என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இந்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்த ஆரத்திகள் முறையாக நடைபெற்று வருகின்றன.
    • ஆரத்தியை தினம் தினம் இப்படி பழக்கப்படுத்திக் கொண்டால் மந்த புத்தி மாறி சுறு சுறுப்படையலாம்.

    சாய் மார்க்கத்தில் செல்வதற்கு மூன்று சிறந்த வழிகள் உண்டு. அதில் முதலாவது,

    1. சீரடிக்கு செல்வது

    2. சாயி சத்சரித்திரம் பாராயணம் செய்வது.

    3. நான்கு வேளைகளும் ஆரத்தி பாடுவது.

    இதில் மூன்றாவது வேலையை முதலில் செய்து விட்டால் முதல் இரண்டு வேலைகளும், எந்த தடையுமின்றி நடக்கும். ஆகையால் ஆரத்தி செய்வதால் நல்ல பலன்களே கிடைக்கும்.

    குடும்பத்தினர், பந்துக்கள் ஓர் இடத்தில் சேர்ந்து ஒழுங்கு தவறாமல் சாய் ஆரத்திகளை பாடுவதினால் மனம் நிம்மதியடைந்து நல்ல சூழ்நிலை குடும்பத்தில் உண்டாகும்.

    ஆரத்தி நடக்கும் இடம் புனிதமடைந்து சாந்தி நிலையமாக மாறும்.

    சீரடி சாய் மந்திரில் தினமும் நான்கு வேளை ஆரத்தி நடைபெறுகிறது.

    காலை 4.30 காகட ஆரத்தி

    மதிய வேளையில் 12 மணிக்கு மதிய ஆரத்தி நடக்கும்.

    மாலையில் சூரியன் மறையும் கோதூளி வேளையில் தூப ஆரத்தியும், இரவு 10.30 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடைபெறுகின்றன.

    சமாதி மந்திரியில் ஆரத்தி நடை பெற்றுக் கொண்டிருந்தாலும், துவாரக மயீ, சாவடி, குருஸ்தான், க்யூ காம்ப்ளக்சில் டி.வி.யில் பார்த்துக் கொண்டு நாம் ஆரத்தி நடத்திக் கொள்ளலாம்.

    இந்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்த ஆரத்திகள் முறையாக நடைபெற்று வருகின்றன.

    ஆரத்தியை தினம் தினம் இப்படி பழக்கப்படுத்திக் கொண்டால் மந்த புத்தி மாறி சுறு சுறுப்படையலாம்.

    • பாபா உயிரோடு வந்ததைக் கண்ட பக்தர்களும் மக்களும் மகிழ்ச்சி கொண்டனர்.
    • பாபாவின் இந்தச் செயலால் பாபாவின் மகிமை மேலும் நாடு முழுவதும் பரவியது.

    பாபா ஒரு நாள் தமது சீடர் மஸல்சாபதியுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது மஹல்சாபதியிடம் நான் கடவுளைப் பார்த்துவிட்டு வர வேண்டும்.

    நான் வரும் வரையில் எனது உடலை பத்திரமாக பாதுகாத்து வைத்திருங்கள் என்று கூறினார்.

    நான் போய்வர மூன்று நாட்களாகும். மூன்று நாட்களில் திரும்பி வந்து நான் எனது உடலில் நுழைந்து உயிர் பெறுவேன் என்றும் பாபா கூறினார்.

    மஹல்சாபதியும் அப்படியே ஆகட்டும் என்றார். பாபா சொன்னபடி அவரது உயிர் உடலைவிட்டுப் பிரிந்து சென்றது. உயிரில்லாத உடலை மஹல்சாபதி பாதுகாத்து வந்தார்.

    இந்த விஷயம் எப்படியோ வெளியில் தெரிந்து மக்கள் அங்கே திரளாக கூடி விட்டனர்.

    இது தொடர்பாக விசாரிக்க உயர் அதிகாரிகளும் வந்து விட்டனர்.

    அதிகாரிகள் பாபாவின் உயிரற்ற உடலைப் பார்த்துவிட்டு, அவர் இறந்து விட்டார். எனவே அவரது உடலை அடக்கம் செய்து விடலாம் என்றனர்.

    ஆனால் பாபாவின் சீடர் மஹல்சாபதி அதற்கு சம்மதிக்க வில்லை.

