என் மலர்
தோஷ பரிகாரங்கள்
பக்தர்கள் இறைவனை தேடி பாதயாத்திரையாக வருவதால் நம் முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கி நம் வாழ்வு சிறப்பு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது.
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் “பாதயாத்திரை” என்பது தனி சிறப்பு பெற்று விளங்குகிறது. இதற்காக பக்தர்கள் சிலர் மார்கழி மாதத்தில் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். ஒருசிலர் தை மாதத்தில் இருந்து முருகனை எண்ணி தங்கள் விரதத்தை தொடங்குகின்றனர். ஆகவே தை மாதம் தொடங்கி விட்டாலே பழனியில் பக்தர்கள் கூட்டத்தை அதிகம் பார்க்க முடியும்.
தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து, முருகா...! முருகா...! என்ற சரணகோஷம் முழங்க பாதயாத்திரையாக வருகின்றனர். அப்போது அவர்கள் முருகனுக்கு பிடித்த காவி உடையை அணிந்து பக்தி பரவசத்துடன் வருவதை பார்க்கலாம்.
இதில் செட்டிநாடு என்றழைக்கப்படும் காரைக்குடி நகரத்தார் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மயில்காவடி, சேவல்காவடி, வேல்காவடி எடுத்து ஆடிக் கொண்டே வருகின்றனர். இவ்வாறு பாதயாத்திரையாக வருவதால் நம் முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கி நம் வாழ்வு சிறப்பு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து, முருகா...! முருகா...! என்ற சரணகோஷம் முழங்க பாதயாத்திரையாக வருகின்றனர். அப்போது அவர்கள் முருகனுக்கு பிடித்த காவி உடையை அணிந்து பக்தி பரவசத்துடன் வருவதை பார்க்கலாம்.
இதில் செட்டிநாடு என்றழைக்கப்படும் காரைக்குடி நகரத்தார் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மயில்காவடி, சேவல்காவடி, வேல்காவடி எடுத்து ஆடிக் கொண்டே வருகின்றனர். இவ்வாறு பாதயாத்திரையாக வருவதால் நம் முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கி நம் வாழ்வு சிறப்பு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது.
உங்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை நானும் உங்களை போல் வெட்டவெளியிலேயே இருக்கிறேன் என்று அருளியதாக கோவில் புராணம் கூறுகிறது.
திருச்சி நகரின் மேற்கு பகுதியில் மத்திய பஸ் நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது உறையூர். இங்குள்ள வெக்காளியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்து காவல் தெய்வமாகவும், கருணை மிகுந்தவளாகவும் அவர்களது மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறாள்.
தொழில் நஷ்டம், கடன் பிரச்சினை, குடும்ப பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகள் நீங்கவும், நோய், நொடியின்றி நலமாக வாழவும், கல்வி, பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடையவும், தங்களின் தீராத பிரச்சினைகளை நிறைவேற்றிட வேண்டி சூலத்தில் பக்தர்கள் தங்களது பிரார்த்தனை சீட்டுகளை எழுதி, கட்டுவதுதான் இன்றைக்கும் வழக்கமாக இருக்கிறது. தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும், பக்தர்கள் கோவிலுக்கு தாங்கள் வேண்டியதை காணிக்கையாக செலுத்துவதுடன் அம்மனுக்கு புடவை எடுத்து, தேங்காய், பழம் உடைத்து பொங்கல் வைத்து வழி படுகிறார்கள்.
தீராத நோயால் அவதிப்படுபவர்கள் வெக்காளியம்மனை மனமுருகி வழிபட்டால் அவர்களது நோய் தீருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பக்தர்கள் மாடு, ஆடு, கோழி ஆகியவற்றை கோவிலுக்கு நேர்ந்து விடுவார்கள். சில பக்தர்கள் வெக்காளியம்மனுக்கு கோவில் வெளியே ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.
தொழில் நஷ்டம், கடன் பிரச்சினை, குடும்ப பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகள் நீங்கவும், நோய், நொடியின்றி நலமாக வாழவும், கல்வி, பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடையவும், தங்களின் தீராத பிரச்சினைகளை நிறைவேற்றிட வேண்டி சூலத்தில் பக்தர்கள் தங்களது பிரார்த்தனை சீட்டுகளை எழுதி, கட்டுவதுதான் இன்றைக்கும் வழக்கமாக இருக்கிறது. தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும், பக்தர்கள் கோவிலுக்கு தாங்கள் வேண்டியதை காணிக்கையாக செலுத்துவதுடன் அம்மனுக்கு புடவை எடுத்து, தேங்காய், பழம் உடைத்து பொங்கல் வைத்து வழி படுகிறார்கள்.
தீராத நோயால் அவதிப்படுபவர்கள் வெக்காளியம்மனை மனமுருகி வழிபட்டால் அவர்களது நோய் தீருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பக்தர்கள் மாடு, ஆடு, கோழி ஆகியவற்றை கோவிலுக்கு நேர்ந்து விடுவார்கள். சில பக்தர்கள் வெக்காளியம்மனுக்கு கோவில் வெளியே ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.
மகா விஷ்ணுவின் ஆனந்த கண்ணீர் பெருகி அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அந்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் துளசி மகாதேவி தோன்றினார்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் சனி கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். தேவர்களும், அசுரர்களும் ஒன்று கூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தை பெற முயன்றனர். அப்போது பாற்கடலில் இருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் தோன்றினர்.
மகா விஷ்ணுவின் ஆனந்த கண்ணீர் பெருகி அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அந்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் துளசி மகாதேவி தோன்றினார். துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகா விஷ்ணு வைத்துக்கொண்டு மற்றவற்றை தேவர்களுக்கு வழங்கி விட்டார்.
துளசியில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் வசிக்கின்றனர்.இலையின் நுனியில் பிரம்மன், நத்தியில் மாயோன்மற்றும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரி, பார்வதி ஆகியோர் வசிக்கின்றனர். துளசியை நினைத்தால் பாவம் போகும்.
துளசி மாலை சாத்தி விஷ்ணுவை வழிபட்டால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்பது ஐதீகம். இதன்படி விஷ்ணுவின் திருநாமத்தில் ஊறித்திளைக்கும் ஆஞ்சநேயருக்கும் பக்தர்கள் துளசி மாலை சாத்தி வழிபடுவது பிரதானமாக உள்ளது. துளசி மாலையுடன் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.புகழ் கூடும், செல்வம் பெருகும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். துளசி தீர்த்தத்தை அருந்தினால் பரமபதம் செல்வார்கள் என்றும் ஒரு கருத்து உள்ளது.
