த அசரிரீயின் குரல் அன்னையின் குரல்தான் என்று உணர்ந்தார் அர்ச்சகர். இருப்பினும் அவரால் தர்க்கம் செய்யாமல் இருக்க முடியவில்லை.
“இல்லை தாயே.. எனக்கு என் குழந்தை இப்போதே வேண்டும். குழந்தை இல்லாமல் நான் வீட்டிற்குச் செல்ல மாட்டேன்”
“உன் குழந்தை பத்திரமாக இருக்கிறாள். இன்று இரவு அவள் என்னோடு தங்கி இருக்கட்டும் நீ போய் வா”
“முடியாது. நான் குழந்தையோடுதான் வீட்டிற்குப் போவேன்.” என்றார் அர்ச்சகர் உறுதியாக.
“உனக்கு நான் முக்கியமா? குழந்தை முக்கியமா?”
“குழந்தைதான்”
சடேரென்று அர்ச்சகர் இப்படி சொல்லவே அன்னை கோபத்தின் உச்சிக்கே சென்றாள்.
“சரி இந்தா உன் குழந்தை” என்று ஒலித்த குரலைத் தொடர்ந்து குழந்தை பொத்தென்று சடலமாய் வந்து விழுந்தாள்.
இதைப் பார்த்த அர்ச்சகர் வேதனையோடு கத்தினார்.
“தாயே.. நீயே எனக்கு எல்லாம் என்று இருந்தேன். இப்படி என் குழந்தையை அனியாயமாகக் கொன்று விட்டாயே. இனி உனக்கு என் கையால் பூஜை செய்ய மாட்டேன்” என்று உரத்த குரலில் கோபத்துடன் கூவினார் அர்ச்சகர்.
மறுநாள் அதே கோபத்துடன் ஆலயம் வந்தார்.
மாரியம்மன், சந்தன கருப்பு, மதுரை வீரன் உள்ளிட்ட அனைத்து சுவாமி சிலைகளை எடுத்து ஒரு மரப்பெட்டியில் அடைத்தார்.
அருகே காவிரியில் வெள்ளம் நொங்கும் நுரையுமாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பெட்டியைத் தூக்கி அந்த வெள்ளத்தில் எறிந்தார். வீடு திரும்பினார்.
ஆற்றில் மிதந்து வந்தது அந்தப் பெட்டி. பல கல் தொலைவு பயணம் செய்து உய்யங்கொண்டான் ஆற்றில் பயணத்தைத் தொடர்ந்து திருச்சியில் கரை ஒதுங்கியது.
திருச்சி தென்னூர் கிராமத்தினர் அந்தப் பெட்டியை எடுத்துப் பிரித்தனர். உள்ளே குழந்தை வடிவில் அம்மன் சிலையும் பிற சிலைகளும் இருக்கக் கண்டனர். அவற்றை ஓரிடத்தில் வைத்து வணங்கத் தொடங்கினர்.
நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடத் தொடங்கிய நேரம். ஊரெங்கும் மக்கள் உண்ண உணவின்றி பசியாலும் பட்டினியாலும் வாடிக் கொண்டிருந்தனர். இதனால் அம்மனுக்கு முறையாக பூஜை செய்ய இயலவில்லை.
ஒரு நாள் அம்மன் சிலை அருகே அசரிரீ ஒலித்தது.
“உங்களுக்கு சிரமம் வேண்டாம். நான் பூமிக்கடியில் இறங்கி விடுகிறேன். இனி நீங்கள் என்னை ஜோதி வடிவில் வழிபடுங்கள். உரிய நேரத்தில் நான் வருவேன்”
அசரிரீயின் குரல் ஓய்ந்ததும் அம்மன் இருந்த பூமி இரண்டாகப் பிளந்தது. குழந்தை வடிவில் இருந்த அம்மன் சிலையை பூமித் தாய் உள் வாங்கிக் கொண்டாள். மறுபடியும் பூமி மூடிக் கொண்டது.
இது செவி வழி தல வரலாறுதான்.
அம்மன் பூமியினுள் சென்ற இடமே தற்போதைய ஆலய கருவறை. அங்கே பாலக்காட்டு கருங்காலி கட்டையின் மேல் அன்னை அருளியபடி அணையாதீபம் எரிந்து கொண்டிருக்கிறது.
சுமார் 400 ஆண்டுகளாக அந்த தீபம் அணையாது ஒளி வீசிக் கொண்டிருக்கும் தகவலை பக்தர்கள் கூறும் போது நம் மேனி சிலிர்த்து ஓய்வதை தவிர்க்க இயலாது.
இதுவரை கருவறையில் தீபமே அன்னையாய் ஒளிர்ந்து கொண்டிருக்க சமீபத்தில் குடமுழுக்கு திருவிழா நடத்த பிரசன்னம் பார்த்தனர்.
“எனக்கு உருகொடுத்து கருவறையில் பிரதிஷ்டை செய்யுங்கள். நான் வெளியே வரும் தருணம் இதுவே. நான் ஜோதியுடன் மூவலராய் இருந்து உங்களை காப்பேன்” என அருள்வாக்கு வர நிர்வாகத்தினர் அதன்படி ஐம்பொன் சிலை வடிவமைத்து மூவலராய் பிரதிஷ்டை செய்துள்ளனர். அன்னையின் பின்புறம் அந்த அணையா தீபம் இப்போதும் தொடர்ந்து ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.
பாலக்காட்டில் இருந்து வந்த அன்னை இவள். எனவே, அன்னை பாலக்காட்டு மாரியம்மன் என்றே அழைக்கப்படுகிறாள். ஆலயம் ‘பாலக்காட்டு மாரியம்மன்’ ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது.
ஆலய அமைப்பு
ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் உள்ள ராஜகோபுரத்தை தாண்டியதும் விசாலமான பிரகாரம். இடது புறம் மணிமண்டபம் உள்ளது. அதன் உச்சத்தில் உள்ள ராட்சத மணி பார்க்கும் போதே நம்மை மிரட்டுகிறது. அடுத்துள்ள மகாமண்டப முகப்பின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர்.
கருவறையில் அன்னை பாலக்காட்டு மாரியம்மன், நம் வீட்டு சிறுமிபோல், அமர்ந்த கோலத்தில் பின்புறம் அணையா ஜோதி ஜொலிக்க முகத்தில் இளநகை தவழ அருள் பாலிக்கும் அழகை நாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
திருச்சி - தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை சாலையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவுதான்.
ஜெயவண்ணன்
அவருக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை. அழகான அந்தக் குழந்தை அடிக்கடி அர்ச்சகருடன் ஆலயம் செல்வதுண்டு. ஒரு நாள் மாலை ஆலயம் சென்ற அந்தக் குழந்தை பிரகாரத்தில் இருந்த குதிரை சிலை அருகே படுத்து உறங்கிவிட்டது. இதைக் கவனிக்காத அர்ச்சகர் அர்த்த ஜாம பூஜை முடிந்தவுடன் ஆலயத்தை பூட்டிவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.
வீட்டிற்கு வந்ததும் மகளைத் தேடினார். குழந்தை எங்கே என்று மனைவியிடம் கேட்டார்.
“அவள் உங்களுடன் கோவிலுக்கு வந்தாளே! திரும்பி வரவில்லையே” என்று மனைவி கூற பதற்றமடைந்தார் அர்ச்சகர்.
குதிரை சிலை அருகே சிறுமி படுத்தது அப்போதுதான் அவருக்கு நினைவுக்கு வந்தது.
உடனே ஆலய சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். கோவிலின் பூட்டைத் திறக்க முயன்றார். முடியவில்லை.
“ஏன் கோவிலை திறக்கிறாய்?” எனக் கேட்டு அசரிரீ குரல் ஒலித்தது.
“என் குழந்தை உள்ளே இருக்கிறது” என்றார் அர்ச்சகர்.
“அர்த்தஜாம பூஜை முடிந்தபின் கோவிலை திறக்கக் கூடாது என்று அர்ச்சகரான உனக்குத் தெரியாதா?” எனக் கேட்டது அசரிரீ.
“தெரியும். ஆனால் என் குழந்தை உள்ளே இருக்கிறாளே”
“இருக்கட்டுமே! அவள் இங்கு பத்திரமாக இருப்பாள். காலையில் வந்து கூட்டிச் செல்”
ஒலித்த அசரிரீயின் குரல் அன்னையின் குரல்தான் என்று உணர்ந்தார் அர்ச்சகர். இருப்பினும் அவரால் தர்க்கம் செய்யாமல் இருக்க முடியவில்லை.
“இல்லை தாயே.. எனக்கு என் குழந்தை இப்போதே வேண்டும். குழந்தை இல்லாமல் நான் வீட்டிற்குச் செல்ல மாட்டேன்”
“உன் குழந்தை பத்திரமாக இருக்கிறாள். இன்று இரவு அவள் என்னோடு தங்கி இருக்கட்டும் நீ போய் வா”
“முடியாது. நான் குழந்தையோடுதான் வீட்டிற்குப் போவேன்.” என்றார் அர்ச்சகர் உறுதியாக.
“உனக்கு நான் முக்கியமா? குழந்தை முக்கியமா?”
“குழந்தைதான்”
சடேரென்று அர்ச்சகர் இப்படி சொல்லவே அன்னை கோபத்தின் உச்சிக்கே சென்றாள்.
“சரி இந்தா உன் குழந்தை” என்று ஒலித்த குரலைத் தொடர்ந்து குழந்தை பொத்தென்று சடலமாய் வந்து விழுந்தாள்.
இதைப் பார்த்த அர்ச்சகர் வேதனையோடு கத்தினார்.
“தாயே.. நீயே எனக்கு எல்லாம் என்று இருந்தேன். இப்படி என் குழந்தையை அனியாயமாகக் கொன்று விட்டாயே. இனி உனக்கு என் கையால் பூஜை செய்ய மாட்டேன்” என்று உரத்த குரலில் கோபத்துடன் கூவினார் அர்ச்சகர்.
மறுநாள் அதே கோபத்துடன் ஆலயம் வந்தார்.
மாரியம்மன், சந்தன கருப்பு, மதுரை வீரன் உள்ளிட்ட அனைத்து சுவாமி சிலைகளை எடுத்து ஒரு மரப்பெட்டியில் அடைத்தார்.
அருகே காவிரியில் வெள்ளம் நொங்கும் நுரையுமாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பெட்டியைத் தூக்கி அந்த வெள்ளத்தில் எறிந்தார். வீடு திரும்பினார்.
ஆற்றில் மிதந்து வந்தது அந்தப் பெட்டி. பல கல் தொலைவு பயணம் செய்து உய்யங்கொண்டான் ஆற்றில் பயணத்தைத் தொடர்ந்து திருச்சியில் கரை ஒதுங்கியது.
திருச்சி தென்னூர் கிராமத்தினர் அந்தப் பெட்டியை எடுத்துப் பிரித்தனர். உள்ளே குழந்தை வடிவில் அம்மன் சிலையும் பிற சிலைகளும் இருக்கக் கண்டனர். அவற்றை ஓரிடத்தில் வைத்து வணங்கத் தொடங்கினர்.
நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடத் தொடங்கிய நேரம். ஊரெங்கும் மக்கள் உண்ண உணவின்றி பசியாலும் பட்டினியாலும் வாடிக் கொண்டிருந்தனர். இதனால் அம்மனுக்கு முறையாக பூஜை செய்ய இயலவில்லை.
ஒரு நாள் அம்மன் சிலை அருகே அசரிரீ ஒலித்தது.
“உங்களுக்கு சிரமம் வேண்டாம். நான் பூமிக்கடியில் இறங்கி விடுகிறேன். இனி நீங்கள் என்னை ஜோதி வடிவில் வழிபடுங்கள். உரிய நேரத்தில் நான் வருவேன்”
அசரிரீயின் குரல் ஓய்ந்ததும் அம்மன் இருந்த பூமி இரண்டாகப் பிளந்தது. குழந்தை வடிவில் இருந்த அம்மன் சிலையை பூமித் தாய் உள் வாங்கிக் கொண்டாள். மறுபடியும் பூமி மூடிக் கொண்டது.
