என் மலர்
கோவில்கள்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அகத்தியான்பள்ளி என்ற ஊரில் அமைந்திருக்கும், அகத்தீஸ்வரர் கோவிலைப் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
மூலவர்: அகத்தீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர்
அம்பாள்: மங்கைநாயகி, பாகம்பிரியாள்
தல மரம்: வன்னி மரம்
தீர்த்தம்: அகத்திய தீர்த்தம், அக்னிதீர்த்தம் (கடல்)
தேவாரப் பாடல் பெற்ற தமிழ்நாட்டின் 274 சிவாலயங்களில், இது 190-வது ஆலயமாகும். அதேபோல் தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு காவிரித் தென்கரை தலங்களில், 126-வது தலம் இது.
மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த இந்த ஆலயத்தில், ராஜராஜன், மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
குலசேகர பாண்டியன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, அவருக்கு தீராத நோய் ஏற்பட்டது. அப்போது அவர் இத்தல உற்சவத்தை நடத்தியதன் பலனாக, அவரது நோய் நீங்கியது.
இந்த ஆலயத்தில் மூலவரான அகத்தீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இறைவனின் சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்பாளின் சன்னிதி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது.
எமதர்மராஜன் வழிபாடு செய்த இந்த ஆலயத்தில், நவக்கிரகங்கள் அதன் அதன் திசையைத் தவிர்த்து, ஒரே திசையைப் பார்த்தபடி அமைந்திருப்பது வித்தியாசமான அமைப்பாக பார்க்கப்படுகிறது.
சிவன்-பார்வதி திருமணம் கயிலை மலையில் நடைபெற இருந்தது. அதைக் காண தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவரும் கயிலையில் குவிந்ததால் அந்தப் பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. உலகை சமநிலைபடுத்த அகத்தியரை, சிவபெருமான் தென்பகுதிக்கு அனுப்பினார். அப்போது இந்தப் பகுதிக்கு வந்த அகத்தியருக்கு, சிவபெருமான் தன்னுடைய திருமணக் காட்சியை காட்டி அருளினார். அகத்தியர் வழிபட்டதால் இந்த ஊர் ‘அகத்தியான் பள்ளி’ என்று பெயர் பெற்றது என்பது தல வரலாறு.
இந்த ஆலயத்தில் திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும், செல்வ வளம் பெருகவும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
வேண்டுதல் நிறைவேறியவர்கள், இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் சாலையில், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அகத்தியான் பள்ளி திருக்கோவில்.
அம்பாள்: மங்கைநாயகி, பாகம்பிரியாள்
தல மரம்: வன்னி மரம்
தீர்த்தம்: அகத்திய தீர்த்தம், அக்னிதீர்த்தம் (கடல்)
தேவாரப் பாடல் பெற்ற தமிழ்நாட்டின் 274 சிவாலயங்களில், இது 190-வது ஆலயமாகும். அதேபோல் தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு காவிரித் தென்கரை தலங்களில், 126-வது தலம் இது.
மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த இந்த ஆலயத்தில், ராஜராஜன், மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
குலசேகர பாண்டியன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, அவருக்கு தீராத நோய் ஏற்பட்டது. அப்போது அவர் இத்தல உற்சவத்தை நடத்தியதன் பலனாக, அவரது நோய் நீங்கியது.
இந்த ஆலயத்தில் மூலவரான அகத்தீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இறைவனின் சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்பாளின் சன்னிதி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது.
எமதர்மராஜன் வழிபாடு செய்த இந்த ஆலயத்தில், நவக்கிரகங்கள் அதன் அதன் திசையைத் தவிர்த்து, ஒரே திசையைப் பார்த்தபடி அமைந்திருப்பது வித்தியாசமான அமைப்பாக பார்க்கப்படுகிறது.
சிவன்-பார்வதி திருமணம் கயிலை மலையில் நடைபெற இருந்தது. அதைக் காண தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவரும் கயிலையில் குவிந்ததால் அந்தப் பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. உலகை சமநிலைபடுத்த அகத்தியரை, சிவபெருமான் தென்பகுதிக்கு அனுப்பினார். அப்போது இந்தப் பகுதிக்கு வந்த அகத்தியருக்கு, சிவபெருமான் தன்னுடைய திருமணக் காட்சியை காட்டி அருளினார். அகத்தியர் வழிபட்டதால் இந்த ஊர் ‘அகத்தியான் பள்ளி’ என்று பெயர் பெற்றது என்பது தல வரலாறு.
இந்த ஆலயத்தில் திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும், செல்வ வளம் பெருகவும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
வேண்டுதல் நிறைவேறியவர்கள், இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் சாலையில், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அகத்தியான் பள்ளி திருக்கோவில்.
கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் என்று இயற்கை சூழலில் அமைந்து இருக்கும் கொடுமுடி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் அமைந்து உள்ளது.
சிவன், பிரம்மா, திருமால் என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் புண்ணியஸ்தலம் கொடுமுடி. ஈரோட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது கொடுமுடி.
பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் பிரம்மபுரி என்றும், திருமால் பூஜித்ததால் அரிகரபுரம் என்றும், கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமுதபுரி என்றும் இந்த தலத்துக்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட தலம் என்பது மிகவும் சிறப்பானதாகும்.
மலையின் முடியே இங்கு சிவலிங்கமாக காட்சி அளிப்பதால் கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளி உள்ள சிவபெருமானை மகுடேசுவரர் என்று அழைக்கிறார்கள். மகுடேசுவரரின் திருமணத்தை காண திருமாலும், பிரம்மனும் இங்கு வந்தார்கள் என்பது ஐதீகம். கோவிலின் முன்பு காவிரி ஆறு செல்கிறது.
கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள வன்னிமரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
நாகதோஷம் உள்ளவர்கள், ராகு கேது தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் வந்து பரிகாரம் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். நாக தோஷம் நீங்குவதற்கு, ஒருவருக்கு எத்தனை வயது ஆகிறதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்ததாக வன்னி மரத்திற்கு அடியில், கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் நாக தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று கூறுகிறது வரலாறு.
கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் என்று இயற்கை சூழலில் அமைந்து இருக்கும் கொடுமுடி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் அமைந்து உள்ளது.
கோவிலின் அருகிலேயே ரெயில் நிலையமும் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் வந்து சாமியை தரிசித்து செல்கிறார்கள். பழனி கோவில் திருவிழா என்றாலும், கொடுமுடியின் சுற்றுவட்டார கோவில்கள் திருவிழா என்றாலும் கொடுமுடி காவிரி கூடுதுறையில் இருந்துதான் தீர்த்தம் எடுத்துச்செல்லப்படும். இதனால் எப்போதும் கொடுமுடி திருவிழா கோலம் பூண்டு இருக்கும்.
செல்லும் வழி
ஈரோட்டில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவிலும் கொடுமுடி உள்ளது.
முகவரி:
அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்,
திருப்பாண்டிக் கொடுமுடி-638 151,
ஈரோடு மாவட்டம்.
பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் பிரம்மபுரி என்றும், திருமால் பூஜித்ததால் அரிகரபுரம் என்றும், கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமுதபுரி என்றும் இந்த தலத்துக்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட தலம் என்பது மிகவும் சிறப்பானதாகும்.
மலையின் முடியே இங்கு சிவலிங்கமாக காட்சி அளிப்பதால் கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளி உள்ள சிவபெருமானை மகுடேசுவரர் என்று அழைக்கிறார்கள். மகுடேசுவரரின் திருமணத்தை காண திருமாலும், பிரம்மனும் இங்கு வந்தார்கள் என்பது ஐதீகம். கோவிலின் முன்பு காவிரி ஆறு செல்கிறது.
கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள வன்னிமரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
நாகதோஷம் உள்ளவர்கள், ராகு கேது தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் வந்து பரிகாரம் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். நாக தோஷம் நீங்குவதற்கு, ஒருவருக்கு எத்தனை வயது ஆகிறதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்ததாக வன்னி மரத்திற்கு அடியில், கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் நாக தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று கூறுகிறது வரலாறு.
கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் என்று இயற்கை சூழலில் அமைந்து இருக்கும் கொடுமுடி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் அமைந்து உள்ளது.
கோவிலின் அருகிலேயே ரெயில் நிலையமும் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் வந்து சாமியை தரிசித்து செல்கிறார்கள். பழனி கோவில் திருவிழா என்றாலும், கொடுமுடியின் சுற்றுவட்டார கோவில்கள் திருவிழா என்றாலும் கொடுமுடி காவிரி கூடுதுறையில் இருந்துதான் தீர்த்தம் எடுத்துச்செல்லப்படும். இதனால் எப்போதும் கொடுமுடி திருவிழா கோலம் பூண்டு இருக்கும்.
செல்லும் வழி
ஈரோட்டில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவிலும் கொடுமுடி உள்ளது.
முகவரி:
அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்,
திருப்பாண்டிக் கொடுமுடி-638 151,
ஈரோடு மாவட்டம்.
இந்தக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு முன்பாக அணையா விளக்கு ஒன்று உள்ளது. அந்த விளக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.
கடலூர் வண்ணாரபாளையத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த கோவிலில் ஞான சக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி போன்ற சாமிகளும் உள்ளன.காவல் தெய்வமாக காத்த வராயன் சாமி உள்ளது. கோவிலில் அம்மன் வடக்கு பார்த்து அமைந்திருப்பது மிகவும் சிறப்பு அம்சமாகும். அம்மன் சன்ன திக்கு முன்பாக சிங்கம் சிலை அமைந்திருப்பது அம்மன் ஆக்ரோஷமானவர் என்பதை காட்டுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுமாறு அம்மனை வேண்டிக் கொண்டு அங்கபிரதட்சணம் செய்து வழிபாடு செய்கின்றனர். இந்த கோவிலில் அரசமரம், வேப்பமரத்தின் அடியில் நாகரும், விநாயகரும் உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்துவிட்டு அதன் பின்னர் நாகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தால் அவர்களுக்குரிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
முத்து மாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடை பெறும். அதன்பின்னர் கோவிலில் சிறப்பு யாக நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் பில்லி சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வர்கள், நோயால் பாதிக்கப் பட் டவர்களுக்கு அவர் களது உடலில் உள்ள பிணிகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள்.
ஆடி மாத வெள்ளிகிழமைகளில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்பான பூஜைகள் செய்யப்படுகிறது.
இந்த கோவிலில் நவராத்திரி விழா மற்றும் மாசி மாதம் தெப்ப உற்சவ விழா போன்ற நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெறும்.
நடைதிறப்பு
முத்துமாரியம்மன் கோவிலில் தினமும் காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இதேபோல் மாலையில் 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. விசேஷ நாட்களில் கூடுதல் நேரம் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
அணையா விளக்கு
இந்தக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு முன்பாக அணையா விளக்கு ஒன்று உள்ளது. அந்த விளக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுமாறு அம்மனை வேண்டிக் கொண்டு அந்த விளக்கில் எண்ணெயை ஊற்றி செல்வார்கள்.
இந்த விளக்கு கோவிலில் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதற்கு காரணம் தற்போது இந்த விளக்கு உள்ள இடத்தில் தான் பழங்காலத்தில் அம்மன் சன்னதி இருந்து உள்ளது. கோவிலுக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்ததால் கோவில் சீரமைக்கபட்டு பெரிதாக கட்டப்பட்டது. அதன் பின்னர் அம்மன் சன்னதி மாற்றி அமைக்கபட்டது.
