என் மலர்
தோஷ பரிகாரங்கள்
செவ்வாய் வக்ரம் பெற்ற பெண்கள் மன நிறைவான மணவாழ்வு அமையவில்லை என்றே கூறுகிறார்கள். இவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஒருவருக்கு செவ்வாய் நல்ல யோகம் தரும் நிலையில் 3,6,8,12-ல் மறையாமல் இருந்தால் மட்டுமே ஒரு ஆணால் உற்சாகமாக அனைத்து செயல்களிலும் ஈடுபட முடியும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வீடு, வாகனம், பொன்பொருள் சேர்க்கை, அரசு வழி ஆதாயம் கிடைக்கும். கால்நடை அபிவிருத்தி விவசாயத்தில் மேன்மை உண்டாகும். ஆண் ஜாதகத்தில் செவ்வாய் மறைவு பெற்றால் சொத்து சுகம் இருக்காது. இருந்தாலும் பயனற்று போகும். உறவுகள் பகையாகும்.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுப ஸ்தானத்தில் வலிமையுடன் இருந்தால் புகுந்த வீட்டில் தனக்கென்று ஒரு தனி ராஜாங்கம் அமைத்து குடும்ப உறுப்பினர்களை தன் வசப்படுத்தி முடிசூடா ராணியாக வாழ்நாள் முழுவதும் திகழ்கிறார்கள். செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
செவ்வாய் வக்ரம் பெற்ற பெண்கள் மன நிறைவான மணவாழ்வு அமையவில்லை என்றே கூறுகிறார்கள். இவர்களுக்கு செவ்வாயின் தசாபுத்தி காலங்களில் முன் கோபம் மிகுதியாகும். திட்டமிடுதலில்-ஆலோசகராக இருப்பதில் சாதனை புரிவர். ஆனால் செயல்திறன் இருக்காது. உடன் பிறந்த சகோதரர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்காது.
வீடு, வாகனம், சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருக்கும். ரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படும். வக்ர செவ்வாய் சனியுடன் சம்பந்தம் பெறும் போது விபத்து / காயம் ஏற்படும்.
பரிகாரம்: பழனி தண்டாயுதபாணி சுவாமியை வழிபட வாழ்வின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி மன நிறைவான மண வாழ்க்கை கிட்டும்.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுப ஸ்தானத்தில் வலிமையுடன் இருந்தால் புகுந்த வீட்டில் தனக்கென்று ஒரு தனி ராஜாங்கம் அமைத்து குடும்ப உறுப்பினர்களை தன் வசப்படுத்தி முடிசூடா ராணியாக வாழ்நாள் முழுவதும் திகழ்கிறார்கள். செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
செவ்வாய் வக்ரம் பெற்ற பெண்கள் மன நிறைவான மணவாழ்வு அமையவில்லை என்றே கூறுகிறார்கள். இவர்களுக்கு செவ்வாயின் தசாபுத்தி காலங்களில் முன் கோபம் மிகுதியாகும். திட்டமிடுதலில்-ஆலோசகராக இருப்பதில் சாதனை புரிவர். ஆனால் செயல்திறன் இருக்காது. உடன் பிறந்த சகோதரர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்காது.
வீடு, வாகனம், சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருக்கும். ரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படும். வக்ர செவ்வாய் சனியுடன் சம்பந்தம் பெறும் போது விபத்து / காயம் ஏற்படும்.
பரிகாரம்: பழனி தண்டாயுதபாணி சுவாமியை வழிபட வாழ்வின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி மன நிறைவான மண வாழ்க்கை கிட்டும்.
13 வகையான சாபங்கள் இருக்கின்றன என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இந்த சாபங்களால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
13 வகையான சாபங்கள் இருக்கின்றன என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அவை: 1. பெண் சாபம் 2. பிரேத சாபம் 3. பிரம்ம சாபம் 4. சர்ப்ப சாபம் 5. பித்ரு சாபம் 6. கோ சாபம் 7. பூமி சாபம் 8. கங்கா சாபம் 9. விருட்ச சாபம் 10. தேவ சாபம் 11. ரிஷி சாபம் 12. முனி சாபம் 13. குலதெய்வ சாபம்.
1. பெண் சாபம்:
பெண்களை ஏமாற்றுவதாலும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் இந்த சாபம் ஏற்படக்கூடும். இந்த சாபத்தால் வம்சம் அழியும்.
2. பிரேத சாபம்:
இறந்த மனிதரின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவது, அவருடைய உடலை தாண்டுவது, இறுதி சடங்கு காரியங்களை செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவரின் நெருங்கிய உறவுகளை பார்க்க அனுமதி மறுப்பது பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
3. பிரம்ம சாபம்:
தமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, அந்த வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்காமல் அந்த வித்தையை மறைப்பது பிரம்ம சாபத்துக்கு வழிவகுக்கும். இதனால் படிப்பு தடைபடும்.
4. சர்ப்ப சாபம்:
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும், அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷம் ஏற்பட்டு திருமணம் தடைப்படும்.
5. பித்ரு சாபம்:
முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை, தாத்தா-பாட்டி போன்றவர்களை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும்.
6. கோ சாபம்:
பசுவை வதைப்பது, பால் சுரப்பு நின்ற பசுவை இறைச்சிக்கு வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவை பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ, வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
7. பூமி சாபம்:
ஆத்திரத்தில் பூமியை காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், பிளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.
8. கங்கா சாபம்:
பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் படுத்துவதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் நேரும். இந்த சாபத்தால் சொந்த நிலத்தில் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
9. விருட்ச சாபம்:
மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீட்டு மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
10. தேவ சாபம்:
தெய்வங்களின் பூஜையை பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். இந்த சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
11. ரிஷி சாபம்:
கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் இந்த சாபம் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
12. முனி சாபம்:
எல்லை தெய்வங்கள் மற்றும் சிறு தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
13. குலதெய்வ சாபம்:
நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை வழிபடாமல் இருப்பதால் இந்த சாபம் நேரும். குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.
1. பெண் சாபம்:
பெண்களை ஏமாற்றுவதாலும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் இந்த சாபம் ஏற்படக்கூடும். இந்த சாபத்தால் வம்சம் அழியும்.
2. பிரேத சாபம்:
இறந்த மனிதரின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவது, அவருடைய உடலை தாண்டுவது, இறுதி சடங்கு காரியங்களை செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவரின் நெருங்கிய உறவுகளை பார்க்க அனுமதி மறுப்பது பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
3. பிரம்ம சாபம்:
தமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, அந்த வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்காமல் அந்த வித்தையை மறைப்பது பிரம்ம சாபத்துக்கு வழிவகுக்கும். இதனால் படிப்பு தடைபடும்.
4. சர்ப்ப சாபம்:
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும், அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷம் ஏற்பட்டு திருமணம் தடைப்படும்.
5. பித்ரு சாபம்:
முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை, தாத்தா-பாட்டி போன்றவர்களை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும்.
6. கோ சாபம்:
பசுவை வதைப்பது, பால் சுரப்பு நின்ற பசுவை இறைச்சிக்கு வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவை பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ, வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
7. பூமி சாபம்:
ஆத்திரத்தில் பூமியை காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், பிளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.
8. கங்கா சாபம்:
பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் படுத்துவதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் நேரும். இந்த சாபத்தால் சொந்த நிலத்தில் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
9. விருட்ச சாபம்:
மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீட்டு மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
10. தேவ சாபம்:
தெய்வங்களின் பூஜையை பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். இந்த சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
11. ரிஷி சாபம்:
கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் இந்த சாபம் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
12. முனி சாபம்:
எல்லை தெய்வங்கள் மற்றும் சிறு தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
13. குலதெய்வ சாபம்:
நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை வழிபடாமல் இருப்பதால் இந்த சாபம் நேரும். குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.
ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள்கள் உண்டு. ஐப்பசி மாதத்து பவுர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல, ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மாதம் மற்றும் அபிஷேகப் பொருள்கள், அதன் பலன்கள் விவரம்:
சித்திரை பவுர்ணமி : மரிக்கொழுந்து - புகழ்
வைகாசி : சந்தனம் - மனை, வீடு, நீலம், புதையல்
ஆனி : முக்கனி (மா, பலா, வாழை) - கேட்ட வரம் கிட்டும்
ஆடி : காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்
ஆவணி : வெல்ல சர்க்கரை - சாபம் தோஷம், பாவம் நீங்கும்
புரட்டாசி : கோதுமை பசு நெய் கலந்த வெல்ல அப்பம் - அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி : அன்னாபிஷேகம் - கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்
கார்த்திகை : பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி : பசு நெய் நறுமண வென்னீர் - கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை : கருப்பஞ்சாறு - நோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி : பசு நெய்யில் நனைத்த கம்பளி - குழந்தை பாக்கியம்
பங்குனி : பசுந்தயிர் - மனைவி, மக்கள், உறவினர் உதவி
மாதம் மற்றும் அபிஷேகப் பொருள்கள், அதன் பலன்கள் விவரம்:
சித்திரை பவுர்ணமி : மரிக்கொழுந்து - புகழ்
வைகாசி : சந்தனம் - மனை, வீடு, நீலம், புதையல்
ஆனி : முக்கனி (மா, பலா, வாழை) - கேட்ட வரம் கிட்டும்
ஆடி : காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்
ஆவணி : வெல்ல சர்க்கரை - சாபம் தோஷம், பாவம் நீங்கும்
புரட்டாசி : கோதுமை பசு நெய் கலந்த வெல்ல அப்பம் - அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி : அன்னாபிஷேகம் - கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்
கார்த்திகை : பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி : பசு நெய் நறுமண வென்னீர் - கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை : கருப்பஞ்சாறு - நோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி : பசு நெய்யில் நனைத்த கம்பளி - குழந்தை பாக்கியம்
பங்குனி : பசுந்தயிர் - மனைவி, மக்கள், உறவினர் உதவி
உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது.
இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிய பல கோலங்கள் பூண்டு அதிசயிக்கும் வண்ணம் உருவங்களை மாற்றி காட்சி தருவார். அந்த வகையில் உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. அதன் பெயர் யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம்.
இங்கே கருவறையில் இறைவன் தலைகீழாய் லிங்கம் இன்றி உருவமாக காட்சி தருகிறார். அதாவது சிரசை பூமியில் பதித்து பாதத்தை மேலே தூக்கி நிறுத்தி சிரசாசனத்தில் காட்சி தருகிறார். அருகிலேயே அன்னை வேறு எங்கும் இல்லாத வண்ணம் குழந்தை முருகனை மடியில் கிடத்திக் கொண்டு தாய்மையே வடிவாக பார்வதி தேவி காட்சி அளிக்கிறார்.
எமன் பூஜித்த தலம் ஆதலால் ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒரு சேர தரிசித்து செல்ல எம பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சினைகள், திருமண தடை, குழந்தையின்மை போன்ற குறைபாடுகளை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது.
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள எனமதுரு கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
இங்கே கருவறையில் இறைவன் தலைகீழாய் லிங்கம் இன்றி உருவமாக காட்சி தருகிறார். அதாவது சிரசை பூமியில் பதித்து பாதத்தை மேலே தூக்கி நிறுத்தி சிரசாசனத்தில் காட்சி தருகிறார். அருகிலேயே அன்னை வேறு எங்கும் இல்லாத வண்ணம் குழந்தை முருகனை மடியில் கிடத்திக் கொண்டு தாய்மையே வடிவாக பார்வதி தேவி காட்சி அளிக்கிறார்.
எமன் பூஜித்த தலம் ஆதலால் ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒரு சேர தரிசித்து செல்ல எம பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சினைகள், திருமண தடை, குழந்தையின்மை போன்ற குறைபாடுகளை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது.
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள எனமதுரு கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
திருப்பாவையின் 30 பாடல்களையும் கற்பவர்கள் எப்போதும் திருமால் அருளால் பூ உலகிலும், வான் உலகிலும் இன்ப வாழ்க்கை வாழ்வார்கள். எல்லா நலன்களும் கிடைக்கும்.
இன்று மார்கழி மாதம் பிறந்தது. நமது ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். அந்த வகையில் மார்கழி மாதமானது தேவர்களுக்கு விடியற்காலை நேரம். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள 2 நாழிகை நேரமே தேவர்களின் விடியற்காலமாக கருதப்படுகிறது. இந்த 2 நாழிகை நேரத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்பார்கள். இந்த நேரத்தில் தான் தேவர்கள் கோவிலுக்குச் சென்று திருப்பள்ளி எழுச்சி சொல்வார்கள். இறைவன் கண் விழித்ததும் முதல் ஆராதனையை செய்வார்கள்.
அந்த சமயத்தில் நாமும் வழிபாடு நடத்தினால் பகவானின் அருளை மிகச் சுலபமாக பெற முடியும். அதனால் தான் மார்கழி மாதம் மங்களகரமான, புண்ணிய மாதமாக கருதப்படுகிறது. மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளார். பாரத யுத்தம் இந்த மாதம் தான் நடந்தது. பகவத்கீதை அருளப்பட்டது மார்கழியில்தான். திருப்பாற்கடல் கடையப்பட்டதும், அதில் இருந்து தோன்றிய விஷத்தை சிவபெருமான் உண்டதும் மார்கழி மாதத்தில்தான் என்று புராணம் சொல்கிறது.
அய்யப்பன், ஆஞ்சநேயர் அவதரித்ததும், ஆண்டாள் அதிகாலையில் எழுந்து நீராடி, திருப்பாவை பாடி திருமால் மனதில் இடம் பிடித்ததும் இந்த மாதத்தில்தான். கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து மக்களை காத்தது மார்கழி மாதத்தில்தான். இத்தகைய சிறப்புடைய மார்கழி மாதத்தை சிலர் மனம் போன போக்கில் பீடை மாதம் என்கிறார்கள். உண்மையில் மார்கழியைதான் முன்னோர்கள் “பீடுடை மாதம்” என்றழைத்தனர்.
பீடுடை என்றால் சிறப்பான மங்களகரம் நிறைந்தது என்று பொருள். பீடுடை என்ற வார்த்தை உச்சரிப்பில் திரிந்து, மருவி பீடை என்றாகி விட்டது. இனியாவது மார்கழியை பீடை மாதம் என்று சொல்லாதீர்கள். எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி, கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தால் மனம் தூய்மை பெறும்.
அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யப்படும் செயல்கள் நல்ல பலன்களைக் கொடுக்கும். மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.
மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். அதுபோல திருவாதிரை தினத்தன்று களி நிவேதனம் செய்து நடராஜரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும். ஆண்டாள் இயற்றிய பிரபந்தங்கள் இரண்டு. ஒன்று திருப்பாவை. மற்றொன்று நாச்சியார் திருமொழி.
மார்கழி நோன்பு இருக்கும் பெண்கள் அதிகாலையில் பாடுவதற்காக திருப்பாவையை ஆண்டாள் இயற்றினார். திருப்பாவையில் மொத்தம் 30 பாடல்கள். நோன்பு இருந்த ஒவ்வொரு நாளும் ஒரு பாடலாக 30 பாடலை ஆண்டாள் பாடினார். வேதங்களின் முடிவுப் பகுதியாகிய உபநிஷதங்களின் நுட்பமான பொருட்களை திருப்பாவை எடுத்துச் சொல்வதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
பெண்கள் பாடுவதற்கு ஏற்ப எளிய தமிழ், இனிய தமிழ், பக்தி சுவை சொட்டும் பைந்தமிழில் திருப்பாவையை ஆண்டாள் பாடியுள்ளார். பெருமாள் கோவில்களில் 108 திவ்ய தேசங்களில் சாற்று முறை காலங்களில் திருப்பாவையே முதன்மையாகப் பாடப்படுகிறது. ஆழ்வார்கள் இயற்றிய பிரபந்தங்களை படிப்பவர்கள் முதலிலும் முடிவிலும் திருப்பாவை படிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
மார்கழி மாதம் முழுவதும் திருப்பதி ஏழுமலையானை திருப்பாவை பாடிதான் எழுப்புகிறார்கள். ராமானுஜர் திருப்பாவை பாடிதான் பிச்சை எடுத்ததாக குறிப்புகள் உள்ளன. திருப்பாவை வேத வித்து, கீதையின் சாரம் என்றெல்லாம் புகழப்படுகிறது. “திருப்பாவைக்கு வியாக்கியானம் சொல்ல ஆள் இல்லை” என்று ராமானுஜர் கூறியுள்ளார்.