    பாபாவின் அருள்வாக்கு இதுவரையிலும் பொய்யானதே இல்லை. அதனால் யாரும் அவரது உடலைத் தொட நான் அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

    உயர் அதிகாரிகள் கோபம் கொண்டு, நீங்கள் சொன்னது போல் மூன்று நாள் கழித்து நான்காவது நாள் பாபா உயிர் பெறாவிட்டால் நாங்களே பாபாவின் உடலை அடக்கம் செய்து விடுவோம் என்று மஹல்சாபதியை எச்சரித்து விட்டுச் சென்றனர்.

    மஹல்சாபதி சொன்னபடி மூன்று நாட்கள் கழிந்தன.

    நான்காவது நாள் காலையில் எல்லோரும் பாபாவின் உடல் அருகே கூடி விட்டனர்.

    அப்போது பாபா சொன்னபடியே அவரது உயிரற்ற உடல் உயிர் பெற்று எழுவதைக் கண்டனர்.

    பாபா உயிரோடு வந்ததைக் கண்ட பக்தர்களும் மக்களும் மகிழ்ச்சி கொண்டனர்.

    பாபாவின் இந்தச் செயலால் பாபாவின் மகிமை மேலும் நாடு முழுவதும் பரவியது.

    • சீரடி சாயி பாபா படுத்து தூங்குவதற்கு ஒரு சணல் துணியையே பயன்படுத்தி வந்தார்.
    • தரையில் விரித்து உட்காருவதற்கும், குளிரும் போது போர்வையாகப் போர்த்திக் கொள்வதற்கும் பயன்படுத்தினார்.

    சீரடி சாயி பாபா படுத்து தூங்குவதற்கு ஒரு சணல் துணியையே பயன்படுத்தி வந்தார்.

    தரையில் விரித்து உட்காருவதற்கும், குளிரும் போது போர்வையாகப் போர்த்திக் கொள்வதற்கும் பயன்படுத்தினார்.

    இதைக் கண்ட பக்தர்கள் பாபா இப்படி ஒரே துணியைப் பயன்படுத்துகிறாரே என்று வருந்தினார்கள்.

    இதனால் அவர்கள் பாபா படுத்து உறங்க ஐந்து அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட பலகையைக் கொண்டு வந்து பாபாவிடம் கொடுத்து, பாபா இனிமேல் நீங்கள் இந்தப் பலகையில் தான் படுத்து உறங்க வேண்டும் என்று வேண்டினார்கள்.

    பாபாவும் பக்தர்களின் வேண்டுகோளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.

    பக்தர்கள் கொடுத்த மரப்பலகையை மசூதியின் கூரையிலிருந்து மூன்று அடி தாழ்வாகவும், தரையிலிருந்து ஏழடி உயரத்திலும் அந்தரத்தில் இருக்குமாறு செய்து படுத்துக் கொள்வார்.

    இந்த அதிசயத்தைக் கண்டு பாபாவின் மகிமை மேலும் மேலும் பரவியது.

    • தண்ணீரிலேயே விளக்கு ஏற்றுங்கள் என்றார் பாபா. பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. புரியாமல் குழம்பினார்கள்.
    • பாபா மறுபடியும் சொன்னார். தண்ணீரை ஊற்றி விளக்கை ஏற்றுங்கள் என்றார்.

    சீரடியில் பாபா தங்கி இருந்த இடத்தில் இரவு நேரத்தில் அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்.

    அந்த அகல் விளக்குகளுக்கு, அங்கேயிருந்த வியாபாரிகள் எண்ணெய் வழங்கிக் கொண்டு இருந்தார்கள்.

    பாபாவின் மீது பொறாமை கொண்ட சிலர், அந்த வியாபாரிகளிடம் சென்று இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, இனிமேல் நீங்கள் எண்ணெய் தர வேண்டாம்.

    பாபா உங்களை எல்லாம் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று சொன்னார்கள்.

    அதை நம்பிய வியாபாரிகளும் விளக்கு எரிய தேவையான எண்ணெய் தருவதை நிறுத்தி விட்டார்கள்.

    ஒருநாள் விளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாமல் தவித்தனர். இதை பாபாவிடம் சென்று தெரிவித்தார்கள்.

    பாபாவின் ஞான திருஷ்டியில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டார்.

    அவருக்கு சிரிப்பு தான் வந்தது.