அம்மன் சன்னதி இருந்த இடத்தில் இந்த விளக்கு வைக்கப்பட்டது. அம்மன் ஒளி வடிவமாக விளங்குகிறார் என்பதை உணர்த்தும் வகையில் இந்த கோவிலில் அணையா விளக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு 24 மணி நேரமும் 365 நாட்களும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண தடை
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு அம்மனுக்கு திருமாங்கல்ய பொட்டு சாத்துவதாக வேண்டிக் கொண்டு தங்கத்தினால் செய்யப்பட்ட சிறிய வடிவிலான பொட்டு போன்ற பொருளை மஞ்சள் கயிற்றில் கோர்த்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினால் திருமண தடை நீங்கி உடனடியாக திருமணம் நடைபெறும்.
நீண்ட நாட்களாக திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனுக்கு மாங்கல்ய பொட்டு செலுத்தி வழிபட்ட உடன் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து 48 நாட்கள் நெய்தீபம் ஏற்றி அம்மனை மனம் உருகி வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
முத்துமாரி அம்மன் கோவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் செடல் உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த கோவிலில் ஞான சக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி போன்ற சாமிகளும் உள்ளன.காவல் தெய்வமாக காத்த வராயன் சாமி உள்ளது. கோவிலில் அம்மன் வடக்கு பார்த்து அமைந்திருப்பது மிகவும் சிறப்பு அம்சமாகும். அம்மன் சன்ன திக்கு முன்பாக சிங்கம் சிலை அமைந்திருப்பது அம்மன் ஆக்ரோஷமானவர் என்பதை காட்டுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுமாறு அம்மனை வேண்டிக் கொண்டு அங்கபிரதட்சணம் செய்து வழிபாடு செய்கின்றனர். இந்த கோவிலில் அரசமரம், வேப்பமரத்தின் அடியில் நாகரும், விநாயகரும் உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்துவிட்டு அதன் பின்னர் நாகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தால் அவர்களுக்குரிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
முத்து மாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடை பெறும். அதன்பின்னர் கோவிலில் சிறப்பு யாக நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் பில்லி சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வர்கள், நோயால் பாதிக்கப் பட் டவர்களுக்கு அவர் களது உடலில் உள்ள பிணிகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள்.
ஆடி மாத வெள்ளிகிழமைகளில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்பான பூஜைகள் செய்யப்படுகிறது.
இந்த கோவிலில் நவராத்திரி விழா மற்றும் மாசி மாதம் தெப்ப உற்சவ விழா போன்ற நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெறும்.
நடைதிறப்பு
முத்துமாரியம்மன் கோவிலில் தினமும் காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இதேபோல் மாலையில் 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. விசேஷ நாட்களில் கூடுதல் நேரம் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
அணையா விளக்கு
இந்தக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு முன்பாக அணையா விளக்கு ஒன்று உள்ளது. அந்த விளக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுமாறு அம்மனை வேண்டிக் கொண்டு அந்த விளக்கில் எண்ணெயை ஊற்றி செல்வார்கள்.
இந்த விளக்கு கோவிலில் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதற்கு காரணம் தற்போது இந்த விளக்கு உள்ள இடத்தில் தான் பழங்காலத்தில் அம்மன் சன்னதி இருந்து உள்ளது. கோவிலுக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்ததால் கோவில் சீரமைக்கபட்டு பெரிதாக கட்டப்பட்டது. அதன் பின்னர் அம்மன் சன்னதி மாற்றி அமைக்கபட்டது.
அம்மன் சன்னதி இருந்த இடத்தில் இந்த விளக்கு வைக்கப்பட்டது. அம்மன் ஒளி வடிவமாக விளங்குகிறார் என்பதை உணர்த்தும் வகையில் இந்த கோவிலில் அணையா விளக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு 24 மணி நேரமும் 365 நாட்களும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண தடை
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு அம்மனுக்கு திருமாங்கல்ய பொட்டு சாத்துவதாக வேண்டிக் கொண்டு தங்கத்தினால் செய்யப்பட்ட சிறிய வடிவிலான பொட்டு போன்ற பொருளை மஞ்சள் கயிற்றில் கோர்த்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினால் திருமண தடை நீங்கி உடனடியாக திருமணம் நடைபெறும்.
நீண்ட நாட்களாக திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனுக்கு மாங்கல்ய பொட்டு செலுத்தி வழிபட்ட உடன் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து 48 நாட்கள் நெய்தீபம் ஏற்றி அம்மனை மனம் உருகி வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
முத்துமாரி அம்மன் கோவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் செடல் உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த கோவிலில் மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.
மூலவர் – வீழிநாதேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்)
உற்சவர் – கல்யாணசுந்தரர்
அம்மன் – சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை)
தல விருட்சம் – வீழிச்செடி
தீர்த்தம் – விஷ்ணுதீர்த்தம்
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருவீழிமிழலை
மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். அவர் பரமசிவனிடம், சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள்அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார். விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது. அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராகத் தந்தார். இதனால் தான் கோயில்களில் “கண்மலர்” காணிக்கை தரும் பழக்கம் உருவானது. விஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கண்மலர் இன்றும் சிவனின் பாதத்தில் இருப்பதைக்காணலாம். இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்கராயுதத்தைக் கொடுத்தருளினார்.
காத்தியாயன முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார். இவரது தவத்திற்கு மெச்சிய பார்வதி, அந்த முனிவருக்கே மகளாக பிறந்தாள். அக்குழந்தைக்கு கார்த்தியாயினி என்று பெயரிட்டு வளர்த்தனர். பெண்ணிற்கு திருமண வயது வந்ததும், இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினார். முனிவரின் வேண்டுகோளின் படி சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் இத்தலம் எழுந்தருளி அம்மனைத் திருமணம் செய்தார். அப்போது முனிவர், என்றென்றும் இதே திருமணக்கோலத்தில் இத்தலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார். அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் சந்தனம், செண்பகம், பலா, விளா ஆகிய மரங்கள் அடங்கிய காடுகளாக இருந்தன. மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இத்தல இறைவன் மேல் கொண்ட அன்பினால் தினமும் விளாங்கனியை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி, அஷ்டமாசித்திகளை வழங்கினார். வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.
சம்பந்தரும், நாவுக்கரசரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருவீழிமிழலையில் சில காலம் தங்கினர். அப்போது பஞ்சம் ஏற்பட்டது. இருவரும் வீழிநாதரை பணிந்து பஞ்சம் போக்க பாடினர். இருவரது கனவிலும் தோன்றிய ஈசன், தினமும் ஒரு பொற்காசு தருவதாகவும், அடியார்களின் பசி தீர்க்கும்படியும் கூறினார். அதன்படி கிழக்குப்பீடத்தில் உள்ள காசை சம்பந்தரும், மேற்குப்பீடத்திலுள்ள காசை திருநாவுக்கரசரும் எடுத்து அடியார்களிடம் கொடுத்து, அவர்கள் பசி போக்கினர். இப்போதும் படிக்காசு பீடம் இருக்கிறது.
இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் எனப்படுகிறார். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட “வவ்வால் நந்தி மண்டபம்” உள்ளது. சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன. கோயில் மிகப்பெரிது. கோயில் முன்பு உள்ள தீர்த்தம் விஷ்ணு தீர்த்தம். திருமால் விண்ணிலிருந்த்து கொணர்ந்த விண்ணிழி விமானமே கோயிலாயிற்று. இங்கு சிவபெருமான் காத்யாயினியை மணந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். இச்சிற்பம் மூலவர் பின்புறம் உள்ளது. உற்சவ மூர்த்தம் மாப்பிள்ளை சுவாமி மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோயிலை சுற்றி பத்ம தீர்த்தம், குபேர தீர்த்தம், புஷ்கரணி, இந்திர தீர்த்தம் முதலான 25 தீர்த்தங்கள் உள்ளன. கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. மிகப் பெரிய கோயில். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது. தெற்குப் பிராகாரத்தில் தல விநாயகர் (படிக்காசு விநாயகர்) சந்நிதியும், மேற்கில் சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகளும், வடக்கில் சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. நடராசர் சந்நிதி சிறப்பானது. இங்கு பாதாள நந்தி உள்ளது. முழுக் கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
திருவாரூரில் இருந்து 28 கி.மீ., தூரத்திலுள்ள பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து 4 கி.மீ., ஆட்டோவில் செல்லலாம். கும்பகோணத்தில் இருந்து இரவாஞ்சேரி வழியாக செல்லும் பஸ்சில் (26 கி.மீ.,) தென்கரை ஸ்டாப்பில் இறங்கினால், கோயிலுக்கு நடந்தே சென்று விடலாம்.
அருள்மிகு வீழிநாதேஸ்வரர் கோவில்,
திருவீழிமிழலை,
திருவாரூர் மாவட்டம்.
உற்சவர் – கல்யாணசுந்தரர்
அம்மன் – சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை)
தல விருட்சம் – வீழிச்செடி
தீர்த்தம் – விஷ்ணுதீர்த்தம்
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருவீழிமிழலை
மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். அவர் பரமசிவனிடம், சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள்அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார். விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது. அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராகத் தந்தார். இதனால் தான் கோயில்களில் “கண்மலர்” காணிக்கை தரும் பழக்கம் உருவானது. விஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கண்மலர் இன்றும் சிவனின் பாதத்தில் இருப்பதைக்காணலாம். இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்கராயுதத்தைக் கொடுத்தருளினார்.
காத்தியாயன முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார். இவரது தவத்திற்கு மெச்சிய பார்வதி, அந்த முனிவருக்கே மகளாக பிறந்தாள். அக்குழந்தைக்கு கார்த்தியாயினி என்று பெயரிட்டு வளர்த்தனர். பெண்ணிற்கு திருமண வயது வந்ததும், இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினார். முனிவரின் வேண்டுகோளின் படி சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் இத்தலம் எழுந்தருளி அம்மனைத் திருமணம் செய்தார். அப்போது முனிவர், என்றென்றும் இதே திருமணக்கோலத்தில் இத்தலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார். அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் சந்தனம், செண்பகம், பலா, விளா ஆகிய மரங்கள் அடங்கிய காடுகளாக இருந்தன. மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இத்தல இறைவன் மேல் கொண்ட அன்பினால் தினமும் விளாங்கனியை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி, அஷ்டமாசித்திகளை வழங்கினார். வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.
சம்பந்தரும், நாவுக்கரசரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருவீழிமிழலையில் சில காலம் தங்கினர். அப்போது பஞ்சம் ஏற்பட்டது. இருவரும் வீழிநாதரை பணிந்து பஞ்சம் போக்க பாடினர். இருவரது கனவிலும் தோன்றிய ஈசன், தினமும் ஒரு பொற்காசு தருவதாகவும், அடியார்களின் பசி தீர்க்கும்படியும் கூறினார். அதன்படி கிழக்குப்பீடத்தில் உள்ள காசை சம்பந்தரும், மேற்குப்பீடத்திலுள்ள காசை திருநாவுக்கரசரும் எடுத்து அடியார்களிடம் கொடுத்து, அவர்கள் பசி போக்கினர். இப்போதும் படிக்காசு பீடம் இருக்கிறது.
இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் எனப்படுகிறார். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட “வவ்வால் நந்தி மண்டபம்” உள்ளது. சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன. கோயில் மிகப்பெரிது. கோயில் முன்பு உள்ள தீர்த்தம் விஷ்ணு தீர்த்தம். திருமால் விண்ணிலிருந்த்து கொணர்ந்த விண்ணிழி விமானமே கோயிலாயிற்று. இங்கு சிவபெருமான் காத்யாயினியை மணந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். இச்சிற்பம் மூலவர் பின்புறம் உள்ளது. உற்சவ மூர்த்தம் மாப்பிள்ளை சுவாமி மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோயிலை சுற்றி பத்ம தீர்த்தம், குபேர தீர்த்தம், புஷ்கரணி, இந்திர தீர்த்தம் முதலான 25 தீர்த்தங்கள் உள்ளன. கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. மிகப் பெரிய கோயில். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது. தெற்குப் பிராகாரத்தில் தல விநாயகர் (படிக்காசு விநாயகர்) சந்நிதியும், மேற்கில் சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகளும், வடக்கில் சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. நடராசர் சந்நிதி சிறப்பானது. இங்கு பாதாள நந்தி உள்ளது. முழுக் கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
திருவாரூரில் இருந்து 28 கி.மீ., தூரத்திலுள்ள பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து 4 கி.மீ., ஆட்டோவில் செல்லலாம். கும்பகோணத்தில் இருந்து இரவாஞ்சேரி வழியாக செல்லும் பஸ்சில் (26 கி.மீ.,) தென்கரை ஸ்டாப்பில் இறங்கினால், கோயிலுக்கு நடந்தே சென்று விடலாம்.
அருள்மிகு வீழிநாதேஸ்வரர் கோவில்,
திருவீழிமிழலை,
திருவாரூர் மாவட்டம்.
திருமணத் திருத்தலம் என்பதால் ஸ்ரீபரிமளசுகந்த நாயகியை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மூலவர் – உத்தவேதீஸ்வரர்
அம்மன் – அரும்பன்ன வனமுலைநாயகி
தல விருட்சம் – உத்தாலமரம்
தீர்த்தம் – பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள்
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருத்துருத்தி, குற்றாலம்
திருத்துருத்தி குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 37-ஆவது சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு உண்டான நோய் இத்தலத் தீர்த்தத்தில் நீராட நீங்கியதென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
தல விருட்சம் உத்தால மரம். இதைக் கொண்டு உத்தால வனம் எனப்பட்டது மருவி குத்தாலம் ஆயிற்று.
தலவரலாறு
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்ச் சோழ மன்னர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இத்தலத்தில் ஸ்ரீ சௌந்திர நாயகி ’ஸ்ரீ சக்கர பீட நிலையாய நம’ என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம வடிவில் அமைந்துள்ளார். ஸ்ரீபரிமளசுகந்த நாயகி ’பிந்து தர்பண விந்துஷ்டாயின நமஹ’ என்ற வடிவிலும் அமைந்துள்ளார். பரத மகரிஷி தமக்குக் குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றியவர் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி
கோயில் அமைப்பு
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். கொடிமரத்தில் கொடிமர விநாயகர் உள்ளார். வலப்புறம் உத்தால மரம் உள்ளது. நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது இடப்புறம் அம்மன் சன்னிதி உள்ளது. அதற்கடுத்து உள்ளே மகாலட்சுமி சன்னிதி, சபாநாயகர் சன்னிதிகள் உள்ளன. எதிரில் உற்சவமூர்த்திகள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் அடிமுடிகாணா அண்ணலும், தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். கருவறை வெளிச்சுற்றில் நவக்கிரகம், மங்களசனீஸ்வரர், பைரவர், விசுவநாதர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், ஆரியன் ஆகியோர் உள்ளனர். அருகே லிங்கத் திருமேனிகள் உள்ளன. அடுத்து 63 நாயன்மார்கள் உள்ளனர். திருச்சுற்றில் வலம் வரும்போது சண்டிகேஸ்வரர் சன்னிதி காணப்படுகிறது.
மூலவர்– உக்தவேதீஸ்வரர். அம்மன்– அரும்பன்ன வனமுலையம்மன். இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும். தன்னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால் வருத்தமடைந்த அக்னி இங்கு வந்துதான் தன் குறையைப் போக்கி அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனான். இங்கு பார்வதி, காளி ஆகியோரும், காசிபன் , ஆங்கீரசன், கவுதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்த ரிஷிகளும் இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.
திருமணத் திருத்தலம் என்பதால் ஸ்ரீபரிமளசுகந்த நாயகியை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்
அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்,
குத்தாலம் (திருத்துருத்தி),
நாகப்பட்டினம் மாவட்டம்.
அம்மன் – அரும்பன்ன வனமுலைநாயகி
தல விருட்சம் – உத்தாலமரம்
தீர்த்தம் – பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள்
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருத்துருத்தி, குற்றாலம்
திருத்துருத்தி குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 37-ஆவது சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு உண்டான நோய் இத்தலத் தீர்த்தத்தில் நீராட நீங்கியதென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
தல விருட்சம் உத்தால மரம். இதைக் கொண்டு உத்தால வனம் எனப்பட்டது மருவி குத்தாலம் ஆயிற்று.
தலவரலாறு
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்ச் சோழ மன்னர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இத்தலத்தில் ஸ்ரீ சௌந்திர நாயகி ’ஸ்ரீ சக்கர பீட நிலையாய நம’ என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம வடிவில் அமைந்துள்ளார். ஸ்ரீபரிமளசுகந்த நாயகி ’பிந்து தர்பண விந்துஷ்டாயின நமஹ’ என்ற வடிவிலும் அமைந்துள்ளார். பரத மகரிஷி தமக்குக் குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றியவர் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி
கோயில் அமைப்பு
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். கொடிமரத்தில் கொடிமர விநாயகர் உள்ளார். வலப்புறம் உத்தால மரம் உள்ளது. நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது இடப்புறம் அம்மன் சன்னிதி உள்ளது. அதற்கடுத்து உள்ளே மகாலட்சுமி சன்னிதி, சபாநாயகர் சன்னிதிகள் உள்ளன. எதிரில் உற்சவமூர்த்திகள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் அடிமுடிகாணா அண்ணலும், தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். கருவறை வெளிச்சுற்றில் நவக்கிரகம், மங்களசனீஸ்வரர், பைரவர், விசுவநாதர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், ஆரியன் ஆகியோர் உள்ளனர். அருகே லிங்கத் திருமேனிகள் உள்ளன. அடுத்து 63 நாயன்மார்கள் உள்ளனர். திருச்சுற்றில் வலம் வரும்போது சண்டிகேஸ்வரர் சன்னிதி காணப்படுகிறது.
மூலவர்– உக்தவேதீஸ்வரர். அம்மன்– அரும்பன்ன வனமுலையம்மன். இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும். தன்னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால் வருத்தமடைந்த அக்னி இங்கு வந்துதான் தன் குறையைப் போக்கி அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனான். இங்கு பார்வதி, காளி ஆகியோரும், காசிபன் , ஆங்கீரசன், கவுதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்த ரிஷிகளும் இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.
திருமணத் திருத்தலம் என்பதால் ஸ்ரீபரிமளசுகந்த நாயகியை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்
அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்,
குத்தாலம் (திருத்துருத்தி),
நாகப்பட்டினம் மாவட்டம்.
‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்றொரு பழமொழி உண்டு. இந்த குருகூரின் மற்றொரு பெயர் ஆழ்வார் திருநகரி என்பதாகும். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார்.
‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்றொரு பழமொழி உண்டு. இந்த குருகூரின் மற்றொரு பெயர் ஆழ்வார் திருநகரி என்பதாகும். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
இங்கே கோவிந்த விமானம் என்கிற விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரது திருநாமம் ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் என்பதாகும். முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், ‘ஆதிநாதன்’ என்று அழைக்கப்பட்டார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள்.
வைணவ சித்தாந்த வழிகாட்டிகளுள் ஒருவரான நம்மாழ்வார் அவதரித்த தலம் இது. நம்மாழ்வாரின் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள இத்தலத்து இறைவனை, பிரம்ம தேவர், நம்மாழ்வார், மதுரகவிகள் ஆகியோர் தரிசித்து பேறு பெற்றுள்ளனர். இத்தலத்தின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் மற்றும் தாமிரபரணி நதி ஆகியவை ஆகும். பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், ஆழ்வார் பெயராலேயே வழங்கப்பெறும் திருத்தலம் இது ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.
குருகு என்றால் ‘பறவை, சங்கு’ எனப் பல பொருள் உண்டு. இத்தலத்தில் உள்ள பெருமாளை, சங்கன் எனும் சங்குகளின் தலைவன் வழிபட்டதால் இத்தலம் ‘குருகூர்’ எனப் பெயர் பெற்றது. பிரளய காலம் முடிந்த பின் தோன்றிய முதல் தலம் என்பதால் ‘ஆதி ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆதிசேஷனின் அவதாரமாகிய லட்சுமணன், திருப்புளியாழ்வாராக இங்கு அவதரித்தமையால் இத்தலம் ‘சேஷ ஷேத்ரம்’ எனப்படுகிறது.
நான்முகனிடம் உயிர்களைப் படைக்கும் பணியினை பரந்தாமன் அளித்திருந்தார். இருப்பினும் பிரம்மனுக்கு அது தொடர்பாக சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் எல்லாம் திருமாலின் உதவியை நாடினார். ஒருமுறை திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தார் பிரம்மதேவர். இதையடுத்து அவர் முன் விஷ்ணு தோன்றினார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது படைப்புத் தொழிலுக்கு, எல்லா காலத்திலும் உறுதுணையாக இருப்பதாக வாக்களித்தார். இவ்வாறு பிரம்மதேவருக்கு அருள்புரிவதற்காக அவதரித்த தலமே குருகாசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் ஆகும்.
கோவில் அமைப்பு :
திருக்கோவில் ராஜகோபுரம் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்புடன் அமைந்துள்ளது. ஆதிநாதவல்லி, பரமபத நாதன், சக்கரத்தாழ்வார், தசாவதாரம், குருகூர் நாச்சியார், நம்மாழ்வார் ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளத் தலமாகும். கட்டிட அமைப்பால் வெவ்வேறு காலங்களில் விரிவு படுத்தப்பட்டிருந்தாலும், நம்மாழ்வார் காலத்திலேயே திருக்கோவில் பிரசித்தி பெற்றிருந்தாலும் விரிவு படுத்தல் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து உள்ளது.
ஆதிசேஷனின் அவதாரமாகவும், ராமாயணத்தில் லட்சுமணனின் அவதாரமாக தோன்றியவர் திருப்புளியாழ்வார். இவர் நம்மாழ்வார் 16 ஆண்டுகள் பேசாத குழந்தையாக தவம் மேற்கொள்வதற்காக அங்கு நின்றார். அந்தப் புளிய மரப் பொந்தில் நம்மாழ்வார் இருந்தார். இந்த புளியமரத்தின் அடியில் நம்மாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. புளிய மரத்திற்கும், சன்னிதிக்கும் பூஜை உண்டு. புளிய மரத்தின் அடியில் 36 திவ்ய தேசப் பெருமாள்களும் காட்சி தருகின்றனர். இந்தப் புளிய மரம் 5,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழுக்காது. இரவில் இதன் இலைகள் உறங்குவதில்லை. நம்மாழ்வார் உற்சவ விக்கிரகம் உலோகம் கொண்டு செய்யப்பட்டதில்லை. தாமிர பரணித் தண்ணீரினை காய்ச்சக் காய்ச்ச முதலில் உடையவர் விக்கிரகமும், பின்னர் நம்மாழ்வார் விக்கிரகமும் வெளிவந்துள்ளது.