வேதம் போல சிலருக்கு மட்டுமே பயன்படாமல், எவரும், எல்லோரும் பக்தி ஞானம் பெற்று முக்தி பெற திருப்பாவை வழி காட்டுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி பர்மா, கம்போடியா, தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா நாடுகளிலும் திருப்பாவை பாடப்படுகிறது. தாய் லாந்து கோவில் களிலும், அரண்மனையிலும் இன்றும் திருப்பாவை பாடப்படுகிறது.
திருப்பாவையில் உள்ள 30 பாடல்களில் முதல் 5 பாடல்கள் மார்கழி நோன்பு பற்றியும், அடுத்த 10 பாடல்கள் தோழிகள் அதிகாலையில் எழுப்பப்படுவது பற்றியும், அதற்கு அடுத்த 10 பாடல்கள் கண்ணனை கண் விழிக்க செய்யும், கடைசி 5 பாடல்கள் பாவை நோன்பு பயன்கள் பற்றியும் சொல்கிறது.
திருப்பாவையின் 30 பாடல்களையும் கற்பவர்கள் எப்போதும் திருமால் அருளால் பூ உலகிலும், வான் உலகிலும் இன்ப வாழ்க்கை வாழ்வார்கள். எல்லா நலன்களும் கிடைக்கும். அதோடு வாழ்வாங்கு வாழ்ந்து பின்பு மோட்சத்தையும் அடைவார்கள்.
அந்த சமயத்தில் நாமும் வழிபாடு நடத்தினால் பகவானின் அருளை மிகச் சுலபமாக பெற முடியும். அதனால் தான் மார்கழி மாதம் மங்களகரமான, புண்ணிய மாதமாக கருதப்படுகிறது. மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளார். பாரத யுத்தம் இந்த மாதம் தான் நடந்தது. பகவத்கீதை அருளப்பட்டது மார்கழியில்தான். திருப்பாற்கடல் கடையப்பட்டதும், அதில் இருந்து தோன்றிய விஷத்தை சிவபெருமான் உண்டதும் மார்கழி மாதத்தில்தான் என்று புராணம் சொல்கிறது.
அய்யப்பன், ஆஞ்சநேயர் அவதரித்ததும், ஆண்டாள் அதிகாலையில் எழுந்து நீராடி, திருப்பாவை பாடி திருமால் மனதில் இடம் பிடித்ததும் இந்த மாதத்தில்தான். கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து மக்களை காத்தது மார்கழி மாதத்தில்தான். இத்தகைய சிறப்புடைய மார்கழி மாதத்தை சிலர் மனம் போன போக்கில் பீடை மாதம் என்கிறார்கள். உண்மையில் மார்கழியைதான் முன்னோர்கள் “பீடுடை மாதம்” என்றழைத்தனர்.
பீடுடை என்றால் சிறப்பான மங்களகரம் நிறைந்தது என்று பொருள். பீடுடை என்ற வார்த்தை உச்சரிப்பில் திரிந்து, மருவி பீடை என்றாகி விட்டது. இனியாவது மார்கழியை பீடை மாதம் என்று சொல்லாதீர்கள். எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி, கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தால் மனம் தூய்மை பெறும்.
அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யப்படும் செயல்கள் நல்ல பலன்களைக் கொடுக்கும். மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.
மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். அதுபோல திருவாதிரை தினத்தன்று களி நிவேதனம் செய்து நடராஜரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும். ஆண்டாள் இயற்றிய பிரபந்தங்கள் இரண்டு. ஒன்று திருப்பாவை. மற்றொன்று நாச்சியார் திருமொழி.
மார்கழி நோன்பு இருக்கும் பெண்கள் அதிகாலையில் பாடுவதற்காக திருப்பாவையை ஆண்டாள் இயற்றினார். திருப்பாவையில் மொத்தம் 30 பாடல்கள். நோன்பு இருந்த ஒவ்வொரு நாளும் ஒரு பாடலாக 30 பாடலை ஆண்டாள் பாடினார். வேதங்களின் முடிவுப் பகுதியாகிய உபநிஷதங்களின் நுட்பமான பொருட்களை திருப்பாவை எடுத்துச் சொல்வதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
பெண்கள் பாடுவதற்கு ஏற்ப எளிய தமிழ், இனிய தமிழ், பக்தி சுவை சொட்டும் பைந்தமிழில் திருப்பாவையை ஆண்டாள் பாடியுள்ளார். பெருமாள் கோவில்களில் 108 திவ்ய தேசங்களில் சாற்று முறை காலங்களில் திருப்பாவையே முதன்மையாகப் பாடப்படுகிறது. ஆழ்வார்கள் இயற்றிய பிரபந்தங்களை படிப்பவர்கள் முதலிலும் முடிவிலும் திருப்பாவை படிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
மார்கழி மாதம் முழுவதும் திருப்பதி ஏழுமலையானை திருப்பாவை பாடிதான் எழுப்புகிறார்கள். ராமானுஜர் திருப்பாவை பாடிதான் பிச்சை எடுத்ததாக குறிப்புகள் உள்ளன. திருப்பாவை வேத வித்து, கீதையின் சாரம் என்றெல்லாம் புகழப்படுகிறது. “திருப்பாவைக்கு வியாக்கியானம் சொல்ல ஆள் இல்லை” என்று ராமானுஜர் கூறியுள்ளார்.
வேதம் போல சிலருக்கு மட்டுமே பயன்படாமல், எவரும், எல்லோரும் பக்தி ஞானம் பெற்று முக்தி பெற திருப்பாவை வழி காட்டுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி பர்மா, கம்போடியா, தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா நாடுகளிலும் திருப்பாவை பாடப்படுகிறது. தாய் லாந்து கோவில் களிலும், அரண்மனையிலும் இன்றும் திருப்பாவை பாடப்படுகிறது.
திருப்பாவையில் உள்ள 30 பாடல்களில் முதல் 5 பாடல்கள் மார்கழி நோன்பு பற்றியும், அடுத்த 10 பாடல்கள் தோழிகள் அதிகாலையில் எழுப்பப்படுவது பற்றியும், அதற்கு அடுத்த 10 பாடல்கள் கண்ணனை கண் விழிக்க செய்யும், கடைசி 5 பாடல்கள் பாவை நோன்பு பயன்கள் பற்றியும் சொல்கிறது.
திருப்பாவையின் 30 பாடல்களையும் கற்பவர்கள் எப்போதும் திருமால் அருளால் பூ உலகிலும், வான் உலகிலும் இன்ப வாழ்க்கை வாழ்வார்கள். எல்லா நலன்களும் கிடைக்கும். அதோடு வாழ்வாங்கு வாழ்ந்து பின்பு மோட்சத்தையும் அடைவார்கள்.
எந்த தோஷமாக இருந்தாலும் பெண் ஜாதகத்திற்கே பார்க்க வேண்டும். பெண் என்பவள் புனிதமானவள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லும் நற்பண்பு மிக அவசியம்.
திருமணத்திற்கு வரன் பார்க்க தொடங்கியவுடன் முதல் வரிசையில் நிற்கும் தோஷம் செவ்வாய் தோஷம். நவகிரகங்களில் ஒருவரான செவ்வாய் உடலின் ரத்த அணுக்கள், ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமாக இருப்பவர். ரத்த அணுக்களின் மூலக் கூறுகளை நிர்ணயித்து பிரிக்க கூடிய சக்தி உடையவர். அது மட்டுமல்ல ஒருவரின் ரத்தத்தை கொண்டு ஆண், பெண் என பாலினத்தையும் தீர்மானிக்கலாம்.
ஆண் ஜாதகத்தில் செவ்வாயை கொண்டு ஆண்மை வீரியத்தையும், பெண் ஜாதகத்தில் மாதவிடாய் சுழற்சி, கருப்பையின் செயல்பாடு மற்றும் மாங்கல்ய பாக்கியம் போன்றவற்றையும் அறியலாம். ஒருவரின் வீடு வாகன யோகம் பற்றியும் செவ்வாயின் நிலை கொண்டே அறிய முடியும். இத்தகைய செவ்வாய் திருமணம் தொடர்பான பாவங்களான 2, 4, 7, 8, 12--ல் அமர்வது தோஷம் என்று கருதப்படுகிறது.
அதாவது குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாமிடம், கற்பு எனும் ஒழுக்கத்தைக் குறிக்கும் நான்காமிடம், வாழ்க்கைத் துணை, களத்திர ஒற்றுமையை சொல்லும் ஏழாம் இடம், கணவனின் ஆயுளைக் குறிக்கும் எட்டாமிடம், இல்லற இன்பத்தை கூறும் பனிரெண்டாம் இடம் ஆகிய பாவங்களில் செவ்வாய் அமர்ந்தால் அந்த இடங்கள் நல்ல பலனைத் தராது என்பதால் தோஷமாக கருதப்படுகிறது.
