என் மலர்
ஆன்மிகம்
- போரில் முருகன், சூரனை வதம்செய்து, பிறகு கருணையால் அவனை ஆட்கொண்டார்.
- இதனால் சூரனின் ஒரு பகுதி சேவல்கொடியாகவும், மற்றொரு பகுதி மயில்வாகனமாகவும் ஆயிற்று.
சுப்பிரமணியப் பெருமான் சூரனுடன் போர்புரிந்த சமயத்தில், இந்திரன் மயிலாக உருமாறிப் பெருமானைத் தாங்கினான்.
இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் கோவில் விழாக்காலத்தில் மயில்வாகனத்தில் பெருமானை எழுந்தருளச் செய்வார்கள்.
அதில் மயிலின் தலைபாகம் முருகனது இடப்பக்கத்தை நோக்கி இருக்குமாறு அமைப்பார்கள்.
போரில் முருகன், சூரனை வதம்செய்து, பிறகு கருணையால் அவனை ஆட்கொண்டார்.
இதனால் சூரனின் ஒரு பகுதி சேவல்கொடியாகவும், மற்றொரு பகுதி மயில்வாகனமாகவும் ஆயிற்று.
இதனை உணர்த்தும்வண்ணம், உற்சவ காலத்தில் சூரசம்ஹாரம் முடிந்தபின், முருகன் மயில்வாகனத்தில் எழுந்தருளி உலா வருவார்.
அப்போது, மயிலின் தலை, முருகனது வலப்பாகத்தை நோக்கி இருக்குமாறு அமைப்பார்கள்.
அடுத்து மிகவும் நேர்த்தியாக வடிக்கப்பெற்ற சிற்பங்களுடன் கூடிய பதினாறுகால் மண்டபம் காட்சி தருகின்றது.
- அடுத்து கோவிலினுள் நுழைந்தவுடன் காட்சியளிப்பது தங்கம்போல பளபளவென மின்னும் கொடிமரமாகு
- கோபுர தரிசனம், இறைவனின் பாத தரிசனமாகும். கோபுரம் ஸ்தூல லிங்கம் எனப்படும்.
கோபுர தரிசனம், இறைவனின் பாத தரிசனமாகும். கோபுரம் ஸ்தூல லிங்கம் எனப்படும்.
ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்பிரமணியர் கோவிலில் ஓங்கி உயர்ந்த ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் காட்சியளிக்கின்றது.
அதில் முழுவதும் முருகனின் புராணங்களை விளக்கும் பல்வேறு கதைச்சிற்பங்கள், உயிரோட்டத்துடன் நிறைந்து, காண்போரைக் கவருகின்றது.
தட்சனுக்குத் தாட்சாயணி மகளாகப் பிறந்த வரலாறு, முருகனின் அவதாரம், நலவீரர்கள் தோற்றம், சூரானாதியர் வேள்விசெய்தல் மற்றும் வரம்பெறுதல், வீரவாகு தூது மற்றும் போர், தேவர்கள் முறையீடு, தெற்குப்புறத்தில் தட்சணாமூர்த்தி, மேற்குப்புறத்தில் தாருக சிங்கமுக சம்ஹாரம், வடக்குத்திசையில் சூரசம்ஹாரம், மாமரம், மயில் மீது அமர்ந்து சேவல்கொடியேந்திய பெருமானின் அற்புத தரிசகம் முதலான சிற்பங்கள் உயிரோட்டத்துடன் அமைந்துள்ளதைக் காணலாம்.
அடுத்து கோவிலினுள் நுழைந்தவுடன் காட்சியளிப்பது தங்கம்போல பளபளவென மின்னும் கொடிமரமாகும்.
இது சூட்சும லிங்கம் என வழங்கப்படுகிறது. அதனையடுத்து பலிபீடம் உள்ளது.
அதற்கடுத்து மயூரதேவரின் சன்னதி உள்ளது.