நவதிருப்பதிகளில் குரு தலம் :
இத்தலத்தைச் சுற்றி 8 திருப்பதிகள் உள்ளன. இதனையும் சேர்த்து ‘நவதிருப்பதி’ எனப்படுகிறது. இந்த நவதிருப்பதிகளும் இப்போது நவக்கிரகங்களின் தலங்களாகக் கருதப்படுகின்றன. அதில் இத்தலம் குருவுக்குரியதாகும்.
உற்சவ காலங்களில் ஆழ்வார், திருமஞ்சன மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருள்வதும், சேவாகாலம் நடைபெற்ற பின்னர் தைலக்காப்பு செய்யப்படுவதும் இங்கு மட்டுமே நடைபெறும் விசேஷ மாகும். மார்கழி திருவாதிரை அன்று ஆழ்வாருக்கும், ராமானுஜருக்கும் ஒரே ஆசனத்தில் திருமஞ்சனம் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். சித்திரையில் உத்திர நட்சத்திரத்தை இறுதியாகக் கொண்டு 10 நாள் பெருமாளுக்கும், வைகாசியில் விசாகம் இறுதி நாளாகக் கொண்டு 10 நாள் ஆழ்வாருக்கும் மகோற்சவங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
நவ கருட சேவை :
நம்மாழ்வார் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார். ஆதலால் இத்தலத்தில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரும் திருவிழாக்களில், ஆழ்வார்திருநகரி வைகாசி விசாகப் பெருந்திருவிழா குறிப்பிடத்தக்கது. வைகாசி விசாகத்தை இறுதி நாளாக வைத்து, கோவிலில் கொடியேற்றப்படும். இந்த திருவிழாவின் 5-ம் நாள் உற்சவம் முக்கியத்துவம் பெற்றது. அன்றைய விழாவில் ஆழ்வார் திருநகரியைச் சுற்றியுள்ள 8 திருப்பதிகளில் இருந்தும் எம்பெருமாள்கள், பல்லக்கில் ஆழ்வார் திருநகரி வந்தடைவார்கள். ஆதிநாதர் கோவில் முற்றத்தில் நவ திருப்பதி பெருமாள்களுக்கும் திருமஞ்சனம், திருவாராதனை செய்யப்படும். இரவு 11 மணி அளவில் இறைவன் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சி தருவார்.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் பாதையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.
‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்றொரு பழமொழி உண்டு. இந்த குருகூரின் மற்றொரு பெயர் ஆழ்வார் திருநகரி என்பதாகும். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
இங்கே கோவிந்த விமானம் என்கிற விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரது திருநாமம் ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் என்பதாகும். முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், ‘ஆதிநாதன்’ என்று அழைக்கப்பட்டார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள்.
வைணவ சித்தாந்த வழிகாட்டிகளுள் ஒருவரான நம்மாழ்வார் அவதரித்த தலம் இது. நம்மாழ்வாரின் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள இத்தலத்து இறைவனை, பிரம்ம தேவர், நம்மாழ்வார், மதுரகவிகள் ஆகியோர் தரிசித்து பேறு பெற்றுள்ளனர். இத்தலத்தின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் மற்றும் தாமிரபரணி நதி ஆகியவை ஆகும். பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், ஆழ்வார் பெயராலேயே வழங்கப்பெறும் திருத்தலம் இது ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.
குருகு என்றால் ‘பறவை, சங்கு’ எனப் பல பொருள் உண்டு. இத்தலத்தில் உள்ள பெருமாளை, சங்கன் எனும் சங்குகளின் தலைவன் வழிபட்டதால் இத்தலம் ‘குருகூர்’ எனப் பெயர் பெற்றது. பிரளய காலம் முடிந்த பின் தோன்றிய முதல் தலம் என்பதால் ‘ஆதி ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆதிசேஷனின் அவதாரமாகிய லட்சுமணன், திருப்புளியாழ்வாராக இங்கு அவதரித்தமையால் இத்தலம் ‘சேஷ ஷேத்ரம்’ எனப்படுகிறது.
நான்முகனிடம் உயிர்களைப் படைக்கும் பணியினை பரந்தாமன் அளித்திருந்தார். இருப்பினும் பிரம்மனுக்கு அது தொடர்பாக சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் எல்லாம் திருமாலின் உதவியை நாடினார். ஒருமுறை திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தார் பிரம்மதேவர். இதையடுத்து அவர் முன் விஷ்ணு தோன்றினார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது படைப்புத் தொழிலுக்கு, எல்லா காலத்திலும் உறுதுணையாக இருப்பதாக வாக்களித்தார். இவ்வாறு பிரம்மதேவருக்கு அருள்புரிவதற்காக அவதரித்த தலமே குருகாசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் ஆகும்.
கோவில் அமைப்பு :
திருக்கோவில் ராஜகோபுரம் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்புடன் அமைந்துள்ளது. ஆதிநாதவல்லி, பரமபத நாதன், சக்கரத்தாழ்வார், தசாவதாரம், குருகூர் நாச்சியார், நம்மாழ்வார் ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளத் தலமாகும். கட்டிட அமைப்பால் வெவ்வேறு காலங்களில் விரிவு படுத்தப்பட்டிருந்தாலும், நம்மாழ்வார் காலத்திலேயே திருக்கோவில் பிரசித்தி பெற்றிருந்தாலும் விரிவு படுத்தல் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து உள்ளது.
ஆதிசேஷனின் அவதாரமாகவும், ராமாயணத்தில் லட்சுமணனின் அவதாரமாக தோன்றியவர் திருப்புளியாழ்வார். இவர் நம்மாழ்வார் 16 ஆண்டுகள் பேசாத குழந்தையாக தவம் மேற்கொள்வதற்காக அங்கு நின்றார். அந்தப் புளிய மரப் பொந்தில் நம்மாழ்வார் இருந்தார். இந்த புளியமரத்தின் அடியில் நம்மாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. புளிய மரத்திற்கும், சன்னிதிக்கும் பூஜை உண்டு. புளிய மரத்தின் அடியில் 36 திவ்ய தேசப் பெருமாள்களும் காட்சி தருகின்றனர். இந்தப் புளிய மரம் 5,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழுக்காது. இரவில் இதன் இலைகள் உறங்குவதில்லை. நம்மாழ்வார் உற்சவ விக்கிரகம் உலோகம் கொண்டு செய்யப்பட்டதில்லை. தாமிர பரணித் தண்ணீரினை காய்ச்சக் காய்ச்ச முதலில் உடையவர் விக்கிரகமும், பின்னர் நம்மாழ்வார் விக்கிரகமும் வெளிவந்துள்ளது.
நவதிருப்பதிகளில் குரு தலம் :
இத்தலத்தைச் சுற்றி 8 திருப்பதிகள் உள்ளன. இதனையும் சேர்த்து ‘நவதிருப்பதி’ எனப்படுகிறது. இந்த நவதிருப்பதிகளும் இப்போது நவக்கிரகங்களின் தலங்களாகக் கருதப்படுகின்றன. அதில் இத்தலம் குருவுக்குரியதாகும்.
உற்சவ காலங்களில் ஆழ்வார், திருமஞ்சன மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருள்வதும், சேவாகாலம் நடைபெற்ற பின்னர் தைலக்காப்பு செய்யப்படுவதும் இங்கு மட்டுமே நடைபெறும் விசேஷ மாகும். மார்கழி திருவாதிரை அன்று ஆழ்வாருக்கும், ராமானுஜருக்கும் ஒரே ஆசனத்தில் திருமஞ்சனம் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். சித்திரையில் உத்திர நட்சத்திரத்தை இறுதியாகக் கொண்டு 10 நாள் பெருமாளுக்கும், வைகாசியில் விசாகம் இறுதி நாளாகக் கொண்டு 10 நாள் ஆழ்வாருக்கும் மகோற்சவங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
நவ கருட சேவை :
நம்மாழ்வார் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார். ஆதலால் இத்தலத்தில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரும் திருவிழாக்களில், ஆழ்வார்திருநகரி வைகாசி விசாகப் பெருந்திருவிழா குறிப்பிடத்தக்கது. வைகாசி விசாகத்தை இறுதி நாளாக வைத்து, கோவிலில் கொடியேற்றப்படும். இந்த திருவிழாவின் 5-ம் நாள் உற்சவம் முக்கியத்துவம் பெற்றது. அன்றைய விழாவில் ஆழ்வார் திருநகரியைச் சுற்றியுள்ள 8 திருப்பதிகளில் இருந்தும் எம்பெருமாள்கள், பல்லக்கில் ஆழ்வார் திருநகரி வந்தடைவார்கள். ஆதிநாதர் கோவில் முற்றத்தில் நவ திருப்பதி பெருமாள்களுக்கும் திருமஞ்சனம், திருவாராதனை செய்யப்படும். இரவு 11 மணி அளவில் இறைவன் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சி தருவார்.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் பாதையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.
பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் வலங்கைமான் பாடைக்கட்டி மாரியம்மனுக்குச் சிறப்பாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தலச்சிறப்பு : மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த அம்பாளை வேண்டிக்கொள்வர். நோய் குணமானவுடன், 'பாடைகாவடி' எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றுவர். பக்தர்கள், "தன் உடல் நலமடைந்தால் உற்சவ காலத்தில் பாடை மீது படுத்து ஆலயத்தை வலம் வருவதாக வேண்டிக் கொள்வர்". பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான பாடை வழிபாடுகள் நடைபெறும்.
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாடை மீது படுக்க, கயிறால் கட்டுவர். பிறகு சுமந்து வருவர். கொள்ளிச் சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக் கொண்டு முன்னால் வருவார். இவர்கள் ஆலயத்தை வலம் வந்ததும் பாடை பிரிக்கப்படும். பிரித்ததும் மஞ்சள் நீரைத் தெளிக்க, படுக்கும் போது மயக்கமுற்றவர் தெளிந்தெழுவார். வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள். இப்படிப்பட்ட பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் இந்த மாரியம்மனுக்குச் சிறப்பாகும்.
தல வரலாறு : வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக் கவுண்டர் என்பவர் வசித்து வந்தார். அவர் மனைவி பெயர் கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக் கவுண்டர் விவசாய வேலை செய்து வந்தார். அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் அங்காடி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்திற்காகப் புங்கஞ்சேரிக்கு கோவிந்தம்மாள் சென்றிருந்தார். அன்று வெள்ளிக்கிழமை, நல்ல வியாபாரம் நடந்தது நெல்லும், காசும், நிறையக் கிடைத்தன. எல்லாம் இறையருள் என்றெண்ணிக்கொண்டு மகிழ்ச்சியாக, அங்குள்ள ஒரு குளத்திற்கு குளிக்கச் சென்றார்.
அப்போது, ஒரு பிராமணரும் அவரது மனைவியும் குழந்தையுடன் அங்கிருந்த அடைக்கலங்காத்த அய்யனார்கோவில் பக்கம் போவதைப் பார்த்தார். குளித்துவிட்டுக் கரையேறிய பின் அய்யனார்கோவில் பக்கமிருந்து குழந்தை அழும் குரலைக் கேட்டார் கோவிந்தம்மாள். அங்கே விரைந்து சென்ற கோவிந்தம்மாள், பெண் குழந்தை ஒன்று அங்கே அழுது கொண்டு இருப்பதைக் கண்டாள். தெருக்காரர்கள் ஓடி வந்தனர், குழந்தையைக் கொண்டு வந்து விட்டவர்களைத் தேடிப் பார்த்தனர். அங்கு யாரும் தென்படவில்லை. அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைக் கோவிந்தம்மாள் தூக்கினாள். குழந்தை அழுவதை மறந்து அழகாகச் சிரித்தது.