மகா விஷ்ணுவின் ஆனந்த கண்ணீர் பெருகி அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அந்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் துளசி மகாதேவி தோன்றினார். துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகா விஷ்ணு வைத்துக்கொண்டு மற்றவற்றை தேவர்களுக்கு வழங்கி விட்டார்.
துளசியில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் வசிக்கின்றனர்.இலையின் நுனியில் பிரம்மன், நத்தியில் மாயோன்மற்றும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரி, பார்வதி ஆகியோர் வசிக்கின்றனர். துளசியை நினைத்தால் பாவம் போகும்.
துளசி மாலை சாத்தி விஷ்ணுவை வழிபட்டால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்பது ஐதீகம். இதன்படி விஷ்ணுவின் திருநாமத்தில் ஊறித்திளைக்கும் ஆஞ்சநேயருக்கும் பக்தர்கள் துளசி மாலை சாத்தி வழிபடுவது பிரதானமாக உள்ளது. துளசி மாலையுடன் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.புகழ் கூடும், செல்வம் பெருகும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். துளசி தீர்த்தத்தை அருந்தினால் பரமபதம் செல்வார்கள் என்றும் ஒரு கருத்து உள்ளது.
உங்களது குழந்தைகள் படிப்பில் ஏறுமுகத்தில் செல்வதற்கு, அந்த ஆறுமுகனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒரு வழிபாடு. அடுத்ததாக எந்த ஒரு தோஷத்திற்கும் சிறந்த பரிகாரமாக சொல்லப்படுவது தானம் தான்.
ஒரு குழந்தைக்கு நல்ல எதிர்காலம் என்பது நல்ல படிப்பில் தான் அமைய முடியும். அந்த படிப்பை கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. ஜாதகத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதற்கான பரிகாரத்தை நாம்தான் செய்ய வேண்டும். ஒரு சில பரிகாரங்களை செய்வதன் மூலம் அவர்களையும் சுலபமாக படிக்க வைத்துவிடலாம்.
உங்களது குழந்தைகள் படிப்பில் ஏறுமுகத்தில் செல்வதற்கு, அந்த ஆறுமுகனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒரு வழிபாடு. முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று, உங்கள் குழந்தையின் ஏதாவது ஒரு தமிழ் புத்தகத்தை எடுத்து, பூஜை அறையில் வைத்து, தமிழ் கடவுள் முருகனின் வாகனமான மயில் இறகு அல்லது மயிலின் உருவப்படம் ஏதாவது ஒன்று இருந்தால் கூட போதும், அதை தமிழ் புத்தகத்தின் மேல் வைத்து, பூஜை அறையில் ஒரு நெய்தீபம் ஏற்றி, நம் குழந்தைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டி முன்னேற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்வதன் மூலம் படிப்பில் இருக்கும் ஜாதக தோஷங்கள் கூட நிவர்த்தியாகி விடும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக எந்த ஒரு தோஷத்திற்கும் சிறந்த பரிகாரமாக சொல்லப்படுவது தானம் தான். படிப்பில் பின்தங்கிய மாணவர்களாக இருந்தாலும், ஞாபக சக்தி குறைவாக இருக்கும் மாணவர்களாக இருந்தாலும் வாரம்தோறும் வரும் வியாழக்கிழமை அன்று சூரியன் மறைவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு அதாவது வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் வாழை இலையில் ஐந்து வகை இனிப்பையும், இரண்டு ஏலக்காயையும் வைத்து அரச மர அடியில் இருக்கும் ஈ, எரும்பு, வண்டுகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
அடுத்ததாக சில இனிப்பு வகைகளும், ஏலக்காய் சேர்த்து காய்ச்சிய பாலையும் ஏழை குழந்தைகளுக்கு தானமாக கொடுப்பது நல்ல பலனை கொடுக்கும். எத்தனையோ குழந்தைகளை வளர்க்கும் ஆசிரமங்கள் உள்ளன. அந்த குழந்தைகளுக்கு உதவியாக இருக்க உங்களால் முடிந்த படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதும் சிறந்த பலனை அளிக்கும். நீங்கள் செய்யும் இந்த தானங்களை உங்களது குழந்தையின் கைகளால் செய்வது சிறப்பான ஒன்று.
உங்களது குழந்தைகள் படிப்பில் ஏறுமுகத்தில் செல்வதற்கு, அந்த ஆறுமுகனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒரு வழிபாடு. முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று, உங்கள் குழந்தையின் ஏதாவது ஒரு தமிழ் புத்தகத்தை எடுத்து, பூஜை அறையில் வைத்து, தமிழ் கடவுள் முருகனின் வாகனமான மயில் இறகு அல்லது மயிலின் உருவப்படம் ஏதாவது ஒன்று இருந்தால் கூட போதும், அதை தமிழ் புத்தகத்தின் மேல் வைத்து, பூஜை அறையில் ஒரு நெய்தீபம் ஏற்றி, நம் குழந்தைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டி முன்னேற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்வதன் மூலம் படிப்பில் இருக்கும் ஜாதக தோஷங்கள் கூட நிவர்த்தியாகி விடும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக எந்த ஒரு தோஷத்திற்கும் சிறந்த பரிகாரமாக சொல்லப்படுவது தானம் தான். படிப்பில் பின்தங்கிய மாணவர்களாக இருந்தாலும், ஞாபக சக்தி குறைவாக இருக்கும் மாணவர்களாக இருந்தாலும் வாரம்தோறும் வரும் வியாழக்கிழமை அன்று சூரியன் மறைவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு அதாவது வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் வாழை இலையில் ஐந்து வகை இனிப்பையும், இரண்டு ஏலக்காயையும் வைத்து அரச மர அடியில் இருக்கும் ஈ, எரும்பு, வண்டுகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
அடுத்ததாக சில இனிப்பு வகைகளும், ஏலக்காய் சேர்த்து காய்ச்சிய பாலையும் ஏழை குழந்தைகளுக்கு தானமாக கொடுப்பது நல்ல பலனை கொடுக்கும். எத்தனையோ குழந்தைகளை வளர்க்கும் ஆசிரமங்கள் உள்ளன. அந்த குழந்தைகளுக்கு உதவியாக இருக்க உங்களால் முடிந்த படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதும் சிறந்த பலனை அளிக்கும். நீங்கள் செய்யும் இந்த தானங்களை உங்களது குழந்தையின் கைகளால் செய்வது சிறப்பான ஒன்று.