    இனிமேல் நமக்கு எண்ணெய் வேண்டாம்.

    தண்ணீரிலேயே விளக்கு ஏற்றுங்கள் என்றார் பாபா. பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. புரியாமல் குழம்பினார்கள்.

    பாபா மறுபடியும் சொன்னார். தண்ணீரை ஊற்றி விளக்கை ஏற்றுங்கள் என்றார்.

    பக்தர்கள் தயங்கியபடியே அவ்விதமே செய்ய, அகல் விளக்குகள் எண்ணெய்யில் எரிவதை விட பிரகாசமாக எரிந்தன.

    இதைக் கண்ட பக்தர்கள் ஆச்சரியம் அடைந்து மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.

    இதைக் கேள்விப்பட்ட வியாபாரிகள் தங்கள் தவறை உணர்ந்து பாபாவிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

    • மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
    • முன்னோர்கள் ஆசி வழங்க பிதுர் உலகத்தில் இருந்து பூலோகம் வருகின்றனர்.

    மகாவிஷ்ணு ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு லோகத்துக்கு சென்று அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் புரட்டாசி மாதம் அவர் பித்ரு லோகத்துக்கு வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புரட்டாசி மாதத்தில் பித்ருக்கள் அனைவரும் பாத பூஜை, ஹோமம் உள்ளிட்டவைகளை செய்வார்கள். ஏனெனில் பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.

    புரட்டாசி மாதம் பித்ருக்கள் செய்யும் பூஜை மற்றும் ஆராதனைகளை மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். பித்ருக்கள் நடத்தும் அந்த பூஜைக்கு "திலஸ்மார நிர்மால்ய தரிசன பூஜை" என்று பெயர்.

    திலம் என்றார் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்கு நடத்தப்படும் பூஜை திலஸ்மார நிர்மால்ய பூஜை என்றழைக்கப்படுகிறது.

    இந்த பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும் எள் தானியம் நிறைந்த நிலையில் பித்ருக்களுக்கு காட்சியளிப்பார். இது பித்ருக்களை தவிர வேறு யாருக்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.

    விஷ்ணுவின் நிர்மால்ய தரிசனம் பெறும் பித்ருக்களுக்கு அரிய பலன்கள் கிடைக்கும். இந்த அரிய பலன் களை பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும் அவர் களது உறவினர்கள் பெற மகா விஷ்ணு அருள்வார்.

    பித்ருக்களின் ஆராதனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மகா விஷ்ணு, பித்ருக்களிடம், "15 நாட்கள் நீங்கள் பூலோகத்துக்கு சென்று உங்கள் குடும்பத்தினர் தரும் அன்னத்தை ஏற்று வாருங்கள்.

    உங்கள் குடும்பத்தினருக்கு நிர்மால்ய பலன்களை கொடுத்து வாருங்கள்" என்று அனுப்பி வைப்பார்.

    இதைத் தொடர்ந்தே பித்ருக்கள் புரட்டாசி மாதம் 15 நாட்கள் பூலோகத்தில் உள்ள நம் வீட்டுக்கு வருகிறார்கள். இந்த 15 நாட்களைத்தான் நாம் மகாளயபட்சம் என்று சொல்கிறோம்.

    மகாளய பட்சம் என்னும் முன்னோர் வழிபாட்டுக்கான 15 நாட்கள் நாளை (18-ந்தேதி) தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதியில் முடிகிறது. இந்த நாட்களில் முன்னோரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

    மகாளயபட்சத்தில் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்க பிதுர் உலகத்தில் இருந்து பூலோகம் வருகின்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்து உள்ளம், உடல் தூய்மையுடன் நாம் காத்திருக்க வேண்டும். வீட்டையும் சுத்தமாக வைக்க வேண்டும். குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்வது கூடாது.


    இந்த காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவது இல்லை. ஏனெனில் முன்னோருக்கான திதி, தர்ப்பணம், சிரார்த்தம், தானம், தர்மம் செய்வதில் ஈடுபட வேண்டும் என்பதற்காக. கன்னியாகுமரி, ராமேசுவரம், வேதாரண்யம், தனுஷ்கோடி போன்ற கடற்கரை கோவில்களுக்கு செல்லலாம்.

    முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்து காகத்திற்கு அன்னமிடலாம். பசுவிற்கு கீரை, பழம் கொடுக்கலாம். இதுவும் முடியாவிட்டால் முன்னோர்களின் பெயரை உச்சரித்து 'காசி காசி' என்று சொல்லியபடியே, கால் மிதிபடாமல் வீட்டு வாசலில் எள், தண்ணீர் விட்டாலும் பலன் கிடைக்கும்.

    மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 15 நாட்களும் நாம் பித்ருக்களை ஆராதித்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    பூலோகத்தில் தங்கி இருக்கும் 15 நாட்களில் கோவில் தீர்த்தங்களில் உள்ள தெய்வீக சக்திகளை பித்ருக்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் நாம் பித்ருக்களுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்யும்போது, பித்ருக்கள் மிகவும் மனம் குளிர்ந்து அந்த தெய்வ சக்திகளை நமக்கு கொஞ்சம் பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள்.

    மகாளயபட்ச 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலன்களையும், ஆத்மசக்தியையும் கொடுக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.

    ஆக நாம் செய்யும் பித்ரு தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த 15 நாட்களில் மகாளயபட்ச வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் கிடையாது. எல்லாமே உங்கள் இஷ்டம்தான்.

    உங்கள் குல வழக்கப்படி தர்ப்பண வழிபாடுகளை எப்படி கொடுப்பார்களோ.... அந்த வழக்கப்படியே செய்யலாம். தர்ப்பணம், சிரார்த்தம் கொடுப்பதில் சாதி, மத, குல பேதங்கள் எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ருக்களை தேடி வரும். அந்த ஆசீர்வாதத்தை பித்ருக்களும் நம்மிடம் நேரடியாக எடுத்து வரக்கூடும்.

    எனவே மகாளயபட்ச நாட்களில் பித்ருக்களை வழிபாடு செய்து, விஷ்ணுவின் அருளை பெற தவறாதீர்கள்.

    மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மூன்றிலும் அதிக புண்ணியத்தை தருவது மகாளய அமாவாசை ஆகும்.

    இந்த 15 நாட்களில் வரும் ஒவ்வொரு திதியும், ஒவ்வொரு வகை பித்ருக்களுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. அந்த திதி சிறப்பு நாட்களை பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    குறிப்பிட்ட திதியில் குறிப்பிட்டவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முழுமையான பலன்களை பெற முடியும்.

    அன்று நீங்கள் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும், அவர்களை மனம் குளிரச் செய்யும். அவர்களை மேலும் சாந்தி அடையச் செய்யும். தர்ப்பணத்தை வீட்டில் வைத்தும் கொடுக்கலாம். ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீருங்கள்.


    மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமானோர் நீராடி பித்ரு பூஜை செய்து, தமது மூதாதையர்களை வழிபடுவார்கள்.

    மகாளய பட்ச நாட்களில் தினமும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும் என்று கருட புராணம், விஷ்ணு புராணங்களில் கூறப்பட்டுள்ளது. முடியாதவர்கள் காகத்திற்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு அகத்தி கீரை வாங்கிக் கொடுக்கலாம்.

    தர்ப்பணம் கொடுக்காவிட்டால் பித்ருக்கள் மனம் வருந்த நேரிடும். ஏனெனில் எந்த பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறதோ, அந்த பித்ருக்களுக்குத்தான் தாகம் தீர்ந்து, ஆத்ம சக்தி அதிகமாக கிடைக்கும்.

    வாழும் காலத்தில் நாம் நம் முன்னோர்களிடம் அன்புடன் இருந்திருக்கலாம். அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். சிலர் பெற்றோரை கடைசி காலத்தில் தவிக்க விட்டிருக்கலாம்.

    அந்த பாவத்துக்கு பரிகாரமாக, மகாளயபட்ச 15 நாட்களும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. எனவே மகாளய பட்ச 15 நாட்களும் மூதாதையர்களை ஆராதியுங்கள். யார் ஒருவர், பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறாரோ, அவருக்கு பித்ருக்கள் தெய்வ சக்திகளை பரிசாக தந்து விட்டுச்செல்வார்கள். முன்னேற்றம் தானாக வரும்!

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்பிகை வழிபாட்டில் திரிபுரசுந்தரி முக்கியமான தெய்வமாக கருதப்படுகிறாள்.
    • ஒரே பெயரை மீண்டும் சொல்லாத, ஒரே சகஸ்ரநாமம்.