அந்தக் குழந்தையின் அழகில் மயங்கிய அத்தெருவாசிகள் அனைவரும் அக்குழந்தையைத் தாமே வளர்க்க வேண்டுமென்று போட்டியிட்டனர். கடைசியாக அந்தக் தெரு நாட்டாண்மைக்காரர் வளர்ப்பார் என்ற முடிவுக்கு வந்தனர். தனக்கு குழந்தை கிடைக்கவில்லையே என்று கோவிந்தம்மாளுக்கு வருத்தம். புங்கஞ் சேரியில் கோழிகளும், ஆடு, மாடுகளும் திடீரென இறக்கத் தொடங்கின பலருக்கு அம்மை நோய் தாக்கியது. அய்யனார் கோவிலில் கிடைக்கப் பெற்ற அந்தப் பெண் குழந்தைக்கும் அம்மை வார்த்து விட்டது, ஊரே பெரும் துயரம் அடைந்தது. இந்நிலையில் ஒருவர் ஆவேசம் வந்து, அந்தப் பெண் குழந்தையைக் கோவிந்தம்மாளிடம் கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் இந்த ஊர் நலம் பெறும் என்று கூறினார்.
ஊடனே கோவிந்தம்மாளை அழைத்து அக்குழந்தையைக் கொடுத்துவிட்டனர். குழந்தையை எடுத்து வந்து சீதளா எனப் பெயரிட்டுக் கோவிந்தம்மாள் வளர்க்கத் தொடங்கினாள். ஆனால் கடுமையான அம்மையால் மூன்றாம் நாள் அக்குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது. ஆறாத்துயரம் அடைந்த கோவிந்தம்மாளும் அவர் கணவரும், குழந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து தம் வீட்டு கொல்லையில் அடக்கம் செய்து விட்டனர். (சிலர் அக்குழந்தை ஏழரை ஆண்டுகள் கோவிந்தம்மாள் வீட்டில் வளர்ந்து பல அற்புதங்களைச் செய்து, பின்னரே இறந்ததாகவும் கூறுகிறார்கள்).
பின்னர், குடமுருட்டி ஆற்றில் நீராடிவிட்டு வருவோரில் சிலர், கோவிந்தம்மாள் வீட்டுக் கொல்லைப்புறம் வந்த போது ஆவேசமாக வந்து ஆடினர். அவர்கள் நான்தான் மாரியம்மன் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடுவோருக்கு அருள் புரிவேன் என்று கூறினார். அன்தபடி குழந்தையைச் சமாதி செய்த இடத்தில் கீற்று கொட்டகை போடப்பட்டது மக்கள் வந்து வழிபடத் தொடங்கினர் பின்னர் அவ்விடத்தில் கோவிலும் எழுப்பப் பெற்றது சீதளாதேவி மகாமாரியம்மன் கோவிலாகப் பெயர் பூண்டு வரந்தரும் தெய்வமாக அன்னை பராசக்தி அங்கே விளங்கலானாள். அதுவே வலங்கைமான் மாரியம்மன் கோவில் தோன்றி வளர்ந்த வரலாறாக கூறப்படுகிறது.
நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் நடைசாத்தப்படுவது இல்லை.ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 11.00 மணி வரை நடைதிறந்து இருக்கும்.
திருவிழாக்கள் :
ஒவ்வொரு ஆவணி ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா,
ஆவணி கடைசி ஞாயிறு தெப்பத்திருவிழா,
பங்குனி 2-ம் ஞாயிறு "பாடைகாவடி திருவிழா" சிறப்பானது,
பங்குனி மூன்றாவது ஞாயிறு "புஷ்பபல்லாக்கு",
பங்குனி "கடைஞாயிறுதிருவிழா".
கோவில்முகவரி :
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,
வலங்கைமான் - 612 804,
திருவாரூர் மாவட்டம்.
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாடை மீது படுக்க, கயிறால் கட்டுவர். பிறகு சுமந்து வருவர். கொள்ளிச் சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக் கொண்டு முன்னால் வருவார். இவர்கள் ஆலயத்தை வலம் வந்ததும் பாடை பிரிக்கப்படும். பிரித்ததும் மஞ்சள் நீரைத் தெளிக்க, படுக்கும் போது மயக்கமுற்றவர் தெளிந்தெழுவார். வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள். இப்படிப்பட்ட பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் இந்த மாரியம்மனுக்குச் சிறப்பாகும்.
தல வரலாறு : வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக் கவுண்டர் என்பவர் வசித்து வந்தார். அவர் மனைவி பெயர் கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக் கவுண்டர் விவசாய வேலை செய்து வந்தார். அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் அங்காடி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்திற்காகப் புங்கஞ்சேரிக்கு கோவிந்தம்மாள் சென்றிருந்தார். அன்று வெள்ளிக்கிழமை, நல்ல வியாபாரம் நடந்தது நெல்லும், காசும், நிறையக் கிடைத்தன. எல்லாம் இறையருள் என்றெண்ணிக்கொண்டு மகிழ்ச்சியாக, அங்குள்ள ஒரு குளத்திற்கு குளிக்கச் சென்றார்.
அப்போது, ஒரு பிராமணரும் அவரது மனைவியும் குழந்தையுடன் அங்கிருந்த அடைக்கலங்காத்த அய்யனார்கோவில் பக்கம் போவதைப் பார்த்தார். குளித்துவிட்டுக் கரையேறிய பின் அய்யனார்கோவில் பக்கமிருந்து குழந்தை அழும் குரலைக் கேட்டார் கோவிந்தம்மாள். அங்கே விரைந்து சென்ற கோவிந்தம்மாள், பெண் குழந்தை ஒன்று அங்கே அழுது கொண்டு இருப்பதைக் கண்டாள். தெருக்காரர்கள் ஓடி வந்தனர், குழந்தையைக் கொண்டு வந்து விட்டவர்களைத் தேடிப் பார்த்தனர். அங்கு யாரும் தென்படவில்லை. அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைக் கோவிந்தம்மாள் தூக்கினாள். குழந்தை அழுவதை மறந்து அழகாகச் சிரித்தது.
அந்தக் குழந்தையின் அழகில் மயங்கிய அத்தெருவாசிகள் அனைவரும் அக்குழந்தையைத் தாமே வளர்க்க வேண்டுமென்று போட்டியிட்டனர். கடைசியாக அந்தக் தெரு நாட்டாண்மைக்காரர் வளர்ப்பார் என்ற முடிவுக்கு வந்தனர். தனக்கு குழந்தை கிடைக்கவில்லையே என்று கோவிந்தம்மாளுக்கு வருத்தம். புங்கஞ் சேரியில் கோழிகளும், ஆடு, மாடுகளும் திடீரென இறக்கத் தொடங்கின பலருக்கு அம்மை நோய் தாக்கியது. அய்யனார் கோவிலில் கிடைக்கப் பெற்ற அந்தப் பெண் குழந்தைக்கும் அம்மை வார்த்து விட்டது, ஊரே பெரும் துயரம் அடைந்தது. இந்நிலையில் ஒருவர் ஆவேசம் வந்து, அந்தப் பெண் குழந்தையைக் கோவிந்தம்மாளிடம் கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் இந்த ஊர் நலம் பெறும் என்று கூறினார்.
ஊடனே கோவிந்தம்மாளை அழைத்து அக்குழந்தையைக் கொடுத்துவிட்டனர். குழந்தையை எடுத்து வந்து சீதளா எனப் பெயரிட்டுக் கோவிந்தம்மாள் வளர்க்கத் தொடங்கினாள். ஆனால் கடுமையான அம்மையால் மூன்றாம் நாள் அக்குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது. ஆறாத்துயரம் அடைந்த கோவிந்தம்மாளும் அவர் கணவரும், குழந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து தம் வீட்டு கொல்லையில் அடக்கம் செய்து விட்டனர். (சிலர் அக்குழந்தை ஏழரை ஆண்டுகள் கோவிந்தம்மாள் வீட்டில் வளர்ந்து பல அற்புதங்களைச் செய்து, பின்னரே இறந்ததாகவும் கூறுகிறார்கள்).
பின்னர், குடமுருட்டி ஆற்றில் நீராடிவிட்டு வருவோரில் சிலர், கோவிந்தம்மாள் வீட்டுக் கொல்லைப்புறம் வந்த போது ஆவேசமாக வந்து ஆடினர். அவர்கள் நான்தான் மாரியம்மன் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடுவோருக்கு அருள் புரிவேன் என்று கூறினார். அன்தபடி குழந்தையைச் சமாதி செய்த இடத்தில் கீற்று கொட்டகை போடப்பட்டது மக்கள் வந்து வழிபடத் தொடங்கினர் பின்னர் அவ்விடத்தில் கோவிலும் எழுப்பப் பெற்றது சீதளாதேவி மகாமாரியம்மன் கோவிலாகப் பெயர் பூண்டு வரந்தரும் தெய்வமாக அன்னை பராசக்தி அங்கே விளங்கலானாள். அதுவே வலங்கைமான் மாரியம்மன் கோவில் தோன்றி வளர்ந்த வரலாறாக கூறப்படுகிறது.
நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் நடைசாத்தப்படுவது இல்லை.ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 11.00 மணி வரை நடைதிறந்து இருக்கும்.
திருவிழாக்கள் :
ஒவ்வொரு ஆவணி ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா,
ஆவணி கடைசி ஞாயிறு தெப்பத்திருவிழா,
பங்குனி 2-ம் ஞாயிறு "பாடைகாவடி திருவிழா" சிறப்பானது,
பங்குனி மூன்றாவது ஞாயிறு "புஷ்பபல்லாக்கு",
பங்குனி "கடைஞாயிறுதிருவிழா".
கோவில்முகவரி :
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,
வலங்கைமான் - 612 804,
திருவாரூர் மாவட்டம்.
இந்த கோவிலில் அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சுவாமி : குமாரர் சுவாமி
தீர்த்தம் : சித்ராநதி
தலவிருட்சம் : மகிழம்
தலச்சிறப்பு : அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு : இமயமலையில் அம்மை அப்பனின் திருமணத்தைக் காண அனைத்தப் பகுதியில் உள்ளவர்களும் வடதிசையில் வந்து குவிந்ததால், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதை சரி செய்ய சிவபெருமான் அகத்திய மாமுனிவரை தென்திசை செல்ல பணித்தார். இறைவனின் கட்டளையை சிரமேற்கொண்டு தென்திசை புறப்பட, அகத்தியர் பொதிகை மலையின் குற்றாலத்திற்கு வந்தார் . அப்போது குற்றாலத்தில் உள்ள திருக்கோயில் வைணவ திருக்கோயிலாக இருந்ததால் வைணவர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.
எனவே அவர் சித்ரா நதி தீர்த்தத்ற்கு வந்து வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். வெண்மணலுக்கு “தேவாகைரியில் இருவானுகம்” என்ற பெயர் இருந்ததால் அதற்கு “இருவாலுக ஈசர்” என்ற பெயர் ஏற்பட்டது. வந்த வேலை முடிய வேண்டுமே, இன்னும் முடியவில்லையே என எண்ணிய, அகத்தியர் முருகபெருமானை வேண்டினார். முருகபெருமானும் அகத்தியர் முன்னே தோன்றி, “வைணவ வேடத்திலேயே குற்றாலம் செல். அங்கு சென்று அங்குள்ள திருமாலை குறுக்கி குற்றாலநாதராக்கு” என பணித்தார். அகத்தியரும் அவ்வாறே செய்து தான் வந்த பணியை முடித்தார்.