உயிர்கள் ஆணவமலத்தை விட்டொழித்தால் இறைவனின் திருவடியை அடையலாம் என்பதை அது உணர்த்துகின்றது.
- ஒவ்வொரு தடவையும் 2 மாலை சாத்தி அர்ச்சனை செய்தல்வேண்டும்.
- இந்த பரிகார பூஜை காரணமாக 6 வாரத்துக்குள் திருமணம் கைகூடி விடும் என்கிறார்கள்.
திருமணம் கை கூடும்!
திருமணம் ஆகாதவர்கள் ஆண்டார் குப்பம் ஸ்ரீபால சுப்பிரமணியரை தொடர்ச்சியாக 6 வாரம் வணங்கினால் பலன் கிடைக்கும்.
ஒவ்வொரு தடவையும் 2 மாலை சாத்தி அர்ச்சனை செய்தல்வேண்டும்.
இந்த பரிகார பூஜை காரணமாக 6 வாரத்துக்குள் திருமணம் கைகூடி விடும் என்கிறார்கள்.
குல தெய்வம்
ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமியை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் குல தெய்வமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் நெல்லூர், சத்யவேடு, சூலூர் பேட்டை, குண்டூர், நாயுடு பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- எனவே இந்த ஊர் சுப்பிரமணியபுரம் (புரம் ஊர்) என்று வழங்கப்படலாயிற்று.
- பிற்காலத்தில் அது ஆண்டவர் குப்பம் என்று மாறியது. தற்போது ஆண்டார்குப்பம் என்று வழங்கப்படுகிறது.
சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சுமார் முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் தச்சூர் கூட்டுச் சாலையில் இருந்து, இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஆண்டார் குப்பம் எனும் ஊர் பச்சை பசேல் வயல்களுடன் அமைந்துள்ளது.
திருவள்ளூரிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலும், பெரியபாளையத்திலிருந்து சுமார் இருப்பது கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் உள்ளது.
ரெயிலில் சென்றால், சென்னையிலிருந்து பொன்னேரிக்குச் சென்று அங்கிருந்து பஸ் மூலம், தச்சூர் செல்லும் வழியாகச்சென்று ஆண்டார்குப்பத்தை அடையலாம்.
புராண காலத்தில் பாலசுப்பிரமணிய கடவுள், இத்தலத்தில் உரோம முனிவருக்கும், சம்வர்த்தனருக்கும் காட்சியளித்தார்.
எனவே இந்த ஊர் சுப்பிரமணியபுரம் (புரம் ஊர்) என்று வழங்கப்படலாயிற்று.
வணங்கும் அடியார்களை ஆண்டு கொண்டு அருள்புரியும் ஆண்டவன் கோவில் கொண்டுள்ள தலம் என்பதால் ஆண்டிகள் குப்பம் (குப்பம் ஊர்) என்று அழைக்கப்பட்டது.
பிற்காலத்தில் அது ஆண்டவர் குப்பம் என்று மாறியது. தற்போது ஆண்டார்குப்பம் என்று வழங்கப்படுகிறது.
- பிறகு பிரம்மனை முருகன் சிறையில் அடைந்தார். இந்த நிகழ்வு நடந்த தலமாக ஆண்டார்குப்பம் கருதப்படுகிறது.
- இந்த தலத்தில் உள்ள மூலவர் பாலசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார்.
சென்னை செங்குன்றம் அருகில் உள்ள ஆண்டார் குப்பம் முருகன் தலமும் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் பெருமைகளைக் கொண்டது.
படைப்புத் தொழில் செய்து வரும் பிரம்மனின் ஆணவத்தை அடக்க, பிரணவ மந்திரம் சொல்ல சொல்லி அவர் தலையில் முருகன் கொட்டினார்.
பிறகு பிரம்மனை முருகன் சிறையில் அடைந்தார். இந்த நிகழ்வு நடந்த தலமாக ஆண்டார்குப்பம் கருதப்படுகிறது.