    சக்தி என்னும் அம்பிகையின் வழிபாட்டில் 'திரிபுரசுந்தரி' முக்கியமான தெய்வமாக கருதப்படுகிறாள். ஒரு முறை சிவபெருமானின் நெற்றிக்கண் பார்வையால் காமன் (மன்மதன்) எரிந்து சாம்பலானான்.

    அவனது சாம்பலில் இருந்து பண்டன் என்ற அரக்கன் தோன்றி, சோணிதபுரம் என்ற இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். அவனால் தேவர்கள் அனைவரும் துன்பத்திற்கு உள்ளாகினர்.

    இதையடுத்து தேவர்கள் அனைவரும் சிதக்னி குண்டம் அமைத்து, சிவபெருமானையும், பார்வதிதேவியையும் வேண்டினர். அவர்களின் வேண்டுதலால், குண்டத்தில் இருந்து காமேசுவரனாக சிவனும், திரிபுரசுந்தரியாக பார்வதியும் தோன்றினர்.

    மன்மதனின் கரும்பு வில்லும், மலர்பாணமும் தாங்கியிருந்த தேவி, தனது சேனைகளுடன் சென்று, பண்டனையும் அவனது படைகளையும் அழித்தாள்.

    திரிபுரசுந்தரியை 'லலிதை', 'ராஜ ராஜேஸ்வரி' என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். 'திரிபுரசுந்தரி' என்பதற்கு 'மூவுலகிலும் பேரழகி' என்றும், 'லலிதா' என்பதற்கு 'திருவிளையாடல்கள் புரிபவள்' என்றும், 'ராஜராஜேஸ்வரி' என்பதற்கு 'அரசர்க்கெல்லாம் அரசி' என்றும் பொருள்.

    தன்னை வழிபடுபவர்களுக்கு 16 பேறுகளையும் வழங்கும் இந்த தேவியானவள், 16 வயதுடைய இளம் மங்கை என்பதால் இவளை 'சோடசி' என்றும் அழைப்பர்.

    குறிப்பாக பக்தர்கள் பலரும் இந்த தேவியை 'லலிதா திரிபுரசுந்தரி' என்றே அழைக்கின்றனர்.

    மகா காமேசுவரனாகிய சிவபெருமான் சிம்மாசனமாக வீற்றிருக்க, பிரம்மன், திருமால், ருத்திரன், மகேசுவரன் ஆகியோர் அதன் கால்களாக இருக்க, அந்த சிம்மாசனத்தின் மீது வலது காலை மடித்தும், இடது காலை தொடங்க விட்டும் அமர்ந்த நிலையில் லலிதா திரிபுரசுந்தரி காட்சி தருகிறாள்.

    நான்கு கரங்களைக் கொண்ட இந்த தேவியின் கரங்களில் பாசம், அங்குசம், கரும்பு வில், ஐம்மலர் அம்புகள் உள்ளன. அன்னையின் இருபுறமும் சரஸ்வதியும், லட்சுமியும் சாமரம் வீசுகின்றனர்.

    இந்த தேவியை வழிபடுவதற்கான துதிப்பாடல்களில், ஆயிரம் நாமங்கள் கொண்ட 'லலிதா சகஸ்ரநாமம்' முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    லலிதாதேவியின் கட்டளையின் பேரில், வாசினி, காமேஸ்வரி, அருணா, விமலா, ஜெயனி, மோதினி, சர்வேஸ்வரி, கவுலினி ஆகிய எட்டு தேவிகள், இந்த லலிதா சகஸ்ரநாமத்தை இயற்றியதாக சொல்லப்படுகிறது.

    18 புராணங்களில் ஒன்றான பிரமாண்ட புராணத்தில் இந்த லலிதா சகஸ்ரநாமம் இடம்பெற்றுள்ளது. அந்த புராணத்தில் லலிதோபாக்கியானம் என்ற இடத்தில் ஹயக்ரீவப் பெருமாள், அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் செய்துள்ளார். இது உபதேசிக்கப்பட்ட இடமாக, காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த லலிதா சகஸ்ரநாமம், துதிப்பாடல் மற்றும் ஸ்தோத்திரங்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. எனவே இதனை ஸ்தோத்திர வடிவிலோ அல்லது நாமாவளி வடிவத்திலோ உச்சரிக்கலாம்.

