என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தியோ வெற்றிலை மாலை அணிவித்தோ துளசி மாலை வழங்கியோ வழிபடுங்கள்.
    மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தியோ வெற்றிலை மாலை அணிவித்தோ துளசி மாலை வழங்கியோ வழிபடுங்கள். உங்கள் எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்குவார் அனுமன் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    அனுமனுக்கு உகந்த நட்சத்திரம் மூலம். அவரின் ஜன்ம நட்சத்திரம் இது. மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திரம் ரொம்பவே சிறப்பானது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வணங்கி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். அதேபோல் அவருக்கு உரிய மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமன் கோயிலுக்குச் சென்று அவரை வழிபட்டால், எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்குவார். இன்னல்கள் மொத்தமும் விலகிவிடும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    நாமக்கல், சென்னை நங்கநல்லூர், திருச்சி கல்லுக்குழி, நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் ஆலயங்களில் மூல நட்சத்திர சிறப்பு வழிபாடு, விசேஷ அலங்காரங்கள், பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.

    அனுமனுக்கு உகந்த மூல நட்சத்திர தினத்தில் விரதம் இருந்து, அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். வெற்றிலை மாலை கட்டி எடுத்துச் சென்று வழங்குங்கள். கொஞ்சம் வெண்ணெய் வழங்கி சார்த்துங்கள். அப்படியே இயலாதோருக்கு புளியோதரை அல்லது தயிர்சாதம் அன்னதானமாக வழங்குங்கள். உங்களின் எல்லாக் காரியங்களிலும் பக்கபலமாக இருந்து காத்தருள்வார் ராமபக்தன் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

    , கர்மப் பதிவுகளின் வெளிப்பாட்டை அன்றாட அனுபவமாக வெளிப்படுத்தும் சனீஸ்வரரின் ஆதிக்க நாளான சனிக்கிழமையை நாம் விரத நாளாக கடைப்பிடிக்க வேண்டும்.
    அரசர் முதல் ஆண்டி வரை சனி என்றாலே ஒருகணம் சிந்தனையில் ஆழ்ந்து விடுவர். காரணம் நன்மை தீமை இரண்டையும் உறுதியாகவும் சரியாகவும் செய்யக் கூடிய கதிர் வீச்சுகளை தமது இயல்பாக அமைந்தது சனிக்கிரகம். அதுமட்டுமின்றி ஒருவரது ஆயுள், ஆரோக்கியதன்மைகளின் அளவீட்டு முறைகளை குறிப்பிடும் அம்சமும் உடைய ஒரு மெதுவான கிரகம் 'சனீஸ்வரன்' எனப்படும் 'காரி' ஆகும்.

    இது வாரநாட்களில் ஏழாவது நாளாக வரும். தனிமனித வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை துல்லியமாகக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய அலை இயக்கத்தை, ஜனன கால நேரத்தில், ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்வியல் பக்கங்களின் அனுபவப் பதிவுகளை, செயல் களமாக்கிக் காட்டி உலகியல் அனுபவம் பெற வைக்கக் கூடிய மிகப்பெரும் தனித்தன்மை சனிக்கிரகத்துக்கு உண்டு.

    ஒவ்வொரு மாதத்திலும் 8, 17, 26 ஆகிய தேதிகளிலும், மகரம், கும்பம் ராசிகளிலும், சனிக்கிழமைகளிலும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களிலும் பிறந்தவர்கள் சனீஸ்வரனின் கிரக அலை இயக்கத்தை நன்மை தரத்தக்க அமைப்பில் கூடுதலாகப் பெற்றவர்களாவார்கள்.

    மேற்கூறிய அமைப்பில் பிறந்தவர்கள், கலியுகம் சார்ந்த ஆதிக்க அம்சம் பெற்றிருக்கும் சனீஸ்வரனால் தொழில், தொழில் நுட்பம், அறிவு, உழைப்பு, உலகியல் சார்ந்த இரு கூறு அனுபவங்கள் (இன்பம்-துன்பம்) ஆகியவற்றில் பிறரை விட முன்னணியில் இருப்பார்கள். துன்பத்தால் துவண்டு போனாலும் கூட ஒரு காலகட்டத்தில் நிச்சயம் வாழ்வில் தலையெடுத்து வெற்றிநடை போடுவார்கள்.

    உடலின் கால்சியம் சத்து, எலும்புகளின் வலிமை, கைகால் மூட்டுகள், மருத்துவச் சிகிச்சைக்குக் கட்டுப்படாத நோய்கள் ஆகியவற்றை சனி குறிப்பிட்டுக் காட்டும். சனியின் பலம் ஒரு ஜாதகத்தில் இருந்தால் தன் மக்களுடைய ஆதரவால் பதவிகளை அடைய இயலும். அது சிறிதோ பெரிதோ சனி பகவான் ஒருவருடைய பிறந்த காலத்தில் பலமாக அமைந்திருக்க வேண்டியது முக்கியம்.