இது செவி வழி தல வரலாறுதான்.
அம்மன் பூமியினுள் சென்ற இடமே தற்போதைய ஆலய கருவறை. அங்கே பாலக்காட்டு கருங்காலி கட்டையின் மேல் அன்னை அருளியபடி அணையாதீபம் எரிந்து கொண்டிருக்கிறது.
சுமார் 400 ஆண்டுகளாக அந்த தீபம் அணையாது ஒளி வீசிக் கொண்டிருக்கும் தகவலை பக்தர்கள் கூறும் போது நம் மேனி சிலிர்த்து ஓய்வதை தவிர்க்க இயலாது.
இதுவரை கருவறையில் தீபமே அன்னையாய் ஒளிர்ந்து கொண்டிருக்க சமீபத்தில் குடமுழுக்கு திருவிழா நடத்த பிரசன்னம் பார்த்தனர்.
“எனக்கு உருகொடுத்து கருவறையில் பிரதிஷ்டை செய்யுங்கள். நான் வெளியே வரும் தருணம் இதுவே. நான் ஜோதியுடன் மூவலராய் இருந்து உங்களை காப்பேன்” என அருள்வாக்கு வர நிர்வாகத்தினர் அதன்படி ஐம்பொன் சிலை வடிவமைத்து மூவலராய் பிரதிஷ்டை செய்துள்ளனர். அன்னையின் பின்புறம் அந்த அணையா தீபம் இப்போதும் தொடர்ந்து ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.
பாலக்காட்டில் இருந்து வந்த அன்னை இவள். எனவே, அன்னை பாலக்காட்டு மாரியம்மன் என்றே அழைக்கப்படுகிறாள். ஆலயம் ‘பாலக்காட்டு மாரியம்மன்’ ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது.
ஆலய அமைப்பு
ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் உள்ள ராஜகோபுரத்தை தாண்டியதும் விசாலமான பிரகாரம். இடது புறம் மணிமண்டபம் உள்ளது. அதன் உச்சத்தில் உள்ள ராட்சத மணி பார்க்கும் போதே நம்மை மிரட்டுகிறது. அடுத்துள்ள மகாமண்டப முகப்பின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர்.
கருவறையில் அன்னை பாலக்காட்டு மாரியம்மன், நம் வீட்டு சிறுமிபோல், அமர்ந்த கோலத்தில் பின்புறம் அணையா ஜோதி ஜொலிக்க முகத்தில் இளநகை தவழ அருள் பாலிக்கும் அழகை நாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
திருச்சி - தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை சாலையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவுதான்.
ஜெயவண்ணன்
அறுபடை வீடு முருகன் கோவில்கள் தவிர புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஓன்று. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
எட்டி மரங்கள் அதிகம் நிறைந்த ஊர், எட்டு குடிகள் மட்டுமே இருந்த ஊர், பறந்து சென்ற மயிலை ‘எட்டிப்பிடி’ என்ற வார்த்தையால் உருவான ஊர், எட்டு லட்சுமிகளும் நித்தம் வந்து பூஜை செய்த ஊர், பால் காவடிகளுக்கு பெயர் பெற்ற புண்ணிய நகரம் என பல்வேறு சிறப்பு களைக் கொண்டது ‘எட்டுக்குடி’ திருத்தலம். இங்கு முருகன்- வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கும் எட்டுக்குடி முருகன் ஆலயம் இருக்கிறது.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி, மிகவும் விசேஷமான முறையில் நடைபெறும். மாலை தொடங்கும் இந்த நிகழ்வு, மறுநாள் அதிகாலை வரை நடக்கும். அப்போது விடிய, விடிய பல்வேறு அபிஷேகங்களால் முரு கனுக்கு வழிபாடுகள் செய்யப்படும். இந்த மானிடப் பிறவியின் நோக்கமே, இந்த அரிய அபிஷேகக் காட்சிகளைக் கண்டு ரசிப்பதில்தான் இருக்கிறது என்ற ஆன்ம திருப்தியை தருவதாக இந்த அபிஷேகங்கள் இருக்கின்றன.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கச்சனம் என்ற பகுதியில் புண்ணிய திருத்தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில், வான்மீகி என்ற மகா சித்தர், முருகப்பெருமானை நாள்தோறும் வழிபட்டு ஜீவ சமாதி அடைந்துள்ளார்.
முருகப்பெருமான், ஒரு காலை ஊன்றி நிற்கின்ற அழகு மயில் மீது அமர்ந்த நிலையில் அருள்காட்சி தருகிறார். அவரது இடமும்- வலமும் வள்ளி- தெய்வானை தேவியர் புன்னகை சிந்தியபடி, கணவனின் அழகை ரசித்தபடி உள்ளனர்.
எட்டுக்குடி முருகன், எண்கண் முருகன், பொருள்வைத்த சேரி என்ற சிக்கல் முருகன் ஆகிய மூன்று சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடிவமைத்துள்ளார் என்று புராண வரலாறுகள் பலவும் எடுத்துரைக்கின்றன.
வந்த வினைகளையும், வருகின்ற வல்வினை களையும் வடிவேலன் வேரறுப்பான். நம் வாழ்வு முழுவதும் துணை நிற்பான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை மூன்று வேளையும் வணங்கி, நம் ஆயுளை வளர்ப்போம்.
கோவில் முகவரி :
அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோவில்
எட்டுக்குடி - 610212
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன் நம்பர் : +91- 4366245426
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி, மிகவும் விசேஷமான முறையில் நடைபெறும். மாலை தொடங்கும் இந்த நிகழ்வு, மறுநாள் அதிகாலை வரை நடக்கும். அப்போது விடிய, விடிய பல்வேறு அபிஷேகங்களால் முரு கனுக்கு வழிபாடுகள் செய்யப்படும். இந்த மானிடப் பிறவியின் நோக்கமே, இந்த அரிய அபிஷேகக் காட்சிகளைக் கண்டு ரசிப்பதில்தான் இருக்கிறது என்ற ஆன்ம திருப்தியை தருவதாக இந்த அபிஷேகங்கள் இருக்கின்றன.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கச்சனம் என்ற பகுதியில் புண்ணிய திருத்தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில், வான்மீகி என்ற மகா சித்தர், முருகப்பெருமானை நாள்தோறும் வழிபட்டு ஜீவ சமாதி அடைந்துள்ளார்.
முருகப்பெருமான், ஒரு காலை ஊன்றி நிற்கின்ற அழகு மயில் மீது அமர்ந்த நிலையில் அருள்காட்சி தருகிறார். அவரது இடமும்- வலமும் வள்ளி- தெய்வானை தேவியர் புன்னகை சிந்தியபடி, கணவனின் அழகை ரசித்தபடி உள்ளனர்.
எட்டுக்குடி முருகன், எண்கண் முருகன், பொருள்வைத்த சேரி என்ற சிக்கல் முருகன் ஆகிய மூன்று சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடிவமைத்துள்ளார் என்று புராண வரலாறுகள் பலவும் எடுத்துரைக்கின்றன.
வந்த வினைகளையும், வருகின்ற வல்வினை களையும் வடிவேலன் வேரறுப்பான். நம் வாழ்வு முழுவதும் துணை நிற்பான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை மூன்று வேளையும் வணங்கி, நம் ஆயுளை வளர்ப்போம்.
கோவில் முகவரி :
அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோவில்
எட்டுக்குடி - 610212
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன் நம்பர் : +91- 4366245426
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஆவுடையார்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஆவுடையார்கோவில். திருவாசகப் பாடல்கள் அனைத்திலும் இந்த ஊரானது திருப்பெருந் துறை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது ஆவுடையார்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இலக்கியங்களில் ஆதிகயிலாயம், குருந்தவனம், சிவபுரம், பராசந்திபுரம், பூலோக கயிலாயம் எனப் பல பெயர்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கோவில் அமைப்பு
இக்கோவில் ஊரின் நடுவில் தெற்கு நோக்கி அமைந் துள்ளது. கோவிலைச் சுற்றி தேரோடும் நான்கு வீதிகள் அழகுற அமைந்துள்ளன. கோவிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. கோவில் வாசலில் அமைந் துள்ள ராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டு விளங்குகிறது. இத்திருக் கோவில் யோகம் மற்றும் ஞான மார்க்கத்தார் போற்றும் சிறப்புடையது. இங்குள்ள இறைவன் அரூபமாக வைத்து பூஜிக்கப்படுகிறார். எனவே இக்கோவில் மற்ற சிவன் கோவில்களின் அமைப்புகள் மற்றும் சிறு தெய்வ வழிபாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு விளங்குகிறது.
மூலவர் ஆத்மநாதர்
தில்லையில் ஸ்ரீநடராஜர் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவதற்கு முன்பு பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர், மற்றும் பல முனிவர்கள் இந்த குருந்தவனத்தில் தவம் இயற்றும் போது, இறைவன் காட்சி தர அவர்கள் பேரானந்தமடைந்து இறைவனிடம் திருநடனக் காட்சியையும் வேண்டினார்கள். அதற்கு ஈசன், சிதம்பரத்திற்கு வந்து ஆனந்தத் திருநடனக் காட்சியை காணுங்கள் என்று அருளினார்.
அவ்வாறே முனிவர்கள் அனைவரும் தேவர்களுடன் சிதம்பரம் சென்று ஆண்டவனின் ஆனந்த திருநடனக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர் என்பது புராண வரலாறு. முனிவர்களுக்கு காட்சி தந்தவர் இக்கோவிலின் மூலவராகிய ஆத்மநாதர் ஆவார். ஆத்மாவுக்கு நாத ராய் விளங்குவதால் இவர் ஆத்மநாதர் எனப்படுகிறார்.
அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ள சிவலிங்கத் திருமேனி பாணம், சக்தி பீடம், பிரம்ம பீடம் என மூன்று பகுதிகளாக விளங்கும். ஆனால் இங்கு நடுவில் உள்ள சக்தி பீடம் பகுதி மட்டுமே உள்ளது. அதற்கு மேலே குவளை ஒன்று சாத்தியிருப்பார்கள். அதாவது சக்தி பீடத்தில் அறிவொளியாக ஆத்ம நாதர் விளங்குகிறார். அதாவது உருவம் இல்லாத அருவமாக இறைவன் விளங் குகிறார். சக்தி பிம்பம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதால் சக்தியே பிரம்மத்தை வெளிப்படுத்துகிறது என்பது தத்துவம் ஆகும்.
அம்பிகை யோகாம்பிகை
அம்பிகை கோவில் கருவறையில் அம்பிகை அரூபமாக விளங்குவதால், உருவத்திருமேனி கிடையாது. ஒரு யோக பீடம் மட்டுமே காணப்படும். அம்பிகை யோகாம்பிகை எனவும் சிவ யோக நாயகி எனவும் போற் றப்படுகிறாள்.
மாணிக்கவாசகர்
தற்போது மக்கள், கோவிலுக்கு வழிபடச்செல்லும் போது, நேராக மூலஸ் தானதிற்குச் சென்று மூல வரை வழிபட்டு விட்டு பின்னர் முதல் பிரகாரம், இரண்டாவது பிரகாரம், மூன்றாவது பிராகாரம் என்று சுற்றி வருவது போல, நாமும் மூலவர் ஆத்மநாதரை வழிபட்டு விட்டு முதல் பிரகாரம் சுற்றி வந்தால் முதலில் நாம் வழிபடுவது மாணிக்கவாசகரின் உற்சவ மூர்த்தியாகும். அடுத்து நாம் காண்பது அம்பாள் யோகாம்பிகை கோவிலா கும். அம்பிகையின் பாதங் களை நாம் கருங்கல் பலகணி வழியாகத்தான் தெரிசிக்க வேண்டும்.