    ஒரே பெயரை மீண்டும் சொல்லாத, ஒரே சகஸ்ரநாமம், 'லலிதா சகஸ்ரநாமம்' என்கிறார்கள். சக்தியின் வெளிப்பாடாக கருதப்படும் லலிதா தேவியை வழிபடுபவர்களுக்கு, லலிதா சகஸ்ரநாமம் ஒரு புனித நூலாகும்.

    லலிதா திரிபுரசுந்தரியின் ஆயிரம் பெயர்களையும், தினந்தோறும் சொல்லி அந்த தேவியை வழிபடும்போது, அவளது அடியார்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    தமிழகத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், லலிதா திரிபுரசுந்தரியின் முக்கியமான ஆலயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    இது தவிர திரிபுராவில் உள்ள ராதாகிஷோர்பூர், மத்திய பிரதேசத்தின் காரியா ஆகிய இடங்களிலும் லலிதா தேவிக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன.

    • இன்று பவுர்ணமி.
    • 21-ந்தேதி சங்கடஹரசதுர்த்தி.

    17-ந்தேதி (செவ்வாய்)

    * பவுர்ணமி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    18-ந்தேதி (புதன்)

    * மகாளயம் ஆரம்பம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    19-ந்தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

    * திருப்பதி ஏழுமலையான், மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    20-ந்தேதி (வெள்ளி)

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * சமநோக்கு நாள்.

    21-ந்தேதி (சனி)

    * சங்கடகர சதுர்த்தி.

    * திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகன சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    22-ந்தேதி (ஞாயிறு)

    * கார்த்திகை விரதம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    23-ந்தேதி (திங்கள்)

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    • இன்று பவுர்ணமி.
    • திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-1 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தசி காலை 11.21 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம்: சதயம் பிற்பகல் 2.27 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பவுர்ணமி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கும் திருமஞ்சன சேவை. சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். திருநாறையூர் ஸ்ரீ சித்த நாதீஸ்வரர் கோவில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ருசம்ஹார அர்ச்சனை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-ஓய்வு

    மிதுனம்-நன்மை

    கடகம்-விருத்தி

    சிம்மம்-விருப்பம்

    கன்னி-பரிவு

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-யோகம்

    தனுசு- இன்பம்

    மகரம்-நலம்

    கும்பம்-நட்பு

    மீனம்-உதவி

    • அதன் காரணமாக ஊது உலைக்களத்தில் குழந்தை நழுவி விழுந்து விட்டது. "சாயி" என்று பாபா நாமத்தை உச்சரித்தாள்.
    • அதே நேரத்தில் சாயிபாபா தமது கைகளை தூணியில் நுழைக்கிறார்.

    1910&ம் ஆண்டு தீபாவளி நேரம். அது விடுமுறைக் காலமும் கூட.

    துவாரகாமய்யில் நெருப்பு குண்டமான தூணிக்கு அருகிலேயே அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார் சாயி பாபா.

    ஒளி பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த தூணியில் விறகுகளை நுழைத்துக் கொண்டிருந்தார் சாயிபாபா.

    அதே நேரத்தில் நீரடியில் சிறிது தூரத்தில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் ஒரு கொல்லனின் மனைவி உலைக் களத்தில் உள்ள துருத்தியில் கடமையாற்றிக் கொண்டு இருந்தாள்.

    அந்த நேரத்தில் அவள் கணவர் ஏதோ ஒரு கடமைக்காக அவளை அழைத்தார்.

    இடையில் குழந்தை இருப்பதை மறந்து "சாயி" என்று கூறியவாறு அவசரமாக வேகமாக விவேகம் இழந்து ஓடினாள்.

    அதன் காரணமாக ஊது உலைக்களத்தில் குழந்தை நழுவி விழுந்து விட்டது. "சாயி" என்று பாபா நாமத்தை உச்சரித்தாள்.

    அதே நேரத்தில் சாயிபாபா தமது கைகளை தூணியில் நுழைக்கிறார்.

    கைகள் கருகின. ஏன் பாபா இவ்வாறு செய்தார் என்று யாருக்கும் புரியவில்லை.