இங்குள்ள காலபைரவரை செவ்வாய்க் கிழமைகள் தோறும் வழிபட்டு வர வீடு கட்டும் யோகம் உண்டாகும். தடைபட்ட கட்டிட வேலைகளும் தடையின்றி நடைபெறும்.
தாணுமாலய சுவாமி கோவிலில் விநாயகர், பெருமாள், முருகன், காலபைரவர், ஆஞ்சநேயர் என கடவுள்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். இதனால் இந்த கோவிலுக்குள் நுழைந்தாலே பலன்கள் நிச்சயம் என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.
பொதுவாக இந்திரன் பாவவிமோசனம் பெற்ற தலம் என்பதால் எந்தவொரு பாவமானாலும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்கிறார்கள். அவற்றில் சில பலன்களை இங்கே பார்ப்போம்.
தாணுமாலய சுவாமி:- மும்மூர்த்திகளும் ஒரே உருவில் அருள்பாலிப்பதால் சகல விதமான பலன்களும் கிடைக்கும். அங்குள்ள பிரக்ஞ தீர்த்தம் என்னும் ஞானம் அருளும் திருக்குளத்தில் நீராடி, திருநீறு அணிந்து சிவாய நம என உச்சரித்து, திருக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த புத்திர பாக்கியத்தோடு, நற்பொருளையும், அருளையும் பெற்று பிறவி பயனை பெறலாம்.
பவுர்ணமி நாட்களில் விரதம் இருந்து தாணுமாலயனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆலய பிரகாரத்தை சிவநாமம் உச்சரித்து சுற்றி வந்தால் நவக்கிரகங்களின் தாக்கம் குறையப் பெற்று தடைகள் விலகி அனைத்து வளங்களையும் பெறலாம். சிவனார்க்கு கனிகளை நைவேத்தியம் செய்வதால் அறிவு மேன்மை அடையும். சுவாமிக்கு விசேஷ வழிபாடாக ருத்ரதாரை அபிஷேகமும், பாயாசம் நைவேத்தியமாக படைத்து வழிபாட்டால் அனைத்து வளங்களும் அடையலாம். திருமண தடை உள்ளவர்களும் சுவாமியை வழிபட்டு பலன் பெறுகிறார்கள்.
பஞ்ச நந்திகள்: கோவிலில் நமசிவாய அட்சர வடிவமாய் பஞ்ச நந்திகள் விளங்குகின்றன. ந என்னும் மந்திர எழுத்தாய் இந்திர நந்தியும், ம என்ற மந்திர எழுத்தாய் பிரம்ம நந்தியெனும் மகா நந்தியும், சி என்ற மந்திர எழுத்தாய் கங்காள நாதர் சன்னதியில் விஷ்ணு நந்தியும், வா என்ற வடிவமாய் கிழக்கு நோக்கி கைலாச நாதர் சன்னதியில் உள்ள சிவாதல நந்தியும், ய என்ற அட்ச வடிவமாய் அறம் வளர்த்த நங்கை சன்னதியில் தர்மநந்தியும் அமையப் பெற்று பூரண சிவாலயமாய் விளங்குகிறது. பிரதோஷ நாட்களில் பஞ்ச நந்திகளை தரிசிப்பது அனைத்து பாவங்களையும் போக்கும் வல்லமையை வழங்கும்.
ஜுரதேவமூர்த்தி: கோபுரத்தின் மேற்குபுறம் ஊஞ்சல் மண்டபம் எதிரில் மண்டையடி சாமியென உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் ஜுரதேவமூர்த்தி சிற்பம் உள்ளது. மூன்று தலைகள், ஒன்பது கண்கள், நான்கு கைகள், மூன்று கால்கள் போன்றவற்றை இச்சிலையில் காணலாம். இந்த சிலையின் தலையில் நல்ல மிளகும், சுக்கும் அரைத்து தேய்த்து வழிபட்டால் தீராத தலைவலி நீங்கும் என நம்பப்படுகிறது. தலைவலியால் அவதிப்படுவோர் ஜுரதேவமூர்த்திக்கு நல்லமிளகு, சுக்கு அரைத்து தேய்த்து வழிபடுகிறார்கள்.
காலபைரவர்: இங்குள்ள காலபைரவரை செவ்வாய்க் கிழமைகள் தோறும் வழிபட்டு வர வீடு கட்டும் யோகம் உண்டாகும். தடைபட்ட கட்டிட வேலைகளும் தடையின்றி நடைபெறும்.
பொதுவாக இந்திரன் பாவவிமோசனம் பெற்ற தலம் என்பதால் எந்தவொரு பாவமானாலும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்கிறார்கள். அவற்றில் சில பலன்களை இங்கே பார்ப்போம்.
தாணுமாலய சுவாமி:- மும்மூர்த்திகளும் ஒரே உருவில் அருள்பாலிப்பதால் சகல விதமான பலன்களும் கிடைக்கும். அங்குள்ள பிரக்ஞ தீர்த்தம் என்னும் ஞானம் அருளும் திருக்குளத்தில் நீராடி, திருநீறு அணிந்து சிவாய நம என உச்சரித்து, திருக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த புத்திர பாக்கியத்தோடு, நற்பொருளையும், அருளையும் பெற்று பிறவி பயனை பெறலாம்.
பவுர்ணமி நாட்களில் விரதம் இருந்து தாணுமாலயனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆலய பிரகாரத்தை சிவநாமம் உச்சரித்து சுற்றி வந்தால் நவக்கிரகங்களின் தாக்கம் குறையப் பெற்று தடைகள் விலகி அனைத்து வளங்களையும் பெறலாம். சிவனார்க்கு கனிகளை நைவேத்தியம் செய்வதால் அறிவு மேன்மை அடையும். சுவாமிக்கு விசேஷ வழிபாடாக ருத்ரதாரை அபிஷேகமும், பாயாசம் நைவேத்தியமாக படைத்து வழிபாட்டால் அனைத்து வளங்களும் அடையலாம். திருமண தடை உள்ளவர்களும் சுவாமியை வழிபட்டு பலன் பெறுகிறார்கள்.