    தொழில் அல்லது வேலை வாய்ப்புகளில் இருக்கும் நிரந்தரமற்ற தன்மைகளையும், நோய் நொடிகளையும் சனி வார விரத பூஜா முறைகளால் நாம் தீர்க்க முடியும். மேலும் சனி திசை, ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகச் சனி, ஆகிய கோட்சாரக் கோளாறுகளை சனிக்கிழமை விரத முறைகள் நல்ல முறையில் தீர்த்து வைக்கும் சக்தி பெற்றவை ஆகும்.

    காரணம் தெரியாத தொழில் வகைச் சிக்கல்கள், ஒருவரது சகிப்புத் தன்மையையும் தாண்டிய தினசரி சோதனைக்களமாக அமைந்த பணியிடச் சங்கடங்கள், மருத்துவ உலகிற்கு சற்றும் பிடிகொடுக்காத நோய் நொடிகள் ஆகிய துன்ப துயரங்கள் அனைத்தும் சனியினால் வரக்கூடியவையாகும்.

    இவற்றை நாம் தீர்க்க அல்லது தவிர்க்க வேண்டுமானால், கர்மப் பதிவுகளின் வெளிப்பாட்டை அன்றாட அனுபவமாக வெளிப்படுத்தும் சனீஸ்வரரின் ஆதிக்க நாளான சனிக்கிழமையை நாம் விரத நாளாக கடைப்பிடிக்க வேண்டும்.

    மேலும், அந்த நாளில் ஆதரவற்ற முதியோர்களுக்கு பொருள் உதவி செய்யும் நாளாகவும், வயதில் மூத்த பெரியோர்களிடம் ஆசிகளைப் பெறும் நாளாகவும், உடல் ஊனமுற்ற ஆதரவற்றவர்களுக்கு வஸ்திர தானம் வழங்கும் நாளாகவும் கடைப் பிடிப்பது மிக முக்கியமானதாகும்.

    “சனி கெடுப்பின் யார் கொடுப்பார், சனி கொடுப்பின் யார் கெடுப்பார்”

    சனியை போன்று கொடுப்பவரும் இல்லை சனியை போன்று கெடுப்பவரும் இல்லை.
    சிவனுக்கு உகந்த சிறப்பான நாட்களில் நாம் விரதம் இருந்து ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் அபாயம் நமக்கு ஏற்படாது. செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி காணலாம்.
    சிவனுக்கு உகந்த சிறப்பான நாட்களில் நாம் விரதம் இருந்து ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் அபாயம் நமக்கு ஏற்படாது. ஆதரவுக் கரம் கூடுதலாக இருக்கும். செல்வ வளம் பெருகி வாழலாம். செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி காணலாம்.

    பெண்களுக்கு ஒன்பது நாள் “நவராத்திரி”. ஆண்களுக்கு ஒரு நாள் ‘சிவராத்திரி’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலேயே அதிகம் இருந்ததால் விரதங்களையும், வழிபாடுகளையும் தொடர்ந்து தினம்தோறும் செய்து வந்தார்கள். எனவே நவராத்திரி விழாவை ஒன்பது நாட்களும் பெண்கள் தெய்வ வழிபாடாக வைத்து, அம்பிகை போரில் வெற்றி பெற்ற நாளை ‘விஜயதசமி’ என்றும் கொண்டாடினர்.

    ஆண்கள் பொருள் தேடும் பொருட்டும், தொழில் துறையில் ஈடுபடுவதாலும் தெய்வ வழிபாட்டிற்கென்று சிறிது நேரம் தான் ஒதுக்க இயலும். எனவே வருடத்தில் ஒருநாள் சிவனை நினைத்து வழிபட்டு, வருடம் முழுவதும் வழிபட்ட பலனைப் பெறலாம் என்பதால் ‘சிவராத்திரி’யைத் தேர்ந்தெடுத்தனர்.

    மாலை 6 மணிக்கு விநாயகப் பெருமானை வணங்கி, அதன்பிறகு சிவனை வணங்கத் தொடங்கி, இயன்ற அளவு ஒரே ஆலயத்தில் ஆறுகால பூஜையிலும் கலந்து கொள்ளலாம். அல்லது தொடர்ந்து அருகில் இருக்கும் சிவாலயங்கள் பலவற்றிற்கும் சென்று ஒவ்வொரு சிவாலயத்திலும் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வரலாம். அங்ஙனம் வழிபடச் செல்லும் பொழுது நந்தீஸ்வரரை வணங்கி உத்தரவு கேட்டு, பிறகு சிவனையும், உமையவளையும் வழிபட வேண்டும். தொடர்ந்து பரிவார தெய்வங்களை வழிபட்டு, இறுதியில் சண்டிகேஸ்வரரை வழிபட்டு வருவது நல்லது.

