என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஆனந்த கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. முருகப்பெருமானின் எந்த பெயரை சொல்லி அழைத்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.
    ஆனந்த கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. அதாவது காங்கேயன், கார்த்திகேயன், சரவணன், குமரன், சண்முகன், சேனாதிபதி, குகன், வேலாயுதன், கந்தன், கடம்பன், கதிர்வேலன் ஆகிய முக்கியமான பெயர்களில் பக்தர்கள் அன்புடன் வழிபட்டு வருகின்றனர்.

    முருகா என்ற சொல்லில் முக்தி பிறக்கின்றது
    கந்தா என்ற சொல்லில் கருணை பூக்கின்றது
    கடம்பா என்ற சொல்லில் கருமவினை கரைகின்றது
    கதிர்வேலா என்ற சொல்லில் காமம் கலைகிறது
    கார்த்திகேயா என்ற சொல்லில் கஷ்டம் அழிகின்றது
    ஆறுமுகா என்ற சொல்லில் ஆனந்தம் பிறக்கின்றது
    சரவணா என்ற சொல்லில் மனம் சாந்தி அடைகின்றது
    குமரா என்ற சொல்லில் குறைகள் விலகுகிறது
    குழந்தைவேலா என்ற சொல்லில் குதூகலம் பிறக்கின்றது
    தண்டாயுதபாணி என்ற சொல்லில் தரித்திரம் தொலைகிறது
    சண்முகா என்ற சொல்லில் சக்தி பிறக்கிறது
    அழகன் என்ற சொல்லில் புது ஆனந்தம் பூக்கிறது
    மயிலோன் என்ற சொல்லில் மகிழ்ச்சி பிறக்கிறது
    விசாகன் என்ற சொல்லில் விடியல் பிறக்கிறது
    வேலவா என்ற சொல்லில் வேகம் பிறக்கிறது
    சேயோன் என்ற சொல்லில் அழகு பிறக்கிறது
    செவ்வேல் என்ற சொல்லில் வசந்தம் பூக்கிறது
    பாலமுருகா என்ற சொல்லில் பாவம் நீங்குகிறது
    சுப்பிரமணியா என்ற சொல்லில் சுகம் பிறக்கிறது

    முனைவர். கிருஷ்ணமூர்த்தி, தமிழ்த்துறை தலைவர்,
    பழனியாண்டவர் கலைக்கல்லூரி.

    நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி வெற்றிப் பாதையை நோக்கி செல்வதற்கு, அதிர்ஷ்டத்தை இந்த பரிகாரம் நமக்கு தேடித்தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
    வெற்றிலை காம்பில் மூதேவி, வாசம் செய்கின்றாள் என்பதும் சிலரின் கூற்று. ஆனால் வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் வாசம் செய்வதாக மற்றொரு கூற்றும் உள்ளது. சரி. முதலில் வெற்றிலைக்காம்பு எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

    முதலில் சேதாரம் இல்லாத 6 வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக நுனிப்பகுதி இருக்க வேண்டும். நுனிப்பகுதி இல்லாத வெற்றிலையை பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. முதலில் கையில் வைத்திருக்கும் 6 வெற்றி இலைகளிலிருந்து காம்புகளை மெதுவாக கிழித்து எடுத்து விட வேண்டும். காம்பு இல்லாத 6 வெற்றிலைகளை ஒரு பலகையின் மீதோ அல்லது ஒரு டேபிளின் மீதோ வைத்துக் கொள்ளுங்கள்.

    6 வெற்றிலைகளையும் மயில் தோகை போல் விரித்து, வைத்து விடவேண்டும். அதன்மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு, வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக 6 காம்புகளையும் நல்லெண்ணெயில் போட்டுவிடலாம். பின்பு தீபத்தை ஏற்றி விட வேண்டும். ஏற்றிய தீபத்தில் எண்ணெய் சூடாகி வெற்றிலை காம்பில் இருந்து லேசான நறுமணம் வீசும். தீபத்திற்கு அடியில் இருக்கும் காம்பு இல்லாத வெற்றியில் இருந்தும் நல்ல நறுமணம் வீசும்.