இந்த தலத்தில் உள்ள மூலவர் பாலசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார்.
இவர் தன் தொடை மீது இரு கைகளையும் வைத்தப்படி அதிகாரத் தோரணையுடன் பிரம்மனை கேள்வி கேட்பது போல சிலை அமைப்பு உள்ளது.
இந்த மூலவர், சுயம்புவாக தோன்றிய மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
முருகன் அதிகார தோரணையுடன் இருப்பது, தமிழ்நாட்டில் இந்த தலத்தில் மட்டுமே.
அந்த வகையில் ஆண்டார்குப்பம் தலம் ஒரு அபூர்வ தலம்.
இங்கு வழிபாடு மற்றும் பரிகார பூஜைகள் செய்வது நிறைந்த பலன்களைத் தரும்.
திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுவார்கள்.
அன்று காலை சுமார் 5 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்துச் செல்வார்கள்.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படும்.
தொடர்ந்து காலை 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.
இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்திலும், இரவு, 7.30 மணிக்கு தங்கத்தேரிலும் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
- இன்று சர்வ அமாவாசை.
- தக்கோலம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, வைகாசி 24 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை இரவு 6.40 மணி வரை. பிறகு பிரதமை.
நட்சத்திரம்: ரோகிணி இரவு 9 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சர்வ அமாவாசை. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளூர் தலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல். ஆலங்குடி ஸ்ரீகுருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குரு வார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு
இன்றைய ராசிபலன்
மேஷம்-திடம்
ரிஷபம்-நிறைவு
மிதுனம்-ஆர்வம்
கடகம்- ஆக்கம்
சிம்மம்-சோர்வு
கன்னி-உயர்வு
துலாம்- இன்பம்
விருச்சிகம்-வாழ்வு
தனுசு- பரிசு
மகரம்-அன்பு
கும்பம்-ஆதரவு
மீனம்-பக்தி
- தேவர்கள் அனைவரும் இனித் தங்கள் கவலைத் தீர்ந்தது என்று மகிழ்ந்திருந்தனர்.
- அதன் பின்பு முருகப் பெருமான் அவதரிக்கும் நேரத்தை எதிர்நோக்கி இருந்தனர்.
இத்திருக்கோவில் சிவகாஞ்சிப் பகுதியில் ஏகம்பரநாதர் கோவிலுக்குத் தெற்கிலும், தான் தோன்றீசுவரர் கோவிலுக்கு வடக்கிலும், பாண்டவதூதப் பெருமாள் கோவிலுக்குத் தென் கிழக்கிலும், ஏகாம்பரநாதர் சன்னதி வீதிக்கு மேற்கிலும் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் சோழர் காலக் கட்டட அமைப்பு கொண்டுள்ளது.
தூங்கானை மாடம் என்று கூறப்படும் கஜப்பிரஷ்ட வடிவில் அமைந்துள்ளது.
பெரிய மதில் சுவர்களைக் கொண்டும், அழகிய நந்தவனத்தைக் கொண்டும், அமைதியான சூழ்நிலையில் குளு குளு மர நிழலில் அமைந்துள்ள திருக்கோவில் ஆகும்.
முன்னொரு காலத்தில் தாரகன் என்ற அசுரன் ஒருவன் இருந்தான்.
அவன் சிவபக்தன். சிவனை வேண்டிக் கணக்கற்ற வரங்களைப் பெற்றான்.
அதினினும் மேலாக, சிவபெருமானுக்கு அவதரிக்கும் மகனால் தான், தனக்கு மரணம் நேர வேண்டும் என்றும் ஒருவரத்தைப் பெற்றான்.
இதனால் அவன் தேவர்களை கொடுமைப்படுத்தினான்.
இதை தாங்காத தேவர்கள் பிரமனிடம் முறையிட்டனர்.