அதேபோல செவ்வாய் ஏழில் இருந்தால், தனது கொடிய எட்டாம் பார்வையால் இரண்டாமிடத்தைப் பார்ப்பார். நான்கில் இருந்தால் நான்காம் பார்வையாக ஏழாமிடத்தையும், பனிரெண்டில் இருந்தால் எட்டாம் பார்வையாக ஏழாமிடத்தையும், எட்டில் இருக்கும்போது நேரிடையாக குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும், இரண்டில் இருந்தால் எட்டாமிடத்தையும் பார்த்துக் கெடுப்பார் என்பதாலும் இது தோஷம் எனச் சொல்லப்பட்டது.
மேலும் எந்த தோஷமாக இருந்தாலும் பெண் ஜாதகத்திற்கே பார்க்க வேண்டும். பெண் என்பவள் புனிதமானவள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லும் நற்பண்பு மிக அவசியம்.
ஒரு குடும்பத்தை நல்வழிப்படுத்தும் கடமை, மனப்பக்குவம் வேண்டும். அதே போல் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் ஒரே ஒரு முறை மட்டுமே ஏற வேண்டும் என்பதே நமது பாரம்பரியம். ஒரு முறை மட்டும் அமையும் திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொடுக்க வேண்டும் என்பதால் முன்னோர்கள் பெண்ணின் ஜனன ஜாதகத்தில் செவ்வாய் நின்ற நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதுவே தற்காலத்தில் ஆணுக்கும் பார்க்கப்படுகிறது. ஆண்-பெண் இருவருடைய ஜாதகங்களில் ஆண் ஜாதகத்தில் செவ்வாய் இளைய சகோதரனைக் குறிக்கும்.
பெண் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும். பெண்ணுக்கு கிரகம் செவ்வாய் பாதிக்கப்பட்டால் திருமண வாழ்வு மன சங்கடத்தை தரும். ஆணுடைய ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்படைந்தால் உடன் பிறந்த சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கும். மனைவிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் செவ்வாய் தோஷத்தை கவனமுடன் ஆய்வு செய்வது நல்லது.
மேலும் முற்காலத்தில் பெண்கள் வீட்டில் இருந்து குடும்பத்தை நிர்வகித்து வந்ததால் ஆண்களின் துணை தேவைப்பட்டதால் கணவரை அனுசரித்து வாழ்ந்தார்கள். தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் சம்பாதிப்பதால் கணவரை அனுசரித்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கட்டான சூழலில் தனியாக வாழத் துணிந்து விடுகிறார்கள் என்பதால் தற்காலத்தில் ஆணின் ஜாதகத் திலும் செவ்வாய் தோஷத்திற்கு முக்கியத் துவம் கொடுத்து திருமணம் நடத்த வேண்டிய நிலைக்கு சமுதாயம் உந்தப்பட்டு விட்டது. அத்துடன் செவ்வாய் தோஷம் அனைவருக்கும் பாதிப்பை தராது.
1, 2, 4, 7, 8, 12 ஆகிய பாவங்களில் நிற்கும் செவ்வாயின் நிலை என்ன? அவர் லக்ன ரீதியான சுபரா அல்லது பாவியா? சுபபலன் தருவாரா அல்லது அசுப பலன் தருவாரா? செவ்வாயுடன் இணைந்த கிரகம், பார்த்த கிரகம், நட்சத்திர சாரத்திற்கு ஏற்பவும் பலன்கள் மாறுபடும். செவ்வாய் தசை எப்பொழுது வருகிறது போன்ற பல்வேறு காரணிகளை சரி பார்த்தே செவ்வாய் தோஷ பலனை தீர்மானிக்க வேண்டும் என்பதால் செவ்வாய் நின்ற நிலைக்கு முக்கியத்துவம் தர வேண்டியது இல்லை. செவ்வாய் 90 சதவீதம்ஜாதகத்தினருக்கு நன்மையே செய்வார். 10 சதவீதம் ஜாதகமே செவ்வாய் தோஷத்தால் பாதிப்பை சந்திக்கும். தோஷத்தை ஏற்படுத்தும் பாவகங்களில் செவ்வாய் இருந்தாலும் சில விதி விலக்குகளும் உண்டு.
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் மேஷம், விருச்சிகத்தில் ஆட்சி பலம் பெற்ற செவ்வாய் பாதிப்பை ஏற்படுத்தாது. உச்சம் பெற்ற செவ்வாய் மிதுன, கும்ப லக்னத்திற்கு மட்டும் தோஷமாகும். கடகம் செவ்வாயின் நீச வீடு. நீசம் பெற்ற செவ்வாய்க்கு வலிமை குறைவதால் தோஷமில்லை. நீசம் பங்கமானால் தோஷமாகும்.
சனி, ராகு/கேதுக்களுடன் செவ்வாய் இணையும் போது செவ்வாய் தோஷ வீரியம் சற்று அதிகமாகும். அஸ்தமன செவ்வாய்க்கு வலிமை இல்லை என்பதால் தோஷம் இல்லை. செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் தோஷம் பாதிக்காது. மேலே கூறிய அனைத்து நிலைகளிலும் செவ்வாய் தோஷம் விலக்கு பெற்றாலும் அனுபவத்தில் செவ்வாய் தோஷம் 90 சதவீதம் நற்பலன்களையே வழங்குகிறது.
ஒருவருக்கு செவ்வாய் நல்ல யோகம் தரும் நிலையில் 3,6,8,12-ல் மறையாமல் இருந்தால் மட்டுமே ஒரு ஆணால் உற்சாகமாக அனைத்து செயல்களி லும் ஈடுபட முடியும். சகோதரர்களின் ஆதரவு கிடைக் கும். மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவி னர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வீடு, வாகனம், பொன்பொருள் சேர்க்கை, அரசு வழி ஆதாயம் கிடைக்கும். கால்நடை அபிவி ருத்தி விவசாயத்தில் மேன்மை உண்டாகும். ஆண் ஜாதகத்தில் செவ்வாய் மறைவு பெற்றால் சொத்து சுகம் இருக்காது. இருந்தாலும் பயனற்று போகும். உறவுகள் பகையாகும்.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுப ஸ்தானத்தில் வலிமையுடன் இருந்தால் புகுந்த வீட்டில் தனக்கென்று ஒரு தனி ராஜாங்கம் அமைத்து குடும்ப உறுப்பினர்களை தன் வசப்படுத்தி முடிசூடா ராணியாக வாழ்நாள் முழுவதும் திகழ்கிறார்கள். செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ஆண் ஜாதகத்தில் செவ்வாயை கொண்டு ஆண்மை வீரியத்தையும், பெண் ஜாதகத்தில் மாதவிடாய் சுழற்சி, கருப்பையின் செயல்பாடு மற்றும் மாங்கல்ய பாக்கியம் போன்றவற்றையும் அறியலாம். ஒருவரின் வீடு வாகன யோகம் பற்றியும் செவ்வாயின் நிலை கொண்டே அறிய முடியும். இத்தகைய செவ்வாய் திருமணம் தொடர்பான பாவங்களான 2, 4, 7, 8, 12--ல் அமர்வது தோஷம் என்று கருதப்படுகிறது.
அதாவது குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாமிடம், கற்பு எனும் ஒழுக்கத்தைக் குறிக்கும் நான்காமிடம், வாழ்க்கைத் துணை, களத்திர ஒற்றுமையை சொல்லும் ஏழாம் இடம், கணவனின் ஆயுளைக் குறிக்கும் எட்டாமிடம், இல்லற இன்பத்தை கூறும் பனிரெண்டாம் இடம் ஆகிய பாவங்களில் செவ்வாய் அமர்ந்தால் அந்த இடங்கள் நல்ல பலனைத் தராது என்பதால் தோஷமாக கருதப்படுகிறது.
அதேபோல செவ்வாய் ஏழில் இருந்தால், தனது கொடிய எட்டாம் பார்வையால் இரண்டாமிடத்தைப் பார்ப்பார். நான்கில் இருந்தால் நான்காம் பார்வையாக ஏழாமிடத்தையும், பனிரெண்டில் இருந்தால் எட்டாம் பார்வையாக ஏழாமிடத்தையும், எட்டில் இருக்கும்போது நேரிடையாக குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும், இரண்டில் இருந்தால் எட்டாமிடத்தையும் பார்த்துக் கெடுப்பார் என்பதாலும் இது தோஷம் எனச் சொல்லப்பட்டது.