    சிவனை சிந்தையில் நிறுத்திக் கொண்டாட வேண்டிய நாளான ‘மகாசிவராத்திரி’ வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி (திங்கட்கிழமை) வருகிறது. அதற்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று நந்தியை வழிபட்டு வர வேண்டும்.

    உமாதேவி தன் திருக்கரங்களால், விளையாட்டாக சிவபெருமான் கண்களை மூடினார். இதனால் உலகமே இருள்மயமானது. அந்த இரவில் ஒளி வேண்டித் தவித்த தேவர்களுக்கெல்லாம் ஒளிகொடுக்க சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்ததாக கருதப்படுகின்றது. எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற எல்லோருமே இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் ஒரு மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். வலம்புரிச் சங்கால் ஈசனை அபிஷேகித்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்த அன்னத்தை நைவேத்தியமாக படைத்து சிவனுக்குரிய பாடல்களைப் பாடி, பஞ்சாட்சரத்தை பலமுறை சொன்னால் பாவங்கள் விலகும், யோகங்கள் சேரும், செல்வ வளம் பெருகும், புகழ்பெறும் வாய்ப்பு உருவாகும். இன்னல்கள் விலகி இனிய பலன்களை இல்லம் தேடி வரவழைத்துக்கொள்ள இயலும்.

    சிவராத்திரியன்று விரதம் இருந்து மகாவிஷ்ணு சக்கராயுதத்தையும், மகாலட்சுமியையும் பெற்றார் என்று புராணங்கள் சொல்கிறது. பிரம்மதேவன் சரஸ்வதியை அடைந்ததும் இந்த நாளில் தான் என்பார்கள். எனவே கல்வி விருத்தி, செல்வ விருத்தி பெற்று வெற்றிக் கொடி நாட்ட விரும்புபவர்கள், இந்த விரதத்தை மேற்கொண்டால் வெற்றி மீது வெற்றி காண இயலும்.
    மகா சிவராத்திரி, மாத சிவராத்திரிக்கு விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.
    “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று அவ்வையார் பாடி வைத்தார். ஆலயம் இல்லாத ஊரில் அடியெடுத்து வைக்கக் கூட ஆன்றோர்கள் யோசித்திருக்கிறார்கள். அந்த ஆலயம் இரவு முழுவதும் திறந்திருக்கின்ற திருநாள் தான் சிவராத்திரி. வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள் கூட, ஒருநாளாகவும், திருநாளாகவும் கொண்டாடப்படும் சிவராத்திரி இரவில், விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.

    இந்த விழிப்பு விரதத்தை ‘மங்கலம் தரும் மகாசிவராத்திரி’ என்றும், ‘செல்வ வளம் தரும் சிவராத்திரி’ என்றும் ‘சொர்க்கத்தை வழங்கும் தூய சிவராத்திரி’ என்றும், ‘எதிர்ப்புகளை அகற்றும் இனிய சிவராத்திரி’ என்றும் ‘காரிய வெற்றி வழங்கும் கனிவான சிவராத்திரி’ என்றும் மக்கள் வர்ணிக்கிறார்கள்.

    சிவன் பெயரை உச்சரித்து சிறப்புகளை பெற்ற அறுபத்து மூவரைப் போல, நீங்களும் மாற வேண்டுமானால் தேர்ந்தெடுக்க வேண்டிய நாள் சிவராத்திரி. அன்றைய தினம் நடைபெறும் ஆறுகால பூஜைகளில் கலந்துகொண்டு சிவனை வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெற்று வாழமுடியும்.

    குழந்தை இல்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்து, ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் வாரிசுகள் உருவாகும் என்பது நிச்சயம்.
    இந்த உலகத்தைப் படைப்பதற்காக, உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு கும்பத்தில் வைத்து, அதை நீரில் மிதந்து வரச் செய்தனர். அப்பொழுது இறைவன் அந்தக் கும்பத்தை அம்பால் எய்ய, கும்பத்தில் இருந்த கூம்புபோன்ற கோணப்பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடமே இப்பொழுது ‘கும்பகோணம்’ என்று திருத்தலப் பெயர் பெற்று விளங்குகிறது.

    அங்கு “மகா மகப் பெருவிழா” மிகச் சிறப்பாக நடைபெறும். இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகின்றது. மற்ற ஆண்டுகளில் மாசி மாத மகம் நட்சத்திரம் அன்று, நாம் தெய்வங்களை வழிபட்டாலே தித்திப்பான வாழ்க்கை அமையும். குறிப்பாக சிவனின் மைந்தனான முருகப்பெருமானுக்கு விரதமிருந்து வழிபடுவது நல்லது. அன்றைய தினம் குழந்தை இல்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்ன தானம் செய்து, ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் வாரிசுகள் உருவாகும் என்பது நிச்சயம்.

