என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தோஷ பரிகாரங்கள்
X
பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் வர செய்ய வேண்டிய பரிகாரம்
Byமாலை மலர்4 Jan 2022 8:08 AM GMT (Updated: 4 Jan 2022 8:08 AM GMT)
உங்களது குழந்தைகள் படிப்பில் ஏறுமுகத்தில் செல்வதற்கு, அந்த ஆறுமுகனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒரு வழிபாடு. அடுத்ததாக எந்த ஒரு தோஷத்திற்கும் சிறந்த பரிகாரமாக சொல்லப்படுவது தானம் தான்.
ஒரு குழந்தைக்கு நல்ல எதிர்காலம் என்பது நல்ல படிப்பில் தான் அமைய முடியும். அந்த படிப்பை கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. ஜாதகத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதற்கான பரிகாரத்தை நாம்தான் செய்ய வேண்டும். ஒரு சில பரிகாரங்களை செய்வதன் மூலம் அவர்களையும் சுலபமாக படிக்க வைத்துவிடலாம்.
உங்களது குழந்தைகள் படிப்பில் ஏறுமுகத்தில் செல்வதற்கு, அந்த ஆறுமுகனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒரு வழிபாடு. முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று, உங்கள் குழந்தையின் ஏதாவது ஒரு தமிழ் புத்தகத்தை எடுத்து, பூஜை அறையில் வைத்து, தமிழ் கடவுள் முருகனின் வாகனமான மயில் இறகு அல்லது மயிலின் உருவப்படம் ஏதாவது ஒன்று இருந்தால் கூட போதும், அதை தமிழ் புத்தகத்தின் மேல் வைத்து, பூஜை அறையில் ஒரு நெய்தீபம் ஏற்றி, நம் குழந்தைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டி முன்னேற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்வதன் மூலம் படிப்பில் இருக்கும் ஜாதக தோஷங்கள் கூட நிவர்த்தியாகி விடும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக எந்த ஒரு தோஷத்திற்கும் சிறந்த பரிகாரமாக சொல்லப்படுவது தானம் தான். படிப்பில் பின்தங்கிய மாணவர்களாக இருந்தாலும், ஞாபக சக்தி குறைவாக இருக்கும் மாணவர்களாக இருந்தாலும் வாரம்தோறும் வரும் வியாழக்கிழமை அன்று சூரியன் மறைவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு அதாவது வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் வாழை இலையில் ஐந்து வகை இனிப்பையும், இரண்டு ஏலக்காயையும் வைத்து அரச மர அடியில் இருக்கும் ஈ, எரும்பு, வண்டுகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
அடுத்ததாக சில இனிப்பு வகைகளும், ஏலக்காய் சேர்த்து காய்ச்சிய பாலையும் ஏழை குழந்தைகளுக்கு தானமாக கொடுப்பது நல்ல பலனை கொடுக்கும். எத்தனையோ குழந்தைகளை வளர்க்கும் ஆசிரமங்கள் உள்ளன. அந்த குழந்தைகளுக்கு உதவியாக இருக்க உங்களால் முடிந்த படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதும் சிறந்த பலனை அளிக்கும். நீங்கள் செய்யும் இந்த தானங்களை உங்களது குழந்தையின் கைகளால் செய்வது சிறப்பான ஒன்று.
உங்களது குழந்தைகள் படிப்பில் ஏறுமுகத்தில் செல்வதற்கு, அந்த ஆறுமுகனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒரு வழிபாடு. முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று, உங்கள் குழந்தையின் ஏதாவது ஒரு தமிழ் புத்தகத்தை எடுத்து, பூஜை அறையில் வைத்து, தமிழ் கடவுள் முருகனின் வாகனமான மயில் இறகு அல்லது மயிலின் உருவப்படம் ஏதாவது ஒன்று இருந்தால் கூட போதும், அதை தமிழ் புத்தகத்தின் மேல் வைத்து, பூஜை அறையில் ஒரு நெய்தீபம் ஏற்றி, நம் குழந்தைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டி முன்னேற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்வதன் மூலம் படிப்பில் இருக்கும் ஜாதக தோஷங்கள் கூட நிவர்த்தியாகி விடும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக எந்த ஒரு தோஷத்திற்கும் சிறந்த பரிகாரமாக சொல்லப்படுவது தானம் தான். படிப்பில் பின்தங்கிய மாணவர்களாக இருந்தாலும், ஞாபக சக்தி குறைவாக இருக்கும் மாணவர்களாக இருந்தாலும் வாரம்தோறும் வரும் வியாழக்கிழமை அன்று சூரியன் மறைவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு அதாவது வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் வாழை இலையில் ஐந்து வகை இனிப்பையும், இரண்டு ஏலக்காயையும் வைத்து அரச மர அடியில் இருக்கும் ஈ, எரும்பு, வண்டுகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
அடுத்ததாக சில இனிப்பு வகைகளும், ஏலக்காய் சேர்த்து காய்ச்சிய பாலையும் ஏழை குழந்தைகளுக்கு தானமாக கொடுப்பது நல்ல பலனை கொடுக்கும். எத்தனையோ குழந்தைகளை வளர்க்கும் ஆசிரமங்கள் உள்ளன. அந்த குழந்தைகளுக்கு உதவியாக இருக்க உங்களால் முடிந்த படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதும் சிறந்த பலனை அளிக்கும். நீங்கள் செய்யும் இந்த தானங்களை உங்களது குழந்தையின் கைகளால் செய்வது சிறப்பான ஒன்று.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X