நடைதிறப்பு :
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
பூஜை விவரம் :
தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. திருவனந்தல், விளாபூசை, காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த சாமம் ஆகிய ஆறு கால பூசைகள் தினமும் நடைபெறுகிறது.
திருவிழாக்கள் :
சித்திரை பிரமோத்ஸவம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி தனுர்பூஜை தைபூசம், மாசி மகம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
கோயில் முகவரி :
அருள்மிகு திருஇலஞ்சிக்குமாரர் திருக்கோயில்,
இலஞ்சி -627805,
திருநெல்வேலி மாவட்டம்.
தீர்த்தம் : சித்ராநதி
தலவிருட்சம் : மகிழம்
தலச்சிறப்பு : அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு : இமயமலையில் அம்மை அப்பனின் திருமணத்தைக் காண அனைத்தப் பகுதியில் உள்ளவர்களும் வடதிசையில் வந்து குவிந்ததால், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதை சரி செய்ய சிவபெருமான் அகத்திய மாமுனிவரை தென்திசை செல்ல பணித்தார். இறைவனின் கட்டளையை சிரமேற்கொண்டு தென்திசை புறப்பட, அகத்தியர் பொதிகை மலையின் குற்றாலத்திற்கு வந்தார் . அப்போது குற்றாலத்தில் உள்ள திருக்கோயில் வைணவ திருக்கோயிலாக இருந்ததால் வைணவர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.
எனவே அவர் சித்ரா நதி தீர்த்தத்ற்கு வந்து வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். வெண்மணலுக்கு “தேவாகைரியில் இருவானுகம்” என்ற பெயர் இருந்ததால் அதற்கு “இருவாலுக ஈசர்” என்ற பெயர் ஏற்பட்டது. வந்த வேலை முடிய வேண்டுமே, இன்னும் முடியவில்லையே என எண்ணிய, அகத்தியர் முருகபெருமானை வேண்டினார். முருகபெருமானும் அகத்தியர் முன்னே தோன்றி, “வைணவ வேடத்திலேயே குற்றாலம் செல். அங்கு சென்று அங்குள்ள திருமாலை குறுக்கி குற்றாலநாதராக்கு” என பணித்தார். அகத்தியரும் அவ்வாறே செய்து தான் வந்த பணியை முடித்தார்.
நடைதிறப்பு :
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
பூஜை விவரம் :
தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. திருவனந்தல், விளாபூசை, காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த சாமம் ஆகிய ஆறு கால பூசைகள் தினமும் நடைபெறுகிறது.
திருவிழாக்கள் :
சித்திரை பிரமோத்ஸவம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி தனுர்பூஜை தைபூசம், மாசி மகம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
கோயில் முகவரி :
அருள்மிகு திருஇலஞ்சிக்குமாரர் திருக்கோயில்,
இலஞ்சி -627805,
திருநெல்வேலி மாவட்டம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருக்கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
மூலவர்: வடபத்ரசாயி, ரெங்கமன்னார்
தாயார்:ஆண்டாள், கோதைநாச்சி
தீர்த்தம்: திருமுக்குளம், கண்ணாடி தீர்த்தம்
* ரெங்கமன்னார் இங்கு சுயம்புவாக இருக்கிறார். வலது கையில் தற்காப்பு கோல், இடது கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள், காலில் செருப்பு அணிந்து ராஜகோலத்தில் அருள்கிறார்.
* ஆண்டாளின் அவதாரத் தலம் இது. ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் மகளாக இத்தலத்தில் ஆண்டாள் அவதரித்தார்.
* புரட்டாசியில் நடைபெறும் பிரமோற்சவத்திற்கு, ஆண்டாள் மாலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு அனுப்பப்படும்.
* ஆண்டாள் திருக்கல்யாணத்திற்கு, திருப்பதியில் இருந்து பட்டுப்புடவை கொண்டுவரப்படும்.
* மதுரை சித்திரைத் திருவிழாவின் போது, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் கள்ளழகர் அணிவார்.
* மார்கழியில் தன்னுடைய பிறந்த வீட்டுக்கு ஆண்டாள் செல்வார். அப்போது கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் சேர்த்து திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்தியம் படைக்கப்படும்.
* விருதுநகரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், சிவகாசியில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்திலும், மதுரையில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, ஸ்ரீவில்லிபுத்தூர்.
உற்சவங்கள்
10 நாட்கள் ஆடிப்பூரம், புரட்டாசியில் பெரிய பெருமாள் உற்சவம் 10 நாட்கள், பங்குனியில் 10 நாள் திருக்கல்யாண உற்சவம், மார்கழியில் எண்ணெய் காப்பு, கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி.
108 கம்பளி
கார்த்திகை மாதம் வரும் கவுசிக ஏகாதசி அன்று, ஆண்டாள், ரெங்கமன்னார், கருடன் ஆகியோருக்கு 108 கம்பளிகள் போர்த்தப்படுகிறது. குளிர்காலம் என்பதால் இவ்வாறு செய்வதாக சொல்கின்றனர்.
தட்டொளி
அந்தக் காலத்தில் கண்ணாடியை ‘தட்டொளி’ என்று அழைத்துள்ளனர். ஆண்டாள் சன்னிதிக்கு எதிரே வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி உள்ளது. இதில்தான் ஆண்டாள், தன்னுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டாராம்.
மஞ்சள் கயிறு
திருமணம் ஆகாத பெண்கள், இங்குள்ள கண்ணாடி தீர்த்த கிணற்றை சுற்றி வந்து, ஆண்டாளை வணங்கி வழிபடுகிறார்கள். அவர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த வழிபாட்டால் தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.
தாயார்:ஆண்டாள், கோதைநாச்சி
தீர்த்தம்: திருமுக்குளம், கண்ணாடி தீர்த்தம்
* ரெங்கமன்னார் இங்கு சுயம்புவாக இருக்கிறார். வலது கையில் தற்காப்பு கோல், இடது கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள், காலில் செருப்பு அணிந்து ராஜகோலத்தில் அருள்கிறார்.
* ஆண்டாளின் அவதாரத் தலம் இது. ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் மகளாக இத்தலத்தில் ஆண்டாள் அவதரித்தார்.
* புரட்டாசியில் நடைபெறும் பிரமோற்சவத்திற்கு, ஆண்டாள் மாலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு அனுப்பப்படும்.
* ஆண்டாள் திருக்கல்யாணத்திற்கு, திருப்பதியில் இருந்து பட்டுப்புடவை கொண்டுவரப்படும்.
* மதுரை சித்திரைத் திருவிழாவின் போது, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் கள்ளழகர் அணிவார்.
* மார்கழியில் தன்னுடைய பிறந்த வீட்டுக்கு ஆண்டாள் செல்வார். அப்போது கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் சேர்த்து திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்தியம் படைக்கப்படும்.
* விருதுநகரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், சிவகாசியில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்திலும், மதுரையில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, ஸ்ரீவில்லிபுத்தூர்.
உற்சவங்கள்
10 நாட்கள் ஆடிப்பூரம், புரட்டாசியில் பெரிய பெருமாள் உற்சவம் 10 நாட்கள், பங்குனியில் 10 நாள் திருக்கல்யாண உற்சவம், மார்கழியில் எண்ணெய் காப்பு, கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி.
108 கம்பளி
கார்த்திகை மாதம் வரும் கவுசிக ஏகாதசி அன்று, ஆண்டாள், ரெங்கமன்னார், கருடன் ஆகியோருக்கு 108 கம்பளிகள் போர்த்தப்படுகிறது. குளிர்காலம் என்பதால் இவ்வாறு செய்வதாக சொல்கின்றனர்.
தட்டொளி
அந்தக் காலத்தில் கண்ணாடியை ‘தட்டொளி’ என்று அழைத்துள்ளனர். ஆண்டாள் சன்னிதிக்கு எதிரே வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி உள்ளது. இதில்தான் ஆண்டாள், தன்னுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டாராம்.
மஞ்சள் கயிறு
திருமணம் ஆகாத பெண்கள், இங்குள்ள கண்ணாடி தீர்த்த கிணற்றை சுற்றி வந்து, ஆண்டாளை வணங்கி வழிபடுகிறார்கள். அவர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த வழிபாட்டால் தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.
கல்யாணபசுபதீசுவரர் கோவில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
கரூரில் அமைந்துள்ளது, பசுபதீஸ்வரர் திருக்கோவில். இக்கோவிலில் கருங்கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. இதன் ஒரு பக்கத்தில் புகழ்சோழ நாயனார் சிற்பமும், மறு புறம் சிவலிங்கத்தை நாவால் வருடும் பசுவும், அதன் பின் கால்களுக்கிடையில் ஒரு சிவலிங்கம் உள்ள சிற்பமும் காணப்படுகிறது.
மூலவர்: பசுபதீஸ்வரர் (பசுபதிநாதர், பசுபதி, ஆனிலையப்பர்)
அம்மன்: அலங்காரவல்லி, சவுந்தரநாயகி, கிருபாநாயகி
தல விருட்சம்: வஞ்சி மரம்
தீர்த்தம்: தாடகை தீர்த்தம், ஆம்பிரவதி நதி (அமராவதி)
பதிகம் பாடியவர்கள்:- திருஞானசம்பந்தர்- தேவாரம், கருவூரார்- திருவிசைப்பா, அருணகிரிநாதர் - திருப்புகழ்.
கல்யாணபசுபதீசுவரர் கோவில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம், காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை, திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு, தனி ஆலயம் உள்ளது.
இத்தலத்தில், புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபத்த நாயனார் தொண்டு செய்ததாகவும், தலவரலாறு கூறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் திருக்கோவில்களில், இது 211-வது ஆலயம் ஆகும். இத்தல சிவலிங்கத்தின் மீது, மாசி மாதத்தில் தொடர்ச்சியாக 5 நாட்கள், சூரியனின் கதிர் ஒளி படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களின் கோரிக்கை நிறைவேறும் பக்தர்கள், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது வாடிக்கை. இன்னும் சிலர் ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். இத்தல இறைவன் பசுபதீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். சதுரமான ஆவுடையாரின் மீது, சற்றே சாய்வாக இருக்கிறார்.
சன்னதிகள்
மூலவர் பசுபதீசுவரர், சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்த லிங்கத்தின் ஆவுடையார், சதுரமாக உள்ளது. மாசி மாதத்தின் ஐந்து நாட்கள், மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன.
மூலவரின் நேராக அமைந்துள்ள நந்திக்கு அருகேயுள்ள தூண்களில், புகழ்ச்சோழர் சிவபக்தரின் தலையோடு உள்ள சிலையும், முசுகுந்த சக்கரவர்த்தியின் சிலையும் உள்ளன. வெளிச்சுற்றுபிரகாரத்தில் சித்தர் கருவூரார் சன்னதியும், ராகு, கேது பாம்பு சிலைகள் உள்ள சன்னதியும் உள்ளன.
புகழ்ச்சோழர் மண்டபம், நூறுகால் மண்டபம் ஆகியவை இச்சிவாலயத்தில் அமைந்துள்ளன.
கோவில் அமைப்பு
இக்கோவிலின் கொடிமரம், கருங்கல்லால் ஆனது. கொடி மரத்தின் ஒரு புறத்தில், தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும், மறுபுறம் சிவலிங்கமும், சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அமைந்துள்ளன. இக்கோவிலின் பெருமான் கல்யாண பசுபதீஸ்வரர். பசுபதிநாதர், பசுபதீஸ்வரர், ஆநிலையப்பர், பசுபதி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன், சதுரமான ஆவுடையாரின் மீது அமைந்துள்ள லிங்க வடிவிலுள்ளார். அம்மன் அலங்காரவல்லி.
தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவத்தலங்களில் இது ஒன்றாகும். கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் கட்டடக்கலைச் சிறப்பு மிக்கது. இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு, இங்கு 1960 ஆம் ஆண்டு குட முழுக்கு விழா நடைபெற்றபொழுது, ’புகழ்ச் சோழர் மண்டபம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
கோவிலின் தென்மேற்கு மூலையில், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கரூவூராரின் சன்னிதி உள்ளது. இச்சித்தர் ஆநிலையப்பரோடு ஐக்கியமானதால், கருவறையில் சுயம்புலிங்கமாக உள்ள பெருமான் சற்றே சாய்ந்த நிலையில் உள்ளார்.
தல வரலாறு
படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக, சிவன் நடத்திய விளையாடலால் உண்டான தலம் இது. சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்திலுள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால், அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார். அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று, அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து, திருமஞ்சனம் செய்து வழிபட, மகிழ்ச்சியடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார். காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து, சிவனிடம் போய், தஞ்சம் அடைந்தார். சிவனும் அவரை மன்னித்து, படைப்புத் தொழிலை அவருக்கே திரும்ப அளித்து, காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார்.
காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன், 'பசுபதீஸ்வரர்' என்றும், 'ஆநிலையப்பர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
மூலவர்: பசுபதீஸ்வரர் (பசுபதிநாதர், பசுபதி, ஆனிலையப்பர்)
அம்மன்: அலங்காரவல்லி, சவுந்தரநாயகி, கிருபாநாயகி
தல விருட்சம்: வஞ்சி மரம்
தீர்த்தம்: தாடகை தீர்த்தம், ஆம்பிரவதி நதி (அமராவதி)
பதிகம் பாடியவர்கள்:- திருஞானசம்பந்தர்- தேவாரம், கருவூரார்- திருவிசைப்பா, அருணகிரிநாதர் - திருப்புகழ்.
கல்யாணபசுபதீசுவரர் கோவில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம், காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை, திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு, தனி ஆலயம் உள்ளது.
இத்தலத்தில், புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபத்த நாயனார் தொண்டு செய்ததாகவும், தலவரலாறு கூறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் திருக்கோவில்களில், இது 211-வது ஆலயம் ஆகும். இத்தல சிவலிங்கத்தின் மீது, மாசி மாதத்தில் தொடர்ச்சியாக 5 நாட்கள், சூரியனின் கதிர் ஒளி படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களின் கோரிக்கை நிறைவேறும் பக்தர்கள், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது வாடிக்கை. இன்னும் சிலர் ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். இத்தல இறைவன் பசுபதீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். சதுரமான ஆவுடையாரின் மீது, சற்றே சாய்வாக இருக்கிறார்.
சன்னதிகள்
மூலவர் பசுபதீசுவரர், சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்த லிங்கத்தின் ஆவுடையார், சதுரமாக உள்ளது. மாசி மாதத்தின் ஐந்து நாட்கள், மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன.
மூலவரின் நேராக அமைந்துள்ள நந்திக்கு அருகேயுள்ள தூண்களில், புகழ்ச்சோழர் சிவபக்தரின் தலையோடு உள்ள சிலையும், முசுகுந்த சக்கரவர்த்தியின் சிலையும் உள்ளன. வெளிச்சுற்றுபிரகாரத்தில் சித்தர் கருவூரார் சன்னதியும், ராகு, கேது பாம்பு சிலைகள் உள்ள சன்னதியும் உள்ளன.
புகழ்ச்சோழர் மண்டபம், நூறுகால் மண்டபம் ஆகியவை இச்சிவாலயத்தில் அமைந்துள்ளன.
கோவில் அமைப்பு
இக்கோவிலின் கொடிமரம், கருங்கல்லால் ஆனது. கொடி மரத்தின் ஒரு புறத்தில், தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும், மறுபுறம் சிவலிங்கமும், சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அமைந்துள்ளன. இக்கோவிலின் பெருமான் கல்யாண பசுபதீஸ்வரர். பசுபதிநாதர், பசுபதீஸ்வரர், ஆநிலையப்பர், பசுபதி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன், சதுரமான ஆவுடையாரின் மீது அமைந்துள்ள லிங்க வடிவிலுள்ளார். அம்மன் அலங்காரவல்லி.
தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவத்தலங்களில் இது ஒன்றாகும். கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் கட்டடக்கலைச் சிறப்பு மிக்கது. இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு, இங்கு 1960 ஆம் ஆண்டு குட முழுக்கு விழா நடைபெற்றபொழுது, ’புகழ்ச் சோழர் மண்டபம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
கோவிலின் தென்மேற்கு மூலையில், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கரூவூராரின் சன்னிதி உள்ளது. இச்சித்தர் ஆநிலையப்பரோடு ஐக்கியமானதால், கருவறையில் சுயம்புலிங்கமாக உள்ள பெருமான் சற்றே சாய்ந்த நிலையில் உள்ளார்.
தல வரலாறு
படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக, சிவன் நடத்திய விளையாடலால் உண்டான தலம் இது. சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்திலுள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால், அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார். அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று, அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து, திருமஞ்சனம் செய்து வழிபட, மகிழ்ச்சியடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார். காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து, சிவனிடம் போய், தஞ்சம் அடைந்தார். சிவனும் அவரை மன்னித்து, படைப்புத் தொழிலை அவருக்கே திரும்ப அளித்து, காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார்.
காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன், 'பசுபதீஸ்வரர்' என்றும், 'ஆநிலையப்பர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
முருகப்பெருமானுக்காக அமைந்த சுவாமிநாத சுவாமி ஆலயத்தில், 11 தலைகளுடனும், 22 கரங்களுடனும் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார்.
ராமநாதபுரம் அருகே உள்ளது, குண்டுக்கரை என்ற ஊர். இங்கு சுவாமிநாத சுவாமி கோவில் இருக்கிறது. முருகப்பெருமானுக்காக அமைந்த இந்த ஆலயத்தில், 11 தலைகளுடனும், 22 கரங்களுடனும் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப்பெருமான் இத்தலத்திற்கு வந்து தங்கியதாக தல புராணம் சொல்கிறது. இங்கு முருகப்பெருமான் விஸ்வரூப தரிசனம் தருவதாக நம்பிக்கை நிலவுகிறது.
ராமநாதபுரம் பகுதியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு, பாஸ்கர சேதுபதி என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் தினமும் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவிலுக்குச் சென்று, அங்குள்ள முருகப்பெருமானை வழிபடுவது வாடிக்கை. அவரது கனவில் ஒருநாள் தோன்றிய முருகப்பெருமான், தற்போது குண்டுக்கரையில் இருக்கும் முருகன் சிலையை எடுத்து விட்டு, புதியதாக ஒரு சிலையை பிரதிஷ்டை செய்யும்படியும், இதனால் இந்தப் பகுதி மக்களுக்கு நன்மை விளையும் என்றும் கூறி மறைந்தார். அதன்படியே குண்டுக்கரை சென்ற பாஸ்கர சேதுபதி, ஆலயத்தில் இருந்த பழைய முருகன் சிலையை அகற்றி, தற்போதுள்ள புதிய சிலையை நிறுவியதாக தல வரலாறு சொல்கிறது.
இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் முதல் தேதியில் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தில் முருகப்பெருமானைப் போலவே, துர்க்கைக்கும் பிரமாண்ட சிலை வடிக்கப்பட்டுள்ளது. 18 திருக்கரங்களுடன் அருளும் இந்த துர்க்கை தேவி, 7 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறாள். இந்த அன்னைக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறப்பு, அபிஷேக, ஆராதனைகள் செய்யப் படுகின்றன. தைப் பொங்கல் தினத்தன்று, ‘சாகம்பரி’ என்னும் அலங்காரம் செய்யப்படுகிறது. அதாவது அந்த தினம் காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் அம்பிகை காட்சி தருவாள்.
வைகாசி விசாகத்தை ஒட்டி இந்த ஆலயத்தில், பிரம்மோற்சவ விழா நடக்கிறது. சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்களும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறும் ஆலயங்களில் இதுவும் ஒன்று.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள், கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கலாம். முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிகளுக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
ராமநாதபுரம் பகுதியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு, பாஸ்கர சேதுபதி என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் தினமும் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவிலுக்குச் சென்று, அங்குள்ள முருகப்பெருமானை வழிபடுவது வாடிக்கை. அவரது கனவில் ஒருநாள் தோன்றிய முருகப்பெருமான், தற்போது குண்டுக்கரையில் இருக்கும் முருகன் சிலையை எடுத்து விட்டு, புதியதாக ஒரு சிலையை பிரதிஷ்டை செய்யும்படியும், இதனால் இந்தப் பகுதி மக்களுக்கு நன்மை விளையும் என்றும் கூறி மறைந்தார். அதன்படியே குண்டுக்கரை சென்ற பாஸ்கர சேதுபதி, ஆலயத்தில் இருந்த பழைய முருகன் சிலையை அகற்றி, தற்போதுள்ள புதிய சிலையை நிறுவியதாக தல வரலாறு சொல்கிறது.
இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் முதல் தேதியில் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தில் முருகப்பெருமானைப் போலவே, துர்க்கைக்கும் பிரமாண்ட சிலை வடிக்கப்பட்டுள்ளது. 18 திருக்கரங்களுடன் அருளும் இந்த துர்க்கை தேவி, 7 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறாள். இந்த அன்னைக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறப்பு, அபிஷேக, ஆராதனைகள் செய்யப் படுகின்றன. தைப் பொங்கல் தினத்தன்று, ‘சாகம்பரி’ என்னும் அலங்காரம் செய்யப்படுகிறது. அதாவது அந்த தினம் காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் அம்பிகை காட்சி தருவாள்.
வைகாசி விசாகத்தை ஒட்டி இந்த ஆலயத்தில், பிரம்மோற்சவ விழா நடக்கிறது. சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்களும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறும் ஆலயங்களில் இதுவும் ஒன்று.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள், கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கலாம். முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிகளுக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகளால் ஏற்படும் அச்சங்கள், தொந்தரவுகள் நீங்கவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இத்தலத்து சனிபகவான் கருதப்படுகிறார்.
சூரிய தேவனின் மகன், சனிபகவான், இன்னொரு மகன் எமதர்மன். அண்ணன் தம்பியாக இருந்தபோதும் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர். அப்படி ஒரு சமயம் வந்த சண்டையில் அண்ணன் எமதர்மன் கோபத்தோடு தம்பி சனிபகவானின் காலில் ஓங்கி அடிக்க, தம்பியின் கால் ஊனமானது.
மனவருத்தத்துடன் புறப்பட்ட சனி, மனித உருவத்தில் பூவுலகில் சிவதரிசனம் செய்தபடியே பல தலங்களுக்கும் சென்றார். வழியில் பிச்சை எடுத்து கிடைத்ததை சமைத்து ஏழைகளுக்கும், முதியவர்களுக்கும் அளித்து தாமும் உண்டு வந்தார்.
ஊர் ஊராகச் சுற்றி வந்த சனிபகவான், விளா மரங்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். நடந்து போகும் வழியில், ஒரு பாதையைக் கடந்தபோது ஓரிடத்தில் விளாமரத்தின் வேரில் தடுக்கி நிலை தடுமாறி, அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார்.