மேலும் எந்த தோஷமாக இருந்தாலும் பெண் ஜாதகத்திற்கே பார்க்க வேண்டும். பெண் என்பவள் புனிதமானவள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லும் நற்பண்பு மிக அவசியம்.
ஒரு குடும்பத்தை நல்வழிப்படுத்தும் கடமை, மனப்பக்குவம் வேண்டும். அதே போல் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் ஒரே ஒரு முறை மட்டுமே ஏற வேண்டும் என்பதே நமது பாரம்பரியம். ஒரு முறை மட்டும் அமையும் திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொடுக்க வேண்டும் என்பதால் முன்னோர்கள் பெண்ணின் ஜனன ஜாதகத்தில் செவ்வாய் நின்ற நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதுவே தற்காலத்தில் ஆணுக்கும் பார்க்கப்படுகிறது. ஆண்-பெண் இருவருடைய ஜாதகங்களில் ஆண் ஜாதகத்தில் செவ்வாய் இளைய சகோதரனைக் குறிக்கும்.
பெண் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும். பெண்ணுக்கு கிரகம் செவ்வாய் பாதிக்கப்பட்டால் திருமண வாழ்வு மன சங்கடத்தை தரும். ஆணுடைய ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்படைந்தால் உடன் பிறந்த சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கும். மனைவிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் செவ்வாய் தோஷத்தை கவனமுடன் ஆய்வு செய்வது நல்லது.
மேலும் முற்காலத்தில் பெண்கள் வீட்டில் இருந்து குடும்பத்தை நிர்வகித்து வந்ததால் ஆண்களின் துணை தேவைப்பட்டதால் கணவரை அனுசரித்து வாழ்ந்தார்கள். தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் சம்பாதிப்பதால் கணவரை அனுசரித்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கட்டான சூழலில் தனியாக வாழத் துணிந்து விடுகிறார்கள் என்பதால் தற்காலத்தில் ஆணின் ஜாதகத் திலும் செவ்வாய் தோஷத்திற்கு முக்கியத் துவம் கொடுத்து திருமணம் நடத்த வேண்டிய நிலைக்கு சமுதாயம் உந்தப்பட்டு விட்டது. அத்துடன் செவ்வாய் தோஷம் அனைவருக்கும் பாதிப்பை தராது.
1, 2, 4, 7, 8, 12 ஆகிய பாவங்களில் நிற்கும் செவ்வாயின் நிலை என்ன? அவர் லக்ன ரீதியான சுபரா அல்லது பாவியா? சுபபலன் தருவாரா அல்லது அசுப பலன் தருவாரா? செவ்வாயுடன் இணைந்த கிரகம், பார்த்த கிரகம், நட்சத்திர சாரத்திற்கு ஏற்பவும் பலன்கள் மாறுபடும். செவ்வாய் தசை எப்பொழுது வருகிறது போன்ற பல்வேறு காரணிகளை சரி பார்த்தே செவ்வாய் தோஷ பலனை தீர்மானிக்க வேண்டும் என்பதால் செவ்வாய் நின்ற நிலைக்கு முக்கியத்துவம் தர வேண்டியது இல்லை. செவ்வாய் 90 சதவீதம்ஜாதகத்தினருக்கு நன்மையே செய்வார். 10 சதவீதம் ஜாதகமே செவ்வாய் தோஷத்தால் பாதிப்பை சந்திக்கும். தோஷத்தை ஏற்படுத்தும் பாவகங்களில் செவ்வாய் இருந்தாலும் சில விதி விலக்குகளும் உண்டு.
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் மேஷம், விருச்சிகத்தில் ஆட்சி பலம் பெற்ற செவ்வாய் பாதிப்பை ஏற்படுத்தாது. உச்சம் பெற்ற செவ்வாய் மிதுன, கும்ப லக்னத்திற்கு மட்டும் தோஷமாகும். கடகம் செவ்வாயின் நீச வீடு. நீசம் பெற்ற செவ்வாய்க்கு வலிமை குறைவதால் தோஷமில்லை. நீசம் பங்கமானால் தோஷமாகும்.
மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்னம், ராசியில் பிறந்தவர்களுக்கு லகன ரீதியான சுப கிரகம் என்பதால் செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்தாது. செவ்வாய் லக்ன சுபரின் சாரம் பெற்றால் தோஷமாகாது செவ்வாய்க்கு குருவின் சம்பந்தம், பார்வை இருந்தால் பாதிப்பு இருக்காது.
ஒருவருக்கு செவ்வாய் நல்ல யோகம் தரும் நிலையில் 3,6,8,12-ல் மறையாமல் இருந்தால் மட்டுமே ஒரு ஆணால் உற்சாகமாக அனைத்து செயல்களி லும் ஈடுபட முடியும். சகோதரர்களின் ஆதரவு கிடைக் கும். மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவி னர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வீடு, வாகனம், பொன்பொருள் சேர்க்கை, அரசு வழி ஆதாயம் கிடைக்கும். கால்நடை அபிவி ருத்தி விவசாயத்தில் மேன்மை உண்டாகும். ஆண் ஜாதகத்தில் செவ்வாய் மறைவு பெற்றால் சொத்து சுகம் இருக்காது. இருந்தாலும் பயனற்று போகும். உறவுகள் பகையாகும்.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுப ஸ்தானத்தில் வலிமையுடன் இருந்தால் புகுந்த வீட்டில் தனக்கென்று ஒரு தனி ராஜாங்கம் அமைத்து குடும்ப உறுப்பினர்களை தன் வசப்படுத்தி முடிசூடா ராணியாக வாழ்நாள் முழுவதும் திகழ்கிறார்கள். செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கட்டான சூழலில் தனியாக வாழத் துணிந்து விடுகிறார்கள் என்பதால் தற்காலத்தில் ஆணின் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து திருமணம் நடத்த வேண்டிய நிலைக்கு சமுதாயம் உந்தப்பட்டு விட்டது. அத்துடன் செவ்வாய் தோஷம் அனைவருக்கும் பாதிப்பை தராது.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுப ஸ்தானத்தில் வலிமையுடன் இருந்தால் புகுந்த வீட்டில் தனக்கென்று ஒரு தனி ராஜாங்கம் அமைத்து குடும்ப உறுப்பினர்களை தன் வசப்படுத்தி முடிசூடா ராணியாக வாழ்நாள் முழுவதும் திகழ்கிறார்கள். செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
காரக கிரகத்திற்கு இருபுறமும் அசுப கிரகம் நின்று காரக கிரகத்தின் இயக்கத்தை மட்டுப்படுத்தும். உதாரணமாக செவ்வாய்க்கு ஒருபுறம் கேது மறுபுறம் சனி இருந்தால் செவ்வாயின் இயங்கும் தன்மை சனி மற்றும் கேதுவால் தடைபடுத்தப்படும். முதிர்கன்னியானப் பிறகு திருமணம் அல்லது திருமணமே நடக்காத பெண்கள் ஜாதகத்தில் இது போன்ற அமைப்பை காணலாம்.
உண்மையில் செவ்வாய் தோஷம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. பல திருமண புரோக்கர்கள் 10 ரூபாய் திருமணப் பொருத்தம் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு மக்களை படுத்தும்பாடு அளப்பரியது. தவறான செவவாய் தோஷ கணிப்பால் பலரின் வாழ்க்கை கேள்வியாகவே இருக்கிறது. ஒரு ஜாதகத்தை நவகிரகங்களுமே இயக்கும். செவ்வாய் தசை, புத்தி அந்தர காலங்களில் பாதிப்பு அதிகமாகவும் மற்ற காலங்களில் மிதமாகவும் இருக்கும். எனவே செவ்வாய் தோஷம் கண்டு அஞ்சத் தேவை இல்லை.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுப ஸ்தானத்தில் வலிமையுடன் இருந்தால் புகுந்த வீட்டில் தனக்கென்று ஒரு தனி ராஜாங்கம் அமைத்து குடும்ப உறுப்பினர்களை தன் வசப்படுத்தி முடிசூடா ராணியாக வாழ்நாள் முழுவதும் திகழ்கிறார்கள். செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
காரக கிரகத்திற்கு இருபுறமும் அசுப கிரகம் நின்று காரக கிரகத்தின் இயக்கத்தை மட்டுப்படுத்தும். உதாரணமாக செவ்வாய்க்கு ஒருபுறம் கேது மறுபுறம் சனி இருந்தால் செவ்வாயின் இயங்கும் தன்மை சனி மற்றும் கேதுவால் தடைபடுத்தப்படும். முதிர்கன்னியானப் பிறகு திருமணம் அல்லது திருமணமே நடக்காத பெண்கள் ஜாதகத்தில் இது போன்ற அமைப்பை காணலாம்.
