என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • அபாசமந்த் என்ற சாயி பக்தருக்கு திருமணம் நடை பெற்று இருநாட்கள்தான் முடிந்திருந்தன.
    • தன்னுடைய புது மனைவிக்கு ஒரு புடவையை வாங்கிக் கொண்டு வந்தார் அபாசமந்த்.

    அபாசமந்த் என்ற சாயி பக்தருக்கு திருமணம் நடை பெற்று இருநாட்கள்தான் முடிந்திருந்தன.

    தன்னுடைய புது மனைவிக்கு ஒரு புடவையை வாங்கிக் கொண்டு வந்தார் அபாசமந்த்.

    ''இந்தப் புடவை உனக்கு கிடைத்தது என்றால் அது சாயிபாபாவின் பெரும்கருணையால்தான்'' என்று கூறினார்.

    அந்தப் பெண்மணிக்கு சாயிபாபாவின் மீது நம்பிக்கை கிடையாது.

    ஆகவே, அவள் ''சாயி பாபாவுக்கும், புடவைக்கும் என்ன உறவு? கடமையை செய்வது நீங்கள். பணம் பெறுவதும் நீங்கள்.

    உங்கள் உழைப்பு பெற்ற ஊதியத்தில் பெற்றது இந்த புடவை, இதில் பாபா ஏன் வந்தார்?'' என்று அகந்தையாக பேசினாள்.

    அபாசமந்த் தன்னுடைய சாயி அனுபவங்களை எடுத்துரைத்தார்.

    தன்னுடைய புருஷனுக்கு பகல் உணவு பரிமாறி விட்டு புடவையைப் பிரித்தாள்.

    வெளியே பார்வைக்கு மட்டும் அழகாகக் காட்சி அளித்த அந்தப் புடவை உள்ளே தீயினால் பொசுங்கிய துண்டுகளாக கிடந்தது.

    திகைத்தாள் அந்தப் பெண்மணி.

    தனது அகந்தைக்காகவும், சாயிபாபாவின் மீது நம்பிக்கை இன்மையக்காகவும் உள்ளம் வேதனை அடைந்தாள்.

    ''நாளை இந்த நேரத்திற்குள் இதே போன்ற புடவை கிடைத்தால் எனது தவற்றை உணர்ந்து கொள்கிறேன், என்னை மன்னித்து விடுங்கள்'' என்றாள்.

    மறுநாள் காலை சமந்த்திற்கு பணம் தர வேண்டிய நண்பர் ஒருவர் பணத்திற்குப் பதிலாக ஒரு புடவையுடன் வந்தார்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு பாக்கிக்குப் பதிலாகப் புடவையைக் கொடுத்தமைக்கு மன்னிப்பு கேட்டார்.

    அபாசமந்த் மனைவி வியந்து போனாள்.

    முதல் புடவையைப் போலவே இருந்தது, இந்தப் புடவை.

    புடவையின் மூலம் எப்படியோ சாயிபாபாவுக்கு ஒரு புதிய பக்தை கிடைத்துவிட்டாள்.

    ஒவ்வொரு அசைவும் அவருடைய கருணையால்தான் என்பதை உணர்ந்தால் போதும். அவருடைய கருணை நிச்சயம் நமக்கு கிடைத்துவிடும்.

    • பிறகு நாளுக்கு நாள் அதிக பைசாவாக உயர்ந்தது. பிறகு ரூபாய் கணக்கில் பெற ஆரம்பித்தார்.
    • இவ்வாறு தாம் பெறும் காணிக்கையை அவ்வப்பொழுதே மற்றவர்க்கு தந்துவிட்டு மீண்டும் காசின்றியே இருப்பது சாயிபாபாவின் வழக்கம்.

    சீரடி சாயிபாபா வாழ்ந்த காலம் 1840 முதல் 1918 வரையில் என்று கூறுவதுண்டு.

    இன்று ஒரு குறிப்பிட்ட நிலை வரையில் பணத்திற்கு மதிப்பு மிகவும் குறைவு.

    ஆனால், அந்தக் காலத்தில் அரையணா, ஓரணா காசுகள் இருந்து உள்ளது.

    ஒரு மனிதனுடைய சம்பளம் 15 ரூபாய் முதல் பதவிக்கு தக்கவாறு சம்பளம் இருந்துள்ளது.

    முதல் முதலில் சாயிபாபா யாரிடமும் காணிக்கையை பெறாமல் இருந்தார்.

    ஒரு முறை காசிநாத் என்ற பக்தர் பணக்கொடை கொடுக்க, பாபா அதை ஏற்க மறுத்தார்.