    ஒவ்வொரு மாதத்திலும் “மகம்” நட்சத்திரம் வரும். ஆனால் மாசி மாதத்தில் வரும் ``மகம்” நட்சத்திரம் மட்டுமே “மாசி மகம்” என்று அழைக்கப்படுகிறது. ‘மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்’ என்பது நம் முன்னோர் வாக்கு. 
    தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் சனியினால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ள, சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
    நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனியின் ஆதிக்கம் பொருத்துதான் ஒருவரின் ஆயுள் காலம் நிர்ணயிக்க முடியும். ஆனால், அந்த கிரகத்தையும் கட்டுப்படுத்துவர் பெருமாள். சனிக்கு அதிபதியான பெருமாளுக்கு சனிக்கிழமைகள் உகந்த நாட்கள்.

    சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ஓம் நமே நாராயணாய ” என்று உச்சரித்து விரத்தை ஆரம்பிக்கலாம். அன்று ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ண வேண்டும். அசைவம் கூடாது. அதன் பின் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை வழிபடுதம் அவசியம்..

    அருகில் கோவில் இல்லாதவர்கள் வீட்டிலேயே பெருமாளின் படத்தை வைத்து வழிப்பாட்டை செய்யலாம். சனிக்கிழமை இருக்கும் விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

    புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம். கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள் கோவிலுக்கு சென்று விட்டு வரவும்.

    மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்திவிட்டு பெருமாளை வணங்கிய பின்பு எப்போதும் போல உணவுகளை உண்ணலாம்.

    இப்படி விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். அன்று விரதம் இருக்கும்போது தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் சனியினால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ள, சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
    வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரம் அன்று, முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.
    ஒவ்வொரு மாதத்திலும் ஒரு சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து நாம் கொண்டாடுகின்றோம். நட்சத்திர அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசிமகம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    குறிப்பாக வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரம் அன்று, முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். வருங்காலம் நலமாகும். அந்த இனிய நாள் வருகிற 18-5-2019 (சனிக்கிழமை) அன்று வருகிறது. வைகாசி விசாகத்தன்று பவுர்ணமியும் வருவதால் சிறப்பு அதிகம் உண்டு. அன்றைய தினம் மலை வலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாளாகும். விநாயகப் பெருமானை வழிபட்டு, அவரது தம்பி முருகப்பெருமான் மீதும் கவனம் செலுத்தி, அவர்களது தாய் தந்தையான உமா - மகேஸ்வரர் வழிபாட்டையும் செய்தால் நலன்கள் யாவும் வந்து சேரும்.

    ‘முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன் மருகனே, ஈசன் மகனே! ஒரு கை முகன் தம்பியே நின்னுடைய திருவடியை எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்’ என்று கூறி வழிபடுங்கள். உங்களின் நம்பிக்கை வீண் போகாதபடி முருகப்பெருமான் அருள்புரிவார்.

    விசாக நட்சத்திரம் அன்று, முருகப்பெருமானுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்து வழிபட்டால், துன்பங்கள் விலகி, வாழ்வில் இன்பங்கள் வந்து சேரும். ஆயுள் விருத்தியாகும். பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்தால், கடன் சுமை தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு காரியமும் வெற்றியாக முடியும். சர்க்கரையால் அபிஷேகம் செய்தால், சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்தால் இனிய சந்ததிகள் பிறக்கும். எலுமிச்சைப் பழத்தால் அபிஷேகம் செய்தால் எம பயம் நீங்கும். மாம்பழத்தால் அபிஷேகம் செய்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வ நிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்தால் திக்கெட்டும் புகழ் பரவும். அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் அரசு வழி ஆதரவு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் சரும நோய் அனைத்தும் நீங்கும். பன்னீர் அபிஷேகம், பார்போற்றும் செல்வாக்கை பெற்றுத் தரும். தேன் அபிஷேகம், சகல பாக்கியமும் தந்தருளும்.

    வைகாசி விசாக தினத்தில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவதன் மூலம், பகை விலகும். பாசம் பெருகும். முருகனின் திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்பது முன்னோர் வாக்கு.

    நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களைக் கொண்டாடும் பொழுதுதான், அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமையும். எதிரிகளை சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பன்னிரண்டு கொண்ட வேலவனை, நேருக்கு நேராக நின்று கை குவித்து வணங்கினால், போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும்.

    விசாகம் அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். பின்னர் இல்லத்து பூஜை அறையில் முருகப்பெருமானின் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கு ஏற்றி ஐந்து விதமான எண்ணெய் ஊற்றி, ஐந்து விதமான புஷ்பம் சாத்தி, ஐந்து வகைப் பழங்களை படைக்க வேண்டும். மேலும் கந்தனுக்குப் பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் நைவேத்தியமாக வைத்து சண்முக கவசம் பாராயணம் செய்ய வேண்டும். ‘ஐந்துமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்’ என்பதற்கேற்ப, மயிலில் பறந்து வந்து முருகப்பெருமான் வரம் தருவார்.