    இந்த நறுமணத்தை நன்றாக சுவாசம் செய்து தீபத்தை நோக்கியவாறு ஐந்து நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து தியானம் செய்தாலே போதும். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அது விரைவாக தீர்ந்துவிடும். வாரம் ஒரு முறை இப்படி செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி வெற்றிப் பாதையை நோக்கி செல்வதற்கு, அதிர்ஷ்டத்தையும் இந்த பரிகாரம் நமக்கு தேடித்தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

    இந்தப் பரிகாரத்தை நீங்கள் எப்படி நினைத்து செய்தாலும் சரி. நம்மிடம் வாசம் செய்யும் மூதேவியானவள் நம்மை விட்டு விலக வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும் சரி. அல்லது காம்பில் வாசம் செய்யும் பார்வதிதேவியின் மூலம் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக இருந்தாலும் சரி. இது பார்ப்பவர்களின் கண்களில் உள்ளது. எந்த ஒரு சந்தேகத்துடனும், குழப்பத்துடனும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம்.
    திருவிசநல்லூரில் சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவரை வழிபாடு செய்தால் சாப, பாப, தோஷங்கள், கடன் தொல்லைகள் குறையும்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் கற்கடேஸ்வரர் கோவில் சாலை சொர்ணபுரியில் இக்கோவில் அமைந்துள்ளது. (யோகிநாதசுவாமி திருக்கோவிலுக்கும் கற்கடேஸ்வரர் கோவிலுக்கும் இடையில்).

    சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாடு என்பது வழிபடுபவரின் வாழ்க்கையில் தரித்திரம் தலை காட்டாது காத்து தன, தான்யம், சொர்ணம் முதலிய செல்வ செழிப்பை தரும் சிறப்பு கொண்டது. சொர்ணாகர்ஷன பைரவர், 64 பைரவர்களுக்கும் அப்பாற்பட்டவர். அஷ்ட லட்சுமிகளுக்கும், குபேரருக்கும் நவ நிதிகளையும் கொடுக்கும் அதிபதி. வீட்டு பூஜையறைகளிலும், வழிபாட்டு தலங்களிலும், தங்க, வைர நகை வியாபாரம் செய்யும் கடைகளிலும் வைத்து வழிபட மிகவும் உகந்தவர்.

    இப்பெருமானை வீட்டில் வைத்து தினசரி மூன்று வேலைகளிலும் வழிபட்டு வர எந்த கஷ்டங்களும் நெருங்காது. கஷ்டங்களும் வராது. தொட்டது துலங்கும். சொர்ணம் கொழிக்கும். பவுர்ணமி தோறும் முறைப்படி உள்ளன்போடு இப்பெருமானை பூஜித்து மந்திரம் ஜெபித்து வர தலைமுறை தலைமுறையாக நீடித்து நிற்கக்கூடிய நிறை செல்வம் சேரும்.

    திங்கட்கிழமை மாலை நேரங்கள், மாத பிரதோஷம், தினசரி பிரதோஷ காலங்கள், பவுர்ணமி மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்கள், திருவாதிரை நட்சத்திர நாட்கள் இவரை வழிபட மிகவும் உகந்த நாட்கள்.

    அதேபோல் மாதப்பிறப்பு, பிறந்த நட்சத்திர நாட்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், வியாழக்கிழமை மாலை நேரம், தேய்பிறை அஷ்டமி, அமாவாசை நாட்களிலும், ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷ நட்சத்திர நாட்களிலும் இங்கு வந்து மஹா சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

    இனம் புரியாத பயம் தானாய் விலகும். சாப, பாப, தோஷங்கள், கடன் தொல்லைகள் குறையும். தீயவை அனைத்தும் விலகும். நல்லன அனைத்தும் நடக்கும். சனிக்கிழமைகளில் வழிபட சனிக்கிரக தோஷங்கள் யாவும் விலகும். சொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலை, வில்வ மாலை, சந்தன மாலை, மஞ்சள் செவ்வந்தி மாலை சாற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது.
    இழந்த செல்வத்தை மீட்க ஒரே வழி இறைவனை பூஜிப்பது மட்டுமே. இறைவனை மனமுருகி வணங்கினால் இறைவன் இரட்டிப்பாக நமக்கு தருவான்.
    நாம் அள்ள அள்ள குறையாமல் செல்வத்தை சேகரித்து வைத்தாலும், ஒரு சில நேரத்தில் அனைத்தையும் இழந்து விடுகிறோம். நாம் இழந்ததை மீட்க முடியாது என எண்ணி அதைவிட்டு விடுகிறோம். ஆனால் இழந்த செல்வத்தை மீட்க ஒரே வழி இறைவனை பூஜிப்பது மட்டுமே. இறைவனை மனமுருகி வணங்கினால் இறைவன் இரட்டிப்பாக நமக்கு தருவான்.

    வாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண்கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனமார வேண்டினால் இழந்த புகழ், செல்வம் அனைத்தும் கிடைக்கும்.

    தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபாடு செய்தால் இழந்த செல்வத்தை பெற முடியும். நமக்கு செல்வ வளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழ வைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.

    திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. குபேரனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கினார்.

    தேவி லட்சுமியை வணங்கியதால் இழந்ததை பெற்றார். ஆகவே லட்சுமியை வணங்கினால் இழந்த செல்வத்தை பெறலாம். வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம்.

    மாசி மகத்தை முன்னிட்டு நாளைய தினம் நீர் நிலைகளில் நீராடி கோயில்களில் வழிபாடு நடத்தினால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
    மாசி மகத்தை முன்னிட்டு கோயில்களில் தீர்த்தவாரி வைபவம் நடைபெறுவது வழக்கம். எண்ணற்ற பக்தர்கள் புனிதத் தீர்த்தங்களில் நீராடி, இறைவனின் தரிசனம் கண்டு மகிழ்வார்கள். மாசி மாத பௌர்ணமியுடன், மகம் நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளே ‘மாசி மகம்’ ஆகும்.

    நாளைய தினம் நீர் நிலைகளில் நீராடி கோயில்களில் வழிபாடு நடத்தினால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில்தான் கோயில்கள் அனைத்திலிருந்தும் தெய்வத் திருவுருவங்கள் வீதியுலாவாகப் புறப்பட்டு, புனித நதிக்கரைகள், தீர்த்தக் குளங்கள், கடல் என்று பல இடங்களில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டு மக்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    மகாவிஷ்ணு, உமாமகேசுவரர் மற்றும் முருகன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் உகந்த தினம் மாசி மகமாகும். அதனால் விரதமிருந்து, நீர்நிலைகளில் நீராடி மூன்று தெய்வங்களையும் வழிபட்டால் இந்தப் பிறப்பு மட்டுமல்லாமல் முன் ஜன்மங்களில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகியோடும். மேலும், மக நட்சத்திரத்தை ‘பித்ருதேவா நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள்.

    இந்தப் பித்ருதேவாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியைத் தருகிறார். இதனால் மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடி ‘பிதுர் மகா ஸ்நானம்’ செய்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தமாகி அவர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

    மாசி மகத்தில் நீர்நிலைகளில் நீராடி சிவபெருமான், விஷ்ணு, முருகன் மற்றும் பித்ருக்களை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகி நாமும் நம் சந்ததியினரும் சகல செல்வங்களுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது ஐதீகம்.
    வேலைவாய்ப்பு, செல்வம், திருமண வாழ்க்கை, புத்திரப்பேறு, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற பல விஷயங்களில் பாதகங்கள் நீங்கி மேன்மையான நிலையை பெறுவதற்கும் இந்த கிரக சாந்தி பூஜை செய்யலாம்.
    மனிதர்களுக்கு அவர்களின் கர்மவினைக்கு ஏற்ப நவகிரகங்களும் பாதகமான பலன்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுத்து வாழ்வில் மேலான நிலையை அடைய கூறப்பட்ட ஒரு வழிமுறைதான் கிரக சாந்தி பூஜையாகும்.

    ஜாதகத்தில் கிரகங்களின் பாதகமான கோத்திரங்கள் திசா புக்தி காலங்கள் நடப்பவர்களும், வாழ்வில் கல்வி, வேலைவாய்ப்பு, செல்வம், திருமண வாழ்க்கை, புத்திரப்பேறு, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற பல விடயங்களில் பாதகங்கள் நீங்கி மேன்மையான நிலையை பெறுவதற்கும் இந்த கிரக சாந்தி பூஜை செய்யலாம்.

    கிரக சாந்தி பூஜையை செய்வதற்கு ஹோம பூஜைகள் செய்வதில் அனுபவம் பெற்ற வேதியர்களிடம் ஒரு நல்ல நாளை குறித்து கொள்ள வேண்டும். உங்கள் பிறந்த நட்சத்திர தினம் அல்லது ஏதேனும் சுப முகூர்த்த தினங்களில் இந்த சாந்தி பூஜையை செய்வது மிகவும் சிறப்பானது. இந்த பூஜையை உங்கள் வீட்டிலேயே அல்லது கோயில்களிலோ செய்து கொள்ளலாம். இந்த பூஜையில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்வது நல்லது. அப்படி செய்வதால் அனைவருக்கும் வாழ்வில் அற்புதமான பலன்கள் உண்டாகும்.