    இப்படி அவர் மறுத்ததைப் பார்த்த காசிநாத் கண்ணீர் வடித்துத் துயருற்றார். அந்தக் காட்சியை கண்டு பொறுக்காத சாயிபாபா தட்சிணை பெற ஆரம்பித்தார்.

    முதலில் இரண்டு பைசா மட்டுமே ஏற்றார்.

    பிறகு நாளுக்கு நாள் அதிக பைசாவாக உயர்ந்தது. பிறகு ரூபாய் கணக்கில் பெற ஆரம்பித்தார்.

    இவ்வாறு தாம் பெறும் காணிக்கையை அவ்வப்பொழுதே மற்றவர்க்கு தந்துவிட்டு மீண்டும் காசின்றியே இருப்பது சாயிபாபாவின் வழக்கம்.

    ஒரு நாள் சீரடிபாபா, தபோல்கரிடம் ''நீ, ஷாமாவிடம் சென்று பதினைந்து ரூபாய் தட்சிணையாகப் பெற்றுக் கொண்டு வா'' என்று கூறி அனுப்பினார்.

    தபோல்கர், ஷாமா வின் இல்லத்திற்குச் சென்று சாயிபாபா தம்மை அனுப்பியதன் காரணத்தைக் கூறினார்.

    ஷாமாவோ பரம ஏழை. அதனால் அவர் ''நான் பரம ஏழை என்பது சாயிராமுக்கு தெரியும், என்னால் பதினைந்து ரூபாயை எவ்வாறு தர முடியும்? பதினைந்து ரூபாய்க்குப் பதிலாக பதினைந்து நமஸ்காரங்களைத் தருகிறேன் என்று அவரிடம் கூறுக'' என்று கூறி அனுப்பினார்.

    தபோல்கர் சாயிபாபாவிடம் சென்ற பொழுது சாயிபாபா ''ஷாமா காணிக்கையாக எதைக் கொடுத் தாலும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறி அவரை அழைத்து வா'' என்று கூறினார்.

    தபோல்கர் ஷாமாவிடம் சென்று ''சாயி நீங்கள் எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளுவதாக கூறி உங்களை அழைத்து வரும்படி கூறினார்'' என்று கூற, தபோல்கருடன் ஷாமா மசூதிக்கு வந்து பலரும் கூடியிருந்த நேரத்தில் பதினைந்து முறை நமஸ்காரம் செய்தார்.

    ஷாமா பதினைந்து நமஸ்காரங்களை அன்புடன் காணிக்கையாக சாயிபாபாவுக்கு சமர்ப்பணம் செய்ய, அவரும் அன்புடன் அதை ஏற்றுக் கொண்டார்.

    • தட்சணை கொடுப்பவர்கள் யார்? எதிர்காலத்தில் நல்ல அறுவடை செய்யப் போகிறவர்கள்.
    • என்னுடைய பக்கிரிக்குப் (குருவுக்கு) பலர் கடன் பட்டிருக்கிறார்கள்.

    பக்தர்களிடம் பாபா தட்சணை வாங்குவது ஒரு காலக்கட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    அதற்கு பாபா பம்பாய் பக்தர்களிடம் விளக்கம் அளித்தார்.

    "நான் யாரிடமாவது ஒரு ரூபாய் தட்சணை வாங்குகிறேன் என்றால் அவருக்குப் பத்து மடங்காக நான் திருப்பிக் கொடுக்கக் கடமைப்பட்டவன் என்று பொருள்.

    நான் எதனையும் இலவசமாகப் பெறுவதில்லை. அதற்குரிய விலையைக் கொடுத்து விடுகிறேன்.

    நான் எல்லோரிடமும் தட்சணை வாங்குவதில்லை. என்னை ஆளும் பக்கிரி தான் (குரு) யாரிடம் தட்சணை பெற வேண்டும் என்று எனக்கு கட்டளையிடுகிறார். அவர்களிடம் மட்டுமே தட்சணை பெறுகிறேன்.

    தட்சணை கொடுப்பவர்கள் யார்? எதிர்காலத்தில் நல்ல அறுவடை செய்யப் போகிறவர்கள்.

    என்னுடைய பக்கிரிக்குப் (குருவுக்கு) பலர் கடன் பட்டிருக்கிறார்கள்.

    அவர்கள் யார் என்று எனக்கு அடையாளம் தெரியும்.

    அவர்கள் என்னைத் தேடிவரும் போது அவர்களிடமிருந்து எனது பக்கிரியின் கடனை தட்சணையாக வசூலிக்கிறேன்.

    நானும் ஏற்கனவே கொடுத்ததை தட்சணையாகக் கேட்கிறேன்.