    உங்களால் முடிந்தால், அருகில் இருக்கும் ஆறுபடை வீடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று வழிபட்டு வரலாம். அல்லது சிவாலயத்தில் உள்ள முருகப்பெருமான் சன்னிதியில் வழிபாடு செய்யலாம்.

    அருணகிரிநாதர், முருகப்பெருமானை வர்ணித்துப் பாடும் போது, அவரது ஆறுமுகத்திற்கு அழகாக விளக்கம் சொல்கின்றார். மயிலேறி விளையாடும் முகம் ஒன்று, ஈசனுடன் பேசி உறவாடும் முகம் ஒன்று. அடியவர்களின் குறைகேட்டு அகற்றும் முகம் ஒன்று. குன்றத்தில் வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று. அசுரனை வதைப்பதற்காக எடுத்த முகம் ஒன்று. வள்ளியம்மை மணம் காண வந்த முகம் ஒன்று என்று விளக்கம் அளிப்பார்.

    அப்படிப்பட்ட ஆறுமுகம் பெற்ற ஈசனையும், அழகன் முருகனையும் விரதம் இருந்து நாம் கொண்டாட வேண்டிய திருநாள் வைகாசி விசாகம் ஆகும்.

    “ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்
    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜெயந்தியாகும்.
    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜெயந்தியாகும். இந்த ஆண்டு நரசிம்ம ஜெயந்தி தினம் இன்று (மேமாதம் 17-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தன்று அவரை விரதம் இருந்து வழிபடுவது நல்ல பலனை தரும்.

    நரசிம்மர் மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். பக்தன் பிரகலாதனுக்காக அவதரித்தார் நரசிம்மர். இரண்யகசிபுவை அழித்து பிரகலாதனை ரட்சிக்க தூணில் இருந்து சிங்க முகமும், மனித உடலும் கலந்த மாறுபட்ட வடிவில் ஆக்ரோஷமாக அவதரித்தார். நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

    நரசிம்ம ஜெயந்தியன்று பக்தர்கள் அதிகாலை குளித்து வீட்டை சுத்தம் செய்து பூஜையறையில் சுவாமி படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். அன்று பகல் முழுவதும் உணவின்றி நீராகாரமாக பருகி, நரசிம்மர் ஸ்தோத்திரம் கூறி வழிபடலாம். அன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் வழிபட வேண்டும். விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும் மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளை படைக்கலாம்.

    அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை விரதம் வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். அவரது படத்தை பூஜை அறையில் கிழக்குநோக்கி வைக்க வேண்டும். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.

    ‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’. நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்.

    இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். 

    நரசிம்மர் பாரதம் முழுவதும் வணங்கப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் தான், அவருக்குத் தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடும் அதிகம்.
    வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து அசைவம் சாப்பிடாமல் மனதை ஒழுங்கப்படுத்தி வழிபட்டால் நீங்கள் கேட்ட வரத்தை நரசிம்மர் தருவார்.
    லட்சுமி நரசிம்மரை ஆலயத்துக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது. வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து ஆலயங்களில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வந்தால் நல்ல விஷயங்கள் நடைபெறும். ஆலயத்துக்கு செல்ல முடியாத பட்சத்தில் வீட்டிலும் நரசிம்மரை வழிபடலாம். ஆனால் அவரை வழிபட வேண்டிய இடம் மிக மிக சுத்தமாக இருக்க வேண்டும்.

    அசைவம் சாப்பிடுவதாக இருந்தால் மிக கவனமாக இருக்க வேண்டும். அசைவம் சாப்பிடும் தினத்தன்று அவரை வணங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நரசிம்மருக்கு அசைவம் சுத்தமாக பிடிக்காது. வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து அசைவம் சாப்பிடாமல் மனதை ஒழுங்கப்படுத்தி வழிபட்டால் நீங்கள் கேட்ட வரத்தை நரசிம்மர் தருவார்.

    சுவாதி நட்சத்திர தினங்களில் முடிந்தவர்கள் லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபடலாம். இயலாதவர்கள் அவர் சன்னதியை சுற்றி வந்து வழிபட்டாலே போதும். காலையில் வழிபடுவதை விட மாலை நேரத்தில் வழிபட்டால் நரசிம்மரின் பரிபூரண ஆசியை பெறலாம்.

    வீட்டில் வழிபடுபவர்கள் லட்சுமி நரசிம்மர் படத்தை வைத்து வழிபடலாம். நரசிம்மர் படத்துக்கு பூ வைத்து நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். மறக்காமல் பானகம் நெய்வைத்தியம் படைக்க வேண்டும். பூஜை முடிந்ததும் அந்த படத்தை 12 முறை சுற்றி வந்த வழிபடுவது ஆலயத்துக்கு சென்று வழிபட்ட பலன்களை உங்களுக்கு தரும்.