ஆத்மநாதரின் கருவறைக்கு நேர் பின்புறத்தில், நாலுகால் மண்டபத்தில், ஆத்மநாதர் யோகாசன மூர்த் தியாகவும், அவருக்கு எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறுவது போலவும், சிற்பங்கள் உள்ளன. இறைவன் குருந்தமரமாக விளங்குதல் முதல் சிறப்பாகும். பின்னர் வந்த மாணிக்கவாசகர், குருந்தவன முனிவர்கள் சொற்படி சக்தி பிம்பத்தையே அத்மநாதராக பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார் என்கிறது வரலாறு.
அடுத்து முதல் பிரகாரத் தில் தொடர்ந்து சென்றால் திருவாசகக் கோவிலையும், நடராஜர் சந்நிதியையும், அதற்கு எதிரில் ஆத்மநாத கூபம் எனப்படும் தீர்த்தக் கிணற்றையும் காணலாம். இதற்கு சிவா தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. இக்கோவிலில் விநாயகர், முருகன், நடராஜர், மாணிக்க வாசகர் தவிர வேறு பரிவார மூர்த்திகள் கிடையாது. இரண்டாம் பிரகாரத்தில், தில்லை மண்டபம், பக்தி மண்டபம் முதலியான உள்ளன. தில்லை மண்டபமே நடன சபை என்பர். அடுத்து மூன்றாம் பிரகாரத்தில் ஆயி ரங்கால் மண்டபத்தில் பல தெய்வங்களின் சிற்பங்களை யும் குதிரை வீரர்களின் சிற் பங்களையும் காணலாம்.
அடுத்து மாணிக்கவாச கரின் மூலவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோ விலில் கருவறை, அர்த்த மண்டபம், பிரகாரம், விமானம் என தனிக்கோவில் போன்று அமைந்துள்ளது. அடுத்து தொடர்ந்து சென்றால் , வெயிலுகந்த விநாயகர், அக்னி தீர்த்தம், எண்ணற்ற சிற்ப வேலைப்பாடுகள் உள்ள பெரிய பெரிய தூண்கள் ஆகிய வற்றைக் காணலாம்.
அடுத்து உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தான் விழாக் காலங்களில் மாணிக்கவாச கர் எழுந்தருளி காட்சி கொடுக்கும் உயரமான மேடை அமைந்துள்ளது. அடுத்து தல விருட்சமான குறுந்த மரங்கள் இரண்டு உள்ளன. இவ்விருட்சங்களை வலம் வருவதற்கு ஏற்ப மேடை உள்ளது. அடுத்து வசந்த மண்டபம், பஞ்சாட்சர மண்டபம் ஆகியவற்றில் உள்ள சிற்பங்களைக் கண்டு மகிழலாம்.
நடைதிறப்பு : காலை 06.00 மணி முதல் 12.00 வரை, மாலை 04.00 மணி முதல் 09.00 வரை.
கோவில் அமைப்பு
கோவிலின் முன்புறம் திருவாவடுதுறை ஆதீனப் பெயர்ப் பலகையுள்ளது. எதிரில் சற்று உள்ளடங்கி, குளமொன்று உள்ளது. பயன்படுத்தும் நிலையில் இல்லை. சாலையில் இருந்து கோவிலுள் நுழையும் முன்பு மண்டபத்தின் மேற்புறம் குருந்தமர உபதேசக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் சுற்றிலும் கடைகள், மண்டபத்தின் விதானம் மரத்தாலாகியது.
பார்வையைச் சற்று உயர்த்தினால் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ்நோக்கியவாறு), ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப்பிடிபோல நிறுத்தி அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டுமென்னும் எண்ணத்துடன் உள்ளே செல்க என்று நமக்கு உணர்த்துவது போல இது உள்ளது.
அடுத்துள்ளது மண்டபம் பெரியது ரகுநாத பூபால மண்டபம். அற்புதமான வேலைப்பாடுடைய பெரிய மூர்த்தங்கள், அகோர வீரபத்திரரும் ரண வீரபத்திரரும் உட்புறமாகத் திரும்பியவாறு தரிசனம் தருகின்றனர். மத்தியில் மேற்புறத்தில் விராட் சொரூபம் வண்ணத்தில், பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர் களான வேதவனப் பண்டாரம், ஆறு முகப் பண்டாரம் ஆகியோர்களால் இம்மண்டபம் 330 ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்டதாம்.
இடப்பால் சிவானந்த மாணிக்கவாசகர் சன்னிதி. வலமாகச் சுற்றி வரும்போது துவாரபாலகர்களையும் விநாயகரையும் தரிசிக்கிறோம். சுவரில் வண்ண ஓவியங்கள் மிகப்பழமையானவை. அழிந்த நிலையில் உள்ளன. அவற்றுள் ஒன்று. ‘அண்டரண்ட பட்சி’யின் வண்ண ஓவியம். இப்பறவை இரண்டு யானைகளை ஒரு சேரத் தூக்குமளவுக்கு வலிமையுடைய பறவையாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பாம்பன் சுவாமிகள் பாடியுள்ள வீரபத்திரச் சக்கரத்தின் வண்ண ஓவியம் உள்ளது. அட்டாங்கயோக வளர்ச்சி சிற்பங்கள் மேற்புறத்தில் உள்ளன. தூணில் கண்ணப்பர், கண்களை அப்பும் கோலம் முதலியவைகளையும் காணலாம். மண்டபத்தின் ஓரங்களில் அமைந்துள்ள கொடுங்கைகளின் அழகைக் கண்டு ஆனந்தம் பெறலாம்.
அடுத்துள்ளது ராஜகோபுரம் முன்பு ஐந்து நிலைகளாக இருந்ததை மாற்றி ஏழுநிலைகளாக்கித் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மகாகும்பாபிஷேகம் 27.6.1990 அன்று நடைபெற்றது. நெடிதுயர்ந்த ராஜகோபுரம், தொலையில் வரும்போதே வா என்று அழைக்கும் வான்கருணைச் சான்றான ஆத்மநாத ஸ்வருபத்தின் ஸ்தூல அடையாளம்.
ராஜகோபுரத்தின் வழியே உட்செல்லும் போது வாயிலின் இடப்பக்கத்தில்சுவரில் வள்ளல் பச்சையப்பர் இக்கோவிலுக்கு வைத்துள்ள தர்மத்தைப் பற்றிய சாசனக் கல்வெட்டு, பதிக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள விவரம் வருமாறு:
ஆவுடையார்கோவிலில் காஞ்சிபுரம் பச்சையப்பர் முதலியாருடைய தர்மம் சகலருக்கும் பிரசித்தியாக தெரியும் பொருட்டு நிரந்தரமான ஞாபகத்தின் பொருட்டுச் செய்ய விளம்பரமாவது:
இறந்துபோன புண்ணிய புருஷராகிய பச்சையப்ப முதலியார் அவர்களாலே வைக்கப்பட்டிருக்கும் லட்சம் வராகனுக்கும் வரப்பட்ட வட்டிப் பணத்தினின்னும் ஆவுடையார் கோவிலில் சாயரசை கட்டளைத் தர்மமானது. கனம் பொருந்திய சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்டு அதிகாரிகளால் தர்ம விசாரனைக் கர்த்தர்களாக நியமிக்கப்பட்டுச் சென்னப்பட்டினத்திலிருக்கும் இந்து சபையாரவர்களுடைய உத்தரவின்படி சாலி வாகன சகாப்தம் 1764ஆம் வருஷத்து சரியான சுபகிருது வருடம் முதல் வருஷம் கறாளஉய 120 வராகன் செலவுள்ளதாக நடந்து வருகின்றது. மூலதனம் சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகளுடைய உத்தரவின்படி சென்னப் பட்டணத்திலிருக்கும் ஜெனரல் திரேசரி என்னும் கவர்ன்மெண்டாருடைய பொக்கிஷத்தில் வைக்கபட்டிருக்கின்றது. தர்மம் கிரமமாக நடவாவிட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர், சபையாரவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது.
உள்கோபுரத்தையும் தாண்டுகிறோம். அடுத்துள்ளது பஞ்சாட்ரச மண்டபம். உட்புகுமுன் நம் நினைவுக்கு ஒரு குறிப்பு: என்பது இக்கோவில் மரபு. விநாயகர், வீரபத்திரர், பட்சாடனர், ஊர்த்துவர் மூர்த்தங்களைத் தரிசித்தவாறே அம்பிகை சன்னிதியை அடைகிறோம்.
சுவாமியைப் போலவே அம்பாளும் தெற்கு நோக்கிய சன்னிதி, ஆத்மநாத சுவாமியைப் போலவே அம்பாளும் அருவம் தான். ஸ்ரீயோகாம்பாள் சன்னிதியில் திருமேனி இல்லை. சததளபத்ம பீடத்தில் 100 இதழ்கள் கொண்ட தாமரையாகிய பீடத்தில் யோகாம்பாளின் திருவடிகள் மட்டுமே தங்கத்தாலான யந்திர வடிவமாக உள்ளன.
முன்புறமுள்ள கல் ஜன்னல் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். அதற்கேற்ப ஒளி பொருத்தப்பட்டுள் ளது. பூஜை செய்வோர் மட்டும் உள்ளே செல்வதற்குப் பக்கவாயில்உள்ளது.
யோக சொரூபியைத் தரிசித்து விட்டு வலமாக வரும்போது சுவரில் உள்ள சிவபுராணத்தையும் திருவாசகப் பாடற்பகுதிகளையும் படித்தவாறே வலம் வரலாம்.
அடுத்த தரிசனம் தல விசேடக் காட்சியான குருந்தமர உபதேசக் காட்சி. கல்லில் வடித்துள்ள குருந்த மரம் கீழே இறைவன் குரு வடிவில் அமர்ந்திருக்க எதிரில் மாணிக்கவாசகர் பவ்வியமாக இருந்து உபதேசம் பெறும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. ஆனித் திருமஞ்சன நாளிலும் மார்கழித் திருவாதிரையிலும் மாணிக்கவாசகருக்கு உபதேசித்த காட்சி உற்சவம் நடைபெறுகிறது.
அப்போது பூஜை செய்யும் நம்பியார் சிவ வேடமணிந்து, மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து உபதேச ஐதிகத்தை நடத்துவிக்கின்றார் “எந்தமராம் இவன் என்று என்னையும் ஆட்கொண்டருளும் என்ற திருவாசகத்தை நினை விருத்திக் தொழுது நகர்ந்தால், திருவாசகக் கோவிலை காணலாம். இங்கும் திருவாசக ஓலைச்சுவடியே இருப்பது விஷேசம்.
நடராசர் சன்னிதி மூலமூர்த்தமாக (கற்சிலையில்) அம்பலவாணர் ஆனந்த காட்சி. பாலசுப்பிரமணியரை வணங்கி, வலம் முடித்து, வாயிலைக் கடந்து உள்ளே செல்கிறோம். மேற்பகுதியில் ‘நிலம் நீர் நெருப்பு’ என்று தொடங்கும் திருவாசகத் தோணோக்கப் பாடல் எழுதப்பட்டு அதற்குரிய உருவங் களும் உள்ளன.
4. அடுத்த சபை, சத்சபை. இங்கு விசாலமான கல்மேடையில் தான் சுவாமிக்குக் கைபடாத அன்னம் நிவேதிக்கப்படுகிறது. இதனால் இதற்கு அமுத மண்டபம் என்று பெயர்.
5. சித்சபை அடுத்துள்ளது. பூஜை செய்வோர் நிற்குமிடம். ஐந்து (பஞ்ச) கலைகள் தீபங்களாகக் காட்சி நல்குமிடம். 6. ஆனந்த மயமான ஆத்மநாதரை நேரே காண்கிறோம். பரம சுவாமியான ஆத்மநாதர் எழுந்தருளியுள்ள கருவறையே குருவருள் கொலு வீற்றிருக்குமிடே ஆனந்த சபை. ஆவுடையார் நம்மை ஆளுடையார். சதுரபீடம். மேலே சிவலிங்க பாணமில்லை. ஆத்மநாதசுவாமி அருவமாகக் காட்சியளிக்கிறார்.