உண்மையில் செவ்வாய் தோஷம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. பல திருமண புரோக்கர்கள் 10 ரூபாய் திருமணப் பொருத்தம் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு மக்களை படுத்தும்பாடு அளப்பரியது. தவறான செவவாய் தோஷ கணிப்பால் பலரின் வாழ்க்கை கேள்வியாகவே இருக்கிறது. ஒரு ஜாதகத்தை நவகிரகங்களுமே இயக்கும். செவ்வாய் தசை, புத்தி அந்தர காலங்களில் பாதிப்பு அதிகமாகவும் மற்ற காலங்களில் மிதமாகவும் இருக்கும். எனவே செவ்வாய் தோஷம் கண்டு அஞ்சத் தேவை இல்லை.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மஞ்சமாதா காலடியில் வைத்து வரப்படும் துணியைத் தைத்துப் போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும் என்பது கண்கூடாகக் கண்ட உண்மை.
சபரிமலை ஐயப்பன் கோவில் பதினெட்டாம் படியின் வடதிசையில் மஞ்சமாதா கோவில் உள்ளது. சாஸ்தா சந்நிதியில் இருந்து கீழே இறங்காமல் மேம்பாலம் வழியாகவே அம்பாள் கோவிலுக்குச் சென்று விடலாம். திருநடை திறக்கப்படாத சமயங்களில் திரிசூலம் விளக்கு இவைகளை தரிசிக்கலாம். மஞ்சள்பொடி நிறைந்த தட்டில் எரியும் ஊதுபத்தி, கற்பூரம் சகிதமாக பன்னீரை பக்தர்கள் மீது தெளித்தவாறே மஞ்சள் மாதா தரிசனம் பெறச்செய்வார்கள். மஞ்சமாதா சந்நிதியில் கன்னிசாமிகள் தேங்காய் உருட்டுவது ஒரு சடங்காகும்.
மஞ்சள் மாதாவுக்கு மஞ்சள் ஜாக்கெட் துணிகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. அம்மன் காலடியில் வைத்து வரப்படும் துணியைத் தைத்துப் போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும் என்பதும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் கண்கூடாகக் கண்ட உண்மை. அம்மன் கோவிலின் தென்மேற்குப் புறத்தில் மணி மண்டபம் உள்ளது. இங்கு தேவி உபாசனை, அர்ச்சனை, பாராயணம் ஆகியவை நடைபெறுகிறது.
மஞ்சள் மாதாவுக்கு மஞ்சள் ஜாக்கெட் துணிகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. அம்மன் காலடியில் வைத்து வரப்படும் துணியைத் தைத்துப் போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும் என்பதும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் கண்கூடாகக் கண்ட உண்மை. அம்மன் கோவிலின் தென்மேற்குப் புறத்தில் மணி மண்டபம் உள்ளது. இங்கு தேவி உபாசனை, அர்ச்சனை, பாராயணம் ஆகியவை நடைபெறுகிறது.
யார் ஒருவர் சபரிமலைக்கு கருப்பு நிற உடை உடுத்தி சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தாவினைக் காண்கிறார்களோ அவர்களுக்கு சனியின் பாதிப்பு ஏதும் அறவே இருக்காது.
கருப்பும் உடுத்து பம்பையில் முங்கி சபரிக்கு போம் ஐயப்பன்மார் என்கிற பாடலின் வாயிலாக ஐயன் ஐயப்பனுக்கு ஏற்ற, பிடித்தமான உடை கருப்பு என்பதை அறியலாம். பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கருப்பு வேஷ்டி துண்டு அணிந்து தான் மலைக்கு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வருவோர் கருப்பு நிற ஆடை மட்டும் அணிகின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஐயப்ப ஸ்வாமியின் பரிவார தேவதையான ஸ்ரீ கருப்பஸ்வாமி ஸ்ரீ கருப்பாயி தேவி கருமை நிற ஆடை அணிபவர்கள். அவர்களின் வழி பின்பற்றி ஐயப்ப சாமிகளிடம் கருநிற ஆடை அணிகின்றனர்.
அடுத்து சபரிமலையில் யானைகள் அதிகம் உள்ளன. காட்டு யானைகள் பெருவழியில் அதிகம் நடமாடும். அவை வெள்ளை நிறம் கண்டால் சினம் கொண்டு பிளிரும். கருப்பு நிறம் கண்டால் வெகுண்டு எழாது. மற்றும் வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கமாக உள்ளது.
மேலும் கருப்பு நிறம் சனீஸ்வர பகவானுக்கு ஏற்றது. யார் ஒருவர் சபரிமலைக்கு கருப்பு நிற உடை உடுத்தி சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தாவினைக் காண்கிறார்களோ அவர்களுக்கு சனியின் பாதிப்பு ஏதும் அறவே இருக்காது. ஏன் என்றால் சனீஸ்வரன் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவன்.
இது தொடர்பாக கூறப்படும் கதை வருமாறு:
இந்த உலகையும் மற்ற எல்லா கிரகங்களையும் தன் கிரணங்களால் அனுகுகின்றவன் சூரிய பகவான். அவருக்கு உஷா என்ற மனைவி உண்டு. இந்த உஷா விஸ்வகர்மாவின் மகள் ஆவாள். இந்த விஸ்வகர்மா தான் தேவலோகத்து தேவர்களின் ஆணைப்படி பல கட்டிடங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும் செய்பவர். தேவலோக சிற்பி ஆவார். இன்றும் விஸ்வகர்மா வகுப்பினர் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதை காணலாம்.
சூரியன் - உஷா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். 2 பேர் ஆண்கள். ஒரு மகள்.
1. வைவஸ்வத மனு - மகன், 2. யமதர்ம ராஜன் - மகன், 3. யமுனா தேவி என்ற மகள். எனவே தான் யமுனா நதி கருப்பாக உள்ளது. (யமதர்ம ராஜனின் சகோதரி என்பதால்). சூரியனின் வெப்பத்தை அவரது மனைவியான உஷா தேவியால் கூட தாங்க இயலவில்லை. இங்கு உஷா தேவியினை மக்களாகவும் கருதி சிந்திக்க வேண்டும். வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள் எனவே உஷா தேவி தன் நிழலை உருவாக்கி சாயா தேவி என்று மாறினாள். சாயா என்றால் நிழல் என்றும் பொருள் வரும். சூரியனை விட்டுவிட்டு விஸ்வகர்மாவாகிய தன் தந்தையிடம் உஷா சென்றுவிட்டாள். இந்த சூரியன் மனைவியாகிய சாயாதேவி தன் கணவரிடமும், உஷா தேவியின் குழந்தைகளிடமும் பிரியமாக நடந்து கொண்டாள். நாளடைவில் இந்த சாயா தேவிக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன.
1. சாவர்ணி மனு - மகன், 2. ச்ருத கர்மா - மகன் மற்றுத் பத்ரை என்ற மகளும் பிறந்தனர்.
தனக்கு குழந்தைகள் பிறந்ததும் சாயாதேவி உஷா தேவியின் குழந்தைகளை வெறுக்க தொடங்கினாள். குழந்தைகளிடம் கடுமையாகவும் நடந்து கொண்டாள். இதனால் எமதர்மன் மிகவும் துன்பத்திற்கு ஆளானான். ஒரு சமயம் எமதர்மன் காலை தூக்குவதை கண்ட சாயா தேவி தன்னைத்தான் உதைக்க வருவதாக எண்ணி அவன் கால் எழுகக்கடவது என சாபமிட்டாள்.
தாய் சாபமிடுவதை கண்ட எமன் சந்தேகமுற்றான். நல்ல தாய் தன் மகனை ஒருக்காலும் சபிக்கமாட்டாள். தன் சந்தேகத்தினை சூரிய பகவானான தந்தையிடம் கூறினான். சினம் கொண்ட சூரியன் உண்மையினை கூறும்படி கட்டளையிட்டார். சாயா தேவியும் தான் உஷா தேவி அல்ல என்ற உண்மையினை ஒத்துக்கொண்டாள்.