பஞ்ச நந்திகள்: கோவிலில் நமசிவாய அட்சர வடிவமாய் பஞ்ச நந்திகள் விளங்குகின்றன. ந என்னும் மந்திர எழுத்தாய் இந்திர நந்தியும், ம என்ற மந்திர எழுத்தாய் பிரம்ம நந்தியெனும் மகா நந்தியும், சி என்ற மந்திர எழுத்தாய் கங்காள நாதர் சன்னதியில் விஷ்ணு நந்தியும், வா என்ற வடிவமாய் கிழக்கு நோக்கி கைலாச நாதர் சன்னதியில் உள்ள சிவாதல நந்தியும், ய என்ற அட்ச வடிவமாய் அறம் வளர்த்த நங்கை சன்னதியில் தர்மநந்தியும் அமையப் பெற்று பூரண சிவாலயமாய் விளங்குகிறது. பிரதோஷ நாட்களில் பஞ்ச நந்திகளை தரிசிப்பது அனைத்து பாவங்களையும் போக்கும் வல்லமையை வழங்கும்.
ஜுரதேவமூர்த்தி: கோபுரத்தின் மேற்குபுறம் ஊஞ்சல் மண்டபம் எதிரில் மண்டையடி சாமியென உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் ஜுரதேவமூர்த்தி சிற்பம் உள்ளது. மூன்று தலைகள், ஒன்பது கண்கள், நான்கு கைகள், மூன்று கால்கள் போன்றவற்றை இச்சிலையில் காணலாம். இந்த சிலையின் தலையில் நல்ல மிளகும், சுக்கும் அரைத்து தேய்த்து வழிபட்டால் தீராத தலைவலி நீங்கும் என நம்பப்படுகிறது. தலைவலியால் அவதிப்படுவோர் ஜுரதேவமூர்த்திக்கு நல்லமிளகு, சுக்கு அரைத்து தேய்த்து வழிபடுகிறார்கள்.
காலபைரவர்: இங்குள்ள காலபைரவரை செவ்வாய்க் கிழமைகள் தோறும் வழிபட்டு வர வீடு கட்டும் யோகம் உண்டாகும். தடைபட்ட கட்டிட வேலைகளும் தடையின்றி நடைபெறும்.
நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணெயால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.
1. வடைமாலை பலன்:
சூரியனை ராகுவும், சந்திரனை கேதுவும் பிடிக்கும் நிகழ்ச்சியே கிரகணம் எனப்படுகிறது. அப்பேர்ப்பட்ட சூரிய பகவானை, ஸ்ரீ அனுமான் பிறந்தவுடன் பழம் என்று நினைத்து சூரியனை பிடித்துக் கொள்கிறார். அதைக்கண்ட ராகு பகவான் அனுமானிடம் போர் செய்து தோல்வியைக் கண்டார். அப்போர் நிகழ்ச்சியை இந்திரனிடம் ராகு பகவான் முறையிட இந்திரனுக்கும், அனுமானுக்கும் போர் ஏற்படுகிறது. அப்போரில் இந்திரனின் வஜ்ராயுதம் மாகப்பட்டது அனுமானின் தாடையில் அடிபட்டு வீங்கி விடுகிறது. தாடை முன் நீண்டு பெருத்ததினால் அனுமான் என்ற பெயர் ஏற்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ராகு பகவான் தனக்கு ஏற்பட்டதோல்வி காரணமாக உளுந்து தானியங்களால் என்னுடைய சரீரம் போல் (பாம்பின் உடம்புபோல்) மாலையாக (வடை மாலையாக) உனக்கு சமர்பணம் செய்வோருக்கு ராகு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகி நல்வாழ்வு பெற உதவுகிறோம் என்று ராகு அனுமானிடம் கூறுகிறார். ஆதலால் தாமும் ஸ்ரீ அனுமாருக்கு வடைமாலை சாற்றி ராகு சம்பந்தப்பட்ட தோசத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரார்த்தனை செய்வோம்.
2. நல்லெண்ணை அபிஷேக பலன்:
இந்து மதத்தின் தர்ம சாஸ்திரப்படி ஒருவன் இயற்கை எய்தினால் அவர் திருமாலின் திருவடி (மோட்சம்) அடைவதே சாஸ்திரமாகும். திருமால் தன்னுடைய வியர்வை துளிகளை எடுத்து தெளித்த உடன் அது கருநீல நிறம் போன்று எள் தானியமாக விளைகிறது. எம்பெருமான் சரீரத்தில் கருநீல நிறம் போன்று உள்ள சனீஸ்வர பகவான் எள் தானியத்தை தனக்கு பிரியமாக எடுத்துக் கொள்கிறார். நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணெயால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.
3. பஞ்சாமிர்தம் அபிஷேக பலன்:
மனித வாழ்வில் ஐந்து விதமான இந்திரிய சக்திகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை கண், காது, வாய், மூக்கு, பிறப்புறுப் பாகப்பட்ட உயிர்நிலை ஆகிய இடங்களில் இருந்து நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது. இவை அனைத்தும் நன்றாக வாழ்நாள் முழுவதும் செவ்வனே இயங்க வேண்டி இறைவனுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்கிறோம். ‘பழம், மனோரத பலம்‘ என்று சாஸ்திரம் கூறுவதை எண்ணி காரியங்கள் நிறைவேற பழங்களால் அபிஷேகம் செய்கிறோம்.
4. சீயக்காய் அபிஷேக பலன்:
சீயக்காய் அபிஷேகத் தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள் அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.
5. பால் அபிஷேக பலன்:
வேதம் கற்றரிந்த சான்றோருக்கு ஒரு மழை, நீதி வழுவா அரசருக்கு ஒரு மழை, கற்பு நெறி தவறாத மாதர்க்கு ஒரு மழை. இதுபோல் மாதம் மும்மாரி (மழை) பெய்யவும்,தாய்மார்களுக்கு தாய்ப்பால் சக்தி கிடைக்கவும், தேசங்களிலும், வீடுகளிலும் பால் பொருட்கள் பெருகவும், பசுக்கள் நிறைந்த பால் சொரியவும், நீர் நிலைகளில் வற்றாத ஊற்று வரவும், யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழிப்பெறவும் பால் அபிஷேகம் செய்கின்றோம்.
6. தயிர் அபிஷேக பலன்:
வீடு, மனைவி, மக்கள், வாகனம், நிலம், இவை அனைத்தும் நம்மை படைக்கும் பொழுது நமக்கு இறைவனால் கொடுக்கப்படும் கடனாகவே படைக்கப்படுகிறோம். நாம் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோர்கள் பெற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இவை அனைத்தும் செவ்வனே நடைபெற வேண்டி இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்கிறோம்.