தட்சனின் யாகத்தில் உடலைத் துறந்த தாட்சாயணி பர்வத ராஜனுக்கு மகளாகப் பிறந்து, வளர்ந்து சிவபெருமானை அடைய மவுனத் தவம் இருந்து வந்தாள்.
சிவபெருமான், உமையைப் பிரிந்த காரணத்தினால் மன அமைதி இன்றி இமயமலைச் சாரலில் இருந்தார்.
அச்சமயம் சனகாதி முனிவர்கள் ஈசனைச் சந்தித்து யோகத்தை உபதேசம் செய்ய வேண்டும் என்று வேண்ட, சிவபெருமான் அவர்களுக்கு உபதேசிக்கும் முகமாக மோனத்தில் அமர்ந்தார்.
இதை அறிந்த பிரமன், தேவர்களின் குறை தீர வேண்டுமானால் உமாபதியும்உமை அன்னையும் திருமணம் செய்து சேர்ந்தால் தான் மகன் பிறப்பான் என்று அறிந்து சிவனின் தவத்தைக் கலைக்க முயற்சிக்கிறார்.
மன்மதனை அனுப்பி அவரின் மனதில் காம உணர்ச்சியை உண்டாக்க முயற்சித்தார்.
ஆனால் முடியவில்லை. அம்முயற்சி தோல்வி அடைந்தது.
பின்பு, மன்மதன் சிவபெருமானின் நெற்றிக்கண் திறப்பினால் எறிந்து சாம்பலாக, உடன் மன்மதனின் மனைவி ரதிதேவி சிவபெருமானிடம் சென்று அழுது, புலம்பினாள்.
தேவர்களின் துயரம் தீரவே தன் கணவர் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூற, ஈசன் அவளைத் தேற்றி உன் பார்வைக்கு மட்டும் உன் கணவன் தென்படுவான் என்று கூறி அனுப்பி வைத்தார்.
நிஷ்டை கலைந்ததும், ஈசனுக்கும், உமை அன்னைக்கும் ஆனந்தமாகத் திருமணம் நடைபெற்றது.
தேவர்கள் அனைவரும் இனித் தங்கள் கவலைத் தீர்ந்தது என்று மகிழ்ந்திருந்தனர்.
அதன் பின்பு முருகப் பெருமான் அவதரிக்கும் நேரத்தை எதிர்நோக்கி இருந்தனர்.
ஆனால் அது நடைபெறுவதாகத் தெரியவில்லை. ஆதலால் சிவபெருமானை நேரில் சந்தித்து முறையிட்டனர்.
உடனே சிவபெருமான் 1000 சூரியர் ஒன்று கூடினால் தோன்றும் ஒளியைப் போல் பிரகாசிக்கும் தம்முடைய சக்தியை வெளிப்படுத்தி, பருகுங்கள் என்றார்.
அக்கினி தேவன் அச்சக்தியைப் பெற்று பருகினான்.
பருகியதும் தேவர்கள் அனைவரின் உடலும் கடுமையான வெப்பத்தால் தாக்குற்று தடுமாறினர்.
இதனால் வருத்தம் அடைந்த தேவர்கள் மீண்டும் சிவனிடம் சென்று வேண்ட, அதற்குச் சிவன் தேவர்களை நோக்கி, பூவுலகில் எமக்கு மிகவும் பிடித்த காஞ்சிப்பதியில் முன்னாள் சுரன் என்ற அரக்கன் ஆவியொழிய நாம் ஒரு லிங்கத்தைத் தாபித்து உள்ளோம்.
சுரகரீசர் என்ற பெயரில் விளங்கும் அந்த லிங்கத்தை வழிபட்டால் உங்களைத் தகிக்கச் செய்யும் இந்த வெப்ப நோய் நீங்கிவிடும், பின்பு மேருமலைக்குச் சென்று நாம் அளித்த சக்தியை வெளிப்படுத்துங்கள் உங்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று அருளினார்.