அதற்குரிய இடத்தில் தங்கத்தாலான குவளை (ஆவுடையாரின் மேலே) சார்த்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னால் 27 நட்சத்திரங்களைக் கொண்டதான திருவாசி உள்ளது. அதன்மேலே மூன்று விளக்குகளை வைத் துள்ளனர். அவற்றுள் சிவப்பு அக்கியையும், வெண்மை சூரியனையும், பச்சை சந்திர னையும் குறிக்கின்ற தென்பர். சுவாமிக்கு முன்னால் இரு தூங்கா விளக்குகள் சுடர் விடுகின்றன.
மண்ணிலே பிறந்து இறந்து மண்ணாவதற்கு ஒருப்படுகின்ற நம்மை, அண்ணல் ஆட்கொண்டு அடியரிற் கூட்டிய ‘அதிசயத்தை’ அகலம் நெகிழ நினைத்து, கண்ணீர் பெருக்கி, கையாரத் தொழுது, வாய்குளிரப்பாடி, ‘சடையவனே! தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே’ என்று பிரார்த்திக்கலாம்.
வெளியே வந்து பக்கத்தில் சென்றால் தியாகராஜ மண்டபத்தை அடையலாம். வழியில் வெயிலுகந்த விநாயகர் வீற்றிருக்கின்றார். பக்கத்தில் அக்னிதீர்த்தம் “இதற்கு திருத்தமாம் பொய்கை” என்று பெயர்.
தியாகராஜ மண்டபத்தில் மகாலிங்கமூர்த்தி தரிசனம் தருகிறார். எதிரில் முத்து விநாயகர் மண்டபத்தின் மேற்கூரையில் தொங்கும் கற்சங்கிலிகள் கண்களைக் கவர்கின்றன. கொடுங்கைகளின் அற்புதத்தை இம்மண்டபத்தில் காணலாம். எவ்வளவு கனமான கருங்கல்லை எந்த அளவுக்கு மெல்லியதாக இழைத்து, எத்தனை எத்தனை மடிப்புக்களாகக் கொண்டு வந்துள்ளார்கள் என்பதைக் கண்டு வியப்படைவதற்காக இடப்பக்கத்தின் கோடியில் இரண்டு மூன்றிடங்களில் துளையிட்டுக் காட்டியுள்ளார்கள்.
விழா நாள்களில் மாணிக்கவாசகர் இம்மண்டபத்திற்கு எழுந்தருளி இருந்து பின் புறப்பாடாகிறார். மண்டபத்தைக் கண்டு வியந்த நமக்கு அடுத்த தரிசனம் தலமரங்களான இருகுருந்த மரங்கள்தாம். இத்திருக்கோவில் பல்வகையிலும் சிறப்புகளை பெற்றுத்திகழ்கிறது. இங்கு தனியே தட்சிணாமூர்த்தி சந்நிதி இல்லை. கோவிலின் பக்கத்தில் உள்ள தெருக்கோடியில் ஆதினத்தின் கோவில் நிர்வாக அலுவலகம் உள்ளது.
பூதம் கட்டிய கோவில்
ஆவுடையார் கோவிலை பூதம்தான் கட்டியதாக இந்த பகுதி மக்களின் நம்பிக்கை. மிகப்பெரிய பாறை களைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும், சிலைகள் வடித் தும் கொடுங்கை கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மனிதர்களால் செய்ய முடியாது என்பதால் பூதம் கட்டியதாக அப்பகுதியினர் கூறுகிறார்கள்.
கோவிலின் முன்புறம் திருவாவடுதுறை ஆதீனப் பெயர்ப் பலகையுள்ளது. எதிரில் சற்று உள்ளடங்கி, குளமொன்று உள்ளது. பயன்படுத்தும் நிலையில் இல்லை. சாலையில் இருந்து கோவிலுள் நுழையும் முன்பு மண்டபத்தின் மேற்புறம் குருந்தமர உபதேசக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் சுற்றிலும் கடைகள், மண்டபத்தின் விதானம் மரத்தாலாகியது.
பார்வையைச் சற்று உயர்த்தினால் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ்நோக்கியவாறு), ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப்பிடிபோல நிறுத்தி அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டுமென்னும் எண்ணத்துடன் உள்ளே செல்க என்று நமக்கு உணர்த்துவது போல இது உள்ளது.
அடுத்துள்ளது மண்டபம் பெரியது ரகுநாத பூபால மண்டபம். அற்புதமான வேலைப்பாடுடைய பெரிய மூர்த்தங்கள், அகோர வீரபத்திரரும் ரண வீரபத்திரரும் உட்புறமாகத் திரும்பியவாறு தரிசனம் தருகின்றனர். மத்தியில் மேற்புறத்தில் விராட் சொரூபம் வண்ணத்தில், பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர்களான வேதவனப் பண்டாரம், ஆறு முகப் பண்டாரம் ஆகியோர்களால் இம்மண்டபம் 330 ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்டதாம்.
இடப்பால் சிவானந்த மாணிக்கவாசகர் சன்னிதி. வலமாகச் சுற்றி வரும்போது துவாரபாலகர்களையும் விநாயகரையும் தரிசிக்கிறோம். சுவரில் வண்ண ஓவியங்கள் மிகப்பழமையானவை. அழிந்த நிலையில் உள்ளன. அவற்றுள் ஒன்று. ‘அண்டரண்ட பட்சியின் வண்ண ஓவியம். இப்பறவை இரண்டு யானைகளை ஒரு சேரத் தூக்குமளவுக்கு வலிமையுடைய பறவையாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பாம்பன் சுவாமிகள் பாடியுள்ள வீரபத்திரச் சக்கரத்தின் வண்ண ஓவியம் உள்ளது. அட்டாங்கயோக வளர்ச்சி சிற்பங்கள் மேற்புறத்தில் உள்ளன. தூணில் கண்ணப்பர், கண்களை அப்பும் கோலம் முதலியவைகளையும் காணலாம். மண்டபத்தின் ஓரங்களில் அமைந்துள்ள கொடுங்கைகளின் அழகைக் கண்டு ஆனந்தம் பெறலாம்.
அடுத்துள்ளது ராஜகோபுரம் முன்பு ஐந்து நிலைகளாக இருந்ததை மாற்றி ஏழுநிலைகளாக்கித் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மகாகும்பாபிஷேகம் 27.6.1990 அன்று நடைபெற்றது. நெடிதுயர்ந்த ராஜகோபுரம், தொலையில் வரும்போதே வா என்று அழைக்கும் வான்கருணைச் சான்றான ஆத்மநாத ஸ்வருபத்தின் ஸ்தூல அடையாளம்.
குதிரை சாமி
முதல் கால பூஜையில் சுத்த அன்னம் (வெறும் சாதம்), 2-ம் கால பூஜையின் போது, சர்க்கரைப் பொங்கல், 3-ம் கால பூஜையில் தேன்குழல் பாயசம், அதிரசம், பிட்டு, தோசை, 4-ம் கால பூஜையில் சுத்த அன்னம், வடை, கீரை, 5-ம் கால பூஜையின் போது, சுத்தம் அன்னம் மட்டுமே, 6-ம் கால அர்த்தசாம பூஜையின் போது, புழுங்கல் அரிசி சாதம் வடிக்காமல், புளியோதரை, பாகற்காய் என நெய்வேத்தியம். சூடு பறக்கும் உணவின் ஆவி சுவாமிக்கு பிரசாதமாகும். இந்த பிரசாதங்களை சாப்பிட, பித்ருக்கள் எனப்படும் முன்னோரின் சாபங்கள் நீங்கப் பெறுவதுடன், அவர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பஞ்சாட்சர மண்டபத்தின் கல்வெட்டுகளில் கலித்துறைப் பாக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், இந்த அற்புதமான மண்டப திருப்பணி, மனித முயற்சியால் கைகூடவில்லை. யோகநாயகி (ஆவுடையார் கோவில் இறைவி), கோபுரவேலவன் (பழைய கோபுரத்தில் இடம் பெற்றுள்ள முருகக்கடவுள்), விநாயகர், மாணிக்கவாசகர் ஆகியோரே செய்வித்தனர் என்ற வரிகள் உள்ளன.
பஞ்சாட்சர மண்டபத்தில் பொறிக்கப்பட்டு உள்ள, மற்றொரு பாடலில், விசைய (விஜய) ஆண்டு, துலா மாதத்தில், இந்த மண்டப திருப்பணியை துவங்கி, பிலவ ஆண்டு பங்குனி மாதத்தில், யோகநாயகி காரிகை இந்த பணியை முடித்தாள் என்று, கூறப்பட்டு உள்ளது. மேலும், சுவரோவியங்களை வரைந்து, பாக்கல் (பாவுகல்) எல்லாம் அமைத்தவன் விநாயகனே என்று, மற்றொரு பாடலில் கூறப்பட்டுள்ளது.
இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால் குருந்தமரத் தையும் சிவனாகக் கருதுவ தால், கார்த்திகை சோம வாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபி ஷேகம் நடக்கிறது
ஆறு கால பூஜையின் போதும், இவருக்கு 108 மூலி கைகள் கலந்த தைல அபிஷேகம் நடப்பது விசேஷம். பஞ்சாட்சர மண்டபத்தில் உள்ள சிவனை குதிரைச்சாமி என்று அழைக்கிறார்கள். மாணிக்கவாசகருக்காக, சிவன், குதிரைகளுடன் மது ரைக்கு சென்று அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் ஒப்படைத்தார். குதிரை மீது சென்ற சிவன், இக் கோவிலில் பஞ்சாட்சர மண்டபத்தில் இருக்கிறார். இவரை, குதிரைச்சாமி என்று அழைக்கிறார்கள்.
இத்தலத்தில் குருவாக இருந்து மாணவர்களுக்கு உபதேசம் செய்தபோது, சீடர்கள் அவருக்கு படைத்த உணவை ஏற்றுக்கொண்டார். அவரிடம் பயின்றவர்கள் வீட்டிலிருந்து புழுங்கல் அரிசி சாதம், கீரை, பாகற்காய் என எளிய பொருட்களை அவருக்கு கொடுத்தனர். அதனை சிவனும் விரும்பி வாங்கி சாப்பிட்டார்.
பூஜை கட்டண விபரம்
1.அர்ச்சனை ரூ.5
2.முடி காணிக்கை ரூ.10
3.காது குத்து ரூ.50
4.சகஸ்ரநாமம் ரூ.10
5.அபிஷேகம் ரூ.500
6.திருமணம் ரூ.1,750
தல விருட்சம்
ஆவுடையார்கோவிலின் தல விருட்சமாக குருந்த மரங்கள் உள்ளன. கோவிலில் தியாகராஜ மண்டபத்துக்கு அருகே வடமேற்கு மூலையில் வெளி மதில் சுவரை ஒட்டியதுபோல் அமைந்துள்ள திருமாளி கைப்பத்தியில் தல விருட்சமான குருந்தை மரங்கள் இரண்டு உள்ளன. இந்த தல விருட்சங்களை பக்தர்கள் வலம் வந்து வழிபடுவதற்கு ஏற்றவாறு மேடையில் இடைவெளி அமைக்கப்பட்டுள்ளது.
விழாக்கள்
ஆவுடையார் கோவிவில் மூலவருக்கு மகுடாகமம் உத்தரபாகத் தின்படி பூஜைகள் நடை பெறுகின்றன. ஆனி மகத்திலும் மார்கழி திருவாதிரையில் 10 நாள்கள் பெருவிழா நடை பெறுகிறது.
இத்தலத்தில் நம்பியார்கள் எனப் படுபவர்களே முக்கிய பூஜகர்களாவார்கள். இவர்கள் ஆத்ம நாத சுவாமியை உள்ளிட்ட 301 பேர்களாவர்.
இத்திருக் கோவிலில் ஆறு வகைப்பட்ட பிரிவினர்களின் மூலமாக பூஜைகள் நடை பெறுகின்றன. அந்த விபரம் வருமாறு:
1.மூலவருக்கும், குருந்தமரத்தடியில் உள்ள மூல சுவாமிக்கும் நம்பியார்களும்
2.பரிவார தெய்வங்களுக்குச் சிவாசாரியார்களும்
3.குதிரைச்சாமிக்கு சைவப் பிள்ளைமார் களும்
4.வீரபத்திரருக்கு வேளாளர்களும்
5.கொத்தனார்களும்
6. மகாலிங்க மூர்த்திக்கு அஷ்ட சாஸ்திரக்காரர்கள் எனப்படுவோரும் பூஜைகள் செய்துவரும் ஏற்பாடு இங்குள்ளது.