7. நல்ல மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அபிஷேக பலன்:
பெண்டிர்கள், சுமங் கலித்துவம் பெறவும், உலகமெங்கும் அமங்கலமான செயல்களை தவிர்க்கவும், வியாதியற்ற வாழ்வு பெற வேண்டியும் மஞ்சள் அபிஷேகம் செய்கிறோம்.
8. சந்தனம் அபிஷேக பலன்:
மகாலட்சுமி பிறந்தது சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் நிறைந்த இடமாவதால் வீரலட்சுமி அம்சமான ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லா பொரு ளாதாரத்தை அடைகிறோம்.
9. ஸ்வர்ண அபிஷேக பலன்:
பூர்ணத்துவமான ஆயுள் சக்தியை பெற இறைவனுக்கு தங்க தீர்த்தத்தை அபிஷேகம் செய்ய வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுவதால் தம்மால் இயன்ற தங்க ஆபரணங்களை புனித மந்திரங்களை சொல்லி உருவேற்றிய குடத்திற்குள் போட்டு அந்த தீர்த்தத்தை சாமிக்கு அபிஷேகம் செய்வதால் பூர்ண ஆயுள் பெற்று நம்முடைய இல்லங்களில் வற்றாத தங்க ஆபரணங்கள் அடைகிறோம்.
சூரியனை ராகுவும், சந்திரனை கேதுவும் பிடிக்கும் நிகழ்ச்சியே கிரகணம் எனப்படுகிறது. அப்பேர்ப்பட்ட சூரிய பகவானை, ஸ்ரீ அனுமான் பிறந்தவுடன் பழம் என்று நினைத்து சூரியனை பிடித்துக் கொள்கிறார். அதைக்கண்ட ராகு பகவான் அனுமானிடம் போர் செய்து தோல்வியைக் கண்டார். அப்போர் நிகழ்ச்சியை இந்திரனிடம் ராகு பகவான் முறையிட இந்திரனுக்கும், அனுமானுக்கும் போர் ஏற்படுகிறது. அப்போரில் இந்திரனின் வஜ்ராயுதம் மாகப்பட்டது அனுமானின் தாடையில் அடிபட்டு வீங்கி விடுகிறது. தாடை முன் நீண்டு பெருத்ததினால் அனுமான் என்ற பெயர் ஏற்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ராகு பகவான் தனக்கு ஏற்பட்டதோல்வி காரணமாக உளுந்து தானியங்களால் என்னுடைய சரீரம் போல் (பாம்பின் உடம்புபோல்) மாலையாக (வடை மாலையாக) உனக்கு சமர்பணம் செய்வோருக்கு ராகு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகி நல்வாழ்வு பெற உதவுகிறோம் என்று ராகு அனுமானிடம் கூறுகிறார். ஆதலால் தாமும் ஸ்ரீ அனுமாருக்கு வடைமாலை சாற்றி ராகு சம்பந்தப்பட்ட தோசத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரார்த்தனை செய்வோம்.
2. நல்லெண்ணை அபிஷேக பலன்:
இந்து மதத்தின் தர்ம சாஸ்திரப்படி ஒருவன் இயற்கை எய்தினால் அவர் திருமாலின் திருவடி (மோட்சம்) அடைவதே சாஸ்திரமாகும். திருமால் தன்னுடைய வியர்வை துளிகளை எடுத்து தெளித்த உடன் அது கருநீல நிறம் போன்று எள் தானியமாக விளைகிறது. எம்பெருமான் சரீரத்தில் கருநீல நிறம் போன்று உள்ள சனீஸ்வர பகவான் எள் தானியத்தை தனக்கு பிரியமாக எடுத்துக் கொள்கிறார். நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணெயால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.
3. பஞ்சாமிர்தம் அபிஷேக பலன்:
மனித வாழ்வில் ஐந்து விதமான இந்திரிய சக்திகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை கண், காது, வாய், மூக்கு, பிறப்புறுப் பாகப்பட்ட உயிர்நிலை ஆகிய இடங்களில் இருந்து நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது. இவை அனைத்தும் நன்றாக வாழ்நாள் முழுவதும் செவ்வனே இயங்க வேண்டி இறைவனுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்கிறோம். ‘பழம், மனோரத பலம்‘ என்று சாஸ்திரம் கூறுவதை எண்ணி காரியங்கள் நிறைவேற பழங்களால் அபிஷேகம் செய்கிறோம்.
4. சீயக்காய் அபிஷேக பலன்:
சீயக்காய் அபிஷேகத் தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள் அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.
5. பால் அபிஷேக பலன்:
வேதம் கற்றரிந்த சான்றோருக்கு ஒரு மழை, நீதி வழுவா அரசருக்கு ஒரு மழை, கற்பு நெறி தவறாத மாதர்க்கு ஒரு மழை. இதுபோல் மாதம் மும்மாரி (மழை) பெய்யவும்,தாய்மார்களுக்கு தாய்ப்பால் சக்தி கிடைக்கவும், தேசங்களிலும், வீடுகளிலும் பால் பொருட்கள் பெருகவும், பசுக்கள் நிறைந்த பால் சொரியவும், நீர் நிலைகளில் வற்றாத ஊற்று வரவும், யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழிப்பெறவும் பால் அபிஷேகம் செய்கின்றோம்.
6. தயிர் அபிஷேக பலன்:
வீடு, மனைவி, மக்கள், வாகனம், நிலம், இவை அனைத்தும் நம்மை படைக்கும் பொழுது நமக்கு இறைவனால் கொடுக்கப்படும் கடனாகவே படைக்கப்படுகிறோம். நாம் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோர்கள் பெற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இவை அனைத்தும் செவ்வனே நடைபெற வேண்டி இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்கிறோம்.
7. நல்ல மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அபிஷேக பலன்:
பெண்டிர்கள், சுமங் கலித்துவம் பெறவும், உலகமெங்கும் அமங்கலமான செயல்களை தவிர்க்கவும், வியாதியற்ற வாழ்வு பெற வேண்டியும் மஞ்சள் அபிஷேகம் செய்கிறோம்.
8. சந்தனம் அபிஷேக பலன்:
மகாலட்சுமி பிறந்தது சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் நிறைந்த இடமாவதால் வீரலட்சுமி அம்சமான ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லா பொரு ளாதாரத்தை அடைகிறோம்.