    அதனால் தான் தருகிறார்கள். அந்த தட்சணையை சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்துவதைப் பாவமாகக் கருதுகிறேன். அந்த தட்சணை தர்மத்தின் வழி செல்ல வேண்டும்.

    இவ்வாறு தட்சணையின் மகத்துவத்தை பாபா பாமனுக்கும் புரியும் வண்ணம் விளக்கினார்.

    அதன் பின்னர் விதண்டாவாதக்காரர்கள் வாயடைத்துப் போயினர்.

    • மஹல்சாபதி பாபாவின் சீடராவார்.
    • தாஸ்கணு மகாராஜ் என்பவரும் குறிப்பிடத்தக்க சீடராவார்.

    பாபாவின் வாழ்க்கையில், பாபாவின் தொடர்பில் இருந்த, அவருடன் ஒன்றிவிட்ட முக்கியமான சீடர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்

    1. மஹல்சாபதி,

    2. தாஸ்கணு மகாராஜ்,

    3. நாராயண கோவிந்த சந்தோர்க்கர்,

    4. ஹரிசீதாராம் தீட்சித்,

    5. ஸ்ரீ உபசானி பாபா,

    6. கபர்தே,

    7. அன்னாசாகேப் தபோல்கர்

    ஆகியோராவார்கள்.

    • பாபா பயன்படுத்திய எல்லாப் பொருட்களுமே முக்கியத்துவம் பெற்றுவிட்டன.
    • அவைகளை ஆண்டவனின் காணிக்கைகளாக மக்கள் கருதுகின்றனர்.

    பாபா பயன்படுத்திய எல்லாப் பொருட்களுமே முக்கியத்துவம் பெற்றுவிட்டன.

    அவைகளை ஆண்டவனின் காணிக்கைகளாக மக்கள் கருதுகின்றனர்.

    தமது வயலில் விளைந்த கோதுமையில் ஒரு மூட்டையை பாலாஜி படேல் நிவாஸ்கர் என்ற பக்தர் பாபாவிற்கு தருவார்.

    அதன் நினைவாக ஆண்டுதோறும் புதிதாக ஒரு மூட்டை கோதுமை வாங்குகிறார்கள்.

    அதனைக்கண்ணாடி பீரோவில் வைக்கிறார்கள்.

    கோலம்பா என்று ஒரு மண் பானை பாபா பிச்சை எடுத்து வந்த உணவை அதில்தான் போட்டு வைத்தார்.

    அட்சயபாத்திரமாக விளங்கிய அந்த மண்பானையும் சீரடியில் இப்போதும் இருக்கிறது.

    • ஆகவே பாபாவை வழிபட்டால் எல்லாத் தெய்வங்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
    • எல்லா சமயங்களையும் ஏற்றுக் கொண்ட பலன் கிடைக்கும். மத, இன, மொழி வேறுபாடுகள் நீங்கும்.

    சர்வ சக்தி படைத்த பாபாவின் போதனைகள் மட்டுமே காலத்தை வென்ற இந்த உலக மகா சக்தியான அன்பு உணர்வினை நமக்கு என்றென்றும் ஊட்ட வல்லவையாகும்.

    ராமராக, கிருஷ்னராக, புத்தராக, ஏசுவாக, அல்லாவாக இப்படி பல்வேறு அவதாரங்களாக பகவான் இருக்கிறார் என்பது நமது அடிப்படை நம்பிக்கை.

    இந்தப்பல்வேறு வடிவங்களின் மொத்த உருவமே பாபா.

    ஆகவே பாபாவை வழிபட்டால் எல்லாத் தெய்வங்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

    எல்லா சமயங்களையும் ஏற்றுக் கொண்ட பலன் கிடைக்கும். மத, இன, மொழி வேறுபாடுகள் நீங்கும்.

    பாபா ஒருவரே அனைவரின் பிரார்த்தனைகளையும் தங்குதடையின்றி நிறைவேற்றி வைக்கிறார்.

    பக்தர்களின் பாவங்களைப் போக்கி நன்னெறிப்படுத்துகிறார்.