    கடன்கள், நோய்களில் இருந்து விடுபட விரும்புபவர்கள் லட்சுமி நரசிம்மருக்குரிய ஸ்லோகங்கள், மந்திரங்களை சொன்னால் விரைவில் பலன் கிடைக்கும்.

    நரசிம்மர் கவசம், நரசிம்மர் அஷ்டகம், நரசிம்மர் அஷ்டோத்ர சதநாம மந்திரம், நரசிம்மர் துதி, நரசிம்மர் நகஸ்துதி, நரசிம்மர் மந்திரம், நரசிம்மர் மங்கள நவரத்ன மாலிகா, நரசிம்மர் போற்றி போன்றவற்றை முடிந்த போதெல்லாம் சொல்லி வந்தால் நரசிம்மரின் கருணை பார்வை உங்கள் மீது மழை போல் பொழியும்.
    ஸ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்றும், செவ்வாய்க்கிழமையிலும், பிரதோஷ நாளன்றும் விரதம் இருந்து வழிபடலாம். நரசிம்மர் அருளால் விரைவில் தடை நீங்கி நல்லபடியாக திருமணம் நடைபெறும்.
    ஸ்ரீநரசிம்மரை பிரதோஷத்தன்று விரதம் இருந்து வழிபடுவது சிறப்பாகும். அன்று மாலை லட்சுமி நரசிம்மர் போட்டோவை வீட்டில் வைத்து சந்தனம், துளசியால் அலங்கரித்து பானகம் வைத்து வழிபடவும்.

    ஸ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்றும், செவ்வாய்க்கிழமையிலும், பிரதோஷ நாளன்றும் விரதம் இருந்து வழிபடலாம். நரசிம்மர் துதியை தினமும் சொல்லி தியானித்துவர ஏவல், பில்லி சூனியம், காரிய தடை, கடன் தொல்லை இவைகள் நீங்கி சுகம் பெறலாம்.

    திருமண தடை உள்ளவர்கள் பிரதோஷ தினத்தன்று விரதம் இருந்து பானகம் வைத்து நரசிம்மரை வழிபட்டு வர வேண்டும். நரசிம்மர் அருளால் விரைவில் தடை நீங்கி நல்லபடியாக திருமணம் நடைபெறும்.
    பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர்.
    ஒரு பெண்ணின் வாழ்வில் பிறந்த வீடும், புகுந்த வீடும் சரிசமமான சிறப்பைப் பெறுகிறது. பிறந்த இடத்தின் பெருமையை பேணிக்காக்க வேண்டிய கடமையும், புகுந்த இடத்தின் மதிப்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புணர்வும் கொண்ட பெண்கள் இங்கு போற்றப்படுகின்றனர். அப்படி.. தான் பிறப்பெடுத்த பிறந்த இடத்தின் பெருமையைக் காப்பாற்றி, அதன் வழி வந்தவர்களின் குலதெய்வமாக வணங்கப்படுபவளே ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி என்னும் பெண்தெய்வம். இவளே ‘வாசவி’ என்ற திருநாமத்திலும் அழைக்கப்படுகிறாள்.

    ஒரு சமயம் ஈசனும் அம்பாளும் கயிலாயத்தில் வீற்றிருந்தனர். கயிலையின் முதன்மை காவலாளியான நந்தியம் பெருமான், புனித கங்கையில் நீராடுவதற்காக புறப்படத் தயாரானார். தான் சென்றால், இறைவனுக்கு காவல் வேண்டுமே என்பதற்காக, சமதி என்ற மகரிஷியிடம், தான் வரும் வரை கயிலையின் வாசலில் காவல் காக்கும்படியும், யார் வந்தாலும் இறைவனின் அனுமதி பெற்றே உள்ளே அனுமதிக்கும்படியும் கூறிச் சென்றார்.

    சமதி முனிவரும் கண்ணும் கருத்துமாக காவல் காத்து வந்தார். அப்போது கோபத்திற்கு பிரசித்தி பெற்ற துர்வாச முனிவர், அங்கு வந்தார். அவரை சமதி மகரிஷி உடனடியாக உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அவரை, பூமியில் மனிதனாக பிறக்கும்படி துர்வாசர் சாபமிட்டார். அதன்படி சமதி மகரிஷி, பெனுகொண்டா நகரத்தில் குசும ஸ்ரேஷ்டியாக பிறந்தார்.

    அதன்பின் வந்த நாள் ஒன்றில், ஈஸ்வரனின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த நந்தி, ஈசனின் காலில் விழுந்து வணங்கினார். அப்போது தன் காலிலும் விழாமல் அவமதித்து விட்டதாக நினைத்த பார்வதி, நந்தியை பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

    தவறு செய்யாத தன்னை சபித்ததால் பார்வதி மீது கோபம் கொண்ட நந்தி, அவரையும் பூமியில் பிறந்து கன்னியாக வாழ்ந்து அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்று சாபமிட்டார்.