9. ஸ்வர்ண அபிஷேக பலன்:
பூர்ணத்துவமான ஆயுள் சக்தியை பெற இறைவனுக்கு தங்க தீர்த்தத்தை அபிஷேகம் செய்ய வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுவதால் தம்மால் இயன்ற தங்க ஆபரணங்களை புனித மந்திரங்களை சொல்லி உருவேற்றிய குடத்திற்குள் போட்டு அந்த தீர்த்தத்தை சாமிக்கு அபிஷேகம் செய்வதால் பூர்ண ஆயுள் பெற்று நம்முடைய இல்லங்களில் வற்றாத தங்க ஆபரணங்கள் அடைகிறோம்.
துளசி மாலையுடன் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.புகழ் கூடும், செல்வம் பெருகும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் சனி கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
தேவர்களும், அசுரர்களும் ஒன்று கூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தை பெற முயன்றனர். அப்போது பாற்கடலில் இருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் தோன்றினர்.
மகா விஷ்ணுவின் ஆனந்த கண்ணீர் பெருகி அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அந்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் துளசி மகாதேவி தோன்றினார். துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகா விஷ்ணு வைத்துக்கொண்டு மற்றவற்றை தேவர்களுக்கு வழங்கி விட்டார்.
துளசியில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் வசிக்கின்றனர்.இலையின் நுனியில் பிரம்மன், நத்தியில் மாயோன்மற்றும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரி, பார்வதி ஆகியோர் வசிக்கின்றனர். துளசியை நினைத்தால் பாவம் போகும்.
துளசி மாலை சாத்தி விஷ்ணுவை வழிபட்டால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்பது ஐதீகம். இதன்படி விஷ்ணுவின் திருநாமத்தில் ஊறித்திளைக்கும் ஆஞ்சநேயருக்கும் பக்தர்கள் துளசி மாலை சாத்தி வழிபடுவது பிரதானமாக உள்ளது. துளசி மாலையுடன் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.புகழ் கூடும், செல்வம் பெருகும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். துளசி தீர்த்தத்தை அருந்தினால் பரமபதம் செல்வார்கள் என்றும் ஒரு கருத்து உள்ளது.
தேவர்களும், அசுரர்களும் ஒன்று கூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தை பெற முயன்றனர். அப்போது பாற்கடலில் இருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் தோன்றினர்.
மகா விஷ்ணுவின் ஆனந்த கண்ணீர் பெருகி அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அந்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் துளசி மகாதேவி தோன்றினார். துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகா விஷ்ணு வைத்துக்கொண்டு மற்றவற்றை தேவர்களுக்கு வழங்கி விட்டார்.
துளசியில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் வசிக்கின்றனர்.இலையின் நுனியில் பிரம்மன், நத்தியில் மாயோன்மற்றும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரி, பார்வதி ஆகியோர் வசிக்கின்றனர். துளசியை நினைத்தால் பாவம் போகும்.
துளசி மாலை சாத்தி விஷ்ணுவை வழிபட்டால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்பது ஐதீகம். இதன்படி விஷ்ணுவின் திருநாமத்தில் ஊறித்திளைக்கும் ஆஞ்சநேயருக்கும் பக்தர்கள் துளசி மாலை சாத்தி வழிபடுவது பிரதானமாக உள்ளது. துளசி மாலையுடன் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.புகழ் கூடும், செல்வம் பெருகும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். துளசி தீர்த்தத்தை அருந்தினால் பரமபதம் செல்வார்கள் என்றும் ஒரு கருத்து உள்ளது.
ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போய், அவதிக்குள்ளாகும் நபர்கள் அதிகம். திருமணத் தடை நீக்கும் திருத்தலங்களை அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான நிகழ்வாக திருமணம் பார்க்கப்படுகிறது. அது நடைபெறாமல் தள்ளிப்போய், அவதிக்குள்ளாகும் நபர்கள் அதிகம். அவ்வாறு திருமணம் தாமதமாகும் நபர்கள், திருமணஞ்சேரி சென்று அங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரர், கோகிலாம்பாளை வழிபட்டு வரலாம் என்பது யாவரும் அறிந்த உண்மை.
அதேபோல், சென்னை அருகே உள்ள சிறுவாபுரி வள்ளிமணாளப் பெருமான், திருவிடந்தை ஆதிவராகப் பெருமாள் -அகிலவள்ளி நாச்சியார் ஆகியோரையும் வழிபாடு செய்யலாம். மேலும் திருவீழிமிழலை அரசாணிக்கால் சுற்றி வந்து வழிபாடு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
அதேபோல், சென்னை அருகே உள்ள சிறுவாபுரி வள்ளிமணாளப் பெருமான், திருவிடந்தை ஆதிவராகப் பெருமாள் -அகிலவள்ளி நாச்சியார் ஆகியோரையும் வழிபாடு செய்யலாம். மேலும் திருவீழிமிழலை அரசாணிக்கால் சுற்றி வந்து வழிபாடு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
நவக்கிரகங்களால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறியும் கோவில், தமிழகத்தில் நிறைய உண்டு. தோல் நோய் தீர தொழ வேண்டிய தெய்வம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறியும் கோவில், தமிழகத்தில் நிறைய உண்டு. அவற்றுள் ஒன்று திருமங்கலக்குடி பிராணநாத சுவாமி திருக்கோவில். இது கும்பகோணம் அருகில் உள்ளது.
தோல் நோய் உள்ளவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி, தொடர்ந்து 11 வாரங்கள் இத்தலத்தில் வழிபாடு செய்ய வேண்டும். இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்து வெள்ளெருக்கு இலையில் வைத்து தரப்படும் தயிர் சாதத்தை சாப்பிட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஆடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.
தோல் நோய் உள்ளவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி, தொடர்ந்து 11 வாரங்கள் இத்தலத்தில் வழிபாடு செய்ய வேண்டும். இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்து வெள்ளெருக்கு இலையில் வைத்து தரப்படும் தயிர் சாதத்தை சாப்பிட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஆடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.
கடன் வாங்கும்போது ஜாக்கிரதையாக நேரம் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் வாங்க வேண்டும். இல்லையென்றால் திரும்ப திரும்ப கடன் வாங்கி பெரிய கடன்காரர் ஆகிவிடும் நிலை ஏற்பட்டு விடும்.
கடன் வாங்கும்போது குளிகை நேரத்தில் வாங்கி விட்டால் திரும்ப திரும்ப கடன் வாங்கிபெரிய கடன்காரர் ஆகிவிடும் நிலை ஏற்பட்டு விடும். எனவே கடன் வாங்கும்போது ஜாக்கிரதையாக நேரம் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் வாங்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் இல்லாத நேரமாகவும் இருக்க வேண்டும்.