    கிரக சாந்தி பூஜை செய்கின்ற குடும்பத்தின் தலைவரும், அவரின் வாழ்க்கை துணையும் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பது இந்த கிரக சாந்தி பூஜையின் பலன் பன்மடங்காக கிடைக்கும். கிரக சாந்தி பூஜைக்கான பொருட்கள் அனைத்தும் வேதியர்களுக்கு வழங்கப்பட்ட பின் நல்ல முகூர்த்த நேரத்தில், ஹோமம் வளர்த்து வேதியர்கள் நவகிரக மந்திரங்களை துதித்து, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் பாவங்களும் நீங்கும் வகையில் ஹோம பூஜைகள் செய்வர். பூஜையின்போது குடும்பத்தலைவர் வேதியர்கள் அறிவுறுத்தும் வகையில் மாவிலைகள், மலர்கள் அரிசி மற்றும் நவ தானியங்கள் போன்றவற்றை ஹோமத் தீயில் இட்டு நவக்கிரகங்களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
    குடிபோதைக்கு அடிமையானவர்கள் மத்தூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தினால் அவர்கள் குடிபோதையில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது.
    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே உள்ள கருங்கல்லூர், மேட்டுப்பளையூர், வீரனூர், கோமாளிகாடு ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி, அம்மன் கோவில் ஒன்றை கட்டி வழிபாடு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையின் நடு மலையில் உள்ள ஒரு ஓடையில் அம்மன் சுயம்புவாக காட்சி அளிப்பதை கண்டனர்.

    அப்போது பக்தர் ஒருவருக்கு அருள் வந்து, நான் அம்மன் சக்தியாக உருவாகி மந்தையில் இருந்து உருவானதால் நான் மத்தூர் மாரியம்மன் என்ற திருநாமத்தில் வீற்றிருப்பதாக அருள்வாக்கு சொன்னார். பின்னர் அங்கிருந்த சுயம்பு அம்மனுக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டு மேட்டுப்பளையூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.

    கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்க மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என இந்த பகுதி கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு செய்து இந்த மலை அம்மனை மத்தூர் மாரியம்மன் என அழைத்து வழிபாடு செய்து வருகின்றனர். ஸ்ரீ மத்தூர் மாரியம்மன் பல நோய்களை போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தையே தல விருட்சமாக கொண்டு சக்தியின் மற்றொரு நிலையாக அருள்பாலிப்பதாக கிராம மக்கள் நம்புகிறார்கள்.

    குடிபோதைக்கு அடிமையானவர்கள் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தினால் அவர்கள் குடிபோதையில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தி குடிபோதை என்னும் கொடிய தீய பழக்கத்தில் இருந்து மீண்டுள்ளதாக இந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
    குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் நீங்கவும், உடல் நலக்குறைவு நீங்கி நலம் பெறவும் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து பழனிக்கு வருகின்றனர்.
    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம்படை வீட்டுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதில் காவடி அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. காவடி என்பது தோளில் சுமந்து சென்று நேர்த்திக்கடனை குறிப்பிடுவதால் அந்த பொருட்களின் அடிப்படையில் பெயர் பெற்றுள்ளது. பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, வேல் காவடி, எண்ணெய் காவடி, மச்சக்காவடி, சர்ப்ப காவடி என்பன அந்தந்த நேர்த்திக்கடன் பொருட்களின் அடிப்படையில் பெயர் பெற்றவையாகும்.

    அதேபோல் சுமந்து வரும் முறையிலும் அதன் பெயர் மாறுபடுகிறது. அதாவது அலகுக்காவடி, அக்னி காவடி, பறவை காவடி, ரதக்காவடி போன்றவை பக்தர்கள் எடுத்து வரும் முறையை பொறுத்து பெயர் பெற்றதாக உள்ளது. குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் நீங்கவும், உடல் நலக்குறைவு நீங்கி நலம் பெறவும் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து பழனிக்கு வருகின்றனர். குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழா நாட்களில் அதிகளவு பக்தர்கள் காவடி எடுத்து வருகின்றனர்.
    திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.
    பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு “பாரிஜாத வனம், தருவனம், கற்பகவனம்” என்ற புராணப்பெயர்கள் உண்டு. இத்தல இறைவன் “களர்முளை நாதேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார்.

    சிதம்பரம், பேரூரில் ஆனந்த தாண்டவம், திருவாரூரில் அஜபா தாண்டவம், மதுரையில் ஞான சுந்தர தாண்டவம், அவினாசியில் ஊர்த்துவ தாண்டவம், திருமுருகன் பூண்டியில் பிரம்ம தாண்டவம் தந்தருளிய சிவபெருமான் இத்தலத்தில் பிரம தாண்டவ தரிசனம் தந்துள்ளார். 80 அடி உயர ராஜ கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. சிவன், அம்மன் இருவரும் கிழக்கு நோக்கி தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.

    இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும்; கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.

    வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்,
    திருக்களர்,
    திருவாரூர்,
    திருவாரூர் மாவட்டம்.
    பச்சைமலை முருகப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி வீடு-மனை வாங்கும் யோகம் கிட்டும்.
    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் இருந்து சுமார்1 கி.மீ. தொலைவில் உள்ளது பச்சைமலை. மலையுச்சியில் கோவில் கொண்டிருக்கிறார் முருகப்பெருமான்.

    சுமார் 2,000 வருட பழமை மிக்க கோவில் இது. துர்வாச முனிவர் இந்தப் பகுதியில் இருந்து தவமிருந்தபோது இங்கேயுள்ள மலையில் பாலகுமாரனாக ஸ்ரீசுப்பிரமணியரைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு என அருளிச் சென்றாராம் சிவபெருமான். அதன்படி அங்கே முருகன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து துர்வாசர் வழிபட்டார் என்கிறது தல புராணம்.

    இங்கு பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது. பங்குனி உத்திரப் பெருவிழா இந்த நாளில் முருகப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி வீடு-மனை வாங்கும் யோகம் கிட்டும்.

    ஆறாம் நாள்-திருக்கல்யாண வைபவம். இதில் கலந்து கொண்டு வேண்டினால் நினைத்தபடி திருமணம் இனிதே நடந்தேறும். 7-ஆம் நாள் திருத்தேரோட்டமும் 8-ஆம் நாள் முத்துப்பல்லக்கில் பவனி வருதலும் கோலாகலமாக நடைபெறுகின்றன. ஸ்ரீசண்முகக் கடவுளுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்து, பச்சை நிற வஸ்திரம் சார்த்தி, சிறப்பு அர்ச்சனை செய்தால் வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறலாம்.

    அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டுவோர், பில்லி சூனியம் மற்றும் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது திடமான நம்பிக்கை.
    தமிழகத்தில் மிகப் பிரசித்தி பெற்றதும், பக்தி காவியமான ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டதுமான அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு வாய்ந்தது.

    மூன்று கண்களும் பத்து கைகளும் உள்ள ஆஞ்சநேயர் அமைப்பு தமிழகத்திலேயே இந்த கோவிலில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனிச்சிறப்பாக அனந்தமங்கலம், ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.

    ராமபிரான் கட்டளையை ஏற்று கடலில் பதுங்கி இருந்த இரு அரக்கர்களை அழித்து அனுமன், ராமபிரானை சந்திக்க திரும்பிக் கொண்டிருக்கும்போது, அனந்தமங்கலத்தில் இளைப்பாற இறங்கியுள்ளார். அப்போது இயற்கை அழகுடன் இருந்த இப்பகுதியில் மன நிறைவோடு ஆனந்தம் அடைந்தார். எனவே இந்த திருத்தலம் அனந்தமங்கலம் என அழைக்கப்படுகிறது.

    இங்குள்ள அனுமனை வழிபட்டால் பிரம்மா, விஷ்ணு, சிவன் உள்ளிட்ட மூன்று கடவுள்களையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைப்பதுடன், பில்லி சூனியம் மற்றும் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது திடமான நம்பிக்கை. தமிழகம் முழுவதிலும் இருந்து தொழில் முனைவோர், திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டுவோர் என ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து அனுமனை வழிபடுகின்றனர்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் திரளான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுவதால், ஆண்டுதோறும் இந்த அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கானோர் அனுமனை தரிசிக்க இங்கு வருவர். அதை ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் உள்ள கல்வாழைக்கு பரிகாரம் செய்தால் தடைப்பட்ட திருமணம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பஞ்சீலி நீலிவனநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இக்கோவிலில் உள்ள கல்வாழைக்கு பரிகாரம் செய்தால் தடைப்பட்ட திருமணம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். மேலும், இங்கு எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது.

    இதன் காரணமாக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் மதவேறுபாடுகளின்றி தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து கல்வாழைக்கு பரிகாரம் செய்தும், எமனை தரிசனம் செய்து விட்டும் செல்வார்கள்.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக கோவிலில் பரிகாரம் மற்றும் பூஜைகள் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்து இருந்தது.

    இதன் காரணமாக திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலுக்கு நேற்று திருமணம் ஆகாத ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் வந்து பரிகாரம் செய்து விட்டு சென்றனர். பல மாதங்களுக்குப் பிறகு கோவிலில் வந்து சாமி தரிசனம் செய்ததும் கல்வாழை பரிகாரம் செய்ததும் பக்தர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    ×