இந்த நிவேதன அமைப்பு ஆனி மகத்திலும், மார்கழி திருவாதிரையிலும் நடைபெறும் உற்சவ காலங்களில் மாணிக்க வாசகருக்கு உண்டு.
அக்கினி நட்சத்திர காலங்களில் சுவாமி க்கு இளநீரும், பானகமும், பாசிபருப்பும் தனித்த நிவேதனமாகும். (நிவேதனம் பற்றிய வரலாறு இக்குறிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது.)
இவற்றில் இருந்து அக்காலத்தில் கோவிலுக்கும் சுவாமிக்கும் விடப்பட்ட நிவந்தங்கள் குத்தகைத்தாரர்களின் பத்திரங்கள், கும்பாபிஷேகம் நடைபெற்ற விவரங்கள், நிர்வாக செய்திகள் முதலியவை தெரிய வருகின்றன.
இத்திருக்கோவிலுக்குச் சற்று தொலைவில் ஆதிகயிலாய நாதர் கோவில் உள்ளது. தனிக்கோவில். மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசக்காட்சி அங்குதான். இக்கோவில் மாணிக்கவாசகருக்கு முன்பிருந்தே உள்ளது.
இப்பகுதிகள் அனைத்தும் ஒரு காலத்தில் காடாக இருந்ததாம். தற்போது ஆதிகயிலாய நாதர் கோவில் உள்ள இடத்தை, வடக்கூர் (வடக்களூர்) என்றும், ஆவுடையார் கோவில் உள்ள இடத்தை தெற்கூர் என்றும் சொல்கின்றனர்.
ஆதிகயிலாயநாதர் கோவில் கிழக்கு நோக்கியது. சிவகாமி அம்பாள் சந்நிதி தெற்கு, விநாயகர் கிழக்கிலும், பைரவர் தெற்கிலும், நந்தி மேற்கிலும் எழுந்த ருளியுள்ளனர். பராசரர், புலஸ்தியர், அகத்தியர் முதலிய மகரிஷிகள் இங்கிருந்ததாகச் சொல்கின்றனர்.
புழுங்கல் அரிசி நெய்வேத்தியம்
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பூஜைகள் நடைபெறும்போது பச்சை அரிசியிலேயே அமுது படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள். ஆனால் இந்த ஆவுடையார் கோவிலிலே 6 கால பூஜைக்குமே புழுங்கல் அரிசியால் தான் அமுது படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய் கறியும், கீரையும் சேர்த்துப் படைக்கப்படுவது இங்கு மட்டும் தான். அதனை சிவபெருமானும் விரும்பி சாப்பிட்டார் என்பதன் அடிப்படையில் ஆத்மநாதருக்கு புழுங்கல் அரிசி சாதம்தான் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. அடுப்பில் இருந்து இறக்கப்பட்ட சாதத்தை அப்படியே சுவாமி சன்னதிக்கு கொண்டு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள படைகல்லில் கொட்டி விடுகிறார்கள்.
அப்போது சன்னதி கதவுகள் சாத்தப்பட்டு சிறிதுநேரம் கழித்த பின்னரே திறக்கப்படுகிறது. சுவாமி அரூப வடிவிலானவர் என்பதால், அரூபமாகிவிடும் ஆவியுடன் நெய்வேத்தியம் படைக்கப்படுகிறது. மூன்றாம் கால (காலை 11 மணி) பூஜையின்போது மட்டும் தேன்குழல், அதிரசம், வடை, பிட்டு, தோசை, பாயாசம் படைக்கப்படுகிறது. தைப்பொங்கல் தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வாழை இலையில் 16 வகை காய்கறி களுடன், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் மற்றும் கரும்பு படைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு
இக்கோவில் ஊரின் நடுவில் தெற்கு நோக்கி அமைந் துள்ளது. கோவிலைச் சுற்றி தேரோடும் நான்கு வீதிகள் அழகுற அமைந்துள்ளன. கோவிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. கோவில் வாசலில் அமைந் துள்ள ராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டு விளங்குகிறது. இத்திருக் கோவில் யோகம் மற்றும் ஞான மார்க்கத்தார் போற்றும் சிறப்புடையது. இங்குள்ள இறைவன் அரூபமாக வைத்து பூஜிக்கப்படுகிறார். எனவே இக்கோவில் மற்ற சிவன் கோவில்களின் அமைப்புகள் மற்றும் சிறு தெய்வ வழிபாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு விளங்குகிறது.
மூலவர் ஆத்மநாதர்
தில்லையில் ஸ்ரீநடராஜர் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவதற்கு முன்பு பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர், மற்றும் பல முனிவர்கள் இந்த குருந்தவனத்தில் தவம் இயற்றும் போது, இறைவன் காட்சி தர அவர்கள் பேரானந்தமடைந்து இறைவனிடம் திருநடனக் காட்சியையும் வேண்டினார்கள். அதற்கு ஈசன், சிதம்பரத்திற்கு வந்து ஆனந்தத் திருநடனக் காட்சியை காணுங்கள் என்று அருளினார்.
அவ்வாறே முனிவர்கள் அனைவரும் தேவர்களுடன் சிதம்பரம் சென்று ஆண்டவனின் ஆனந்த திருநடனக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர் என்பது புராண வரலாறு. முனிவர்களுக்கு காட்சி தந்தவர் இக்கோவிலின் மூலவராகிய ஆத்மநாதர் ஆவார். ஆத்மாவுக்கு நாத ராய் விளங்குவதால் இவர் ஆத்மநாதர் எனப்படுகிறார்.
அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ள சிவலிங்கத் திருமேனி பாணம், சக்தி பீடம், பிரம்ம பீடம் என மூன்று பகுதிகளாக விளங்கும். ஆனால் இங்கு நடுவில் உள்ள சக்தி பீடம் பகுதி மட்டுமே உள்ளது. அதற்கு மேலே குவளை ஒன்று சாத்தியிருப்பார்கள். அதாவது சக்தி பீடத்தில் அறிவொளியாக ஆத்ம நாதர் விளங்குகிறார். அதாவது உருவம் இல்லாத அருவமாக இறைவன் விளங் குகிறார். சக்தி பிம்பம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதால் சக்தியே பிரம்மத்தை வெளிப்படுத்துகிறது என்பது தத்துவம் ஆகும்.
அம்பிகை யோகாம்பிகை
அம்பிகை கோவில் கருவறையில் அம்பிகை அரூபமாக விளங்குவதால், உருவத்திருமேனி கிடையாது. ஒரு யோக பீடம் மட்டுமே காணப்படும். அம்பிகை யோகாம்பிகை எனவும் சிவ யோக நாயகி எனவும் போற் றப்படுகிறாள்.
மாணிக்கவாசகர்
தற்போது மக்கள், கோவிலுக்கு வழிபடச்செல்லும் போது, நேராக மூலஸ் தானதிற்குச் சென்று மூல வரை வழிபட்டு விட்டு பின்னர் முதல் பிரகாரம், இரண்டாவது பிரகாரம், மூன்றாவது பிராகாரம் என்று சுற்றி வருவது போல, நாமும் மூலவர் ஆத்மநாதரை வழிபட்டு விட்டு முதல் பிரகாரம் சுற்றி வந்தால் முதலில் நாம் வழிபடுவது மாணிக்கவாசகரின் உற்சவ மூர்த்தியாகும். அடுத்து நாம் காண்பது அம்பாள் யோகாம்பிகை கோவிலா கும். அம்பிகையின் பாதங் களை நாம் கருங்கல் பலகணி வழியாகத்தான் தெரிசிக்க வேண்டும்.
ஆத்மநாதரின் கருவறைக்கு நேர் பின்புறத்தில், நாலுகால் மண்டபத்தில், ஆத்மநாதர் யோகாசன மூர்த் தியாகவும், அவருக்கு எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறுவது போலவும், சிற்பங்கள் உள்ளன. இறைவன் குருந்தமரமாக விளங்குதல் முதல் சிறப்பாகும். பின்னர் வந்த மாணிக்கவாசகர், குருந்தவன முனிவர்கள் சொற்படி சக்தி பிம்பத்தையே அத்மநாதராக பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார் என்கிறது வரலாறு.
அடுத்து முதல் பிரகாரத் தில் தொடர்ந்து சென்றால் திருவாசகக் கோவிலையும், நடராஜர் சந்நிதியையும், அதற்கு எதிரில் ஆத்மநாத கூபம் எனப்படும் தீர்த்தக் கிணற்றையும் காணலாம். இதற்கு சிவா தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. இக்கோவிலில் விநாயகர், முருகன், நடராஜர், மாணிக்க வாசகர் தவிர வேறு பரிவார மூர்த்திகள் கிடையாது. இரண்டாம் பிரகாரத்தில், தில்லை மண்டபம், பக்தி மண்டபம் முதலியான உள்ளன. தில்லை மண்டபமே நடன சபை என்பர். அடுத்து மூன்றாம் பிரகாரத்தில் ஆயி ரங்கால் மண்டபத்தில் பல தெய்வங்களின் சிற்பங்களை யும் குதிரை வீரர்களின் சிற் பங்களையும் காணலாம்.
அடுத்து மாணிக்கவாச கரின் மூலவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோ விலில் கருவறை, அர்த்த மண்டபம், பிரகாரம், விமானம் என தனிக்கோவில் போன்று அமைந்துள்ளது. அடுத்து தொடர்ந்து சென்றால் , வெயிலுகந்த விநாயகர், அக்னி தீர்த்தம், எண்ணற்ற சிற்ப வேலைப்பாடுகள் உள்ள பெரிய பெரிய தூண்கள் ஆகிய வற்றைக் காணலாம்.
அடுத்து உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தான் விழாக் காலங்களில் மாணிக்கவாச கர் எழுந்தருளி காட்சி கொடுக்கும் உயரமான மேடை அமைந்துள்ளது. அடுத்து தல விருட்சமான குறுந்த மரங்கள் இரண்டு உள்ளன. இவ்விருட்சங்களை வலம் வருவதற்கு ஏற்ப மேடை உள்ளது. அடுத்து வசந்த மண்டபம், பஞ்சாட்சர மண்டபம் ஆகியவற்றில் உள்ள சிற்பங்களைக் கண்டு மகிழலாம்.
நடைதிறப்பு : காலை 06.00 மணி முதல் 12.00 வரை, மாலை 04.00 மணி முதல் 09.00 வரை.
கோவில் அமைப்பு
கோவிலின் முன்புறம் திருவாவடுதுறை ஆதீனப் பெயர்ப் பலகையுள்ளது. எதிரில் சற்று உள்ளடங்கி, குளமொன்று உள்ளது. பயன்படுத்தும் நிலையில் இல்லை. சாலையில் இருந்து கோவிலுள் நுழையும் முன்பு மண்டபத்தின் மேற்புறம் குருந்தமர உபதேசக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் சுற்றிலும் கடைகள், மண்டபத்தின் விதானம் மரத்தாலாகியது.
பார்வையைச் சற்று உயர்த்தினால் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ்நோக்கியவாறு), ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப்பிடிபோல நிறுத்தி அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டுமென்னும் எண்ணத்துடன் உள்ளே செல்க என்று நமக்கு உணர்த்துவது போல இது உள்ளது.
அடுத்துள்ளது மண்டபம் பெரியது ரகுநாத பூபால மண்டபம். அற்புதமான வேலைப்பாடுடைய பெரிய மூர்த்தங்கள், அகோர வீரபத்திரரும் ரண வீரபத்திரரும் உட்புறமாகத் திரும்பியவாறு தரிசனம் தருகின்றனர். மத்தியில் மேற்புறத்தில் விராட் சொரூபம் வண்ணத்தில், பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர் களான வேதவனப் பண்டாரம், ஆறு முகப் பண்டாரம் ஆகியோர்களால் இம்மண்டபம் 330 ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்டதாம்.