கடன் விரைவில் அடைபட செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30-க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம். ஏன் என்றால் ஒரு வேலையை திரும்ப திரும்ப செய்ய வைப்பதே குளிகை நேரமாகும்.
கடன் விரைவில் அடைபட செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30-க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம். ஏன் என்றால் ஒரு வேலையை திரும்ப திரும்ப செய்ய வைப்பதே குளிகை நேரமாகும்.
ஏழாம் வீட்டில் நிற்கும் பாவ கிரகங்களுக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்தால் திருமண தடை அகலும். 7-ம் வீட்டில் எந்த கிரகம் இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஏழாம் வீட்டில் நிற்கும் பாவ கிரகங்களுக்கு பரிகாரம்.
7ல் சூரியன் திருவண்ணாமலையில் பாதாளலிங்க தரிசனம் செய்ய வேண்டும்.
7ல் செவ்வாய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பஞ்சலிங்க தரிசனம் செய்ய வேண்டும்.
7ல் சனி கும்பகோணம் அருகே உள்ள குத்தாலத்தில் பாதாள சனிபகவானை வழிபட வேண்டும். 7ல் ராகு ராமேஸ்வரத்தில் உள்ள பாதாள பைரவரை வழிபட வேண்டும்.
7ல் கேது காளஹஸ்தியில் உள்ள பாதாள விநாயகரை வழிபட வேண்டும்.
பணப் புழக்கம் அதிகரிக்க:
வீட்டில், தொழில் செய்யும் இடத்தில் பணப்புழக்கம் அதிகரிக்க சிகப்பு காட்டன் துணியில் சிறிது குங்குமப்பூ மற்றும் புதிதாக காலை வேளையில் பறித்த துளசி இலையை முடிந்து வைக்க, பணப்புழக்கம் அதிகரிக்கும். வார வாரம் இலைகள் மற்றும் குங்குமப்பூவை மாற்ற வேண்டும்.
சனியின் தாக்கம் குறைய:
வாரந்தோறும் சனிக்கிழமை அன்று ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வர சனியினால் ஏற்படும் இன்னல்கள் குறையும். சனிதிசை, சனிபுத்தி, ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச்சனி நடப்பவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
குழந்தை பாக்கியம்:
குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் வியாழக்கிழமை இரவு 8-9 மணிக்குள் 21 மஞ்சள் நிற லட்டு தானம் தர குழந்தை பாக்கியம் உண்டாகும்.
7ல் சூரியன் திருவண்ணாமலையில் பாதாளலிங்க தரிசனம் செய்ய வேண்டும்.
7ல் செவ்வாய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பஞ்சலிங்க தரிசனம் செய்ய வேண்டும்.
7ல் சனி கும்பகோணம் அருகே உள்ள குத்தாலத்தில் பாதாள சனிபகவானை வழிபட வேண்டும். 7ல் ராகு ராமேஸ்வரத்தில் உள்ள பாதாள பைரவரை வழிபட வேண்டும்.
7ல் கேது காளஹஸ்தியில் உள்ள பாதாள விநாயகரை வழிபட வேண்டும்.
பணப் புழக்கம் அதிகரிக்க:
வீட்டில், தொழில் செய்யும் இடத்தில் பணப்புழக்கம் அதிகரிக்க சிகப்பு காட்டன் துணியில் சிறிது குங்குமப்பூ மற்றும் புதிதாக காலை வேளையில் பறித்த துளசி இலையை முடிந்து வைக்க, பணப்புழக்கம் அதிகரிக்கும். வார வாரம் இலைகள் மற்றும் குங்குமப்பூவை மாற்ற வேண்டும்.
சனியின் தாக்கம் குறைய:
வாரந்தோறும் சனிக்கிழமை அன்று ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வர சனியினால் ஏற்படும் இன்னல்கள் குறையும். சனிதிசை, சனிபுத்தி, ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச்சனி நடப்பவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
குழந்தை பாக்கியம்:
குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் வியாழக்கிழமை இரவு 8-9 மணிக்குள் 21 மஞ்சள் நிற லட்டு தானம் தர குழந்தை பாக்கியம் உண்டாகும்.
இந்த கோவிலில் விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக தங்களின் ஜாதகத்தை, இவரது சன்னிதியில் வைத்து பூஜித்து வாங்கிச்செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
பிரம்மாவின் ஆணவத்தால், அவரது ஒரு தலையை கொய்ததுடன், அவர் செய்து வந்த படைப்பு தொழிலையும் பறித்தார், ஈசன். இதையடுத்து பிரம்மதேவன், சிவ பூஜை செய்து மீண்டும் படைப்புத் தொழிலை பெற்ற இடமாக, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் திகழ்கிறது.
இத்தலத்தில் முருகப்பெருமான், ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். பின்னர் இங்கிருந்து படை திரட்டிச் சென்று அசுரர்களை அழித்துள்ளார். படை திரட்டப்பட்டதால், இத்தலம் ‘திருப்படையூர்’ என்று வழங்கப்பட்டு, அதுவே மருவி ‘திருப்பட்டூர்’ ஆனதாக சொல்கிறார்கள். கந்தன் வழிபட்ட இறைவனே ‘கந்தபுரீஸ்வரர்’ என்ற பெயரில் இங்கு அருள்கிறார்.
இத்தல காலபைரவர் விசேஷமானவர். அர்த்தஜாம பூஜைக்குப்பின் மூலவர் உள்ளிட்ட பிற சன்னிதிகள் மூடப்பட்டதும், அந்த சாவியை இவரிடம் வைத்து பூஜை செய்வர்.
அப்போது பிரசாதமாக வழங்கப்படும் விபூதியை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், இரவு வேளையில் தூங்காமல் தொடர்ந்து அழும் குழந்தைகள் நிம்மதியாக தூங்கும் என்பது நம்பிக்கை.
பிரம்மா மங்கலமான வாழ்வை அருள்பவர். எனவே அவருக்கு மஞ்சள் காப்பிட்டு, மஞ்சள் நிற புளியோதரை நைவேத்தியமாக படைத்து, மஞ்சளை பிரசாதமாக கொடுக்கிறார்கள். மற்ற சன்னிதிகளில் உள்ள பெரும்பாலான மூர்த்தங்களுக்கும் மஞ்சள் நிற வஸ்திரத்தையே பயன்படுத்துகின்றனர்.