சூரிய பகவானும் எமதர்ம ராஜனை பூலோகம் சென்று தாயின் நோய் தீர்க்கும் தயாவான தத்துவனாகிய ஸ்ரீ தர்ம சாஸ்தாவினை நோக்கி தவம் செய்து சாப விமோசனம் பெற வழிகாட்டினார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதனை உணர்ந்த எமன் பூலோகம் வந்து தவம் இருந்து வேண்டினார். அவனது தவ வலிமையினைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றினார். சாப விமோசனம் தந்து எமலோகத்திற்கு அதிபதியாக்கினார்.
இப்படிப்பட்ட உயர்ந்த நிலையினை ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அனுகிரகத்தினால் எமன் கிடைக்கப்பெற்றதனை அறிந்த ஸ்ரீ சாயா தேவியின் இளைய மகனாகிய ச்ருத கர்மா தானும் பூலோகம் வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தாவை காலையும் மாலையும் பூஜை செய்து வழிபட்டான். பின்னர் கடும் தவம் மேற்கொண்டு சகல வரங்ளையும் அருளும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவினையே தியானம் செய்து வந்தான்.
அவனது அன்பு கலந்த பக்தியினால் மகிழ்ந்த ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றி அவனுக்கு சூரிய மண்டலத்தில் கிரக நிலையினை அருளினார். அவன் மெதுவாக நகர்வதால் (அவன் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும்) சனீஸ்வரன் என்ற பெயரும் சூட்டினார். வாரத்தின் கடைசி நாளையும் அவன் பெயரில் அழைக்க அருள்பாலித்தருளினார்.
மேலும் அந்த சனிக்கிழமையினையே தனக்கு உகந்த நாளாக ஏற்று ஐயப்பன் அருள் செய்தார். இதற்கு பிரிதி உபகாரமாக சனிபகவானும் யார் ஒருவர் கருப்பு நிற உடை உடுத்தி சனிக்கிழமை தோரும் விரதம் இருந்து சபரிமலை வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா சொரூபமாகிய ஐயப்பனை அன்புடன் வேண்டுகிறார்களோ அவர்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்க மாட்டேன் என கூறினார்.
எனவே தான் சபரிமலைக்கு கருப்பு நிற உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு 7 1/2 சனியின் தாக்கம் கடுமையாக இருப்பதில்லை.
அதிலும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வருவோர் கருப்பு நிற ஆடை மட்டும் அணிகின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஐயப்ப ஸ்வாமியின் பரிவார தேவதையான ஸ்ரீ கருப்பஸ்வாமி ஸ்ரீ கருப்பாயி தேவி கருமை நிற ஆடை அணிபவர்கள். அவர்களின் வழி பின்பற்றி ஐயப்ப சாமிகளிடம் கருநிற ஆடை அணிகின்றனர்.
அடுத்து சபரிமலையில் யானைகள் அதிகம் உள்ளன. காட்டு யானைகள் பெருவழியில் அதிகம் நடமாடும். அவை வெள்ளை நிறம் கண்டால் சினம் கொண்டு பிளிரும். கருப்பு நிறம் கண்டால் வெகுண்டு எழாது. மற்றும் வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கமாக உள்ளது.
மேலும் கருப்பு நிறம் சனீஸ்வர பகவானுக்கு ஏற்றது. யார் ஒருவர் சபரிமலைக்கு கருப்பு நிற உடை உடுத்தி சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தாவினைக் காண்கிறார்களோ அவர்களுக்கு சனியின் பாதிப்பு ஏதும் அறவே இருக்காது. ஏன் என்றால் சனீஸ்வரன் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவன்.
இது தொடர்பாக கூறப்படும் கதை வருமாறு:
இந்த உலகையும் மற்ற எல்லா கிரகங்களையும் தன் கிரணங்களால் அனுகுகின்றவன் சூரிய பகவான். அவருக்கு உஷா என்ற மனைவி உண்டு. இந்த உஷா விஸ்வகர்மாவின் மகள் ஆவாள். இந்த விஸ்வகர்மா தான் தேவலோகத்து தேவர்களின் ஆணைப்படி பல கட்டிடங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும் செய்பவர். தேவலோக சிற்பி ஆவார். இன்றும் விஸ்வகர்மா வகுப்பினர் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதை காணலாம்.
சூரியன் - உஷா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். 2 பேர் ஆண்கள். ஒரு மகள்.
1. வைவஸ்வத மனு - மகன், 2. யமதர்ம ராஜன் - மகன், 3. யமுனா தேவி என்ற மகள். எனவே தான் யமுனா நதி கருப்பாக உள்ளது. (யமதர்ம ராஜனின் சகோதரி என்பதால்). சூரியனின் வெப்பத்தை அவரது மனைவியான உஷா தேவியால் கூட தாங்க இயலவில்லை. இங்கு உஷா தேவியினை மக்களாகவும் கருதி சிந்திக்க வேண்டும். வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள் எனவே உஷா தேவி தன் நிழலை உருவாக்கி சாயா தேவி என்று மாறினாள். சாயா என்றால் நிழல் என்றும் பொருள் வரும். சூரியனை விட்டுவிட்டு விஸ்வகர்மாவாகிய தன் தந்தையிடம் உஷா சென்றுவிட்டாள். இந்த சூரியன் மனைவியாகிய சாயாதேவி தன் கணவரிடமும், உஷா தேவியின் குழந்தைகளிடமும் பிரியமாக நடந்து கொண்டாள். நாளடைவில் இந்த சாயா தேவிக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன.
1. சாவர்ணி மனு - மகன், 2. ச்ருத கர்மா - மகன் மற்றுத் பத்ரை என்ற மகளும் பிறந்தனர்.
தனக்கு குழந்தைகள் பிறந்ததும் சாயாதேவி உஷா தேவியின் குழந்தைகளை வெறுக்க தொடங்கினாள். குழந்தைகளிடம் கடுமையாகவும் நடந்து கொண்டாள். இதனால் எமதர்மன் மிகவும் துன்பத்திற்கு ஆளானான். ஒரு சமயம் எமதர்மன் காலை தூக்குவதை கண்ட சாயா தேவி தன்னைத்தான் உதைக்க வருவதாக எண்ணி அவன் கால் எழுகக்கடவது என சாபமிட்டாள்.
தாய் சாபமிடுவதை கண்ட எமன் சந்தேகமுற்றான். நல்ல தாய் தன் மகனை ஒருக்காலும் சபிக்கமாட்டாள். தன் சந்தேகத்தினை சூரிய பகவானான தந்தையிடம் கூறினான். சினம் கொண்ட சூரியன் உண்மையினை கூறும்படி கட்டளையிட்டார். சாயா தேவியும் தான் உஷா தேவி அல்ல என்ற உண்மையினை ஒத்துக்கொண்டாள்.
சூரிய பகவானும் எமதர்ம ராஜனை பூலோகம் சென்று தாயின் நோய் தீர்க்கும் தயாவான தத்துவனாகிய ஸ்ரீ தர்ம சாஸ்தாவினை நோக்கி தவம் செய்து சாப விமோசனம் பெற வழிகாட்டினார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதனை உணர்ந்த எமன் பூலோகம் வந்து தவம் இருந்து வேண்டினார். அவனது தவ வலிமையினைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றினார். சாப விமோசனம் தந்து எமலோகத்திற்கு அதிபதியாக்கினார்.
இப்படிப்பட்ட உயர்ந்த நிலையினை ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அனுகிரகத்தினால் எமன் கிடைக்கப்பெற்றதனை அறிந்த ஸ்ரீ சாயா தேவியின் இளைய மகனாகிய ச்ருத கர்மா தானும் பூலோகம் வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தாவை காலையும் மாலையும் பூஜை செய்து வழிபட்டான். பின்னர் கடும் தவம் மேற்கொண்டு சகல வரங்ளையும் அருளும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவினையே தியானம் செய்து வந்தான்.
அவனது அன்பு கலந்த பக்தியினால் மகிழ்ந்த ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றி அவனுக்கு சூரிய மண்டலத்தில் கிரக நிலையினை அருளினார். அவன் மெதுவாக நகர்வதால் (அவன் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும்) சனீஸ்வரன் என்ற பெயரும் சூட்டினார். வாரத்தின் கடைசி நாளையும் அவன் பெயரில் அழைக்க அருள்பாலித்தருளினார்.