இடப்பால் சிவானந்த மாணிக்கவாசகர் சன்னிதி. வலமாகச் சுற்றி வரும்போது துவாரபாலகர்களையும் விநாயகரையும் தரிசிக்கிறோம். சுவரில் வண்ண ஓவியங்கள் மிகப்பழமையானவை. அழிந்த நிலையில் உள்ளன. அவற்றுள் ஒன்று. ‘அண்டரண்ட பட்சி’யின் வண்ண ஓவியம். இப்பறவை இரண்டு யானைகளை ஒரு சேரத் தூக்குமளவுக்கு வலிமையுடைய பறவையாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பாம்பன் சுவாமிகள் பாடியுள்ள வீரபத்திரச் சக்கரத்தின் வண்ண ஓவியம் உள்ளது. அட்டாங்கயோக வளர்ச்சி சிற்பங்கள் மேற்புறத்தில் உள்ளன. தூணில் கண்ணப்பர், கண்களை அப்பும் கோலம் முதலியவைகளையும் காணலாம். மண்டபத்தின் ஓரங்களில் அமைந்துள்ள கொடுங்கைகளின் அழகைக் கண்டு ஆனந்தம் பெறலாம்.
அடுத்துள்ளது ராஜகோபுரம் முன்பு ஐந்து நிலைகளாக இருந்ததை மாற்றி ஏழுநிலைகளாக்கித் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மகாகும்பாபிஷேகம் 27.6.1990 அன்று நடைபெற்றது. நெடிதுயர்ந்த ராஜகோபுரம், தொலையில் வரும்போதே வா என்று அழைக்கும் வான்கருணைச் சான்றான ஆத்மநாத ஸ்வருபத்தின் ஸ்தூல அடையாளம்.
ராஜகோபுரத்தின் வழியே உட்செல்லும் போது வாயிலின் இடப்பக்கத்தில்சுவரில் வள்ளல் பச்சையப்பர் இக்கோவிலுக்கு வைத்துள்ள தர்மத்தைப் பற்றிய சாசனக் கல்வெட்டு, பதிக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள விவரம் வருமாறு:
ஆவுடையார்கோவிலில் காஞ்சிபுரம் பச்சையப்பர் முதலியாருடைய தர்மம் சகலருக்கும் பிரசித்தியாக தெரியும் பொருட்டு நிரந்தரமான ஞாபகத்தின் பொருட்டுச் செய்ய விளம்பரமாவது:
இறந்துபோன புண்ணிய புருஷராகிய பச்சையப்ப முதலியார் அவர்களாலே வைக்கப்பட்டிருக்கும் லட்சம் வராகனுக்கும் வரப்பட்ட வட்டிப் பணத்தினின்னும் ஆவுடையார் கோவிலில் சாயரசை கட்டளைத் தர்மமானது. கனம் பொருந்திய சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்டு அதிகாரிகளால் தர்ம விசாரனைக் கர்த்தர்களாக நியமிக்கப்பட்டுச் சென்னப்பட்டினத்திலிருக்கும் இந்து சபையாரவர்களுடைய உத்தரவின்படி சாலி வாகன சகாப்தம் 1764ஆம் வருஷத்து சரியான சுபகிருது வருடம் முதல் வருஷம் கறாளஉய 120 வராகன் செலவுள்ளதாக நடந்து வருகின்றது. மூலதனம் சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகளுடைய உத்தரவின்படி சென்னப் பட்டணத்திலிருக்கும் ஜெனரல் திரேசரி என்னும் கவர்ன்மெண்டாருடைய பொக்கிஷத்தில் வைக்கபட்டிருக்கின்றது. தர்மம் கிரமமாக நடவாவிட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர், சபையாரவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது.
உள்கோபுரத்தையும் தாண்டுகிறோம். அடுத்துள்ளது பஞ்சாட்ரச மண்டபம். உட்புகுமுன் நம் நினைவுக்கு ஒரு குறிப்பு: என்பது இக்கோவில் மரபு. விநாயகர், வீரபத்திரர், பட்சாடனர், ஊர்த்துவர் மூர்த்தங்களைத் தரிசித்தவாறே அம்பிகை சன்னிதியை அடைகிறோம்.
சுவாமியைப் போலவே அம்பாளும் தெற்கு நோக்கிய சன்னிதி, ஆத்மநாத சுவாமியைப் போலவே அம்பாளும் அருவம் தான். ஸ்ரீயோகாம்பாள் சன்னிதியில் திருமேனி இல்லை. சததளபத்ம பீடத்தில் 100 இதழ்கள் கொண்ட தாமரையாகிய பீடத்தில் யோகாம்பாளின் திருவடிகள் மட்டுமே தங்கத்தாலான யந்திர வடிவமாக உள்ளன.
முன்புறமுள்ள கல் ஜன்னல் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். அதற்கேற்ப ஒளி பொருத்தப்பட்டுள் ளது. பூஜை செய்வோர் மட்டும் உள்ளே செல்வதற்குப் பக்கவாயில்உள்ளது.
யோக சொரூபியைத் தரிசித்து விட்டு வலமாக வரும்போது சுவரில் உள்ள சிவபுராணத்தையும் திருவாசகப் பாடற்பகுதிகளையும் படித்தவாறே வலம் வரலாம்.
அடுத்த தரிசனம் தல விசேடக் காட்சியான குருந்தமர உபதேசக் காட்சி. கல்லில் வடித்துள்ள குருந்த மரம் கீழே இறைவன் குரு வடிவில் அமர்ந்திருக்க எதிரில் மாணிக்கவாசகர் பவ்வியமாக இருந்து உபதேசம் பெறும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. ஆனித் திருமஞ்சன நாளிலும் மார்கழித் திருவாதிரையிலும் மாணிக்கவாசகருக்கு உபதேசித்த காட்சி உற்சவம் நடைபெறுகிறது.
அப்போது பூஜை செய்யும் நம்பியார் சிவ வேடமணிந்து, மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து உபதேச ஐதிகத்தை நடத்துவிக்கின்றார் “எந்தமராம் இவன் என்று என்னையும் ஆட்கொண்டருளும் என்ற திருவாசகத்தை நினை விருத்திக் தொழுது நகர்ந்தால், திருவாசகக் கோவிலை காணலாம். இங்கும் திருவாசக ஓலைச்சுவடியே இருப்பது விஷேசம்.
நடராசர் சன்னிதி மூலமூர்த்தமாக (கற்சிலையில்) அம்பலவாணர் ஆனந்த காட்சி. பாலசுப்பிரமணியரை வணங்கி, வலம் முடித்து, வாயிலைக் கடந்து உள்ளே செல்கிறோம். மேற்பகுதியில் ‘நிலம் நீர் நெருப்பு’ என்று தொடங்கும் திருவாசகத் தோணோக்கப் பாடல் எழுதப்பட்டு அதற்குரிய உருவங் களும் உள்ளன.
4. அடுத்த சபை, சத்சபை. இங்கு விசாலமான கல்மேடையில் தான் சுவாமிக்குக் கைபடாத அன்னம் நிவேதிக்கப்படுகிறது. இதனால் இதற்கு அமுத மண்டபம் என்று பெயர்.
5. சித்சபை அடுத்துள்ளது. பூஜை செய்வோர் நிற்குமிடம். ஐந்து (பஞ்ச) கலைகள் தீபங்களாகக் காட்சி நல்குமிடம். 6. ஆனந்த மயமான ஆத்மநாதரை நேரே காண்கிறோம். பரம சுவாமியான ஆத்மநாதர் எழுந்தருளியுள்ள கருவறையே குருவருள் கொலு வீற்றிருக்குமிடே ஆனந்த சபை. ஆவுடையார் நம்மை ஆளுடையார். சதுரபீடம். மேலே சிவலிங்க பாணமில்லை. ஆத்மநாதசுவாமி அருவமாகக் காட்சியளிக்கிறார்.
அதற்குரிய இடத்தில் தங்கத்தாலான குவளை (ஆவுடையாரின் மேலே) சார்த்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னால் 27 நட்சத்திரங்களைக் கொண்டதான திருவாசி உள்ளது. அதன்மேலே மூன்று விளக்குகளை வைத் துள்ளனர். அவற்றுள் சிவப்பு அக்கியையும், வெண்மை சூரியனையும், பச்சை சந்திர னையும் குறிக்கின்ற தென்பர். சுவாமிக்கு முன்னால் இரு தூங்கா விளக்குகள் சுடர் விடுகின்றன.
மண்ணிலே பிறந்து இறந்து மண்ணாவதற்கு ஒருப்படுகின்ற நம்மை, அண்ணல் ஆட்கொண்டு அடியரிற் கூட்டிய ‘அதிசயத்தை’ அகலம் நெகிழ நினைத்து, கண்ணீர் பெருக்கி, கையாரத் தொழுது, வாய்குளிரப்பாடி, ‘சடையவனே! தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே’ என்று பிரார்த்திக்கலாம்.
வெளியே வந்து பக்கத்தில் சென்றால் தியாகராஜ மண்டபத்தை அடையலாம். வழியில் வெயிலுகந்த விநாயகர் வீற்றிருக்கின்றார். பக்கத்தில் அக்னிதீர்த்தம் “இதற்கு திருத்தமாம் பொய்கை” என்று பெயர்.
தியாகராஜ மண்டபத்தில் மகாலிங்கமூர்த்தி தரிசனம் தருகிறார். எதிரில் முத்து விநாயகர் மண்டபத்தின் மேற்கூரையில் தொங்கும் கற்சங்கிலிகள் கண்களைக் கவர்கின்றன. கொடுங்கைகளின் அற்புதத்தை இம்மண்டபத்தில் காணலாம். எவ்வளவு கனமான கருங்கல்லை எந்த அளவுக்கு மெல்லியதாக இழைத்து, எத்தனை எத்தனை மடிப்புக்களாகக் கொண்டு வந்துள்ளார்கள் என்பதைக் கண்டு வியப்படைவதற்காக இடப்பக்கத்தின் கோடியில் இரண்டு மூன்றிடங்களில் துளையிட்டுக் காட்டியுள்ளார்கள்.
விழா நாள்களில் மாணிக்கவாசகர் இம்மண்டபத்திற்கு எழுந்தருளி இருந்து பின் புறப்பாடாகிறார். மண்டபத்தைக் கண்டு வியந்த நமக்கு அடுத்த தரிசனம் தலமரங்களான இருகுருந்த மரங்கள்தாம். இத்திருக்கோவில் பல்வகையிலும் சிறப்புகளை பெற்றுத்திகழ்கிறது. இங்கு தனியே தட்சிணாமூர்த்தி சந்நிதி இல்லை. கோவிலின் பக்கத்தில் உள்ள தெருக்கோடியில் ஆதினத்தின் கோவில் நிர்வாக அலுவலகம் உள்ளது.
பூதம் கட்டிய கோவில்
ஆவுடையார் கோவிலை பூதம்தான் கட்டியதாக இந்த பகுதி மக்களின் நம்பிக்கை. மிகப்பெரிய பாறை களைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும், சிலைகள் வடித் தும் கொடுங்கை கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மனிதர்களால் செய்ய முடியாது என்பதால் பூதம் கட்டியதாக அப்பகுதியினர் கூறுகிறார்கள்.
கோவிலின் முன்புறம் திருவாவடுதுறை ஆதீனப் பெயர்ப் பலகையுள்ளது. எதிரில் சற்று உள்ளடங்கி, குளமொன்று உள்ளது. பயன்படுத்தும் நிலையில் இல்லை. சாலையில் இருந்து கோவிலுள் நுழையும் முன்பு மண்டபத்தின் மேற்புறம் குருந்தமர உபதேசக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் சுற்றிலும் கடைகள், மண்டபத்தின் விதானம் மரத்தாலாகியது.
பார்வையைச் சற்று உயர்த்தினால் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ்நோக்கியவாறு), ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப்பிடிபோல நிறுத்தி அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டுமென்னும் எண்ணத்துடன் உள்ளே செல்க என்று நமக்கு உணர்த்துவது போல இது உள்ளது.