சிவபெருமான் கூறியபடி தேவர்கள் அனைவரும் காஞ்சிப்பதியை அடைந்து சுரகரீச தீர்த்தத்தில் நீராடி, தூய்மையான உள்ளத்தோடு சுரகரீசரை வழிபட்டனர். அந்தக் கணமே அவர்களை வருத்தி வந்த வெப்ப நோய் நீங்கியது.
இத்தலத்து ஈசனை குபேரன் வணங்கியதாக ஒரு செய்தியும் உண்டு. இச்செய்தியை ஒத்திருப்பது போல் மூலவர் அறைக்கு வெளி அறையில் குபேரனின் திருஉருவச் சிலையும், அடுத்த வெளியறையில் அவனுடைய இரண்டு பெரும் நிதியங்களான சங்கநிதி, பதும நிதி என்ற இந்த நிதிகளின் திருவுருவங்களும் இத்திருக்கோவிலுள் உள்ளன.
பவுர்ணமி அன்று இரவு குபேரனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வந்தால் செல்வம் நம்மை வந்து அடையும் என்ற கருத்து நிலவுகிறது.
அதன்படி பக்தர்களும் அபிஷேக ஆராதனைகளைச் செய்கின்றனர்.
ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் இந்த ஆலயத்தை நிர்வகிக்கிறார்கள். கும்பாபிஷேகம் நடந்து 40 ஆண்டுகள் ஆகி விட்டதால் ஆலயம் மெருகு குலைந்துள்ளது.
- இந்த ஆலயத்தின் பல்வேறு பகுதிகளில் அபூர்வமான சிலைகள் உள்ளன.
- அகஸ்தியர் வித்தியாசமான கோலத்தில் இந்த தலத்தில் மட்டுமே இருக்கிறார்.
1. ராமகிரி ஆலயம் ராமர் காலத்துடன் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களிலும் சிற்ப அமைப்புகள் காணப்படுகின்றன.
2. ஆலயத்தின் முன்பகுதியில் மிகப்பெரிய அரசமரம் உள்ளது. பக்தர்களுக்கு நிழல் தரும் வகையிலும், கார்களை நிறுத்துவதற்கும் அந்த பகுதியில் மிகப்பெரிய இடம் அமைந்துள்ளது.
3. இறைவனின் அருவ வழிபாட்டுமுறை சிவலிங்கம், இறைவனின் திருஉருவம் வழிபாட்டு முறை ஸ்ரீகால பைரவ ஸ்வரூபம் எனப்படும்.
4. அஷ்டமி நாட்களில் ராமகிரி ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக உள்ளது. என்றாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.
5. காசியில் இருந்து லிங்கம் எடுத்துக்கொண்டு ராமேஸ்வரத்துக்கு சென்ற ஆஞ்சநேயர் இந்த இடத்தில்தான் லிங்கத்தை நழுவ விட்டார். எனவே இந்த தலம் காசி, ராமேஸ்வரம் ஆகிய இரு தலங்களுக்கும் சமமான தலமாக கருதப்படுகிறது.
6. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் ஆலயத்தின் சில பகுதிகள் சீரமைக்கப்படாமலேயே இருக்கின்றன. இதனால் சப்த மாதர் சன்னதி உள்பட சில இடங்களில் வவ்வால்கள் நிறைந்து உள்ளன.
7. கால பைரவரின் வாகனம் நாய். அதனால்தான் என்னவோ இந்த ஆலயத்தின் வெளிப்பகுதியில் நிறைய நாய்கள் உலா வருவதை காண முடிகிறது. நந்தி தீர்த்தம் அருகிலும், கார் பார்க்கிங் பகுதியிலும் ஏராளமான நாய்கள் அங்கு சுற்றியபடியே இருக்கின்றன.