    அவர்கள் இருவரும், துர்வாசரால் சாபம் பெற்று ஏற்கனவே பூமியில் அரசராக வாழ்ந்து வந்த குசும ஸ்ரேஷ்டி- குசுமாம்பிகை தம்பதிக்கு பிள்ளை களாக பிறந்தனர். விருபாஷன் என்ற பெயருடன் நந்தியும், வாசவாம்பா என்ற பெயருடன் பார்வதியும் வளர்ந்தனர்.

    வாசவாம்பா மணப் பருவம் அடைந்தாள். அந்த சமயத்தில் சித்திரகாந்தன் என்னும் அரசன் பல இடங்களில் வெற்றிக்கொடி நாட்டி, இந்த நாட்டிற்கு வந்தான். அவன் வாசவாம்பாவைக் கண்டு காதல் கொண்டான். அவளை மணம் செய்து தரும்படி, அவளது தந்தையான குசும ஸ்ரேஷ்டியிடம் கேட்டான். ஆனால் அவர் தன்னுடைய இன மக்களிடம் கேட்க வேண்டும் என்றும், இன்னும் சில நாட்களில் தகவல் சொல்வதாகவும் கூறினார்.

    பின்னர் தன்னுடைய குலத்தைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி அரசன் விவாதித்தான். பெனுகொண்டா ஆட்சிக்குட்பட்ட 18 நகரங்களில் வாழ்ந்து வந்த 714 கோத்திரங்களை சேர்ந்த வைஸ்சியர்களின் சபை இதுபற்றி விவாதித்தது. 612 கோத்திரத்தார் மணமுடிக்கலாம் என்றும், 102 கோத்திரத்தார் குலப்பெருமை காக்க இதற்கு சம்மதிக்க மாட்டோம் என்றும் கூறினர். கருத்து வேறுபாடு அதிகரிக்க, சம்மதம் தெரிவித்த 612 கோத்திரத்தார் தங்கள் குடும்பங்களுடன் ஊரை விட்டு வெளியேறினர்.

    இதையெல்லாம் அறிந்த வாசவாம்பா, தன் திருமணம் தொடர்பாக வாதிட்டு, தன் இனத்தவர்கள் பிரிந்ததை நினைத்து வேதனை அடைந்தாள். தன்னால் தான் அனைவருக்கும் வேதனை என்று நினைத்தவள், தன் குலப்பெருமை காப்பதற்காக தன்னை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தாள். அதற்கு பெரியவர்களின் சம்மதத்தையும் வாங்கினாள்.

    அதன்படி அங்கிருந்த ஆலயம் முன்பு பெரிய அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, அதில் வாசவியின் அக்னிப் பிரவேசம் நிகழ்ந்தது.

    வாசவி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியாக தோன்றி அங்கிருந்த அனைவருக்கும் அருள்காட்சி தந்து மறைந்தாள்.

    அன்னை தீக்குளித்த நாளான தை அமாவாசைக்குப் பின் வரும் இரண்டாம் நாளை அக்னி பிரவேச தினமாகவும், அன்னை இந்த பூமியில் அவதரித்த சித்திரை மாத வளர்பிறை தசமியை வாசவி ஜெயந்தியாகவும் பக்தர்கள் கடைப்பிடிக்கின்றனர். பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர்.
    வீட்டில் ஸ்ரீகெளரி தேவியை விரதம் இருநது வழிபடுவதால் இல்லறம் செழிக்கும். வீட்டில் செல்வம், தானியம், மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் எப்போதும் நிறைந்திருக்கும்.
    கெளரி என்ற திருநாமம் அம்பாளைக் குறிப்பது. கிரிகுலங் களின் அரசியான தேவியை கெளரி என்று சிறப்பிக்கின்றன ஞான நூல்கள். ஸ்ரீகெளரி தேவியை விரதம் இருந்து வழிபடுவது, உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற்குச் சமமாகும். வீட்டில் ஸ்ரீகெளரி தேவியை விரதம் இருநது வழிபடுவதால் இல்லறம் செழிக்கும். வீட்டில் செல்வம், தானியம், மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் எப்போதும் நிறைந்திருக்கும். கன்னிப் பெண்கள் கெளரி தேவியை விரதம் இருந்து வழிபடுவதால், அவர்களுக்கு மனம் நிறைந்த கணவன் வாய்ப்பான்.

    கெளரி தேவியை சோடச கெளரி தேவியர் என்று பதினாறு வடிவங்களில் வழிபடுவார்கள்.