அடுத்துள்ளது மண்டபம் பெரியது ரகுநாத பூபால மண்டபம். அற்புதமான வேலைப்பாடுடைய பெரிய மூர்த்தங்கள், அகோர வீரபத்திரரும் ரண வீரபத்திரரும் உட்புறமாகத் திரும்பியவாறு தரிசனம் தருகின்றனர். மத்தியில் மேற்புறத்தில் விராட் சொரூபம் வண்ணத்தில், பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர்களான வேதவனப் பண்டாரம், ஆறு முகப் பண்டாரம் ஆகியோர்களால் இம்மண்டபம் 330 ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்டதாம்.
இடப்பால் சிவானந்த மாணிக்கவாசகர் சன்னிதி. வலமாகச் சுற்றி வரும்போது துவாரபாலகர்களையும் விநாயகரையும் தரிசிக்கிறோம். சுவரில் வண்ண ஓவியங்கள் மிகப்பழமையானவை. அழிந்த நிலையில் உள்ளன. அவற்றுள் ஒன்று. ‘அண்டரண்ட பட்சியின் வண்ண ஓவியம். இப்பறவை இரண்டு யானைகளை ஒரு சேரத் தூக்குமளவுக்கு வலிமையுடைய பறவையாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பாம்பன் சுவாமிகள் பாடியுள்ள வீரபத்திரச் சக்கரத்தின் வண்ண ஓவியம் உள்ளது. அட்டாங்கயோக வளர்ச்சி சிற்பங்கள் மேற்புறத்தில் உள்ளன. தூணில் கண்ணப்பர், கண்களை அப்பும் கோலம் முதலியவைகளையும் காணலாம். மண்டபத்தின் ஓரங்களில் அமைந்துள்ள கொடுங்கைகளின் அழகைக் கண்டு ஆனந்தம் பெறலாம்.
அடுத்துள்ளது ராஜகோபுரம் முன்பு ஐந்து நிலைகளாக இருந்ததை மாற்றி ஏழுநிலைகளாக்கித் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மகாகும்பாபிஷேகம் 27.6.1990 அன்று நடைபெற்றது. நெடிதுயர்ந்த ராஜகோபுரம், தொலையில் வரும்போதே வா என்று அழைக்கும் வான்கருணைச் சான்றான ஆத்மநாத ஸ்வருபத்தின் ஸ்தூல அடையாளம்.
குதிரை சாமி
முதல் கால பூஜையில் சுத்த அன்னம் (வெறும் சாதம்), 2-ம் கால பூஜையின் போது, சர்க்கரைப் பொங்கல், 3-ம் கால பூஜையில் தேன்குழல் பாயசம், அதிரசம், பிட்டு, தோசை, 4-ம் கால பூஜையில் சுத்த அன்னம், வடை, கீரை, 5-ம் கால பூஜையின் போது, சுத்தம் அன்னம் மட்டுமே, 6-ம் கால அர்த்தசாம பூஜையின் போது, புழுங்கல் அரிசி சாதம் வடிக்காமல், புளியோதரை, பாகற்காய் என நெய்வேத்தியம். சூடு பறக்கும் உணவின் ஆவி சுவாமிக்கு பிரசாதமாகும். இந்த பிரசாதங்களை சாப்பிட, பித்ருக்கள் எனப்படும் முன்னோரின் சாபங்கள் நீங்கப் பெறுவதுடன், அவர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பஞ்சாட்சர மண்டபத்தின் கல்வெட்டுகளில் கலித்துறைப் பாக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், இந்த அற்புதமான மண்டப திருப்பணி, மனித முயற்சியால் கைகூடவில்லை. யோகநாயகி (ஆவுடையார் கோவில் இறைவி), கோபுரவேலவன் (பழைய கோபுரத்தில் இடம் பெற்றுள்ள முருகக்கடவுள்), விநாயகர், மாணிக்கவாசகர் ஆகியோரே செய்வித்தனர் என்ற வரிகள் உள்ளன.
பஞ்சாட்சர மண்டபத்தில் பொறிக்கப்பட்டு உள்ள, மற்றொரு பாடலில், விசைய (விஜய) ஆண்டு, துலா மாதத்தில், இந்த மண்டப திருப்பணியை துவங்கி, பிலவ ஆண்டு பங்குனி மாதத்தில், யோகநாயகி காரிகை இந்த பணியை முடித்தாள் என்று, கூறப்பட்டு உள்ளது. மேலும், சுவரோவியங்களை வரைந்து, பாக்கல் (பாவுகல்) எல்லாம் அமைத்தவன் விநாயகனே என்று, மற்றொரு பாடலில் கூறப்பட்டுள்ளது.
இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால் குருந்தமரத் தையும் சிவனாகக் கருதுவ தால், கார்த்திகை சோம வாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபி ஷேகம் நடக்கிறது
ஆறு கால பூஜையின் போதும், இவருக்கு 108 மூலி கைகள் கலந்த தைல அபிஷேகம் நடப்பது விசேஷம். பஞ்சாட்சர மண்டபத்தில் உள்ள சிவனை குதிரைச்சாமி என்று அழைக்கிறார்கள். மாணிக்கவாசகருக்காக, சிவன், குதிரைகளுடன் மது ரைக்கு சென்று அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் ஒப்படைத்தார். குதிரை மீது சென்ற சிவன், இக் கோவிலில் பஞ்சாட்சர மண்டபத்தில் இருக்கிறார். இவரை, குதிரைச்சாமி என்று அழைக்கிறார்கள்.
இத்தலத்தில் குருவாக இருந்து மாணவர்களுக்கு உபதேசம் செய்தபோது, சீடர்கள் அவருக்கு படைத்த உணவை ஏற்றுக்கொண்டார். அவரிடம் பயின்றவர்கள் வீட்டிலிருந்து புழுங்கல் அரிசி சாதம், கீரை, பாகற்காய் என எளிய பொருட்களை அவருக்கு கொடுத்தனர். அதனை சிவனும் விரும்பி வாங்கி சாப்பிட்டார்.
பூஜை கட்டண விபரம்
1.அர்ச்சனை ரூ.5
2.முடி காணிக்கை ரூ.10
3.காது குத்து ரூ.50
4.சகஸ்ரநாமம் ரூ.10
5.அபிஷேகம் ரூ.500
6.திருமணம் ரூ.1,750
தல விருட்சம்
ஆவுடையார்கோவிலின் தல விருட்சமாக குருந்த மரங்கள் உள்ளன. கோவிலில் தியாகராஜ மண்டபத்துக்கு அருகே வடமேற்கு மூலையில் வெளி மதில் சுவரை ஒட்டியதுபோல் அமைந்துள்ள திருமாளி கைப்பத்தியில் தல விருட்சமான குருந்தை மரங்கள் இரண்டு உள்ளன. இந்த தல விருட்சங்களை பக்தர்கள் வலம் வந்து வழிபடுவதற்கு ஏற்றவாறு மேடையில் இடைவெளி அமைக்கப்பட்டுள்ளது.
விழாக்கள்
ஆவுடையார் கோவிவில் மூலவருக்கு மகுடாகமம் உத்தரபாகத் தின்படி பூஜைகள் நடை பெறுகின்றன. ஆனி மகத்திலும் மார்கழி திருவாதிரையில் 10 நாள்கள் பெருவிழா நடை பெறுகிறது.
இத்தலத்தில் நம்பியார்கள் எனப் படுபவர்களே முக்கிய பூஜகர்களாவார்கள். இவர்கள் ஆத்ம நாத சுவாமியை உள்ளிட்ட 301 பேர்களாவர்.
இத்திருக் கோவிலில் ஆறு வகைப்பட்ட பிரிவினர்களின் மூலமாக பூஜைகள் நடை பெறுகின்றன. அந்த விபரம் வருமாறு:
1.மூலவருக்கும், குருந்தமரத்தடியில் உள்ள மூல சுவாமிக்கும் நம்பியார்களும்
2.பரிவார தெய்வங்களுக்குச் சிவாசாரியார்களும்
3.குதிரைச்சாமிக்கு சைவப் பிள்ளைமார் களும்
4.வீரபத்திரருக்கு வேளாளர்களும்
5.கொத்தனார்களும்
6. மகாலிங்க மூர்த்திக்கு அஷ்ட சாஸ்திரக்காரர்கள் எனப்படுவோரும் பூஜைகள் செய்துவரும் ஏற்பாடு இங்குள்ளது.
நாள்தோறும் ஆறுகால பூஜைகள் ஆத்மநாதருக்கு ஆறுகாலங் களி லும் புழுங்கல் அரிசி நிவேதனம் ஒரு தவலையில் வடித்து கைபடாமல் அப்பாத்திரத்தோடு கொண்டு வந்து அமுத மண்டபத்தில் உள்ள கருங்கல் மேடையில் (சுவாமிக்கு எதிரில்) அப்படியே கொட்டி ஆவியோடு சுவாமிக்கு நிவேதிப்பதை நாமும் பார்த்து தரிசிக்கலாம்.
அர்த்த சாமத்தில் தினமும் புளியோதரை, எள் சாதம், பால் சாதம், உளுந்து சாதம், பாகற்காய், முளைக்கீரை நிவேதனம். திருவிழாக் காலங்களில் வழக்கமான நிவேத னங்களுடன் தேன் குழல், வடை, புட்டு, சீயம், அதிரசம், தோசை முதலியவை சிறப்பு நிவேதனமாகும்.
ஆத்மநாத சுவாமிக்கு வருடம் முழுவதும் உள்ள நைவேத்யம் மாணிக்கவாசகருக்கு இந்த இரு விழாக்காலங்களில் (10+10=20 நாட்களில்) படைக்கப்படுகிறது.
கோவில் கல்வெட்டுகளில் இத்தலம் மிழலைக்கூற்றத்து நடுவிற்கூற்றம் பிரம தேசம் தனியூர் திருப்பெருந்துறையான பவுத்திர மாணிக்க சதுர்வேத மங்கலம் என்று குறிக்கப்பட்டுள்ளது. சுந்தரபாண்டிய மண்டபம், அம்பாள் மண்டபச்சுவர்கள், பஞ்சாட்சர மண்டபம் முதலிய இடங்களில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.
இத்திருக்கோவிலுக்குச் சற்று தொலைவில் ஆதிகயிலாய நாதர் கோவில் உள்ளது. தனிக்கோவில். மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசக்காட்சி அங்குதான். இக்கோவில் மாணிக்கவாசகருக்கு முன்பிருந்தே உள்ளது.
இப்பகுதிகள் அனைத்தும் ஒரு காலத்தில் காடாக இருந்ததாம். தற்போது ஆதிகயிலாய நாதர் கோவில் உள்ள இடத்தை, வடக்கூர் (வடக்களூர்) என்றும், ஆவுடையார் கோவில் உள்ள இடத்தை தெற்கூர் என்றும் சொல்கின்றனர்.
ஆதிகயிலாயநாதர் கோவில் கிழக்கு நோக்கியது. சிவகாமி அம்பாள் சந்நிதி தெற்கு, விநாயகர் கிழக்கிலும், பைரவர் தெற்கிலும், நந்தி மேற்கிலும் எழுந்த ருளியுள்ளனர். பராசரர், புலஸ்தியர், அகத்தியர் முதலிய மகரிஷிகள் இங்கிருந்ததாகச் சொல்கின்றனர்.
புழுங்கல் அரிசி நெய்வேத்தியம்
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பூஜைகள் நடைபெறும்போது பச்சை அரிசியிலேயே அமுது படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள். ஆனால் இந்த ஆவுடையார் கோவிலிலே 6 கால பூஜைக்குமே புழுங்கல் அரிசியால் தான் அமுது படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய் கறியும், கீரையும் சேர்த்துப் படைக்கப்படுவது இங்கு மட்டும் தான். அதனை சிவபெருமானும் விரும்பி சாப்பிட்டார் என்பதன் அடிப்படையில் ஆத்மநாதருக்கு புழுங்கல் அரிசி சாதம்தான் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. அடுப்பில் இருந்து இறக்கப்பட்ட சாதத்தை அப்படியே சுவாமி சன்னதிக்கு கொண்டு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள படைகல்லில் கொட்டி விடுகிறார்கள்.