8. ஆஞ்சநேயர் இந்த தலத்தில் தவற விட்ட லிங்கத்தை எப்படியாவது மீட்டு செல்ல வேண்டும் என்று தனது வாலால் லிங்கத்தை இழுத்தார் என்பது தல வரலாறு ஆகும். மரகதாம்பிகை சன்னதி அருகே இதை பிரதிபலிக்கும் வகையில் அற்புதமான சிற்பம் ஒன்று ஒரு தூணில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
9. ராமகிரி கால பைரவரை 8 வாரம் தொடர்ச்சியாக வந்துதரிசனம் செய்தால் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். முதல் வாரம் எந்த கிழமை வழிபாட்டை தொடங்குகிறார்களோ, அதே கிழமைகளில் 8 வாரமும் வழிபட வேண்டும் என்று விதி வகுத்துள்ளனர்.
10. இந்த தலம் மிகச்சிறந்த பரிகார தலமாகும். திருமணம், குழந்தை பாக்கியம், எதிரிகள் தொல்லை, பித்ரு தோஷம் போன்றவற்றுக்கு இந்த தலத்தில் பரிகாரம் செய்கிறார்கள்.
11. இந்த தலத்தில் திருமணம் நடத்தப்படுகிறது. ஆனால் 15 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.
12. கோவிலுக்குள் செல்போன், கேமரா ஆகியவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. லுங்கி அணிந்து வருபவர்களுக்கும் ஆலயத்துக்குள் அனுமதி இல்லை.
13. இந்த ஆலயத்தின் அனைத்து சன்னதிகளிலும் ஆச்சார விதிமுறை படியே பூஜைகளும், ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.
14. கால பைரவர், வாலீஸ்வரர் ஆகியோருக்கு அர்ச்சனை செய்யும் போது தமிழிலும் அர்ச்சனை செய்கிறார்கள் என்பது குறிப்பித்தக்கது.
15. ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் கண்காணிப்பதற்கு ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதை தனி அறையில் இருந்து கண்காணிக்கிறார்கள்.
16. ஆலயத்தின் சுற்றுச்சுவர்களில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. அனைத்து கல்வெட்டுக்களும் ஆதி தமிழில் உள்ளன. பழமையான தமிழ் மன்னர்கள் ஆட்சி காலத்தில் அந்த கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
17.தீபம், கற்பூரம் போன்றவை ஏற்றுவதற்கு இந்த தலத்தில்தடை விதிக்கப்பட்டுள்ளது. அகல் விளக்கு மட்டுமே ஏற்ற அனுமதிக்கிறார்கள். அதுவும் ஆலயத்துக்கு வெளியில்தான் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
18. ராமகிரி மலையில் இருக்கும் பாலமுருகர் ஆலயம் 1967ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இங்கு ஆடி மாதம் கிருத்திகை விழா மிக கோலாகலமாக நடக்கிறது. சுமார் 1 லட்சம் பக்தர்கள் அந்த சமயத்தில் திரள்வார்கள்.
19. இந்த ஆலயத்தின் பல்வேறு பகுதிகளில் அபூர்வமான சிலைகள் உள்ளன. அகஸ்தியர் வித்தியாசமான கோலத்தில் இந்த தலத்தில் மட்டுமே இருக்கிறார். கஜ முக விநாயகர், வீர பத்திரர் ஆகியோர் அபூர்வமான வடிவமைப்பாக கருதப்படுகிறது.
20.நமது ஜாதகத்தில் அமைந்துள்ள அனைத்து கிரக தோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்லது பைரவர் வழிபாடு.