    அவருக்கு அருகில் இருந்த மாதவ்ராவும், தேவ்பாண்டேயாவும் உடனே நிலையை கண்டு உணர்ந்து, சாயிபாபாவைப் பின்னால் இழுத்து "சுவாமி ஏன் இவ்வாறு செய்தீர்கள்?" என்று கேட்டார்கள்.

    இங்கு இருந்து சிறிது தூரத்தில் எனது பக்தையின் குழந்தை தவறி எரிந்து கொண்டிருக்கும் உலைக் களத்தில் விழுந்துவிட்டது.

    ஆகவே தான் அதைக்காப்பாற்ற இங்கு தீயில் கைகளை விட்டேன் என்றார் சாயிபாபா.

    அனைவருக்கும் குழந்தையைக் காப்பாற்ற பாபா செய்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்கள்.

    "எனது கரங்கள் கருகிப் போனால் என்ன? மருந்து தான் உள்ளதே! குழந்தை (மறந்து தீயில் விழுந்த குழந்தை) தியில் வெந்து போனால் பிறகு நொந்து என்ன பயன்? என்று கூறி அருளினார்.

    இந்த சம்பவம் மூலமாக பாபாவின் பெருங்கருணையும் அவர் இங்கு அங்கு என்று இல்லாமல் எங்கும் நிறைந்தவர் என்பதும், ஆபத்தில் விரைந்து வருவார் என்பது தெரிய வருகிறது அல்லவா?

    தாய் என்றும் சேயின் நினைவே கொண்டது போல், பக்தையின் குழந்தைக்காக தனது கரத்தையே கருகச் செய்தார். சாபிபாபா.

    • அங்கே அவர் கண்களுக்கு, சாயிபாபாவே பாண்டு ரங்க சாமியாக காட்சி அளித்தார்.
    • கண்ணீர் மலர்களால் பூஜை செய்து திகைத்தார் தாசகணு.

    சாயி பக்தர்களில் ஒருவர் தாசகணுவர் என்பவர்.

    அவருக்கு ஒரு பண்டரிபுரம் சென்று பண்டரிநாதனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே, சாயிபாபாவிடம் சென்று கனிகளையும் காணிக்கைகளையும் சமர்ப்பணம் செய்துவிட்டு "நான் பண்டரிபுரம் செல்ல அனுமதி வேண்டும்" என்று கேட்டார்.

    சாயிபாபா "சீரடிதான் பண்டரிபுரமாக இருக்கிறது.

    இது புரியவில்லையா? உனக்கு எதற்காக அவ்வளவு தூரம், நேரம் காலம், பணம், ஆரோக்கியம், சிரமம்? இவற்றை எல்லாம் செலவு செய்து போகத்தான் வேண்டுமா? என்று கேட்டார்.

    ஒப்புக்கொள்கிறேன்.

    சீரடியே பண்டரிபுரமாக இருக்கட்டும். ஆகால் பாண்டுரங்கன் யார்? என்று புரிய வில்லையே...? என்ற சந்தேகக் கேள்வியுடன் தம் தேகத்தைக் கீழே கடத்தி சாஷ்டாங்கமாக நோக்கினார்.

    அங்கே அவர் கண்களுக்கு, சாயிபாபாவே பாண்டு ரங்க சாமியாக காட்சி அளித்தார். கண்ணீர் மலர்களால் பூஜை செய்து திகைத்தார் தாசகணு.

    • அதைப் பெற்றுக்கொண்டு லட்சுமி ஆலயத்திற்கு வந்தார் பாலகணபதி.
    • என்ன விந்தை! கறுப்பு நிற நாய் ஒன்று அவரை வாலை ஆட்டியவாறே வரவேற்றது.

    பால கணபதி என்ற சாயிபாபா பக்தர் ஒருவருக்கு ஒரு முறை மலேரியா சுரம் வந்து அவதியுற்றார்.

    பல டாக்டர்கள் கவனித்தும், பல மருந்துகள் சாப்பிட்டும் நோய் குணம் ஆகவில்லை. பார்த்தார் பல கணபதி.

    சாயிபாபா தான் சரணம் என சீரடிக்கு பயணமானார். சாயிபாபாவை தரிசனம் செய்தார். அவர் திருவடிகளில் வீழ்ந்தார்.

    பாபா கூறினார்: " வீட்டுக்குப் போ உன் மனைவி தயிர் சாதம் செய்து இருப்பாள்.