அப்போது சன்னதி கதவுகள் சாத்தப்பட்டு சிறிதுநேரம் கழித்த பின்னரே திறக்கப்படுகிறது. சுவாமி அரூப வடிவிலானவர் என்பதால், அரூபமாகிவிடும் ஆவியுடன் நெய்வேத்தியம் படைக்கப்படுகிறது. மூன்றாம் கால (காலை 11 மணி) பூஜையின்போது மட்டும் தேன்குழல், அதிரசம், வடை, பிட்டு, தோசை, பாயாசம் படைக்கப்படுகிறது. தைப்பொங்கல் தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வாழை இலையில் 16 வகை காய்கறி களுடன், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் மற்றும் கரும்பு படைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலுள்ள நவக்கிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகப் போற்றப்படுகிறது திங்களூர் சந்திரன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திங்களூர், தமிழ்நாட்டிலுள்ள நவக்கிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகப் போற்றப்படுகிறது. மேலும், இத்தலம் ஒரு தேவார வைப்புத் தலமும்கூட. திருநாவுக்கரசரும், சுந்தரரும் தங்கள் பதிகங்களில் திங்களூர் தலத்தைக் குறிப்பிட்டுள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் அவதாரத் தலம் என்ற பெருமையும் திங்களூருக்கு உண்டு.
இறைவன் பெயர்: கைலாசநாதர்
இறைவி பெயர்: பெரியநாயகி
தல வரலாறு
நவக்கிரக ஸ்தலங்களில் திங்களூர் இரண்டாவது ஸ்தலம். தட்சன் தனது 27 புத்திரிகளையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். 27 மனைவிகளிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டிய சந்திரன், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் செலுத்தினான். மற்ற 26 மனைவிகளும் தட்சனிடம் முறையிட்டனர். மாமனார் தட்சன், 27 மனைவிகளிடமும் அன்பு செலுத்தும்படி கூற, சந்திரன் அதை ஏற்க மறுத்தான். கோபம் கண்ட தட்சன், சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான். இட்ட சாபம் நீங்க சந்திரன் இந்த ஸ்தலத்தில் நீண்ட காலம் தவம் செய்தான். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை பூஜித்தான். ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில், இறைவன் காட்சி கொடுத்து சந்திரனின் சாபத்தைப் போக்கினார்.
சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்றதால், இத்தலம் சந்திரனுக்கு உரிய தலமாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானின் ஒளி மூலவர் கைலாசநாதர் திருமேனியில் விழுவதை இன்றும் காணலாம். பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில், கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதை தொடர்ந்து தனி சன்னதியில் அமைந்துள்ள சந்திர பகவானுக்கு லட்சார்ச்சனை நடக்கும்.
இத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இறைவன் மற்றும் தனி சந்நிதியில் காட்சி தரும் சந்திரனை அபிஷேகம், அர்ச்சனை, நெய் விளக்கு ஏற்றி வழிபட, சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுவதால், அன்று சூரிய பூஜையும், மறுநாள் பெளர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறும்.
திங்களூர் தலத்தில் அப்பூதி அடிகள் என்ற சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்துவந்தார். ஒருமுறை, திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், தமது பெயரில் பாடசாலை, கோசாலை, தர்மசாலை, தண்ணீர்ப்பந்தல், அன்னசாலை எனப் பலவும் இருப்பது கண்டு வியப்புற்றார். இவற்றை அமைத்தவர் அப்பூதி அடிகள் என்பதை அறிந்து அவர் வீட்டுக்குச் சென்றார்.
திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும் என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக்கொண்டார். அதற்காக, தோட்டத்துக்குச் சென்று வாழை இலை கொண்டுவருமாறு, சிறுவனான தமது மகனை அப்பூதி அடிகள் அனுப்பிவைத்தார். ஆனால், வாழைத்தோப்பில் பாம்பு கடித்து சிறுவன் இறந்துவிட்டான். மகன் இறந்தது தெரிந்தால், அப்பருக்கு அமுது படைப்பது தடைபடும் என்று கருதிய அப்பூதி அடிகள், மகன் இறந்ததை மறைத்து அப்பரை உணவு உண்ண அழைக்கிறார்.
அப்பர் தம்முடன் அப்பூதி அடிகளின் மகனையும் உணவு அருந்த அழைக்க, அப்பூதி அடிகள் மகன் இறந்துவிட்ட தகவலைச் சொல்கிறார். மகன் இறந்ததைக் கேட்ட அப்பர் பெருமான், “ஒன்று கொலாம்” என்று தொடங்கும் பதிகம் பாடி, இறந்த சிறுவனை உறக்கத்தில் இருந்து விழித்தவனைப்போல் எழச்செய்து உயிர்ப்பிக்கிறார். இந்த அற்புதம் நிகழ்ந்த தலம் திங்களூர் ஆகும். திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் பத்தும் “விடம் தீரத்த திருப்பதிகம்” என்று போற்றப்படுகிறது..
கோவில் அமைப்பு
கிழக்கு நோக்கி உள்ள ஆலயத்துக்குத் தெற்கிலுள்ள வாயிலே பிரதான நுழைவாயிலாக உள்ளது. கருவறையில் இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அம்பாள் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்கு முன் சந்திர தீர்த்தம் உள்ளது. வெளிப் பிராகாரம் வலம் வரும்போது, விஷம் தீர்த்த விநாயகர் சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதி, கோஷ்டத்தில் அமர்ந்த நிலையில் தட்சிணாமூர்த்தி, கஜலெட்சுமி சந்நிதி மற்றும் சண்டிகேஸ்வரர் உடன் சண்டிகேஸ்வரி சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. இத்தலத்தின் ஷேத்திர பாலகரான சந்திரன், மேற்கு திசைநோக்கி இறைவனைப் பார்த்தபடி தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.
திருக்கோயில் உள்மண்டபத்தில் இடப்புறம் அப்பூதி அடிகள், அவருடைய மனைவி, மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு ஆகியோருடைய மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குழந்தைகளுக்கு முதன்முதலாக அன்னம் ஊட்டுவதற்கு தமிழ்நாட்டில் மிகச்சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.
இக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், திருப்பழனம் (பாடல் பெற்ற தலம்) ஊரை அடுத்து சிறிது தூரம் சென்றால், திங்களூர் செல்லும் சாலை பிரிகிறது. அதில் சென்று ஆலயத்தை அடையலாம். திருவையாற்றில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.
ஆலய முகவரி
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்,
திங்களூர்,
திருப்பழனம் அஞ்சல்,
வழி திருவையாறு,
திருவையாறு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613 204.
இறைவன் பெயர்: கைலாசநாதர்
இறைவி பெயர்: பெரியநாயகி
தல வரலாறு
நவக்கிரக ஸ்தலங்களில் திங்களூர் இரண்டாவது ஸ்தலம். தட்சன் தனது 27 புத்திரிகளையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். 27 மனைவிகளிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டிய சந்திரன், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் செலுத்தினான். மற்ற 26 மனைவிகளும் தட்சனிடம் முறையிட்டனர். மாமனார் தட்சன், 27 மனைவிகளிடமும் அன்பு செலுத்தும்படி கூற, சந்திரன் அதை ஏற்க மறுத்தான். கோபம் கண்ட தட்சன், சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான். இட்ட சாபம் நீங்க சந்திரன் இந்த ஸ்தலத்தில் நீண்ட காலம் தவம் செய்தான். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை பூஜித்தான். ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில், இறைவன் காட்சி கொடுத்து சந்திரனின் சாபத்தைப் போக்கினார்.
சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்றதால், இத்தலம் சந்திரனுக்கு உரிய தலமாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானின் ஒளி மூலவர் கைலாசநாதர் திருமேனியில் விழுவதை இன்றும் காணலாம். பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில், கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதை தொடர்ந்து தனி சன்னதியில் அமைந்துள்ள சந்திர பகவானுக்கு லட்சார்ச்சனை நடக்கும்.
இத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இறைவன் மற்றும் தனி சந்நிதியில் காட்சி தரும் சந்திரனை அபிஷேகம், அர்ச்சனை, நெய் விளக்கு ஏற்றி வழிபட, சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுவதால், அன்று சூரிய பூஜையும், மறுநாள் பெளர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறும்.
திங்களூர் தலத்தில் அப்பூதி அடிகள் என்ற சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்துவந்தார். ஒருமுறை, திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், தமது பெயரில் பாடசாலை, கோசாலை, தர்மசாலை, தண்ணீர்ப்பந்தல், அன்னசாலை எனப் பலவும் இருப்பது கண்டு வியப்புற்றார். இவற்றை அமைத்தவர் அப்பூதி அடிகள் என்பதை அறிந்து அவர் வீட்டுக்குச் சென்றார்.
திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும் என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக்கொண்டார். அதற்காக, தோட்டத்துக்குச் சென்று வாழை இலை கொண்டுவருமாறு, சிறுவனான தமது மகனை அப்பூதி அடிகள் அனுப்பிவைத்தார். ஆனால், வாழைத்தோப்பில் பாம்பு கடித்து சிறுவன் இறந்துவிட்டான். மகன் இறந்தது தெரிந்தால், அப்பருக்கு அமுது படைப்பது தடைபடும் என்று கருதிய அப்பூதி அடிகள், மகன் இறந்ததை மறைத்து அப்பரை உணவு உண்ண அழைக்கிறார்.
அப்பர் தம்முடன் அப்பூதி அடிகளின் மகனையும் உணவு அருந்த அழைக்க, அப்பூதி அடிகள் மகன் இறந்துவிட்ட தகவலைச் சொல்கிறார். மகன் இறந்ததைக் கேட்ட அப்பர் பெருமான், “ஒன்று கொலாம்” என்று தொடங்கும் பதிகம் பாடி, இறந்த சிறுவனை உறக்கத்தில் இருந்து விழித்தவனைப்போல் எழச்செய்து உயிர்ப்பிக்கிறார். இந்த அற்புதம் நிகழ்ந்த தலம் திங்களூர் ஆகும். திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் பத்தும் “விடம் தீரத்த திருப்பதிகம்” என்று போற்றப்படுகிறது..
கோவில் அமைப்பு
கிழக்கு நோக்கி உள்ள ஆலயத்துக்குத் தெற்கிலுள்ள வாயிலே பிரதான நுழைவாயிலாக உள்ளது. கருவறையில் இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அம்பாள் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்கு முன் சந்திர தீர்த்தம் உள்ளது. வெளிப் பிராகாரம் வலம் வரும்போது, விஷம் தீர்த்த விநாயகர் சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதி, கோஷ்டத்தில் அமர்ந்த நிலையில் தட்சிணாமூர்த்தி, கஜலெட்சுமி சந்நிதி மற்றும் சண்டிகேஸ்வரர் உடன் சண்டிகேஸ்வரி சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. இத்தலத்தின் ஷேத்திர பாலகரான சந்திரன், மேற்கு திசைநோக்கி இறைவனைப் பார்த்தபடி தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.
திருக்கோயில் உள்மண்டபத்தில் இடப்புறம் அப்பூதி அடிகள், அவருடைய மனைவி, மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு ஆகியோருடைய மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குழந்தைகளுக்கு முதன்முதலாக அன்னம் ஊட்டுவதற்கு தமிழ்நாட்டில் மிகச்சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.
இக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், திருப்பழனம் (பாடல் பெற்ற தலம்) ஊரை அடுத்து சிறிது தூரம் சென்றால், திங்களூர் செல்லும் சாலை பிரிகிறது. அதில் சென்று ஆலயத்தை அடையலாம். திருவையாற்றில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.
ஆலய முகவரி
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்,
திங்களூர்,
திருப்பழனம் அஞ்சல்,
வழி திருவையாறு,
திருவையாறு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613 204.