- ஓம் வடுகூர் நாதனே போற்றி
- ஓம் வடகிழக்கருள்வோனேபோற்றி
ஓம்பைரவனேபோற்றி
ஓம்பயநாசகனேபோற்றி
ஓம்அஷ்டரூபனேபோற்றி
ஓம்அஷ்டமித் தோன்றலேபோற்றி
ஓம்அயன்குருவேபோற்றி
ஓம்அறக்காவலனேபோற்றி
ஓம்அகந்தையழிப்பவனேபோற்றி
ஓம்அடங்காரின் அழிவேபோற்றி
ஓம்அற்புதனேபோற்றி
ஓம்அசிதாங்கபைரவனேபோற்றி
-10
ஓம்ஆனந்த பைரவனேபோற்றி
ஓம்ஆலயக் காவலனேபோற்றி
ஓம்இன்னல் பொடிப்பவனேபோற்றி
ஓம்இடுகாட்டுமிருப்பவனேபோற்றி
ஓம்உக்ரபைரவனேபோற்றி
ஓம்உடுக்கையேந்தியவனேபோற்றி
ஓம்உதிரங்குடித்தவனேபோற்றி
ஓம்உன்மத்த பைரவனேபோற்றி
ஓம்உறங்கையில் காப்பவனேபோற்றி
ஓம்ஊழத்தருள்வோனேபோற்றி
-20
ஓம்எல்லைத்தேவனேபோற்றி
ஓம்எளிதில் இரங்குபவனேபோற்றி
ஓம்கபாலதாரியேபோற்றி
ஓம்கங்காளமூர்த்தியேபோற்றி
ஓம்கர்வபங்கனேபோற்றி
ஓம்கல்பாந்தபைரவனேபோற்றி
ஓம்கதாயுதனேபோற்றி
ஓம்கனல் வீசுங்கண்ணனேபோற்றி
ஓம்கருமேகநிறனேபோற்றி
ஓம்கட்வாங்கதாரியேபோற்றி
-30
ஓம்களவைக்குலைப்போனேபோற்றி
ஓம்கருணாமூர்த்தியேபோற்றி
ஓம்காலபைரவனேபோற்றி
ஓம்காபாலிகர்தேவனேபோற்றி
ஓம்கார்த்திகையில் பிறந்தவனேபோற்றி
ஓம்காளாஷ்டமிநாதனேபோற்றி
ஓம்காசிநாதனேபோற்றி
ஓம்காவல்தெய்வமேபோற்றி
ஓம்கிரோத பைரவனேபோற்றி
ஓம்கொன்றைப்பிரியனேபோற்றி
-40
ஓம்சண்டபைரவனேபோற்றி
ஓம்சட்டை நாதனேபோற்றி
ஓம்சம்ஹார பைரவனேபோற்றி
ஓம்சம்ஹாரகால பைரவனேபோற்றி
ஓம்சிவத்தோன்றலேபோற்றி
ஓம்சிவாலயத்திருப்போனேபோற்றி
ஓம்சிஷகனேபோற்றி
ஓம்சீக்காழித்தேவனேபோற்றி
ஓம்சுடர்ச்சடையனேபோற்றி
ஓம்சுதந்திர பைரவனேபோற்றி
-50
ஓம்சிவ அம்சனேபோற்றி
ஓம்சுவேச்சா பைரவனேபோற்றி
ஓம்சூலதாரியேபோற்றி
ஓம்சூழ்வினையறுப்பவனேபோற்றி
ஓம்செம்மேனியனேபோற்றி
ஓம்ேக்ஷத்ரபாலனேபோற்றி
ஓம்தனிச்சன்னதியுளானேபோற்றி
ஓம்தலங்களின் காவலனேபோற்றி
ஓம்தீதழிப்பவனேபோற்றி
ஓம்துஸ்வப்னநாசகனேபோற்றி
-60
ஓம்தெற்கு நோக்கனேபோற்றி
ஓம்தைரியமளிப்பவனேபோற்றி
ஓம்நவரஸரூபனேபோற்றி
ஓம்நரசிம்மசாந்தனேபோற்றி
ஓம்நள்ளிரவு நாயகனேபோற்றி
ஓம்நரகம் நீக்குபவனேபோற்றி
ஓம்நாய் வாகனனேபோற்றி
ஓம்நாடியருள்வோனேபோற்றி
ஓம்நிமலனேபோற்றி
ஓம்நிர்வாணனேபோற்றி
-70
ஓம்நிறைவளிப்பவனேபோற்றி
ஓம்நின்றருள்வோனேபோற்றி
ஓம்பயங்கர ஆயுதனேபோற்றி
ஓம்பகையழிப்பவனே போற்றி
ஓம்பரசு ஏந்தியவனேபோற்றி
ஓம்பலிபீடத்துறைவோனேபோற்றி
ஓம்பாபக்ஷ்யனேபோற்றி
ஓம்பால பைரவனேபோற்றி
ஓம்பாம்பணியனேபோற்றி
ஓம்பிரளயகாலனேபோற்றி
-80
ஓம்பிரம்மசிரச்சேதனேபோற்றி
ஓம்பூஷண பைரவனேபோற்றி
ஓம்பூதப்ரேத நாதனேபோற்றி
ஓம்பெரியவனேபோற்றி
ஓம்பைராகியர் நாதனேபோற்றி
ஓம்மல நாசகனேபோற்றி
ஓம்மகா பைரவனேபோற்றி
ஓம்மணி ஞாணனேபோற்றி