    ஞான கெளரி, அமிர்த கெளரி, சுமித்ர கெளரி, சம்பத் கெளரி, யோக கெளரி, வஜ்ர ச்ருங்கல கெளரி, த்ரைலோக்ய மோஹன கெளரி, சுயம்வர கெளரி, கஜ கெளரி, கீர்த்தி கெளரி, சத்யவீர கெளரி, வரதான கெளரி, ஐஸ்வர்ய மகா கெளரி, சாம்ராஜ்ய மகா கெளரி, அசோக கெளரி, விஸ்வபுஜா மகா கெளரி ஆகிய பதினாறு தேவியர் குறித்த வழிபாடுகளை ஞான நூல்கள் விவரிக்கின்றன. இந்த தேவியரில் ஸ்ரீஞான கெளரியை புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி திருநாளில் வழிபட்டால், தடைகள் நீங்கி, நினைத்த காரியம் நினைத்தபடி வெற்றிபெறும். அன்னை பராசக்தி தேவியானவள் ஞான சக்தியாக கோலம்கொண்ட சரிதத்தை சிவபராக்கிரமம் விவரிக்கிறது.

    ஒருமுறை தன்னுடைய சிறப்பைக் குறித்து சிவபெருமானிடத்தில் மிகைபட விவரித்தாள் தேவி. இறைவன் உயிர்களைப் படைத்து அந்த உயிர்களுக்கு உடல், அறிவு ஆகியவற்றை அளித்தாலும், தானே அவற்றுக்கு சக்தியைத் தருவதாகவும் ஆகவே, தனது செயலே உயர்ந்தது என்றும் பேசினாள். பரமன் ஒருகணம் உலக உயிர்கள் அனைத்தின் அறிவையும் நீக்கினார். அறிவு நீங்கியதால் உலகில் குழப்பமும் சச்சரவும் ஏற்பட்டன. அதைக் கண்டு தேவி திகைத்தாள். தன்னால் வழங்கப்பட்ட சக்தி அனைத்தும் வீணாவதை உணர்ந்தாள்.

    தனது தவறான எண்ணம் குறித்து வருந்தினாள். இறைவன், உயிர்களுக்கு மீண்டும் ஞானம் வழங்கினார். தேவிக்கும் அருள் புரிந்தார். இங்ஙனம் தேவிக்கு அறிவின் திறத்தை உணர்த்திய சிவ மூர்த்தியை கெளரி லீலா சமன்வித மூர்த்தி என்று சிவபராக்கிரமம் போற்றுகிறது. இதைத் தொடர்ந்து அம்பிகை வன்னி மரத்தடியில் அமர்ந்து சிவனருள் வேண்டி தவமிருந்தாள். அதனால் மகிழ்ந்த சிவனார், தன்னுடலில் பாதி பாகத்தை அவளுக்கு அளித்ததுடன், அவளை அறிவின் அரசியாக்கினார். இதையொட்டி தேவி, ஞான கெளரியாகச் சிறப்பிக்கப்படுகிறாள்.

    இந்த தேவியை பிரம்ம தேவன் கார்த்திகை மாதம் வளர்பிறை பஞ்சமியில் வழிபட்டு அருள்பெற்றாராம். அந்த நாளை ஞான பஞ்சமி, கெளரி பஞ்சமி என்று போற்றுவார்கள். வீரர்கள் தங்களது வெற்றிக்காக இந்த தேவியை புரட்டாசி வளர்பிறை பிரதமையில் விரதம் இருந்து வழிபடுவார்கள். நாமும் வரும் புண்ணிய புரட்டாசியில் இந்த அம்பிகையை விரதம் இருந்து வழிபட்டு, அளவில்லா ஞானமும் செல்வமும் பெற்று மகிழ்வோம்.

    நவகிரக நாயகியாகத் திகழும் ஆதி பராசக்தி, சூரிய மண்டலத்தில் தீப்தா என்ற திருப்பெயருடன் திகழ்கிறாளாம். அதேபோல், சந்திர மண்டலத்தில் அமிர்த கெளரியாகவும், செவ்வாய் மண்டலத்தில் தாம்ர கெளரியாகவும், புத மண்டலத்தில் ஸ்வர்ண கெளரியாகவும், சுக்கிர மண்டலத்தில் சுவேத கெளரி யாகவும், சனி மண்டலத்தில் சாம்ராஜ்ய கெளரியாகவும், ராகு மற்றும் கேது மண்டலங்களில் முறையே கேதார, கேதீசுவர கெளரியாகவும் திகழ்கிறாளாம்.

    அவ்வகையில் குரு மண்டலத்தில் அன்னை ஞான கெளரியாக அருள்பாலிக்கிறாள். ஆகவே, இந்தத் தேவியை அனுதினமும் விரதம் இருந்து வழிபட்டு வந்தால், ஞானத்தையும், திருமணப் பேற்றையும், நல்வாழ்வையும் தருவாள்.
    ×