அவர் கீழே விழுந்த அதே சமயத்தில், அந்தப் பள்ளத்தில் இருந்து குபீரென்று ஒரு நீரூற்று தோன்றியது. அந்த நீர் சனிபகவானின் மேனியில் பட்ட மறுநொடி, அவரது ஊனம் மறைந்தது. கூடவே ஓர் அசரீரி எழுந்தது. சனிபகவானே... பல கோடி யுகங்களாக மறைந்திருந்த பூச ஞான வாவி என்ற ஞான தீர்த்தம் இது.
சித்திரைத் திங்கள், வளர்பிறை திருதியையும், பூச நட்சத்திரமும், சனி வாரமும் சேர்ந்த இந்தப் புனித நன்னாளில் இத்தீர்த்தம் உன்னால் மீண்டும் சுரந்துள்ளது.
விளாவேர் தடுக்கி நீ விழுந்ததால் சுரந்த ஞான வாவி, இத்தலத்தில் புனித தீர்த்தக்குளமாக விளங்கும். அதனால் இந்தக் கிராமம் விழக்குளம் என்று அழைக்கப்படும்! என்றது அந்த அசரீரி.
தற்போது மருவி விளங்குளம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வரும் அத்தலத்தில்தான், சனிபகவானுக்கு அருளிய ஈசன், அட்சயபுரீஸ்வரராக கோவில் கொண்டு அருள்கிறார். கி.பி.13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம். முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் இவ்வாலய இறைவனை வழிபட்ட தகவல், கல்வெட்டு மூலம் காணக் கிடைக்கின்றது.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம். பெரிய பிராகாரத்தை அடுத்து உள்ளது வசந்த மண்டபம். இந்த மண்டபத்தின் வலதுபுறம் அன்னை அபிவிருத்தி நாயகியின் சன்னதி உள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் தண்டத்தையும், தாமரையையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றாள்.
மகா மண்டபத்தை அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் இரட்டை விநாயகரும் வலதுபுறம் மாரியம்மன், பிரதோஷ நாயகர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இவர், சனி பகவானுக்கு அருளிய தினம் ஓர் அட்சய திருதியை நாள். எனவே இறைவன், அட்சயபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.
அட்சயம் என்றால் வளர்வது என்று அர்த்தம். இத்தலத்திற்கு ஒருமுறை வந்து போனாலே பக்தர்களின் இல்லத்தில் செல்வம் உள்ளிட்ட பதினாறு பேறுகளும் தழைத்து வளரும் என்பது ஐதீகம். அது மட்டுமல்ல, அம்பிகையின் திருப்பெயரும் ‘அபிவிருத்தி’ நாயகி என அமைத்து, மேலும் மேலும் செல்வங்கள் வளரும் என்பதையே உறுதிப்படுத்துகிறது.
செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியான குபேரன், ஈசனை வழிபட்டே சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்கிறது புராணம். அப்படி குபேரன் செல்வங்களைப் பெற்று அளகாபுரிக்கு அரசனானதும், அட்சயபுரீஸ்வரரின் அருளால்தான் என்பதால் இத்தலம் அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலமாகக் கூறப்படுகிறது.
தேவ கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சிவதுர்க்கை, மகாலட்சுமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.திருச்சுற்றில் வன்னி மரம் தழைத்து நிற்கிறது. தென்திருச்சுற்றில் ஆலயத்திருக்குளமான பூச ஞான வாவியின் நுழைவாயில் உள்ளது.வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், விநாயகர், நாகர் சன்னதிகள் உள்ளன. சண்டீஸ்வரர், காலபரவர், சூரியன் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.
இத்தலத்தில் சிவபெருமான் அருளால் சனி பகவானுக்கு திருமணமாகும் பாக்கியமும் கிடைத்ததாம். எனவே இத்தலத்தில் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி என்ற இரு பத்தினிகளுடன் ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரோடு தனிச் சன்னதியில் அமைந்திருக்கிறார் சனிபகவான்.
இவரது ஊனத்தை காகம் வந்து பெற்றுக் கொண்டதாம். சனிபகவான் அந்தக் காலத்தையே தன் வாகனமாக ஏற்றார் எனவும் தலபுராணம் சொல்கிறது. விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகளால் ஏற்படும் அச்சங்கள், தொந்தரவுகள் நீங்கவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இத்தலத்து சனிபகவான் கருதப்படுகிறார்.
தசாபுக்தியாலோ, ஜாதக ரீதியாகவோ சனியின் பாதிப்புக்கு ஆளானவர்கள், இத்தலம் வந்து சனி பகவானுக்கும், இறைவன், இறைவிக்கும் அர்ச்சனை செய்து விட்டு, பிராகாரத்தில் காக்கைக்கு உணவு படைக்கின்றனர். இதனால் சனிதோஷம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் என்பத நிச்சயம்.
தல விருட்சமான விளாமரம், கோவிலின் வடதிசையில் உள்ளது. பூச நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது என்கிறார்கள். தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும், நந்தி பகவானுக்கு பிரதோஷ காலங்களிலும், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஆலயத்தின் எதிரே தனிக்கோவிலில் விஜய விநாயகர், தன் தந்தையை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார். அட்சய திருதியை அன்று சனிபகவான் ஸ்தூல சூட்சும வடிவங்களில் அட்சயபுரீஸ்வரரை முழுவதும் வழிபடுவதாக ஐதீகம் நிலவுகிறது.
மனவருத்தத்துடன் புறப்பட்ட சனி, மனித உருவத்தில் பூவுலகில் சிவதரிசனம் செய்தபடியே பல தலங்களுக்கும் சென்றார். வழியில் பிச்சை எடுத்து கிடைத்ததை சமைத்து ஏழைகளுக்கும், முதியவர்களுக்கும் அளித்து தாமும் உண்டு வந்தார்.
ஊர் ஊராகச் சுற்றி வந்த சனிபகவான், விளா மரங்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். நடந்து போகும் வழியில், ஒரு பாதையைக் கடந்தபோது ஓரிடத்தில் விளாமரத்தின் வேரில் தடுக்கி நிலை தடுமாறி, அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார்.
அவர் கீழே விழுந்த அதே சமயத்தில், அந்தப் பள்ளத்தில் இருந்து குபீரென்று ஒரு நீரூற்று தோன்றியது. அந்த நீர் சனிபகவானின் மேனியில் பட்ட மறுநொடி, அவரது ஊனம் மறைந்தது. கூடவே ஓர் அசரீரி எழுந்தது. சனிபகவானே... பல கோடி யுகங்களாக மறைந்திருந்த பூச ஞான வாவி என்ற ஞான தீர்த்தம் இது.
சித்திரைத் திங்கள், வளர்பிறை திருதியையும், பூச நட்சத்திரமும், சனி வாரமும் சேர்ந்த இந்தப் புனித நன்னாளில் இத்தீர்த்தம் உன்னால் மீண்டும் சுரந்துள்ளது.
விளாவேர் தடுக்கி நீ விழுந்ததால் சுரந்த ஞான வாவி, இத்தலத்தில் புனித தீர்த்தக்குளமாக விளங்கும். அதனால் இந்தக் கிராமம் விழக்குளம் என்று அழைக்கப்படும்! என்றது அந்த அசரீரி.
தற்போது மருவி விளங்குளம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வரும் அத்தலத்தில்தான், சனிபகவானுக்கு அருளிய ஈசன், அட்சயபுரீஸ்வரராக கோவில் கொண்டு அருள்கிறார். கி.பி.13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம். முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் இவ்வாலய இறைவனை வழிபட்ட தகவல், கல்வெட்டு மூலம் காணக் கிடைக்கின்றது.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம். பெரிய பிராகாரத்தை அடுத்து உள்ளது வசந்த மண்டபம். இந்த மண்டபத்தின் வலதுபுறம் அன்னை அபிவிருத்தி நாயகியின் சன்னதி உள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் தண்டத்தையும், தாமரையையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றாள்.
மகா மண்டபத்தை அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் இரட்டை விநாயகரும் வலதுபுறம் மாரியம்மன், பிரதோஷ நாயகர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இவர், சனி பகவானுக்கு அருளிய தினம் ஓர் அட்சய திருதியை நாள். எனவே இறைவன், அட்சயபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.
அட்சயம் என்றால் வளர்வது என்று அர்த்தம். இத்தலத்திற்கு ஒருமுறை வந்து போனாலே பக்தர்களின் இல்லத்தில் செல்வம் உள்ளிட்ட பதினாறு பேறுகளும் தழைத்து வளரும் என்பது ஐதீகம். அது மட்டுமல்ல, அம்பிகையின் திருப்பெயரும் ‘அபிவிருத்தி’ நாயகி என அமைத்து, மேலும் மேலும் செல்வங்கள் வளரும் என்பதையே உறுதிப்படுத்துகிறது.
செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியான குபேரன், ஈசனை வழிபட்டே சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்கிறது புராணம். அப்படி குபேரன் செல்வங்களைப் பெற்று அளகாபுரிக்கு அரசனானதும், அட்சயபுரீஸ்வரரின் அருளால்தான் என்பதால் இத்தலம் அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலமாகக் கூறப்படுகிறது.
தேவ கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சிவதுர்க்கை, மகாலட்சுமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.திருச்சுற்றில் வன்னி மரம் தழைத்து நிற்கிறது. தென்திருச்சுற்றில் ஆலயத்திருக்குளமான பூச ஞான வாவியின் நுழைவாயில் உள்ளது.வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், விநாயகர், நாகர் சன்னதிகள் உள்ளன. சண்டீஸ்வரர், காலபரவர், சூரியன் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.
இத்தலத்தில் சிவபெருமான் அருளால் சனி பகவானுக்கு திருமணமாகும் பாக்கியமும் கிடைத்ததாம். எனவே இத்தலத்தில் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி என்ற இரு பத்தினிகளுடன் ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரோடு தனிச் சன்னதியில் அமைந்திருக்கிறார் சனிபகவான்.
இவரது ஊனத்தை காகம் வந்து பெற்றுக் கொண்டதாம். சனிபகவான் அந்தக் காலத்தையே தன் வாகனமாக ஏற்றார் எனவும் தலபுராணம் சொல்கிறது. விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகளால் ஏற்படும் அச்சங்கள், தொந்தரவுகள் நீங்கவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இத்தலத்து சனிபகவான் கருதப்படுகிறார்.
தசாபுக்தியாலோ, ஜாதக ரீதியாகவோ சனியின் பாதிப்புக்கு ஆளானவர்கள், இத்தலம் வந்து சனி பகவானுக்கும், இறைவன், இறைவிக்கும் அர்ச்சனை செய்து விட்டு, பிராகாரத்தில் காக்கைக்கு உணவு படைக்கின்றனர். இதனால் சனிதோஷம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் என்பத நிச்சயம்.
தல விருட்சமான விளாமரம், கோவிலின் வடதிசையில் உள்ளது. பூச நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது என்கிறார்கள். தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும், நந்தி பகவானுக்கு பிரதோஷ காலங்களிலும், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஆலயத்தின் எதிரே தனிக்கோவிலில் விஜய விநாயகர், தன் தந்தையை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார். அட்சய திருதியை அன்று சனிபகவான் ஸ்தூல சூட்சும வடிவங்களில் அட்சயபுரீஸ்வரரை முழுவதும் வழிபடுவதாக ஐதீகம் நிலவுகிறது.