    மனித உள்ளங்களில் ஏற்படும் இவ்வுலக வாழ்க்கை ஆசைகளான செல்வச்செழிப்பு, நோய் நீக்கம், வேலை வாய்ப்பு, குழந்தை நலம் போன்ற மனித வாழ்வின் அன்றாடத்தேவைகளை அருள்பாலித்து வழங்கி வருகிறார்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    • சிவன் கோவில்களில் காலை சோமவார அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-31 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திரயோதசி நண்பகல் 1.30 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: அவிட்டம் பிற்பகல் 3.52 மணி வரை பிறகு சதயம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் தீர்த்தம், விருஷபாருட தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை சமேத ஸ்ரீ மகாலிங்கசுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீசுவரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அரளாகேசியம்மன் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சோமவார அபிஷேகம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சிந்தனை

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-பொறுப்பு

    கடகம்-முயற்சி

    சிம்மம்-பொறுமை

    கன்னி-ஊக்கம்

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-நிம்மதி

    தனுசு- சுபம்

    மகரம்-உற்சாகம்

    கும்பம்-ஆக்கம்

    மீனம்-பக்தி

    • இன்று பிரதோசம். சுபமுகூர்த்த தினம். ஓணம் பண்டிகை.
    • மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரரர் சட்டத் தேரில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-30 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி பிற்பகல் 3.30 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: திருவோணம் மாலை 5.03 மணி வரை பிறகு அவிட்டம்.

    யோகம்: அமிர்த, மரணயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று பிரதோசம். சுபமுகூர்த்த தினம். ஓணம் பண்டிகை. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரரர் சட்டத் தேரில் பவனி. இரவு சப்தாவர்ணம். திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-பரிசு

    கடகம்-அனுகூலம்

    சிம்மம்-பாராட்டு

    கன்னி-மாற்றம்

    துலாம்- உற்சாகம்

    விருச்சிகம்-சிரத்தை

    தனுசு- சாதனை

    மகரம்-சுபம்

    கும்பம்-செலவு

    மீனம்-சுகம்

    • யாகசாலையில் நம் பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
    • பவித்ரோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்கோபாங்க சேவை 2-ம் நாளான நாளை மதியம் நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி - புரட்டாசி மாதம் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு யாகசாலை வந்தார். 10.30 மணிக்கு சிறப்பு திருவாராதனம் கண்டருளினார். மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்கிறார். இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    யாகசாலையில் நம் பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும், இதனால் இந்நிகழ்ச்சி பூ பரத்திய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

    அத்துடன் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூழிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். எனவே இதற்கு நூழிலைத் திருவிழா என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    பவித்ரோத்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம் பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு மேற்கில் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    இந்த பவித்ரோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்கோபாங்க சேவை 2-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும்.

    பூச்சாண்டி சேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேணி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பர். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும், எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.

    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
    • புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.27 மணிக்கு தொடங்கி மறுநாள் 18-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.10 மணிக்கு நிறைவடைகிறது.

    புரட்டாசி மாத பிறப்பன்று (17-ந் தேதி) பவுர்ணமி வருவதாலும் அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதாலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

    • இன்று சர்வ ஏகாதசி. திருவோண விரதம்.
    • திருநாள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-29 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி மாலை 5.05 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.57 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. திருவோண விரதம். திருநாள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை ஸ்ரீ சொக்கநாதப் பெருமான் விறகு விற்றருளிய காட்சி. ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் தங்கச் சப்பரத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ சொக்கநாதர் தேரோட்டம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கும் திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்திரவார திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆக்கம்

    ரிஷபம்-பயணம்

    மிதுனம்-ஜெயம்

    கடகம்-லாபம்

    சிம்மம்-சாந்தம்

    கன்னி-உழைப்பு

    துலாம்- கவனம்

    விருச்சிகம்-பக்தி

    தனுசு- இன்பம்

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-விவேகம்

    மீனம்-ஆர்வம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 9 வியாழக்கிழமை களும் முடிந்தால் சாயிபாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும்.
    • முடியாதவர்கள் (கோவில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி, சிரத்தையுடன் செய்யவும்.

    1. பாபாவை குருவாக ஏற்று வழிபட தொடங்கிய பிறகு, குரு (வியாழன்) என்பதால் வியாழக்கிழமை விரதம் இருப்பது வழக்கத்துக்கு வந்தது. இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

    2. இந்த விரதத்தை ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம்.

    3. இந்த விரதம் அற்புத பலன்கள் தர வல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.

    4. விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமை யானாலும், சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

    5. காலை அல்லது மாலையில் சாயி பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன்மேல் சாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாயி விரத கதையைப் படிக்கவும். சாயிபாபாவை ஸ்மரணை செய்யவும், நைவேத்தியம் வைத்து (பழங்கள், இனிப்பு, கற்கண்டு எதுவானாலும்) பிரசாதத்தை விநியோகிக்கவும்.

    6. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.

    7. 9 வியாழக்கிழமை களும் முடிந்தால் சாயிபாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோவில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி, சிரத்தையுடன் செய்யவும்.

    8. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைப்பிடிக்கலாம்.

    9. விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.

    ×