தலையெழுத்தை மாற்றி அமைக்கும் ஆலயமாகவும், இத்தல பிரம்மாவும் திகழ்கிறார்கள். விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக தங்களின் ஜாதகத்தை, இவரது சன்னிதியில் வைத்து பூஜித்து வாங்கிச்செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
நவக்கிரகத்தில் உள்ள குருவின் அதிதேவதை, பிரம்மன். எனவே இங்கு பிரம்மாவுக்கு வியாழக்கிழமைகளில் குரு தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படுகிறது.
மூலவர் பிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மநாயகி அம்மனையும் வணங்கி, அவர்களுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
இங்கு தல தீர்த்தமாக ‘பிரம்ம தீர்த்தம்’ உள்ளது. இந்த தீர்த்த நீரை எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர் கங்கையில் நீராடிய பலனைப் பெறுவார்.
திருச்சியை அடுத்துள்ள சமயபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், சிறுகனூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பட்டூர் திருத்தலம் உள்ளது.
பிரம்மன் வழிபட்ட தலம் என்பதால், இத்தல மூலவர் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு சிவபெருமானே பிரதான மூர்த்தி என்றாலும், பிரம்மன் வழிபாடு செய்த இந்த ஆலயத்தில் பிரம்மாவுக்கும் பிரமாண்ட சிலை உள்ளது. தனிச் சன்னிதியில் கையில் அட்சமாலை, கமண்டலத்துடன் இவர் காட்சி தருகிறார். இவருக்கு 27 நட்சத்திரங்களையும், 9 கிரகங்களையும் குறிக்கும் வகையில் 36 தீபங்களும், 108 புளியோதரை உருண்டைகளும் வைத்து வழிபடுவது சிறப்பு.
பிரம்மன் வழிபாடு செய்த ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை கொண்டது) தனி மண்டபத்தில் காணப்படுகிறது.
பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானை, 12 சிவலிங்க வடிவில் வழிபட்டு பூஜித்துள்ளார். பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், மண்டூகநாதர், ஐம்புகேஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், கயிலாயநாதர், தாயுமானவர், ஏகாம்பரேஸ்வரர், காளத்தீஸ்வரர், அருணாசலேஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய 12 லிங்கங்களையும் இத்தலத்தில் தரிசிக்கலாம்.
பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்கள் உள்ள தலம் என்பதால், இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினாலே, இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
இத்தலத்தில் முருகப்பெருமான், ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். பின்னர் இங்கிருந்து படை திரட்டிச் சென்று அசுரர்களை அழித்துள்ளார். படை திரட்டப்பட்டதால், இத்தலம் ‘திருப்படையூர்’ என்று வழங்கப்பட்டு, அதுவே மருவி ‘திருப்பட்டூர்’ ஆனதாக சொல்கிறார்கள். கந்தன் வழிபட்ட இறைவனே ‘கந்தபுரீஸ்வரர்’ என்ற பெயரில் இங்கு அருள்கிறார்.
இத்தல காலபைரவர் விசேஷமானவர். அர்த்தஜாம பூஜைக்குப்பின் மூலவர் உள்ளிட்ட பிற சன்னிதிகள் மூடப்பட்டதும், அந்த சாவியை இவரிடம் வைத்து பூஜை செய்வர்.
அப்போது பிரசாதமாக வழங்கப்படும் விபூதியை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், இரவு வேளையில் தூங்காமல் தொடர்ந்து அழும் குழந்தைகள் நிம்மதியாக தூங்கும் என்பது நம்பிக்கை.
பிரம்மா மங்கலமான வாழ்வை அருள்பவர். எனவே அவருக்கு மஞ்சள் காப்பிட்டு, மஞ்சள் நிற புளியோதரை நைவேத்தியமாக படைத்து, மஞ்சளை பிரசாதமாக கொடுக்கிறார்கள். மற்ற சன்னிதிகளில் உள்ள பெரும்பாலான மூர்த்தங்களுக்கும் மஞ்சள் நிற வஸ்திரத்தையே பயன்படுத்துகின்றனர்.
தலையெழுத்தை மாற்றி அமைக்கும் ஆலயமாகவும், இத்தல பிரம்மாவும் திகழ்கிறார்கள். விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக தங்களின் ஜாதகத்தை, இவரது சன்னிதியில் வைத்து பூஜித்து வாங்கிச்செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
நவக்கிரகத்தில் உள்ள குருவின் அதிதேவதை, பிரம்மன். எனவே இங்கு பிரம்மாவுக்கு வியாழக்கிழமைகளில் குரு தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படுகிறது.
மூலவர் பிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மநாயகி அம்மனையும் வணங்கி, அவர்களுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
இங்கு தல தீர்த்தமாக ‘பிரம்ம தீர்த்தம்’ உள்ளது. இந்த தீர்த்த நீரை எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர் கங்கையில் நீராடிய பலனைப் பெறுவார்.
திருச்சியை அடுத்துள்ள சமயபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், சிறுகனூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பட்டூர் திருத்தலம் உள்ளது.
பிரம்மன் வழிபட்ட தலம் என்பதால், இத்தல மூலவர் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு சிவபெருமானே பிரதான மூர்த்தி என்றாலும், பிரம்மன் வழிபாடு செய்த இந்த ஆலயத்தில் பிரம்மாவுக்கும் பிரமாண்ட சிலை உள்ளது. தனிச் சன்னிதியில் கையில் அட்சமாலை, கமண்டலத்துடன் இவர் காட்சி தருகிறார். இவருக்கு 27 நட்சத்திரங்களையும், 9 கிரகங்களையும் குறிக்கும் வகையில் 36 தீபங்களும், 108 புளியோதரை உருண்டைகளும் வைத்து வழிபடுவது சிறப்பு.
பிரம்மன் வழிபாடு செய்த ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை கொண்டது) தனி மண்டபத்தில் காணப்படுகிறது.
பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானை, 12 சிவலிங்க வடிவில் வழிபட்டு பூஜித்துள்ளார். பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், மண்டூகநாதர், ஐம்புகேஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், கயிலாயநாதர், தாயுமானவர், ஏகாம்பரேஸ்வரர், காளத்தீஸ்வரர், அருணாசலேஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய 12 லிங்கங்களையும் இத்தலத்தில் தரிசிக்கலாம்.
பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்கள் உள்ள தலம் என்பதால், இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினாலே, இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள்.