மேலும் அந்த சனிக்கிழமையினையே தனக்கு உகந்த நாளாக ஏற்று ஐயப்பன் அருள் செய்தார். இதற்கு பிரிதி உபகாரமாக சனிபகவானும் யார் ஒருவர் கருப்பு நிற உடை உடுத்தி சனிக்கிழமை தோரும் விரதம் இருந்து சபரிமலை வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா சொரூபமாகிய ஐயப்பனை அன்புடன் வேண்டுகிறார்களோ அவர்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்க மாட்டேன் என கூறினார்.
எனவே தான் சபரிமலைக்கு கருப்பு நிற உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு 7 1/2 சனியின் தாக்கம் கடுமையாக இருப்பதில்லை.
இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடுதல் மிகச் சிறப்பானது.
108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாக விளங்குகிறது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோவிலை எடுத்துக் கட்டினார் என்று வரலாறு கூறுகிறது.
கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் இன்றும் பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து அருள்பாலிக்கிறார். இத்தல ஸ்தல சயனப் பெருமாள் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட குருவருளும், திருவருளும் கிட்டும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
கலிகாலத்தில் நமக்கு வரும் கேடுகளைக் களைய இந்தப் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது.
லட்சுமி நரசிம்மரின் சன்னிதியின் எதிரில் உள்ள சுவரில் லட்சுமி நரசிம்மரின் ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி நட்சத்திர தினங்கள், பிரதோஷ காலங்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்திசாயும் மாலை வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து வழிபட்டால் எத்தகைய கடன் தொல்லையானாலும் உடனே அகன்று விடும். வறுமை அகலும்.
மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராடினால் ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத்தலமாக இக்கோவில் உள்ளது.
இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடுதல் மிகச் சிறப்பானது.
கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் இன்றும் பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து அருள்பாலிக்கிறார். இத்தல ஸ்தல சயனப் பெருமாள் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட குருவருளும், திருவருளும் கிட்டும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
கலிகாலத்தில் நமக்கு வரும் கேடுகளைக் களைய இந்தப் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது.
லட்சுமி நரசிம்மரின் சன்னிதியின் எதிரில் உள்ள சுவரில் லட்சுமி நரசிம்மரின் ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி நட்சத்திர தினங்கள், பிரதோஷ காலங்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்திசாயும் மாலை வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து வழிபட்டால் எத்தகைய கடன் தொல்லையானாலும் உடனே அகன்று விடும். வறுமை அகலும்.
மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராடினால் ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத்தலமாக இக்கோவில் உள்ளது.
இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடுதல் மிகச் சிறப்பானது.
சிம்மக்குளம், சூரிய தீர்த்தம் (பாலாறு) மற்றும் பிரம்மக்குளம் தீர்த்தம் ஆகியவற்றில் பெண்கள் நீராடி குழந்தை வரம் வேண்டி கோவிலில் இறைவன் முன்படுத்து உறங்கி ஆண்டு தோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கடைஞாயிறு திருவிழா வருகிற 12-ந் நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிம்ம குளம் திறப்பு 11-ந் தேதி நள்ளிரவு திறக்கப்படுகிறது.
சிம்மக்குளம், சூரிய தீர்த்தம் (பாலாறு) மற்றும் பிரம்மக்குளம் தீர்த்தம் ஆகியவற்றில் பெண்கள் நீராடி குழந்தை வரம் வேண்டி கோவிலில் இறைவன் முன்படுத்து உறங்கி ஆண்டு தோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.
இந்த திருவிழாவையொட்டி அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் 11-ந் தேதி முதல் சிம்மக்குளம் உள்ளிட்ட நீர்நிலை தீர்த்தங்களில் நீராட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
இந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் பரவல் உள்ளதாலும், இந்த பெருந்தொற்று நோயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 2 நாட்கள் திருவிழாவில் பொதுமக்கள் பொது தரிசனம் செய்ய இணையவழி மூலம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
பொது தரிசனம் செய்ய விருப்பமுள்ளவர்கள் www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.
மேற்படி தரிசனமானது 1 மணி நேரத்திற்கு 180 பக்தர்கள் வீதம் ஒரு நாளைக்கு 3000 பக்தர்கள் 6.30 முதல் இரவு 8 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். வயதானவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி ஒரு தவணையாவது செலுத்தாதவர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய், பழம் மற்றும் பூக்கள் ஆகியவற்றை எடுத்துவர அனுமதி இல்லை. கோவிலில் தீர்த்தம், விபூதி மற்றும் குங்குமம் போன்ற எவ்வித பிரசாதங்களும் வழங்கப்படமாட்டாது.
இந்து சமய அறநிலையத் துறை மூலம் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நோய் பரவல் தொற்று தடுப்பதற்கான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கடைஞாயிறு திருவிழா வருகிற 12-ந் நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிம்ம குளம் திறப்பு 11-ந் தேதி நள்ளிரவு திறக்கப்படுகிறது.
சிம்மக்குளம், சூரிய தீர்த்தம் (பாலாறு) மற்றும் பிரம்மக்குளம் தீர்த்தம் ஆகியவற்றில் பெண்கள் நீராடி குழந்தை வரம் வேண்டி கோவிலில் இறைவன் முன்படுத்து உறங்கி ஆண்டு தோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.
இந்த திருவிழாவையொட்டி அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் 11-ந் தேதி முதல் சிம்மக்குளம் உள்ளிட்ட நீர்நிலை தீர்த்தங்களில் நீராட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
இந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் பரவல் உள்ளதாலும், இந்த பெருந்தொற்று நோயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 2 நாட்கள் திருவிழாவில் பொதுமக்கள் பொது தரிசனம் செய்ய இணையவழி மூலம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
பொது தரிசனம் செய்ய விருப்பமுள்ளவர்கள் www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.
மேற்படி தரிசனமானது 1 மணி நேரத்திற்கு 180 பக்தர்கள் வீதம் ஒரு நாளைக்கு 3000 பக்தர்கள் 6.30 முதல் இரவு 8 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். வயதானவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி ஒரு தவணையாவது செலுத்தாதவர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய், பழம் மற்றும் பூக்கள் ஆகியவற்றை எடுத்துவர அனுமதி இல்லை. கோவிலில் தீர்த்தம், விபூதி மற்றும் குங்குமம் போன்ற எவ்வித பிரசாதங்களும் வழங்கப்படமாட்டாது.
இந்து சமய அறநிலையத் துறை மூலம் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நோய் பரவல் தொற்று தடுப்பதற்கான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கேரளத்திலுள்ள முக்கியமான ஐந்து ஐயப்பன் கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. இங்குள்ள ஐயப்பன் ’கிரஹஸ்தா ஆஸ்ரம’ வாழ்க்கையை மேற்கொள்வதாகக் கருதப்படுகின்றது.
செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள்.
கேரளத்திலுள்ள முக்கியமான ஐந்து ஐயப்பன் கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. இங்குள்ள ஐயப்பன் ’கிரஹஸ்தா ஆஸ்ரம’ வாழ்க்கையை மேற்கொள்வதாகக் கருதப்படுகின்றது. இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் ஐயப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பன் கல்யாண சாஸ்தா என்று அழைக்கிறார்கள். இதனால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.
விஷப் பாம்பு தீண்டியவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் குணமடைவர் என்று கருதப்படுகின்றது. இது இந்தக் கோவிலின் முக்கியத்துவத்திற்கான ஒரு காரணமாகும். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஐயப்பனின் இடது கையில் எப்போதும் சந்தனமும் தீர்த்தமும் (புனித நீர்) தாங்கியிருக்கக் காணலாம். பாம்பு கடித்தவர்களின் விஷத்தைப் போக்க இவ்விரண்டும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
கேரளத்திலுள்ள முக்கியமான ஐந்து ஐயப்பன் கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. இங்குள்ள ஐயப்பன் ’கிரஹஸ்தா ஆஸ்ரம’ வாழ்க்கையை மேற்கொள்வதாகக் கருதப்படுகின்றது. இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் ஐயப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பன் கல்யாண சாஸ்தா என்று அழைக்கிறார்கள். இதனால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.
விஷப் பாம்பு தீண்டியவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் குணமடைவர் என்று கருதப்படுகின்றது. இது இந்தக் கோவிலின் முக்கியத்துவத்திற்கான ஒரு காரணமாகும். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஐயப்பனின் இடது கையில் எப்போதும் சந்தனமும் தீர்த்தமும் (புனித நீர்) தாங்கியிருக்கக் காணலாம். பாம்பு கடித்தவர்களின் விஷத்தைப் போக்க இவ்விரண்டும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.






