search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    பாவகர்த்தரி தோஷமும் பரிகாரமும்...
    X
    பாவகர்த்தரி தோஷமும் பரிகாரமும்...

    பாவகர்த்தரி தோஷமும் பரிகாரமும்...

    செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
    செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கட்டான சூழலில் தனியாக வாழத் துணிந்து விடுகிறார்கள் என்பதால் தற்காலத்தில் ஆணின் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து திருமணம் நடத்த வேண்டிய நிலைக்கு சமுதாயம் உந்தப்பட்டு விட்டது. அத்துடன் செவ்வாய் தோஷம் அனைவருக்கும் பாதிப்பை தராது.

    பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுப ஸ்தானத்தில் வலிமையுடன் இருந்தால் புகுந்த வீட்டில் தனக்கென்று ஒரு தனி ராஜாங்கம் அமைத்து குடும்ப உறுப்பினர்களை தன் வசப்படுத்தி முடிசூடா ராணியாக வாழ்நாள் முழுவதும் திகழ்கிறார்கள். செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

    காரக கிரகத்திற்கு இருபுறமும் அசுப கிரகம் நின்று காரக கிரகத்தின் இயக்கத்தை மட்டுப்படுத்தும். உதாரணமாக செவ்வாய்க்கு ஒருபுறம் கேது மறுபுறம் சனி இருந்தால் செவ்வாயின் இயங்கும் தன்மை சனி மற்றும் கேதுவால் தடைபடுத்தப்படும். முதிர்கன்னியானப் பிறகு திருமணம் அல்லது திருமணமே நடக்காத பெண்கள் ஜாதகத்தில் இது போன்ற அமைப்பை காணலாம்.

    உண்மையில் செவ்வாய் தோஷம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. பல திருமண புரோக்கர்கள் 10 ரூபாய் திருமணப் பொருத்தம் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு மக்களை படுத்தும்பாடு அளப்பரியது. தவறான செவவாய் தோஷ கணிப்பால் பலரின் வாழ்க்கை கேள்வியாகவே இருக்கிறது. ஒரு ஜாதகத்தை நவகிரகங்களுமே இயக்கும். செவ்வாய் தசை, புத்தி அந்தர காலங்களில் பாதிப்பு அதிகமாகவும் மற்ற காலங்களில் மிதமாகவும் இருக்கும். எனவே செவ்வாய் தோஷம் கண்டு அஞ்சத் தேவை இல்லை.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    Next Story
    ×