ஓம்குண்டலனேபோற்றி
ஓம்மகோதரனேபோற்றி
-90
ஓம்மார்த்தாண்ட பைரவனேபோற்றி
ஓம்முக்கண்ணனேபோற்றி
ஓம்முக்தியருள்வோனேபோற்றி
ஓம்முனீஸ்வரனேபோற்றி
ஓம்மூலமூர்த்தியேபோற்றி
ஓம்யமவாதனை நீக்குபவனேபோற்றி
ஓம்யாவர்க்கும் எளியவனேபோற்றி
ஓம்ருத்ரனேபோற்றி
ஓம்ருத்ராக்ஷதாரியேபோற்றி
ஓம்வடுக பைரவனேபோற்றி
-100
ஓம்வடுகூர் நாதனே போற்றி
ஓம்வடகிழக்கருள்வோனேபோற்றி
ஓம்வடைமாலைப்பிரியனேபோற்றி
ஓம்வாரணாசி வேந்தேபோற்றி
ஓம்வாமனர்க்கருளியவனேபோற்றி
ஓம்வீபீஷண பைரவனேபோற்றி
ஓம்வீழாமல் காப்பவனேபோற்றி
ஓம்வேத முடிவேபோற்றி
-108
- 64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம்.
- இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதாரணமான விளக்கு போடலாம்.
தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே.
இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்.
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் வெண் பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.
சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.
திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும், கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ, கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போடக்கூடாது.
64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம்.
இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதாரணமான விளக்கு போடலாம், அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் மட்டும் சாதாரணமான விளக்கு போடலாம்.
- வறுமை நீங்கவும், செல்வச் செழிப்பு ஏற்படவும் கால பைரவரை வழிபடலாம்.
- பாவம் நீங்கியதால் உயிர்கள் உன்னத நிலையை அடைந்து இறைவன் திருவடியை அடைகின்றன.
கால பைரவரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.
திருமணத் தடைகள் விலகும்.
சனிக்கிழமைகளில் வாசனை வீசும் மலர்களால் பைரவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் சனி தோஷங்களும், நவக்கிரகத் தொல்லைகளும் நீங்கும்.
தேய்பிறை அஷ்டமி அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குழந்தைப் பேறு கிட்டும்.
வறுமை நீங்கவும், செல்வச் செழிப்பு ஏற்படவும் கால பைரவரை வழிபடலாம்.
பாவம் நீங்கியதால் உயிர்கள் உன்னத நிலையை அடைந்து இறைவன் திருவடியை அடைகின்றன.
இதற்கு காரணமாக இருக்கும் கால பைரவரை நாமும் அவசியம் வழிபட வேண்டும்.
கால பைரவர் அருள் பெற நமது நாட்டில் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன.