    அதை லட்சுமி ஆலயத்தின் வாசலில் கறுப்பு நிற நாய்க்கு கொடு! நோய் என்ற பேய் ஓடிவிடும்" என்று கூறினார்.

    கறுப்பு நாய்க்கு தயிர் சாதம் கொடுத்தால் எப்படி நோய் குணமாகும் என்று சந்தேகம் கொள்ளாமல் நம்பிக்கை பொறுமை இரண்டும் இருகண்கள் என்பதாக நினைத்து, பாலகணபதி தம் இல்லத்திற்கு சென்றார்.

    என் கனவில் பாபா தோன்றி சீக்கிரம் தயிர் சாதம் செய் பசிக்கிறது என்றார் என்று பாலகணபதியிடம் அவருடைய மனைவி தன் கணவனிடம் கூறினாள்.

    ஆகவே தயிர் சாதம் செய்தேன் இந்தாருங்கள் என்று கூறி தயிர் சாதத்தை தந்தாள்.

    அதைப் பெற்றுக்கொண்டு லட்சுமி ஆலயத்திற்கு வந்தார் பாலகணபதி. என்ன விந்தை! கறுப்பு நிற நாய் ஒன்று அவரை வாலை ஆட்டியவாறே வரவேற்றது.

    அந்த ஊரிலேயே வசிக்கும் பாலகணபதி இது நாள் வரையில் அந்த நாயை கண்டதே கிடையாது.

    கறுப்பு நிற நாய்க்கு அன்புடன் தயிர் சாதத்தை கொடுத்தார் பாலகணபதி.

    அதுவும் சாதம் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டது. மறுநாள் மலேரியா நோய் பாலகணபதியை விட்டு எங்கோ மலை ஏறிவிட்டது.

    சாயி பாபாவின் மருத்துவமுறை இந்த உலக மருத்துவ முறையைவிட முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது அல்லவா?

    • அதில் தைரியமாக அமர்ந்தது குழந்தை. பிறகு மக்கள் அந்தக் குழந்தையைக் காப்பாற்றினார்கள்.
    • வெளியே வந்த குழந்தை தன்னை சாயிபாபா தாத்தா வந்து காப்பாற்றி தாங்கினார் என்று கூறியது.

    பாபுகிர் வான்டிகர் என்பவருடைய மூன்று வயது பெண் குழந்தை ஒரு நாள் பொம்மையை வைத்து விளையாடும் பொழுது பொம்மை கிணற்றில் விழுந்தது.

    அறியாமையால் எடுக்க முயற்சி செய்த போது, குழந்தை தவறி அதன் உள்ளே விழுந்தது.

    விழும் சமயத்தில் ''சாயி சாயி'' என்று குரல் கொடுத்தவாறே கிணற்றில் விழுந்தது குழந்தை.

    அதே சமயத்தில் சீரடியில் சாயிபாபா ஒரு தண்ணீர் தொட்டிக்குள் தம் கையை விட்டு அசைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக மேலே எடுத்து கடைசியாக எதையோ கீழே வைத்தது போல் செய்தார்.

    அங்கு ஊர் மக்கள் ஓடிச் சென்று பார்த்த சமயத்தில் குழந்தை கிணற்றுக்குள் அந்தரத்தில் யாரோ கைகளில் ஏந்திக் கொண்டிருப்பது போல் மிதந்து கொண்டிருந்தது.

    காலி வாளியை கிணற்றுக்குள் அனுப்பினார்கள்.

    அதில் தைரியமாக அமர்ந்தது குழந்தை. பிறகு மக்கள் அந்தக் குழந்தையைக் காப்பாற்றினார்கள்.

    வெளியே வந்த குழந்தை தன்னை சாயிபாபா தாத்தா வந்து காப்பாற்றி தாங்கினார் என்று கூறியது.

    சீரடி மக்கள் இந்த நிகழ்ச்சியை யாரோ கூறித் தெரிந்து கொள்ளவில்லை.

    தாங்களே கண்களில் கண்டு சாட்சியானார்கள்.

    சீரடியில் சில நிமிடங்கள் கழித்து தண்ணீர்த் தொட்டியில் என்ன செய்தீர்கள் என்று அருகில் இருந்தவர்கள் கேட்ட பொழுது நடந்த நிகழ்ச்சியை சாயி எடுத்துரைத்தார்.

    அங்கும் இங்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

    ×