search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தோஷங்கள் போக்கும் மாசி மக தீர்த்தவாரி
    X
    தோஷங்கள் போக்கும் மாசி மக தீர்த்தவாரி

    தோஷங்கள் போக்கும் மாசி மக தீர்த்தவாரி

    மாசி மகத்தை முன்னிட்டு நாளைய தினம் நீர் நிலைகளில் நீராடி கோயில்களில் வழிபாடு நடத்தினால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
    மாசி மகத்தை முன்னிட்டு கோயில்களில் தீர்த்தவாரி வைபவம் நடைபெறுவது வழக்கம். எண்ணற்ற பக்தர்கள் புனிதத் தீர்த்தங்களில் நீராடி, இறைவனின் தரிசனம் கண்டு மகிழ்வார்கள். மாசி மாத பௌர்ணமியுடன், மகம் நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளே ‘மாசி மகம்’ ஆகும்.

    நாளைய தினம் நீர் நிலைகளில் நீராடி கோயில்களில் வழிபாடு நடத்தினால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில்தான் கோயில்கள் அனைத்திலிருந்தும் தெய்வத் திருவுருவங்கள் வீதியுலாவாகப் புறப்பட்டு, புனித நதிக்கரைகள், தீர்த்தக் குளங்கள், கடல் என்று பல இடங்களில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டு மக்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    மகாவிஷ்ணு, உமாமகேசுவரர் மற்றும் முருகன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் உகந்த தினம் மாசி மகமாகும். அதனால் விரதமிருந்து, நீர்நிலைகளில் நீராடி மூன்று தெய்வங்களையும் வழிபட்டால் இந்தப் பிறப்பு மட்டுமல்லாமல் முன் ஜன்மங்களில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகியோடும். மேலும், மக நட்சத்திரத்தை ‘பித்ருதேவா நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள்.

    இந்தப் பித்ருதேவாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியைத் தருகிறார். இதனால் மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடி ‘பிதுர் மகா ஸ்நானம்’ செய்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தமாகி அவர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

    மாசி மகத்தில் நீர்நிலைகளில் நீராடி சிவபெருமான், விஷ்ணு, முருகன் மற்றும் பித்ருக்களை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகி நாமும் நம் சந்ததியினரும் சகல செல்வங்களுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது ஐதீகம்.
    Next Story
    ×